Sunday, December 24, 2023

கவிதை- யார் கவிஞன்?

 இணையக் கால கவியரங்கம் 66


24/12/23




யார் கவிஞன்?



இறையை உணர்ந்தோன்

இயற்கையைப் போற்றுவோன்

உயிர்களை நேசிப்போன்

உண்மையே பேசுவோன்

உழைப்பை உயர்த்துவோன்

எளிமை ஏற்போன்

சண்டை சச்சரவு வெறுப்போன்

வன்முறைக்கு எதிரி

வருவது உரைப்போன்

பிறர் நலம் விரும்பி

நல்லதே நாடுவோன்

பேராசை அற்றோன்

பெருமை விரும்பி

குழந்தையை மதிப்போன்

பெண்மை போற்றுவோன்

மனசாட்சி பேணுவோன்

மக்களோடு நிற்போன்

யாரென்று கேட்பீர்

கவிஞன் அவனே.


No comments:

Post a Comment