Monday, April 26, 2021

கல்வி சிறந்த தமிழ் நாடு

 

 

 

 

 

கல்வி சிறந்த தமிழ் நாடு 

தொடங்கும்போதே எல் கே ஜி யில்  ஒரு குழந்தையை சேர்த்துவிட  குறைந்தது ரூபாய் இருபது லட்சம்  அப்புறமாய்  ஆண்டு ஒன்றுக்குச்செலவு வெறும் பன்னிரண்டு லட்சம் மட்டுமே.

.இப்படி ப்பணம் கரக்கும்  தனியார் பள்ளிக்கூடங்கள்  சென்னையில்  அனேகம் .. அங்கு போட்டாபோட்டியில்  மேட்டுக்குடி மக்களின் குழந்தைகள்  சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

  நடுத்தம் உள்ள பள்ளிகள் என்றால்  குழந்தையின் சேர்க்கைக்கு மூன்றரை லட்சம்.கொடுக்கவேண்டும்.

 எல்கேஜி அட்மிஷனுக்கு ஒரு லட்சம் ஐம்பதனாயிரம் என்று  மட்டுமே கேட்கும் ஏழைகளின் பால் செந்தண்மை பூண்ட பள்ளிகள். இங்குமுண்டு.

அரசு பள்ளிகள் இயங்கிகொண்டுதான் இருக்கின்றன.அவை சிறுத்து மதிப்பிழந்து தலை எழுத்தே என்று உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு காலம் தள்ளுகின்றன

.மய்ய அரசு நடத்தும் பள்ளிகள் என்பவை வேறு.  நவோதயா பள்ளிகள் இங்கு அனுமதிக்கப்படஇல்லை அவை தன் பாட்டுக்கு .இந்தியை பரப்பிவிட்டால் அப்புறம்  .தமிழர்களை   பேரழிவிலிருந்து எப்படிக் காப்பாற்றுவது?.ஆகத்தான் அவைகட்கு இங்கு அனுமதியில்லை.

   மய்ய அர்சின் கேந்திர வித்யாலாயாக்கள் மட்டும் சாதுவாய் ஆங்காங்கே இயங்கிக்கொண்டு இருக்கின்றன.அவைகட்கும் எமக்கும் சம்பந்தம்  ஏதும் இல்லை அவைகளை. ப்பார்க்கும்போதே தமிழர்களுக்கு எப்போதும் ஒரு ஒவ்வாமை.

சமச்சீர்கல்வி தமிழ் மண்ணில் நடைமுறையில் இருக்கிறது என்கிறார்கள் .மெட்ரிகுலேஷன் என்பதும் இல்லாமல் இல்லை.  இது சிபிஎஸ்இ பள்ளி என்கிற பலகையை மட்டும்  மறக்காமல் எல்லா பள்ளி வாயிலிலும் எழுதிவைத்து விடுகிறார்கள்

. இண்டர் நேஷ்னல் சிலபஸ் என்று ஒரு புது ரகம் ஜகஜோதியாய் முளைத்துவிட்டிருக்கிறது.அதற்கான பள்ளிகள். துவங்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளுக்கு இப்போதைக்கு நல்ல மார்கெட் வந்திருக்கிறது.

பல லட்சங்களைக் காலி செய்தால் ஒரு குழந்தையின் பள்ளிப்படிப்பை முடித்துவைக்கலாம். கல்லூரி படிப்பு விவகாரங்கள் அவை பல லட்சங்களை விழுங்கலாம். கல்லூரிகள் அனேகம் அவைகளுள் ஒன்றைத்தேர்வு செய்து ஒரு நல்ல இடத்தில் கெட்டியாக தொத்திக்கொண்டுவிட்டால் பிரச்சனை ஒருவாறு முடிவுக்குவரும்...

அரைகாசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம் என்கிற காலம் முடிந்துபோயிற்று.அரசு வேலை அதற்காக இரவு கண்விழித்து சர்வீஸ் கமிஷன்  தேர்வு அது இது என்று நாக்கை பிடிங்கிக்கொள்ள யாரும் தயாரில்லை  அரசு வேலைக்குப்பென்ஷன்  நிச்சயம்  என்கிற சமாச்சரம் கோவிந்தாவாகி ஆண்டுகள் பல ஓடிவிட்டன. அரசியல்வாதிகள் ஆக்கிரமிக்கும்.கட்சி பீடங்கள்,,சமூக.வலைகள்.சாதிய கொக்கிகள்,மத நெருடல்கள், இவைகளுக்கு மத்தியில்  அரசாங்க உத்தியோகம் பார்த்து பணி மூப்பில் பிரச்சனை ஏதுமில்லாமல்  வீட்டுக்கு வரத்தான் வாய்க்குமா என்கிற கவலை நிரந்தரமாகி இருக்கிறது.

