Thursday, December 11, 2025

சங்கு சுட்டாலும் -கதை

 

16. சங்கு சுட்டாலும்.                            

 

வானிலை அறிக்கை தயாரிப்போர் லேசு பட்டவர்களா, சென்னைக்கு ரெட் அலெர்ட் சொல்லியிருந்தார்கள்.நான் குடியிருக்கும்  வீட்டுக்குப்பக்கத்தில் ஒரு  நூறு அடி தூரம் நடந்தால் அடையாறு வந்துவிடும். மழை ஆரம்பித்து  விடாது  இரண்டு நாட்கள்   பெய்யலாம்  அது  தாக்குப்பிடிக்கும். அப்புறம் ஜிவ் ஜிவ்வென்று  அடையாற்றில்  மழை  நீர் வரத்து  ஏறுமுகம் காணும். அது நிரம்பி வழிந்தால்  தண்ணீர் எங்கள் தெருவுக்குத்தான்   முதலில் நாணிக்கொண்டும் கோணிக்கொண்டும் எட்டிப்பார்க்கும்.  பார்ப்பதற்கு  இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பதுவாய்த் தெரியும்.நேரம் ஆக ஆக அதன் அசுரத்தனம் கூடிவிடும். ஆற்று நீர் தெரு முழுதும் நிரம்பும்.  கோலம் போடும் தரை காணாமல் போகும். அப்போது தொடங்கி   வீட்டில் இருப்போர்க்கு இரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் உயர ஆரம்பிக்கும்.

மின்சார இலாகா மனிதர்கள் டப்பென்று விநியோகத்தை நிறுத்தி,   ஒரு  வக்கிர அமைதிக்கு வீடு திரும்பி  விட்டால் மனம் பிறாண்ட ஆரம்பித்துவிடும். தெருவில் பிரவாகிக்கும் மழை நீர்.  முதலில்  அது வீட்டு வாயிற்படியைத்தொடும். தெருக்கூட்ட வைத்திருக்கும் விளக்கமாறும் தண்ணீர் தெளித்துக் கோலம் போட வைத்திருக்கும் பிளாஸ்டி வாளியும் மிதக்கும். புதுத் தண்ணீர் ஆடி ஆடி  வந்து  வீடு சொந்தம் கொண்டாடிய பொருட்களை அச்சுறுத்தும்.  புழங்கும் செருப்புக்கள் தலைகீழாய் மிதக்கத்தொடங்கும்.

 கன மழை என்ற அறிவிப்பு வந்தவுடனேயே வீட்டிலுள்ள பல சாமான்கள் மேல் தளத்தில் உள்ள லம்பர் ரூமுக்கு இடம் மாறியிருக்கும். அப்படி  லம்பர் ரூம் எதுவும் இல்லை என்றால்,   கீழ் வீட்டு லாஃப்டிலேயே  அவை திணிக்கப்பட்டுவிடும்.  முக்கியமான தஸ்தாஜுகள்  பண விவகார  அயிட்டங்கள் ரேஷன் கார்டு இத்யாதிகள் ஒரு ஹேண் ட் பேக்குக்கு இடம் பெயறும். இரண்டு செட் துணிமணியோடு ஒரு சூட்கேஸ் பயணத்திற்கு  ரெடியாகும்.  வெள்ள நீர் புகுந்து வீணாகாமல் இருக்க டூவீலர்கள்  கார்கள்  எங்கேனும் தூரமாய் மேட்டுப்பகுதியில்  நிறுத்திவைக்கப்படும்.

வீட்டைப்பூட்டிவிட்டுக்  கிளம்பி முட்டிக்கால் தண்ணீரில் மேடான ரோட்டுப்பகுதிக்கு,  ஹேண்பேக்கும் சூட் கேசுமாய்  அவரவர்கள் வந்துவிடவேண்டியதுதான்.

அப்படித்தான் சகல பணிக்கைகளும்  செய்துவிட்டு, என் மனைவியைக் கூட்டிக்கொண்டு தியாகராயநகர் அண்ணன் வீட்டுக்கு  ஒரு ஓலோ கார்  பிடித்து வந்தேன். பனகல் பார்க் சுற்றிலும்  சாலையில் மழை நீர் இரண்டடிக்கு  இருந்தது.  நாங்கள் பயணித்த ஓலோ கார் ’டொங்க் டொங்க் ’என்று பள்ளத்தில் இறங்கி திணறித் திணறி எழுந்தது.

