Saturday, November 4, 2023

கவிதை- வன்மம் குறையவில்லை

 



 கவிதை-  வன்மம் குறையவில்லை        இணையக்கால கவியரங்கம்   5/11/23

  

புத்தனும் ஏசுவும்

தோற்றுப்போனார்கள்

வாழும் மாந்தரிடை வன்மம் குறையவில்லை

அகிம்சையைத்தூக்கிப்பிடித்த

காந்தியின் தேசமிது

தேசபிதாவைக்காப்பாற்றிக்கொள்ள முடியாமல்

கொன்றுபோட்டோமே நாம்.

அறிவினான் ஆகுவதுண்டோ

பிறிதின் நோய்  தந்நோய் போல்

போற்றாக்கடை சொன்ன வள்ளுவமும்

வாடிய பயிரைக்கண்போதெல்லாம்

வாடினேன் வழங்கிய வள்ளலாரும்

ஹமசிடமும் இஸ்ரேலிடமும்

நின்று பேசிடத்தான் முடியுமா ?

அறிவுக்குருடர்கள் 

கேள்விச்செவிடர்கள் முன்னே

ஆயிரம் ஆயிரமாய்

மாண்டு போவது பெண்களும் குழந்தைகளும்.

ஐக்கிய நாடுகள் சபையொன்றுண்டு

அறிவீரோ

மார்கழியில் பஜனை செய்வார்களாம்...




No comments:

Post a Comment