Friday, August 30, 2019

panch dharm poems translated- essarci




TO DAY                                 Translation by- Essarci
Children finish their play
With in mobile phones
hold they in their palm.
Mobile phone enquiries shrink
Kith and kin links we have.
Sits simply a passive mobile
In our palm gently.

NEW YEAR
Let the new year be dawn
With sweet candy taste.
Bring many more success
Paddy grains gathered a lot.
All you should prosper
Get away evil at once.
The whole world witness this year
Fetching uninterrupted goodness.

BOON SOUGHT
A drop from my daddy
In your womb
Slept I  well for ten months
Made me you see the universe.
Your lullaby still I lingringr
In my both ears.
Voice of infant might have
Made you smile.
Wondered you on seeing me trottle.
Eveyday  you  suffererd
For me a lot.
Let any can look down upon you
I admire you ever.
Seeing me a babe
Might have pleasure dwelt in you.
Followed me in all my walks of life..
My wife I will ask her
To treat you as her mother.
Keeping you in my heart
Salute I my mother.
Let yourself reborn to me as my daughter
That boon I crave for.


WAITING IN A GAVE.
Wiped out my pocket money
Enjoyed I your love
To you I lose my heart.
But married you some one
Grieved much I.
Turned slim grown beard walks as corpse.
No more I am. Wait I in grave
As a lover of you in a tomb.

HERE AND THERE
Toiling countrymen you are.
Day dawn with sweat.
You urbanites hold umbrella in sunshine.
For a heavy downpour from sky
Villagers hold no umbrella.
Town troublesome and village is healthy..

MONEY DECIDES

Father draws monthly pension
Sons respect him without tension.
------------------------------------------


  











Wednesday, August 14, 2019

pakkaththu viittu thaaththaakkal -panchdharm -translaed by essarci







Grand father neighbours.                              Translation -essarci

Vaiththi and Vaiyapuri
Crossed five decades of
Traditional friendship
Grand fathers they are,
Lost  their wives some time ago.

To vaiththi grandfather
Four sons and one daughter
All had secured government jobs.
To Vaiyapuri grand father
Three sons and two daughters
Doing their own business
All are local living.
To these grand olds
One month boarding  in each son’s house.
Every months’ turn
Every death house
Every Rain goddess temple festival
They two meet
Sweet conversation they enjoyed in their boyhood
Ailing incidents they come across
were their regular topics.

They crack jokes and laugh louder
Meanwhile they observe small silence
Perhaps they may be thinking of their bygone best halves.
Alerting themselves they continue their jokes.
About the food he got at a diabetic sons’ house
Or  from  son of high blood pressure
With pain Vaiththi speaks.
They  only  wish for the food they ate in past
We can live everywhere
But death should devour us in our own soil
Says Vaiyapuri grandfather.
Regarding  not visiting daughte’rs house
About the uncle or brother in laws’ homely meals
Hold no dispute with neighbour ever
Are the  topics of Vaiththi..
They  lament  for their childlessness
Where ever they see beggars of their age
Who even do not have that simple support..
---------------------------------------------------------------------------

.









Saturday, August 10, 2019

oh ! youth translated poem,



OH  ! YOUTH   - translated poem
Let  your life
Not  get deserted
Charging  destiny.
Harp  not  the trodden tune
Find you no use of it.
Hard work only wipes out your hunger.
Upon the earth
Find out a  land, dry or wet
Be a farmer that raises your head high.
To theism put colon.semi colon,or a fullstop
Judging the need  before you.
 your life ,a paragraph if it be
 Honours received  are  the punctuation marks.
Get off and put a full stop to laziness.
Capitalize your efforts and get forward
That alone brings glory to your life..
.


by woman -translated poem




By woman                                                  translated from tamil - essarci

Like a butterfly
My mind flirted
Till I am ten years old.
To a shirt and skirt
Added one shawl
I felt heavy in the mind.
A rose was I then
Mummys’ words turned a fence.
Ordered my father
‘In time return home’
Out of fatherly love.
But to a moustache sprouted younger brother
‘Go hither and thither and learn you a lot’
My parents’ daily trial.
When I step out of entrance
where do you go now?
Sprung as a surprise
Mummys; pinching question.
Today I am as my mother was then
In the same bent of mind
Slavery shackle born out of love
Still not broken by woman for woman..
-------------------------------------------------



