Tuesday, February 9, 2021

அருளும் பொருளும்

 


 

 

அருளும் பொருளும்

 

மிக மிகச்சரி

பொருளில்லார்க்கு

இவ்வுலகமில்லை

அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை

வள்ளுவர் வாய்ச்சொல்

பொய்யாக வாய்ப்பில்லை

பொருள் எம்மட்டு

 நின் வசம்

கையிருப்பு அறிவிக்கும்

அருளின் இருப்பு

யாருமே அறியார்

அருள் என்பது

அன்பீன் குழவி

அன்பு கனிந்தே

அருள் வசமாகும்

அன்புடையார் என்பும்

உரியர் பிறர்க்கு

சொல்வது கேட்டிருப்பாய்

கனிந்த அன்பே அருள்

அருள் மட்டுமே

செல்லுலகில் செலாவணியாகும்

பிறவன்று

அடித்துச்சொல்கிறது வள்ளுவம்

அவ்வுலகே பொய் என்கிறாய்

அன்பு பொய்யாகாது

அருளும் பொய்யாகாது.

------------------------------------------------------

 


No comments:

Post a Comment