Wednesday, November 15, 2023

கவிதை- வரலாறு





இணையக்கால கவியரங்கம் எண் 28         15/112023



கவிதை


 வரலாறு


கணக்குப்போட்டு விளம்பரப்படுத்தி

காய் நகர்த்துபவர்கள்

மேடையில் தொடர்ந்து

பிரகாசிக்கிறார்கள்

நொடிப்போதும் தந்நலமற்று

வாழ்ந்த வாழ்க்கை

சமூகத்தால் கவனிக்கப்படுகிறதா

என்றால் இல்லை

சமூகம் அவரைக்

கணக்கில் கொள்கிறதா

அது பற்றி அவரும் 

கவலைப்பட்டால்தானே

எல்லோர்க்கணக்கும்

நேராக வேண்டுமென்று

ஆசைப்படலாம்

ஆசைப்படுவது நிகழ்த்தப்பட

வேண்டுமென்று

வரலாற்றுக்குக்கட்டாயமில்லை

நேர் செய்யப்படாத

கணக்குகள் ஏராளமுண்டு

எப்போதும் வரலாற்றில்.. 

No comments:

Post a Comment