Friday, August 2, 2019

BambaaykkathaikaLill -Anbaathavan


பம்பாய்க்கதைகளில் அன்பாதவன்                             

அன்பாதவனின் ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இது பம்பாய்க்கதைகள் என்ற பெயரில் உதயக்கண்னன் பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துள்ளது.ஒரு கவிஞராகவே அன்பாதவனின் மனம் போட்டுக்கொண்ட கணக்கு அவரை சிறுகதையாளராக அனுபவம் ஆகும்போது வேறு ஒரு படைப்புத்தளத்திற்கு வாசகனை இட்டுச்செல்கிறது. வெடிக்கும் புரட்சியைக்கொண்டுவரச்செம்பழுப்பும் நெருப்பும் எனக்கொப்பளிக்கும் கவிஞர் சிறுகதைகளில் எதார்த்த உலகை அனுபவித்து  தமக்கு முன்னே படமாக்கிக்காட்டுகிறார். செருப்பு மாலை என்னும் சிறுகதை யுகமாயினியில் வெளிவந்த கதை. இது சாதியும் மதமும் விடம் கக்கும் பம்பாய் நகரத்தை அம்மணமாக்கும் கதை. இங்கே அண்ணல் அம்பேட்கருக்கு திருப்பள்ளி எழுச்சி கூறும் அன்பாதவன் இயல்பாய்க்கவிஞன் ஆகி உயர்ந்து நிற்கிறார். இந்தக் கவிதையை வாசகன் படித்த பிறகு தெரிந்துகொள்ள வேறென்ன வேண்டிக்கிடக்கிரது என்கிற அறச்சீற்றம் நெஞ்சுக்குள் முந்திக்கொள்கிறது.
’இலவச உதவிகளில் எமதுரிமை மறந்திட்டோம்
சலுகைகளாம் துண்டெலும்பில் எமை நாங்கள் இழந்திட்டோம்’
எழுத்தாளர் பொன்னீலன் ஒரு சமயம் இப்படிக்குறிப்பிட்டதாக நினைவு.கடலூர் இலக்கியப்பெருமன்ற நிகழ்வொன்றிற்கு வந்து  சங்கு வளவதுரையனோடு ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டியின் போது ‘’உதவிகள் மட்டுமே செய்து அவர்கள் உறங்கிவிட்டால் போதும் என்கிற நிலை ஒரு நாள் மாறும்.அவர்களே தூக்கி எறிவார்கள்  சுய மரியாதை தவிர்த்து எதையும்’
இதுவே செருப்புமாலை கதைவாசிக்கும் போது எனக்கு சட்டென்று மனதிற்குள் ஒரு கணம் தோன்றி மறைந்தது.
‘உலகமயம் வளர்ந்தாலும் உன் சேரி மாறவில்லை’ என்று சொல்லும் அன்பாதவனின் அடிமனத்து உணர்வுகள் நம் மனதைத்தொட்டு நியாயம் கேட்கின்றன. நீதி நேர்மை நியாயம் உண்மை என்பதெல்லாம் பேசிய மகாத்மாக்கள் இன்று எல்லோரும் மொத்தமாய் நம் நாட்டைக்காலி செய்துவிட்டு போனதாலே இமயமலை நிகர்த்த ஊழல்கள் இங்கே அரங்கேறினாலும் வெட்கப்படக்கூட ஒரு ஜீவன் இல்லை மாகீழ்மை. ஊழல் என்னும் சகதியில் நிற்போர் பின்வெட்கம் தொலைத்துவிட்டு வெற்றுடம்பாய் நின்றாலும் யாருக்கும் உரைப்பதில்லை.இப்படி சமரசம் உலாவும் திரு நாடாக மாறிப்போய் இருக்கிறோம். உயன் நினைவிற்கு வருகிறது சத்யமேவ ஜயதே. ஆமாம் இதற்கு  இன்னும் ஒரு புதுவிளக்கம் விரைவில் வரலாம். மராத்திய தலித் கவிதையொன்றோடு நிறைவு செய்கிறார்.
இது என் ஊமியா ? கேள்வி வருகிறது.தாகம் தீர உள்ளங்கை தண்ணீர் அள்ளிக்குடித்தால் சாதிக்கத்தி எடுத்து சம்காரம் செய்யத்துடிக்கும் சூழலில் வாழும் தலித்துக்கு இது எப்படி அன்னை பூமியாகும்
அழகு என்னும் புதியகோடாங்கியில் வெளியான கதை அலிகளின் வாழ்வு பேசும் சித்திரம்.அன்பாதவனுக்கு இங்கே கூவாகம் கதைக்களமாக வருகிறது.ஆணும் இல்லை பெண்ணும் இல்லை பிறந்துவிட்ட திரு நங்கை இனத்துக்கு இழைக்கப்படும் அவமானம் சொல்லில் அடங்குமா சொல்லி முடியுமா.அருகன்புல்லை சாணிமேல் வைத்துச்சாமியாக்கிக்கும்பிடுவோர்க்கு அரவாணிகள் சோகம் எட்டுவதே இல்லை.அற்புதமாக அலசுகிறார் அன்பாதவன்.
