Monday, January 15, 2024

கவிதை-பொங்கலோ பொங்கல்

 இணைய கால கவியரங்கம் 88

14/1/24



பொங்கலோ பொங்கல்



சுழன்றும் ஏர் பின்னது

உலகம் என்பார் வள்ளுவர்

எந்தத் தொழிலிலும்

இடைத்தரகர் மட்டுமே

கொழிக்கின்ற

பொல்லாக்காலமிது

முதலே போடாமல்

லாபம் சம்பாதிக்கத்

தெரிந்தவர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்

உழவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது

என்பது நிதர்சனம்

காளை மாட்டின் ஆண்மை அகற்றிய பின்தானே அது கொம்பு சீவி

ஏர்உழுது பிணையல் அடித்து வண்டி இழுக்கிறது

அதற்கு நன்றிக்கடனாய்

மாட்டுப்பொங்கல்

என்ன நேர்மையோ.

இந்தியா ஓர் விவசாயநாடு

எந்த உழவன் பாராண்டான்

நாமும் இங்கே கண்டோம்

விவசாயியாய் வேடமிட்டு

மேடைஏறியவன் பின்தானே மொத்தமாய் நாம்.


No comments:

Post a Comment