நூற்றுக்கு இருபத்து ஐந்து சதவீதம் இளைஞர்கள் அடித்துபிடித்து மென்பொருள் வலை வளாகம் என்னும் பணியில் சிக்கி நாசமாகி வருகின்றனர். பன்னிரெண்டு மணி நேரம் தினம் தினம் வேலை செய்கிறார்கள்.வாயைப்பொத்திக்கொண்டு வாலை ச்சுருட்டிக்கொண்டு வேலை பார்க்கிறாகள்.தன்னையே விற்றுக்கொண்ட வாழ்க்கை..காசு வருகிறது.சுற்றி நிற்பவர்கள் மரியாதை காட்டுகிறார்கள்.விமானத்தில் பறக்க வாய்ப்பு வந்துவிடுகிறது.அப்புறம் என்ன அதுதான் . கைலாசம் வைகுண்டம் எல்லாம் காணவும் வாய்க்கிறது..

எந்த நிமிடமும் நடுத்தெருவுக்கு வரவாய்ப்புள்ள மென்பொருள் உத்தியோகம்.அது மட்டும்தானே  இப்போதைக்கு சோற்றுக்கு வழி. தன் உடம்பின் சத்து போனபின்னர் கண்கள்குழிவிழும்போது உண்மை. புரியும் எல்லாரும் நம்மை ஏமாற்றித்தான்விட்டிருக்கிறாகள்..

அரசாங்கம் தன் பொறுப்பை கல்வித்துறையில் சுறுக்கிக்கொள்ள மட்டுமே முனைப்பு காட்டுகிறது.தனியார் மய ஆளுகை கல்வித்துறையில் கொடிகட்டி ப்பறக்கிறது.அரைசம்பளம் வாங்கிகொண்டு ரெண்டு பங்குக்கு வேலை செய்யும் ஆசிரியர்கள்.திருக்கூட்டம் தனியார் துறையில் எப்போதும் இருக்கவே இருக்கிறது..பணி முடித்து வீட்டுக்குத்திரும்பும் நாள்வரை பள்ளி முதலாளியின் கால்களை க்கெட்டியாகப் பிடித்துக்கோள்ளும் கலை அறிந்தவர்கள் பாக்கியசாலிகள்.அவர்கள்மெய்யாலுமே ரட்சிக்கப்படுகிறார்கள்.

 

கல்வி வள்ளல்கள்ஆறுமுக நாவலரை ,பச்சையப்பவள்ளலை .அண்ணாமலை செட்டியாரை,அழகப்பவள்ளலை,ஜிடி நாயுடுவை சபாபதிமுதலியாரை,ஐடாஸ்கடரை,காயிதேமில்லத் பற்றி எல்லாம் பேசினால் கேட்பதற்குத்தான் ஆட்கள் எங்கே இருக்கிறார்கள். முதல்வர் காமராசரும், நெ து சுந்தரவடிவேலுவும் மு.வ வும் எப்படியெல்லாம் கல்வி சிறக்க சிந்தித்தார்கள் என்பதைப் பேசத்தான் ஆட்கள் உண்டா என்ன?

லட்சம் லட்சமாய் க்கொட்டி தனியார் நிறுவனத்தில் குழந்தைகளைப் படிக்கவைப்பதும் பைசா செலவு செய்யாமல் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்கவைப்பதுவும் எப்படி ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பிற்கு அடித்தளமாக ஆதாரமாக அமையும். இதன் கதை வேறு அதன் கதை வேறுதான்.

மா நில அளவில் முதல் மாணாக்கனை த்தயார் செய்த அரசாங்க பள்ளிக்கூடங்கள் இருந்த காலம் ஒன்று இருந்தது. கம்பீரமாகப்பாடம் நடத்தி ப்பெருமை சேர்த்த ஜாம்பவான்கள் புழங்கிய அரசாங்கப்பள்ளிகள் எத்தனையோ இருந்தன. அறிஞர்கள் அப்துல் கலாமை, சி என் அண்ணாதுரையை, மயில்சாமி அண்ணாதுரையை நாட்டிற்குத்தந்த அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கத்தான் செய்தன.

இன்று எத்தனையோ பள்ளிகள் எத்தனையோ நடைமுறைகள் எத்தனையோ பாடதிட்டங்கள் எப்படி எப்படியோ வேலை வாய்ப்புக்கள்.

எல்லோரும் ஓர்விலை எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டுமன்னர் என்றெல்லாம் இனி பாடவாய்ப்பே இல்லை.

-------------------------------------------------------------------------

 

 

 

.

 

 

 

 


No comments:

Post a Comment