Wednesday, December 13, 2023

கவிதை-பாவம் சென்னை

 இணையக் கால கவியரங்கம் 55


13/12/23


எஸ்ஸார்சி




பாவம் சென்னை



மாற்றமே இல்லை

ஏமாற்றமே விஞ்சுகிறது

சென்னை மீது வைத்த

மதிப்பெல்லாம் பூச்சியமாகிறது

பெருமழையைத்தாங்கி

ஊரைக்காப்பாற்ற முடியாத

திட்டங்கள் சாமான்யனை

கண்ணீர் சிந்த வைக்கிறது

அது இது என்று பட்டியலிட்டுச் செய்தவை

எல்லாமே

எதற்கும் உதவவில்லை

பெருமழை வந்தபோது.

மார்கழி இசையும்

தை புத்தகக்காட்சியும்

சோகத்தோடுதான் இவ்வாண்டு.

வேறு என்ன செய்வார்கள்

உட்கார்ந்து சிந்திக்காதவர்கள்

ஓடிப்போகிறார்கள்

பிரச்சினையை

வழக்கம் போல்

மக்களிடமே விட்டு விட்டு.









பாவம் சென்னை


No comments:

Post a Comment