Saturday, October 28, 2023

கவிதை- இணையக்கால கவிதை

 

இணையக்காலகவிதை                               28/10/2023


எத்தனை சவுகரியம்

இணையக்கால கவியரங்கம்

சீவி சிங்காரித்துக்

கொள்ளவேண்டாம்

அழுக்குச்சட்டையை மாற்ற வேண்டாம்

சுவாமிக்கு உண்டியலில்

போடுகிற மாதிரி

விருட்சம் உண்டியலில்

போட்டுவிட்டுப்போகலாம

எல்லார்  கவிதையையும்

கேட்க வாய்ப்பு

கவிதை விமரிசனங்கள்

ஏனோ தானோ என்றில்லை

நச்சென்றுதான்

காற்றோடு போய்விடுமோ

நாம் வாசித்த கவிதை

என்ற கவலை மட்டுமேயுண்டு.



No comments:

Post a Comment