Tuesday, January 2, 2024

கவிதை-சூட்சுமம்

 இணைய கால கவியரங்கம் 76


2/1/24



சூட்சுமம்


தெரியாதவர்க்கு அகங்காரமாய்

தெரிந்தவர்க்கு இறையாய்

அகப்படா விஷயமொன்று

எப்போதும் இருக்கவே செய்கிறது.

எத்தனை வேகமாய் எழுதினாலும்

எத்தனை வேகமாய்ப்

பேசினாலும் பிடிபடா ஒன்று சாசுவதமாய் 

கூடவே இருக்கிறது நின்னோடு.

அகப்படா அது

எப்போதும்

நகைக்கிறது

அத்தனையும் வென்று.


No comments:

Post a Comment