Monday, November 13, 2023

கவிதை -மனிதன்

 


கவிதை- மனிதன்       இணையக்கால கவியரங்கம்      13/11/2023


போக்குவரத்தின் ஆக்கிரமிப்பு

எங்கும் இரைச்சல்

மனிதர் வாழ் நகரங்கள்

இரைச்சலின் மொத்த குத்தகை

காடுகளுக்குச்சென்று 

தவமியற்றி அமைதியாய்

வாழ்ந்த காலம் இருந்தது

இப்போது வீடுகளுக்குள்ளாக

எத்தனைத் தொலைக்காட்சி சேவைகள்

எப்போதும் ஏதேனும்

தொலைக்காட்சி விளம்பர ஒலி

தொடரும் கைபேசி ஆரவாரம்

அளவுக்கு மிஞ்சினால்

அமிர்தமும் நஞ்சென்பதே

இவைகளின் அறிவிப்பு

யாரும் யாருடனும் 

பேசக்கூச்சப்படுகிறார்கள்

எல்லோருக்கும் மொபைலும் கையுமாய்

வாழ்க்கை

மொபைல் மனிதனின் 

இன்னுமொரு இதயம்

மானிடர்க்கு விடுதலை

இனி சாத்தியமே இல்லை.

No comments:

Post a Comment