‘இந்தத் தும்பத்துக்கு நம்ப பெருங்களத்தூர் தேவலாமே’

‘நம்ப வீட்ட தொட்டுகிட்டு அடையாறு.  ஒருக்கால் செம்பரம்பாக்கம்  ஏரியையும்   தொறந்து விட்டா என்ன  ஆவுறது அத  யோசனை பண்ணில்ல  இங்க கெளம்பி வந்தம். ’  அவளும்  நானும் பேசிக்கொண்டோம்.

மாம்பலம்  ஸ்டேஷனை ஒட்டிய ராமேஸ்வரம் தெருவில் ஒரு பழைய அபார்ட்மெண்ட். அதனில் கீழ் தளம்  மேல் தளம் அவ்வளவே. அங்குதான் அண்ணன் குடும்பம் ஒரு  ஃபிளாட்டில்  குடியிருந்தது. வாடகை வீடுதான்.

‘வாடா வா  இந்த மழையில   நீ அங்க என்ன செய்வ எப்பிடி ஓட்டுவ,  திரு திருன்னு  முழிச்சிகிட்டு கெடப்பயேன்னு யோசனை பண்ணினேன். பொண்டாட்டிய  கூட்டிகினு  நீ  என் வீட்டுக்கு வந்த வரைக்கும் சரி. கஞ்சியோ கூழோ ஒண்ணா குந்தி குடிக்கலாம்’

அண்ணிக்கும்  மிகுந்த சந்தோஷம்.

‘இந்த மழை காத்து இல்லன்னாலும்   நீங்க ரெண்டுபேரும் இந்த பக்கம் எட்டியா பாப்பீங்க’ சொல்லி எங்களை  அண்ணி அன்போடு வரவேற்றாள்.

அண்ணன் வீடு ஒர் அறை வீடு. அந்த அறையில் பெரிய லாஃப்ட். அதனில் ஒரு பெரிய சூட் கேஸ் படுத்துக்கிடந்தது.  அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணி எங்கள் இருவருக்கும் ஒரு கப் காபி கொடுத்தாள். பதமான சூடும் மணமும் காபிக்கு அழகு. அண்ணி  கொடுத்த காபி நன்றாகவே இருந்தது. எப்போதும் அப்படித்தான் இருக்கும்.

‘என்ன அண்ண  அது  ஒரு பெரிய சூட் கேஸ்  லாஃப்ட்ல உக்காந்து இருக்கு’

‘அது அஞ்சி வருஷமா அங்கதான  கெடக்கு. இப்பதான் நீ பாக்குற  கேக்குற’

‘நா வீட்டு முன் ஹால்ல இருக்குற சோபாவுல குந்தி பேசிமுடிச்சி கெளம்பிடுவேன். ரூம் உள்ள  எல்லாம் வந்து  பரணையில நீ  என்ன வச்சிருக்கன்னு எங்க பாத்தன்’

‘அதுவும் சரிதான்’

‘வெளிநாடு போறவன் தான் இப்பிடி பெரிய சூட் கேசு வச்சிருப்பான்’

‘ரொம்ப சரி.. அது அமெரிக்கா மாமி சூட் கேசு’

‘ இருக்கட்டும்   அது ஏன் அஞ்சி வருஷமா ஒன் வீட்டு பரணையில குடியிருக்கு’

‘கேள்வி சரிதான். நானும்  அதுக்கு பதில் சொல்லணும்’

‘யாரு அந்த அமெரிக்கா மாமி அது என்ன சமாச்சாரம்’

‘ இதே  டி. நகர்ல பக்கத்துல மங்கேஷ் தெருவுல ஒரு மாமி இருந்தாங்க. அவுங்களுக்கு ஒரே பையன். நல்லா படிச்சான்.  நல்ல உத்யோகம் கிடச்சிது.அவன் அமெரிக்காவுல கலிபோர்னியா ஸ்டேட்ல இருக்கான். ஆனா  ஒரு வெள்ளக்காரிய காதலிச்சான் கட்டிகிட்டான். இந்த கலப்பு  கல்யாணத்துக்கு முந்திதான்   இந்த மாமி அமெரிக்காவுக்குப்  போயி வந்துது. அப்ப அந்த அய்யாவும் நல்லாதான்  இருந்தாரு. அப்பறம் அய்யா  காலமாயிட்டாரு. நா ஒனக்கு ரெண்டு மூணு  மே சட்டவ குடுத்தேன். யாவகம் இருக்கா. அமெரிக்கா மாமி குடுத்துதுதான்  ’நீ போட்டுக்கன்னு’ . அது ஏழெட்டு வருஷம் கூட இருக்குமே. நீ  மறந்து போயிருப்ப’