எவரோ வெற்றிபெற வாக்களிக்கும் ஏமாளிகளைப்போல எந்தமன்னனோ வெற்றிபெற நான் முதல் பலி என்று பேசுகிறது.அரவாணியின் குரல் வல்லினமும் மெல்லினமும் இல்லா இடையினங்களைக்கேலிபேசும் பேசுகின்ற கடையினங்கள் படைப்பாளிக்கு எப்படி பீறிட்டு வறுகிறது தார்மீகக்கோபம்.
’மனிதரென உணருங்கள் அரவாணிகளும்
மனிதரென உணருங்கள்.
அழகென்பது முகமா உடலா ஒப்பனையா
இவை எதுவுமில்லை
மனசு மனசுதான் அழகு’
இலக்கணம் தருகிறார் அன்பாதவன். சாபவரம் என்னும் சிறுகதை ராமாயணத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது.ஊர்மிளையின் வினா நம்மைச்சிந்திக்க வைக்கிறது.
‘உயிரற்ற கல்லைத்தீண்டி உயிர் கொடுத்தீர்கள்.உயிரோடு இருந்த பெண்ணின் மூக்கறுத்து மூளியாக்கினீர்கள்.எல்லாமே உங்கள் இஷ்டம்.உங்கள் விருப்பம்.மனைவியாய் வாய்த்தவளுக்கு மனமுண்டு இரசனையும் உண்டென்பதை உணரவேண்டும். பெண் என்பவளை சக்ரவர்த்தி தொடங்கி சாமான்யர்கள் வரைக்கும் அடிமையாக முட்டாளாக உங்கள் அபிலாஷைகளை தீர்த்துக்கொள்ளும் வடிகாலாகத்தான் பார்க்கிறீர்கள்.இப்படிப்பேசிக்கல்லாய் மாறுகிறாள் ஊர்மிளைபெண்ணியம் பேசி இங்கே மிளிர்கிறது இப்படைப்பு.
‘’பெய்யெனப்பெய்யும் பெருமழை’ என்னும் சிறுகதை மா நகரில் நிகழும் கிரிக்கெட் விளையாட்டு பற்றிப்பேசுகிறது. விளையாட்டு நிகழ்போது ஆணும் பெண்னும் அரைகுறை ஆடையில் உடல் குலுக்கும் நடனம். ஆடு களத்தில் பவுண்டரி சிக்சர் இல்லை.அவுட் என்கிற போது இடுப்பை அசைப்பதும் உடல் குலுக்குவதும் சிய்யர் லீடர்கள் காசுக்கு ஏலம் எடுக்கப்படுவது அண்மைக்கால சோகங்கள். இப்படைப்பில் விமரிசனம்  கூர்மையாக வருகிறது அன்பாதவனுக்கு..
இராஜவிதூஷகன் என்னும் சிறுகதை குடிப்பழக்கம் பற்றி அங்கதம் பேசி நாட்டு நடப்பினை விமர்சனம் செய்கிறது.இனிமேல் கள் வகைகளையோ பத நீர் போன்ற பானங்களையோ கண்டிப்பாகப்பருகக்கூடாது. நுங்கு இள நீர் போன்றவற்றை நுகர்வது ராஜதுரோக குற்றம்.உள் நாட்டில் தயாரான வெளி நாட்டு மதுவகைகளைத்தான் அருந்த வேண்டும்.அன்பாதவனின் நீதி காத்த நெடுஞ்செழியனைக்கண்டு வாசகர்கள்  அதிர்ச்சிக்குள்ளாக வாய்ப்பு உண்டாகிறது.
கணியன் பூங்குன்றனின் மரணம் என்னும் கதை தொழிலாளர் அரங்கு குறித்து ஒரு வினா வைக்கிறது.தத்துவம் தொலைத்துவிட்டு ஓட்டுக்குப்பின்னே ஓடும் தலைமை பற்றி விமரிசனம் வைக்கிறது.
‘பதவி நாற்காலியில்  ஒக்காந்து கிட்டாச்சு. கொள்கையாவது மசுராவது த்தூ’ வார்த்தைகள் கடினமானவைதான். ஆனால் மெய்யானவை.
கூடு என்கிறகதை பதவி உயர்வு பற்றிப்பேசுகிறது.பேய்க்கு வாழ்க்கைப்பட்டமாதிரி பதவி உயர்வை ஒத்துகிட்டாச்சு. டிரான்ஸ்பர் என்கிற புளியமரம் ஏறுவதைத்தடுக்க இயலாது. அன்பாதவன் மும்பையில் பட்ட அவஸ்தைகள்  அவிழ்படுகின்றன. அன்பாதவனுக்கு உற்ற துணையாய் இருந்த அந்த புதிய மாதவிக்கும் மதியழகன் சுப்பையாவுக்கும் இந்த விமர்சகனின் இனிய நன்றிகள் உரியதாகும்.
அன்பாதவன் பம்பாய்க்கதைகளில் வாசகனை நிறைவாகவே  அசத்திவிடுகிறார்.வாழ்த்துவோம் நல்லதொரு மனத்தை.
வெளியீடு  உதயக்கண்ணன், 10 கல்யாணசுந்தரம் தெரு,பெரம்பூர்,சென்னை பக்கம் 160,விலை ரூபாய் 80.
(சங்கு-139 ஜூன் 2011)   


