Friday, January 12, 2024

கவிதை- அதர்மம்

 இணைய கால கவியரங்கம் 86


12/1/24


அதர்மம்


இந்த மண்ணில் பிறந்த பெண்

பெரிய நிறுவனமொன்றில்

சி ஈ ஓ

லட்சம் லட்சமாய்ச் சம்பளம்

பெற்ற குழந்தையைக் கொன்று சூட்கேசில்

திணித்து சொகுசுக்காரில்

பயணம் போக முடிகிறது

கணவன் மனைவிக்குள்

சண்டை

 நீதிமன்றம் போனார்கள்

விவாகரத்தின் போது

நீதிபதி பெற்ற தகப்பனை

வாரம் ஓர் முறை

குழந்தையைப் பார்க்க

அனுமதித்துவிட்டாராம்

ஆகத்தான் இந்த விபரீத முடிவு

பெற்ற தாய் தன் குழந்தையைக்

கொன்றுவிட்டு

சட்டம் பேசுவதைப்பார்த்தபின்னும்

வானம் பொய்க்காமல் என்ன செய்யும்?


No comments:

Post a Comment