Monday, April 26, 2021

ஏன் இப்படி

 

 

 

ஏன் இப்படி

 

உலகம் அரண்டுபோய் கிடக்கிறது

இப்படியெல்லாம் ஆகுமென்று

யாருக்குத்தெரியும்

நிற்பதும் நடப்பதும் அவன் செயலாலே

காண்பதெல்லாம் உந்தன் கருவிழியாலே

ஆக நடப்பதனைத்தும் அவன் செயல்

கொள்ளலாமா  நாம் அப்படி

கோடிக்கணக்கில் மக்கள் துடிதுடித்து

கொத்துக்கொத்தாய்

மடிந்து போவார்கள்

பரித்ராயண சாதூனாம் வினாசாய சதுஷ்கிருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய

சம்பவாமி யுகே யுகே

எங்கு தேடுவது அந்தக்கண்ணனை.

வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள் இருக்கட்டும்

வரிசை வரிசையாய் அடுக்கப்பட்ட

மனித உடல்கள் அழுகுரல்கள்

இளைப்பாருதல் தருபவனைத்தான்

தேடுகிறோம் காணவில்லை.

சீனாக்காரன் கொரொனா சாவு நாலாயிரம் என்கிறான்

பொய் சொல்லுகிறான் இல்லை

மருந்து  ஒன்று வைத்துக்கொண்டு

உலகுக்கு அது மறைக்கிறான்

இரண்டில் ஒன்று சரியாய் இருக்கும்.

மதுரை சொக்கனுக்குப்படைக்கும்  ஆச்சரியார்களை

வானத்திலிருந்து இறங்கிய தில்லை தீட்சிதர்களை

பூலோக வைகுண்டம் திருப்பதி பட்டாச்சாரிகளை

காப்பாற்றத்தான் யாரும் வரவில்லை.

பூரி ஜகந்நாதனுக்கு தேர் அசைய

உச்ச நீதி மன்றம் குரல் தரவேண்டும்

என்னவெல்லாம் இங்கே அரங்கேறுகிறது.

சபரிமலைக்குப்பெண்கள் போவதெங்கே

பூட்டிக்கொண்டல்லவா

தவம் செய்கிறான் தனிமையில்.

நடைபயணங்கள் பழனிக்குமில்லை

கடலோர மேரி அன்னைக்குமில்லை

யாருக்கும் தெரியவில்லை குழப்பம்

இத்தனைக்கும்     விடை .

----------------------------------

.

 

 


No comments:

Post a Comment