இங்கும் அங்கும் கவிதை நூல்
எஸ்ஸார்சி என்னும் புனைப்பெயரில் எழுதிவரும் எஸ்.ராமச்சந்திரன்
கடலூர் மாவட்டம் தருமநல்லூர்க்காரர். சுந்தரேசன் மீனாட்சி இணையருக்கு 04/03 1954 அன்று பிறந்தவர். அண்ணாமலை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.
இக்கவிதைநூல் எஸ்ஸார்சியின்
36 வது நூலாகும். மனித நேயம் நிறைந்த மார்க்சியத்தின்பால் ஈடுபாடு உடையடவர். படைப்பு இலக்கியங்களில் மனித மாண்பு தேடுபவர்.
குறிஞ்சிவேலனின் திசை எட்டும் மொழிபெயர்ப்பு இதழோடு நெருக்கமாய்ப் பயணிப்பவர். தமிழக
அரசு திருப்பூர் இலக்கியச்சங்க விருது சேலம்
தாரையார் விருது என அனேக விருதுகளைப்பெற்றுள்ளார்.
இவருடைய படைப்புகள் சில பல்கலைக்கழகங்களில்
பாட நூற்களாக இடம்பெற்றுள்ளன.
‘இங்கும் அங்கும்’
எஸ்ஸார்சியின் ஆறாவது கவிதை நூல்.
No comments:
Post a Comment