Thursday, January 4, 2024

கவிதை- செல்லம்மாவுக்கு

 

செல்லம்மாவுக்கு

செல்லம்மாவுக்குச் சிலை
வைத்தார்கள்
கடையத்தில்
சமீபமாய்
கொண்டாடினார்கள்
கடையத்துச் சனங்கள்
தாழ்த்தப்பட்டோனைப்
பாரதி
தன் தெருவழியே கூட்டிவரத்
தீட்டுப் பட்டுவிடும் தெருவெல்லாம்
ஜாக்கிரதை எச்சரித்தார்கள்
கழுதையொன்றை
அடுத்த நாள்
கழுத்தில் கைபோட்டு
நடத்திவரப்
பைத்தியக்காரா போ என்றார்கள்
கழுதை வரலாம் தெருவழியே
ஓர் மானிடன் வந்தால்
தீட்டாமோ தெரு?
பாரதி வினா வைத்தான்
அக்கிரகாரத்தில் ஏதிடம் உனக்கு?
கடையத்து அவாள்கள்
அடித்தார்கள் துரத்தி
கடையத்து மலையடிவார
ஆலமர நிழல்
படுத்தக் கவிஞன்
ஞானப் பாடல்கள் தந்தான்
என் செய்வாள் அவள்
ஊரே பேசியது கேலி
வேளைக்குச் சமைத்து
கணவனுக்கு அது கொடுத்து
மீள்வாள் செல்லம்மா
மாகவிக்கு வாக்கப்பட்ட
சகோதரி சந்தித்த சோதனைகள் ஏராளம்
துணைவியை ஓர் நாளும்
சீ என்று சொல்லாத
பாரதி அன்புமலை.
மாகவிஞன் வயிற்றுப் பசிக்குச்
சோறிட்ட செல்லம்மா
நினக்கு
சொக்கத் தங்கத்தில்
எழுப்பலாம் சிலை.

No comments:

Post a Comment