‘ஆமாம் இப்பதான் நெனப்பு வருது எனக்கு. நீ குடுத்தது  எல்லாமே   சின்னதும் பெரிசுமா  கட்டம் போட்ட சட்டைங்க. கருப்பு வெள்ளயா கோடு  குறுக்க போட்டு இருக்கும்.  அந்த  சட்டைய  நா  போட்டுகிட்டு ஆபிசு கூட  போனேன். எங்க ஆபிசுல அத பாத்துட்டு ஆச்சரிய பட்டாங்க. ’இதெல்லாம் ஏது. அய்யா பிளைனா போடுவீரு இப்ப என்னா கட்டம் கட்டமா இருக்கு’ன்னு கேட்டாங்க. அண்ணன் எடுத்து,  குடுத்து அனுப்பினதுன்னு சொன்னன்’

‘நா எடுக்கறன் குடுக்கறன். அதெல்லாம் நம்மால ஆவுற கத இல்ல. விரலுக்கு தக்கனதான வீக்கம். இந்த அமெரிக்கா மாமிதான்  அமெரிக்காவுல இருக்குற அது புள்ள போட்ட சட்டையெல்லாம் என் கிட்ட குடுத்து  நீ போட்டுக்கன்னு சொன்னாங்க. என் பொழப்பு எப்பிடி.  அந்த சட்டைங்க எனக்கு  சரிப்பட்டு வருமா.  அத நா  ஒனக்கு அனுப்பி வச்சன்’

‘அப்பிடியா சேதி. இது  இப்பதான் எனக்கு தெரியும்’

‘மாமிக்கு வயசு ஆயிடுச்சி. இனி மேலுக்கு  மாமி தனியா இருக்கவேணாம்னுட்டு  மாமி யோட  பையன்  ஹைதராபாத்துல ஒரு முதியோர் இல்லம் பாத்தாரு. அதுல  அம்மாவ  சேத்துக்க ஏற்பாடு செஞ்சிட்டாரு. அங்கேந்தும் ஒரு ஆளு  சென்னைக்கு வந்தாரு. மாமிய ஹதராபாத்துக்கு அழச்சிகிட்டு போறதுக்கு.  ஒரு அஞ்சி வருஷம் அந்த மாமிக்கு   இங்க  வேண்டியது    நான் தான் பாத்து பாத்து செஞ்சன்.எனக்கும் அப்ப அப்ப செலவுக்கு  பணம் குடுப்பாங்க. மருந்து மாத்திர வாங்கி குடுப்பன். கடைத்தெருவுக்கு போனா கூட மாட  போயி வருவன்,பேங்குக்கு போவுணும்பாங்க.  துணைக்கு போவென் வருவேன். ஒரு ஒத்தாசைதான் வேற என்னா’

‘அப்புறம் என்னாச்சி’

‘ஹைதராபாத் முதியோர் இல்லத்துல   அந்த  மாமியே  காலமாயிட்டாலும்   அவுங்க சவத்த எடுத்துபோட்டு அடக்கம் பண்றவரைக்கும்   ஆவுற செலவுக்கு  அந்த மாமி மவன்  காசு கட்டி முடிச்சிட்டாரு.   மாமி  மூச்சு  இருக்குறவரைக்கும் சாப்பாட்டுக்கு மருந்து மாத்திரைக்கு  துணிமணிக்கு காசு  அமெரிக்காவிலேந்து  வந்துடும் பிறகென்ன. இனிமேலுக்குதான்  போயி எந்த ராட்சியத்த புடிக்க போறாங்க  அமெரிக்கா மாமி. எல்லாம் அவ்வளவுதான். அந்த ஹைதராபாத் ஆளும்  வந்தான். மாமிய இட்டுகினு போவ. ரெண்டு பேருக்கும்  ரயில்ல டிக்கட் புக் பண்ணிட்டாங்க.. என்னய வீட்டுக்கு  வரச்சொன்னாங்க.  என் கிட்ட எல்லா சேதியும்  வெவரமா  சொன்னாங்க. இதுல  நாதான்  சொல்ல என்ன இருக்கு.  அவுங்க  வூட்டுக்கு நா போயிருந்தனா  மாமி அவுங்குளுக்கு  வேண்டியத  துணிய மணிய, யாரு கண்டா எது எதுவோ  ஒரு பெட்டில போட்டு பூட்டினாங்க.  என்னண்ட குடுத்தாங்க.’ நீ நாளக்கி  பொட்டிய  எடுத்துகிட்டு வெடிய காலம்பற ஏழு மணிக்கு  எல்லாம் செண்ட்ரலுக்கு வந்துடு. என்ன  ரயிலு ஏத்து ‘ன்னு சொன்னாங்க. நானும் சரின்னேன்.

