Saturday, January 20, 2024

கவிதை - நல்ல விஷயம்

 இணைய கால கவியரங்கம் 93


19/1/24


நல்ல விஷயம்



கோடை வெயிலும்

குளிர்கால மழையும்

சென்னைக்குச் சாபம்

பெருங்களத்தூர்

 என் வீட்டருகே

பெருமழையின் வெள்ளத்தின் மிச்ச சொச்சம். திருநீர்மலை வாழ் நூறு வெள்ளை கொக்குகள்

அதிகாலையே

இரை பொறுக்க வருகின்றன

நீர் உறை பூச்சி புழுக்கள் தாம் இரை

எப்போதும் கூட்டமாய்

புறாக்கள் இங்கேயுண்டு

இப்போது கொக்குகள்

நரிக்குறவர்கள் கிராமப்புறத்தில் புறாக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போய்

பசி ஆறுவார்கள்

அதுமட்டும் நிகழ்வதில்லை

இங்கு

 நல்ல விஷயம்.


No comments:

Post a Comment