Tuesday, December 5, 2023

கவிதை- தட்டச்சு புராணம்

 

எஸ்ஸார்சி/தட்டச்சு புராணம்

இணையக்கால கவியரங்கம் 41

29/11/2023

வாட்ஸ் ஆப்பில்
தட்டச்சுப்பலகை
முந்திரிக்கொட்டை
நான் ஒன்று அடித்தால்
தான் ஒன்று அடிக்கிறது
நூலரங்கு என்று அடித்தால்
நூலகம் என்று போட்டுக்கொள்கிறது
அது பரவாயில்லை
யோக்கியவான் என்றடித்தால்
அயோக்கியவான் என்றும்
தாய் என்றால் நாய் என்றும்
எழுதிக் காட்டுகிறது
எத்தனை முறைத் திரையை
உற்று முறைத்தாலும்
எந்தத் தப்பேனும்
தப்பித்துக் கொள்கிறது
பளிச்சென்று நம்மை
நக்கல் அடிக்கிறது
ஒருவன் அடிக்க
இன்னொருவன் கவனிக்க வென்று
இருந்தால் தப்பலாம்
அது எப்படிச் சாத்தியமாகும் இப்போதைக்கு.
மதி என்று அடித்தால்
மிதி என்னும் அதைச்சதி
என்றே சொல்லலாம்
யோசித்தேன்
ரதி என்று போட்டுக்கொள்கிறதே அது.

No comments:

Post a Comment