Wednesday, December 27, 2023

கவிதை- ஜல்லிக்கட்டு

 இணைய கால கவியரங்கம் 69


27/12/23



ஜல்லிக்கட்டு


தமிழ்மண்ணில் ஜல்லிக்கட்டு

பொங்கல் முடிந்து வரலாம்

மய்ய  அரசும் நீதிமன்றமும்

பச்சைக் கொடி காட்டி ஆயிற்று

ஜல்லிக்கட்டுச் செல்கிறது 

அதன் ராஜபாட்டையில்

ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி

காயமடைந்தோரை

இறந்தோரை

 யாரும்

பேசுவதில்லை 

அவர்கள் மறக்கப்படுகின்றனர்

மாடுகள் விடும் கண்ணீர்

பற்றி யாரும் வாய்திறப்பதில்லை

காளையை அடக்கிவிட்ட

உனக்குப் பரிசு

காளை உன்னை வென்றாலும் பரிசு உனக்குத்தான்

காளைக்கு   எதுவும் இல்லை

ரொம்ப நாளாய்  எனக்கு ஐயம்

ஜல்லிகட்டுக்கு

 ஏன்

ஆண்கள் மட்டும்தானா?


No comments:

Post a Comment