Thursday, August 1, 2019

kankalizanthum kavippani- miltan



கண்களிழந்தும் கவிப்பணி –மில்டன்
ஆங்கிலத்தில் ’மில்டானிக் க்ராண்ட் ஸ்டைல்’ என்று சொல்கிற மரபுண்டு. ஒரு மாபெரும் எழுத்தாளனின் பெருமை பேச இது போதுமானதே.’இம்மண்னுலகில் கதிரவன் மறையாத எங்கள் ஆட்சியை ஒருக்கால் இழக்கத்தயார் ஆவோம்.ஆனால் ஒரு போதும் ஷேக்ஸ்பியரையும் மிலடனையும் இழக்கமாட்டோம்’ என்று வெள்ளையர்கள் பெருமை கொள்வதாய்க்குறிப்பிடுவதுண்டு நாடகாசிரியர் ஷேக்ஸ்பியருக்கு இணையாகக்கவிதையுலகில் முடிசூடா மன்னனாக இன்றைக்கும் உலகம் போற்றுவது ஜான் மிலடனைத்தான்.
கண்கள் இரண்டையும்  முற்றாய் இழந்தவன் மில்டன்.இருளிலே ஒளியைத்தரிசித்தவன்.அவனது படைப்பு’இழந்த சொர்க்கம்’ ஓர் ஒப்பற்ற காவியம்.அவனது படைப்பு’இழந்த சொர்க்கம்’ ஓர் ஒப்பற்ற காவியம்.முப்பது ஆண்டுகள் தன் சிந்தையில் ஊறித்தோய்ந்ததை எட்டு ஆண்டுகள் உழைத்து எழுத்தோவியமாய் வடித்த மாகவி.தன்னம்பிக்கை மட்டுமே மூலதனமாய்க்கொண்டு கவிதை உலகின் சிகரத்தை எட்டிப்பிடித்தவன்.
ஜான் மில்டன் 09.12.1608 ல் லன்டனில் தோன்றி கேம்பிரிட்ஜில் பயின்று முதுகலை பட்டம் பெற்றார். மதத்தின் பிடியிலிருந்து அரசை முற்றாய் விடுவிக்க அவாவியவர்.மதத்தைத்தூய்மைப்படுத்தும் ப்யூரிடனிசமே அவர் பின்பற்றியது.
குடும்பவாழ்க்கை என்னும் நாடகத்தில் மில்டன்  மனைவி என்னும் பாத்திரத்தின் வழி அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாது.ரோஜா மலரை மகளிருக்கு உலகமே ஒப்பிடும்போது மில்டன் மகளிரை அம்மலருக்கும் அடியில் கருமையாய் கூர்மையாய் நீட்டி நிற்கும் முள்ளுக்கு இணையாக்குகிறார்.’’Daffodils fill their cups with tears’ என்பது மில்டனின் பட்டறிவுதான்.
1651ல் மில்டன் ‘டிஃபன்ஸ் ஆஃப் தி இங்லிஷ் பீப்பல்’ என்பதனைப்படைக்கும்போது தனது இடதுகண் பார்வையை இழந்துவிடுகிறார்.அடுத்த கண்ணையும் அவரின் தொடர் உழைப்பு விழுங்கி விடும் என எச்சரிக்கப்படுகிறார்.’iit is better to sacrifice my eye sight than to neglect my duty’  என்பதனை நெஞு நிறைவாக செயல் படுத்தியவர் மில்டன்.
1652 ல் 43 வயது நிரம்பிய மில்டன் முழுப்பார்வையையும் இழந்து இருளில் ஆழ்ந்து விடுகிறார். தன்னம்பிக்கை ஒளி மட்டும் கூடுதலாய்ச்சுடர்விட்டுப்பிரகாசிக்கிறது..அவரது முதல் மனைவி மறைந்து போகிறார். பிறகு அவரது இரண்டாவது மனைவியையும் பிள்ளை பேற்றில் பறி கொடுக்கிறார். மில்டன் மலையாக நம்பி இருந்த நண்பன் கிராம்வெல்லும் மறைந்து போகிறார். மத விடுதலைச்சிந்தனையில் மில்டனுக்கு உறுதுணையாக இருந்தவர் இந்த கிராம்வெல்.
அடுத்து மில்டன் இலத்தீன் செயலகப்பணியிலிருந்து விரட்டப்படுகிறார். சிறைய்ல் அடைக்கப்படுகிறார்.கொடுஞ்சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார். அவர் பெண்குழந்தைகளோ  ஷேக்ஸ்பியரின் கிங்லியரில் வருவதற்கு இணையாக அவரை சொத்துக்காக இம்சிக்கின்றன.
