Sunday, January 14, 2024

கவிதை- இராமலிங்கம் விடைபெற்றார்

 இணைய கால கவியரங்கம் 87


இராமலிங்கம் விடைபெற்றார்



பட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் இலக்கியச்சிறகு இதழ்

ஆசிரியர்.

 ஷைன்

என்னும் ஆங்கில இதழும்

அவர் நடத்தினார்

இதழ் பணியில் நான்

அவரோடு உடனிருந்தேன்

இன்று காலை அன்னார்

அமரரானார் பட்டுக்கோட்டை ராஜா

ஃபோன் செய்து 

அவர்

இறப்பைச் சொன்னார்

இராமலிங்கம் 

என் சஹிருதயர்.

எழுத்தாளர் வே.சபாநாயகம் வழி

எனக்கு நண்பரானார்

காதம்பரி 

மருத்துவர்அறிவுடைநம்பி

இன்னும் தஞ்சைத்தோழர்கள்

கீரனூர் ஜாகிர்ராஜா

தஞ்சைப் பிரகாஷ்

சுந்தர சுகன் என்னும்

நட்புவட்டத்திற்கு

என்னை அறிமுகப்படுத்தியவர்

பாசத்திற்குரிய இன்னொரு

நட்புப்பொக்கிஷத்தைக்

காலம் கொண்டு போனது

கண்கள் குளமாகின்றன

என் மனம் கனத்துப்போகிறது


No comments:

Post a Comment