.’ என்னமோ நெனச்சி புள்ளய வளத்தேன். படிக்க வச்சேன். ஆளாக்குனேன். இப்ப இந்த கதிக்கு ஆளு ஆயிட்டேன். காசு அனுப்பறான். அத சொல்லுணும். இல்லன்னுட்டா அதுக்குதான்  என்ன பண்ண முடியும் நாண்டு கிட்டுதான் சாவுணும்னாங்க. பாவம். கண்லேந்து தார தார யா   தண்ணி  வந்துது. அவ்வளவுதான். நா பொட்டிய தூக்கிகிட்டு வூட்டுக்கு வந்துட்டன். ‘ நாளைக்கு நா  செண்ட்ரலுக்கு  உங்க பொட்டியோட  வந்துடறேன்னு சொல்லிட்டுதான்  வந்தேன்.’

‘பொட்டி பூட்டி யிருந்ததுதானே’

’ பொட்டிக்கு ரைட்டா நம்பர் பூட்டு போட்டிருந்தாங்க. அது   வெஷயம்  தெரிஞ்சவங்கதான் தொறக்க முடியும். எல்லாராலயும் ஆவாது’

‘ஏன் அண்ணே நீ ஒரு தரம்  ‘யார் மேல தப்பு’ன்னு   கதய குடுத்து அனுப்பி  அத  சின்ன திரைப் படமா  ஒரு  மாமி  எடுக்ககபோறாங்க. அந்த கதைக்கு வசனம் ஒண்ணு  எழுதி குடுன்னு கேட்டயே அது இந்த அம்மாதானா’

‘அவுங்களேதான்.’  அன்ணன் சிரித்துக்கொண்டார்.

‘இந்த சின்ன படத்தை எடுக்க கேமரா மென்  தங்கர் பச்சான் உதவுவாறான்னு  நீ என்ன  கேட்ட.. நானும் தங்கர் பச்சான் கிட்ட போன்ல  பேசுனேன் பத்திரகோட்டை  தங்கர்  பச்சான் எனக்கு  செனேகிதமாச்சே.  அவுரு அப்ப பம்பாயில இருந்தாரு. காதல் கோட்டைன்னு ஒரு  தமிழ் படத்த  இந்தில எடுத்தாங்க .’

‘நீ கூடம்தான்  சொன்ன அந்த  தங்கர் பச்சான் பேசுனாரு, ’ வயசான காலத்துல இந்த  சின்ன சினிமா படம் எடுக்கற சோலி எல்லாம் அந்த கெழவிக்கு  தேவையான்னுட்டு’ அதே அம்மாதான்’

‘அப்பிடி சொல்லு’

