Tuesday, December 26, 2023

கவிதை- ஜனநாயகம்

 இணையக் கால கவியரங்கம்

26/12/23


ஜனநாயகம்


டிசம்பர் 13, ஈராயிரத்து இருபத்து மூன்று

டெல்லி பாராளுமன்றக்

கட்டிடத்துக்குள் பார்வையாளர்கள் யாம்

பொய் சொல்லி

நுழைந்த இரு அடாவடிகள்

கலர் புகை எழுப்பி

அதிர வைத்திருக்கிறார்கள்

பாரதமாதா கி ஜே கோஷம் வேறு

நான்கடுக்குப் பாதுகாப்பு

கேவலமானது

 தேசத்திற்கு தலைகுனிவு

எம்பி அதுவும்

 ஆளும்

கட்சிக்காரர் சிபாரிசாம்

ஒன்று வெளிச்சமானது

அத்தனைக்கு முக்கியமான

இடத்தில் செக்யூரிட்டி பணி

எத்தனைக்குத் தாழ்வாய்

ஏனிப்படி கேள்வி வைத்த

எதிர்கட்சி எம்பிக்கள் 

மொத்தமாய்

சஸ்பென்ஷன்

என்ன ஜனநாயகமடா இது

மக்களால் மக்களே மக்களுக்காகவா?

சாட்சியாய் செங்கோல் வேறு.


No comments:

Post a Comment