Tuesday, January 9, 2024

கவிதை-நாய்

 இணைய கால கவியரங்கம் 83


9/1/24


நாய்



நாய்கள் குறைப்பது 

தலைவேதனை

நாய்கள் ஓலமிடுவது ரோதனை

நாய்களின் கண்கள்

பேய் பிசாசு மட்டுமில்லை

எமன் வருவதும்

பார்த்துவிடுமாம்

நாய் அழுகை மழை

வரப் போவதைச் சொல்வது என்பார் சிலர்

நாய்கள் தூரத்தில் இருந்தால் அழகு

கிட்ட வந்தால் இம்சை

பாதி மனிதர்கள் நாய்களோடு கூடவே

ஓடியும் வருகிறார்கள்

நாய் வளர்ப்பு மனிதபராமரிப்பை விடச்

செலவு பிடிக்குமாம்

அனுபஸ்வத்தர் சொன்னது

அடுப்பங்கரையில் மீந்திருந்த சோற்றை இப்போது

தெருச்சொறிநாய்

சாப்பிட மறுக்கிறது

நாய்களும் கூட ஜபர்தஸ்து

காட்டுகின்றன நம்மைப்போல.


No comments:

Post a Comment