Tuesday, November 14, 2023

கவிதை- நம்பிக்கை

 

இணையக்கால கவியரங்கம்           14/11/2023



     நம்பிக்கை


உதிக்கும் கதிரவனும்

பொழியும் மழையும்

சிரிக்கும் மழலையும்

பூக்கும் மலர்க்கொடியும்

பசுமைப் புல்வெளியும்

நம்பிக்கையின் ஊற்றுக்கண்

மானுட வாழ்க்கையில்

நம்பிக்கை தரும் கவிதைகளை

எழுதிட எனக்கும் ஆசைதான்

நம்பிக்கைத் தருவிக்கும்

சமாச்சாரங்கள் கண்முன்னே

நிகழ்ந்தால் மகிழ்வேன்

எழுதுவேன் கவிதைகளை

சமூக நடப்புக்கள்

எல்லாவற்றுக்கும் பின்னேவோர்

அரசியல் ஒளிந்துகொண்டு

நகைப்பதைக் காண்கிறேனே

காக்காய்க்குச்சோறு போடுவதிலிருந்து

கப்பல் கட்டுவதுவரை

எல்லாவற்றுக்குள்ளும்

கள்ளமொன்று கண் சிமிட்டுகிறதே

எதையும் ஏறெடுத்துப்பார்க்காமல்

எந்நேரமும் உழைக்கும்

விவசாயி தொழிலாளி

நேர்மையின் மீதுதான் தோழா

இப்பூவலகம் சுழல்கிறது.


No comments:

Post a Comment