‘மேல இருக்குற  பொட்டி கதைக்கு  வர்ரேன். மறுநா வெடிஞ்சிது. நா பல்லு வெளக்கி காபி சாப்பிட்டேன். செண்ட்ரல் ஸ்டேசனுக்கு போயாவுணுமே.  மாமி என்னண்ட குடுத்த சூட்கேச எடுத்துகினு கெளம்புனேன். வீட்டு வாசப்படி தாண்டுனேன். அப்புறம் ஒரு இருபது படி கீழயும்   எறங்குணும். இப்ப நீ ஏறி வந்தியே அதே படிவ தான். மொத படில காலு வச்சன். எதோ வழக்கிடுச்சி.  என் கையிலு பாரமான பொட்டி. பட படன்னுது. தடுமாறிட்டேன்.  இருபது படியும் வுழுந்து  வுழுந்து பொரண்டு தரைக்கு வந்து கெடக்குறன்.  மாமி சூட்கேசு ஒரு பக்கம் கெடக்குது, நா ஒரு பக்கம் கெடக்குறேன். பேச்சில்ல மூச்சில்ல. அக்கம் பக்கத்துல இருந்தவங்க நா வுழுந்து கெடக்குறத பாத்துட்டு தண்ணி தெளிச்சி எழுப்பி  இருக்காங்க. ஒரு மணி நேரத்துக்கு எனக்கு நெகா இல்ல. உங்க அண்ணிக்கி சேதிசொல்லி யிருக்காங்க. அண்ணியும்  வூட்ட வுட்டு வந்து’ என்னடா இது தும்பம்னு’  என்கிட்டயே குந்தி இருந்தது. நா  விலுக்குன்னு எழுஞ்சிகிட்டன். ஏன் உழுந்தன் எப்படி உழுந்தங்கிறது ஒண்ணும் வெளங்குல. மாமி குடுத்த சூட் கேஸ் என்னயே பாக்குது   என் முன்னாடி கெடக்குது. என்ன செய்வே. எங்க  செண்ட்ரலுக்கு  நா போவுறது. இது என்னடா  கஸ்டம்.  ரயிலுக்கு போன  அம்மா என்ன கதி ஆச்சோன்னு ஒரே கொழப்பமா போச்சி. இனி  நா  போயி  அந்த ரயில பாக்க முடியாது. அந்த அம்மா  இந்த பொட்டி யில்லாமலே  ரயிலு ஏறியிருக்கும்னு முடிவு செஞ்சென். நானே  எழுஞ்சி மெதுவா ஒரு ஒரு படியா ஏறி  மேல என் வூட்டுக்கு போயிட்டன். அமெரிக்க மாமி பொட்டிய  என் கூட இருந்தவங்க கொண்ணாந்து வூட்டுல வச்சிட்டாங்க. பூட்டுன பொட்டி அப்பிடியே கெடக்குது.  நீ என்ன செய்வே. அந்த அம்மா அவ்வளவுதான் ஹைதராபாத் போயி ருக்கும்.  பொட்டிய எடுத்து  இதோ ஒசக்க  இந்த பரணையில வச்சன் அத்தோடு சரி.அந்த மாமிகிட்டேந்து இன்னக்கி வரைக்கும் எந்த சேதியும் வருல.நா இந்த பொட்டிய எடுத்துகினு ஹைதராபாத் போயி யார எங்க தேடறதுன்னுட்டு வுட்டுட்டன். பூட்டுன பொட்டி  அஞ்சி வருஷமா  அப்பிடியே பரணையில கெடக்குது’

‘பொட்டில  எதனா காசி  பவுனு  நக நட்டுன்னு எதனா இருந்துச்சின்னா’

‘சரியா போச்சி போ. அது உள்ளாற இருக்குறது எதுவும்  நம்புளது இல்லே. அந்த பொட்டிக்கு சாவியும் நம்பகிட்ட இல்ல’

‘நம்பர் பூட்டுன்னு சொன்னியே’

‘  தப்புதான், அந்த ரகசிய நெம்பரு எனக்கு தெரியாதுன்னு வச்சிகயென்’

‘நா இப்ப பொட்டிய எறக்குறன். உசுமான் ரோடுல எவனாவது பூட்டுக்கரன் கிட்ட பொட்டிய கொண்டுபோறன். பொட்டிய தொறந்து என்னா இருக்குதுன்னுதான் நாம  பாத்துடுவமே’

‘என்ன ரூவா நோட்டு  எதனா கத்த கத்தயா வச்சிருப்பங்களா அந்த அம்மா’

‘இல்ல என்னன்னு தெரிஞ்சிகிடலாம்’

 அந்த அம்மா கட்டிகிற நாலு பழம்பொடவங்க , இருக்கும்.  ஒரு சமக்காளம்  போர்வ  ஒருதுண்டு இருக்கும். சில்வர் டவரா செட்டு ஒரு  தட்டு கொவளைன்னு எதனா இருக்கும். வேற  ஒண்ணும் இருக்காது’

‘அப்ப என்னதான் ஆவுறது அந்த பொட்டி’

