எஸ்ஸார்சி யின்/சென்னைப் புத்தகக் காட்சி

நந்தனம் பேருந்து நிறுத்தம் இறங்கினால்
அண்ணாசாலையைத் தாண்டத்தான் வேண்டும்
பதினைந்து நாட்களுக்கு
ஒரு டிராஃபிக் காவலரைப் போடாது நிர்வாகம்
புத்தகக் காட்சிக்குச் செல்லும்
நடைபாதையில்
பழைய புத்தகக் கடைகள்
அடைத்துக் கொண்டு.
தார்ச்சாலை நடைபாதை
இவையிடை கிடக்கும் உடைந்த கருங்கல் சில்லுகள்
காருக்கும் டூவீலருக்கும்
நடப்போருக்கும் ஓரேயொரு பாதை
ஒரு கிலோ மீட்டருக்கு நடந்தால் புத்தகக் காட்சியை எட்டலாம்
டிக்கட் கவுண்ட்டர்கள்
ஒன்றிரண்டு இயங்கி உதவும் உங்களுக்கு.
வாங்கிய டிக்கெட்டை நம்பேரெழுதி பாதிக்
கிழித்துப் பெட்டியில் போடவேண்டும்
அது சம்பிரதாயம்
எங்கும் தரை சமதளமாய் இருக்காது
பள்ளமும் மேடும் தட்டுப்படும்
கேபிள்கள் அடி செல்லும்
நீட்டுப் பெட்டிகள்
இடை இம்சிக்கும்.
கழிப்பறை நடந்துசெல்ல கதவைத் திறந்து மூட
வித்தை கற்றவர் களால் மட்டுமே முடியும்
உரைவீச்சும் பட்டிமன்றமும் வாயிலில் நடக்கும்
அரங்க இருக்கைகள் பாதிகாலியாய்
நல்ல காபிக்கும் நல்ல டிபனுக்கும் பிரார்த்தனை செய்தால் உண்டு
திருவள்ளுவர் சிலை அருகே செல்ஃபி எடுப்போர் கூட்டமாய் நிற்பர்.
அனைத்தையும் விடுங்கள்
நல்ல புத்தகங்கள் நிச்சயம் வாங்கலாம்
புத்தகக்காட்சியில்
ஐயமே இல்லை.
No comments:
Post a Comment