‘’ I leave to the unkind children I had by her’  என்று குறிப்பிட்டு முடிக்கிறார் மில்டன்.
அந்தகாரத்தில் வாழ்ந்த மில்டன் 1658 ல் இழந்த சொர்க்கம் என்னும் மாகாவியத்தினை எழுதத்தொடங்கி 1663 ல் முடிக்கிறார்.அது 1667 ல் பெரும் படைப்பாய் வெளிவருகிறது.
மீண்ட சொர்க்கம் இதனை 1671ல் நான்கு காண்டங்களாக மில்டன் படைக்கிறார்.’சம்சன் ’அகனாஸ்டிஸ் என்னும் படைப்பு பின்னர் மலர்கிறது. பெருமைக்குரிய நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் பற்றி’
Dear son of memory, great heir of fame,what needs it thou  such weak witness of thy name name ?’ என்று குறிப்பிட்டுச்சொல்கிறார் மில்டன். புகழ் பற்றி குறிப்பிடும் போது,’Fame is the spur that clear doth raise,That last infirmity of noble mind,To scorn delights and live laborious days’  என்று பேசுகிறார். புகழ் ஆன்மாவின் ஊற்றுக்கண்ணை அடைத்துவிடும் என்று எச்சரிக்கை தருகிறார்..இழந்த சொர்க்கத்தில் முதல் மனிதனும் அவனின் பேரன்புக்குப்பாத்திரமான முதல் பெண்மணியும், மானம் மறைக்க’ தழை ஆடை எடுத்த விதம் பற்றி,,
’But such as this day to Indians known
In malabar or deccan spreads her arms
…………………………………………………………
There off Indians herds man shining heate
Shelters in coole and tends pesting Herds’
என்ற விபரம் தருகிறார். தன் மீது கழிவுரக்கம் காட்டவேண்டும் என்றும் தன்னைக்கைதூக்கி விட ஆள் இல்லை என்றும் ஓலமிடும் சாதாரண மனிதனுக்கு மில்டன் ஒரு பெரும் புதிர். தன் குடும்பம் சமுதாயம் இவற்றுக்கு மேலாகப்படைத்தவனே மில்டனுக்கு எதிராக அவன் கண்களைப்பறித்த போதும்,
God doth not need
Either man’s work or his own gifts who best
Bear his mild yoke they him best.
என்று நிறைவாகக்கவிதை த்த்ருகிறார் மில்டன்.
கண்களை இழந்த மில்டனுக்காகக்கண்ணீர் சிந்த வருவோரை அவர் அனுமதிப்பதில்லை.. ஆம்,
‘To be blind is not miserable
Not to be able to bear blindness that is miserable’
என்று பேசுகிறார் மில்டன்.
தன்னால் தன் பணிகளை முற்றாகசெய்ய இயலாது என்கிற சூழலில் மூன்றாவதாய் ஒரு பெண்ணை 1664 ல் மணம் முடிக்கிறார்.1674 ல் நவம்பர் 8 ல் மில்டன் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொள்கிறார்.
‘இடமும் காலமும்
என்ன செய்துவிடும் மனத்தை
மனம் மலையாய்
குன்றா உறுதி துணை வரவே
கொடு நரகம் பொடிபடவும்
எழுமொரு பொன்னுலகம் நிரந்தரமாய்’
என்று பேசும் மில்டன் அடைந்த எழுத்துல உச்சத்தை மீண்டும் ஒரு முறை இலக்கிய உலகம் தொடுவது இயலுமா ? என்னும் வினா நிரந்தரமாய் நம் முன்னே.
---------------------------------------