‘  ஒரு சேதி சொல்ல  வுட்டுட்டன்.    என் மோபைல் போன்ல மாமிகிட்டேந்து  எனக்கு  ரெண்டு மிஸ்டு காலு இருந்திச்சு. நா வுழுந்து எந்திரிச்சி கொஞ்சம்  உடம்பு  தேவலாம்னுட்டு  என் போன பாத்தேன். அந்த அமெரிக்கா மாமிக்கு போன் போட்டேன். தொட்ர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்னு பதில் வந்துது.  வுடுல அப்பறமும் போன் போட்டேன் ஸ்விட்ச் ஆஃப் னு சேதி வந்துது. அத்தோட சரி. இண்ணைக்கு வரைக்கும் ஒரு சேதியும் இல்ல. நா என்ன செய்யறது. வருஷம் அஞ்சாச்சி. இனிமேதான் சேதி வருமோ இல்ல அந்த அம்மா நல்லா இருக்குதோ இல்ல, காலமே ஆயிட்டுதோ இல்ல ,  திடீர்னு ஒரு நாள் வந்து எம்பொட்டிய குடுன்னு கேக்குமோ,  அந்த அம்மா மவன் கிட்டயும்  இந்த சேதி போயிருக்கும் அவுரு ஒருநா வந்து எங்க அம்மா பொட்டி உங்க கிட்ட குடுத்துதுதாமே அத என்கிட்ட  குடுன்னு கேப்பாரோ’

‘ரொம்ப டீப்பா போற அண்ணே’

‘போயிதான ஆவுணும். மொதல்ல  அது என் பொட்டி இல்ல. அது நம்பர் பூட்டாலே   பூட்டி இருக்கு.   அத தொறக்குற துக்கு அந்த  ரகசிய நம்பரும்  நமக்கு அந்த அம்மா சொல்லுல. அப்பறம்  அந்த பொட்டி மேல  நமக்கு என்ன உரிமை இருக்கு.  பொட்டிய  சும்மா வச்சிருக்கலாம். அவ்வளவுதான். வேற எதுவும் செய்ய முடியாது’

‘நா எதுவோ சுளுவா நெனச்சேன். இந்த  நம்பர் பூட்ட பூட்டு ரிப்பேர்காரன்கிட்ட காட்டி  தொறந்துடலாம். அதுல எதாவது காசு பணம் இருந்துதுன்னா அண்ணன் குடும்ப செலவுக்கு ஆவுமேன்னு’

‘தம்பி அது தப்புல்ல. நமக்கு ஆயிரம் கஸ்டம் இருக்குலாம். அந்த அம்மா இத நீ  செண்ட்ரல் ஸ்டேசனுக்கு  எனக்காக எடுத்துகினு வந்து குடுன்னு சொன்னாங்க. என் நேரம் எனக்கு போக முடியாம ஆயிடுச்சி. யாரு எதிர்பார்த்தா இப்படி  எல்லாம் நடக்கும்னுட்டு.  அதுதான் அப்பிடி ஆச்சின்னா பெறகு அந்த அம்மா கிட்ட  போன்லயும் பேச முடியல்ல. அவுங்களும்  என்கிட்ட  இதுவரைக்கும் பேசுலயே.  நா என்ன செய்ய’

‘சரி அந்த பொட்டி  இப்ப என்னதான் ஆவுறது’

‘நீதான் சொல்லேன் என்ன செய்யிலாம்னு’

‘நாந்தான் சொன்னேன். நீ  என் ரோசனைய பொறட்டி போட்டுட்டயே’

‘அது நம்புளுது இல்ல. அந்த பூட்டயும் நாம அவுங்க அனுமதி  இல்லாம் தொறக்கறதுன்னா  எனக்கு சம்மதமில்ல. அதுவுள்ள எந்த ஆஸ்தியிருந்தாலும் அது நம்பளது  ஆவுமா’

‘ஆவாது’  நான்   அரை மனதோடு பதில் சொன்னேன்.

‘ ஒரு சேதி     உனக்கும் தெரிஞ்சி இருக்கும்.  கேரளாவுல  அந்த  திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில்ல இன்னும் ரெண்டு ரகசிய  ரூம்பு தொறக்காம கெடக்கு தாமே. அதுக்கு யாருதான் என்ன செய்ய. இருக்கு.அந்த மாதிரி இந்த பொட்டியும் அங்கனே பரணையிலேயே  கெடந்துபோவுது. ஆவுறது ஆவுட்டும் வுடுவியா. என் மூச்சி  நின்னே போனாலும்  அந்த பொட்டிய நா தொறக்க  சம்மதிக்க மாட்டேன்.   அந்த அம்மா என்கிட்ட சொன்ன வார்த்ததான்  எனக்கு முக்கியம்’

நான் அண்ணனை ஒரு முறை நன்றாக பார்த்துக்கொண்டேன்.a தருமங்குடி கிராமத்திலிருந்து  சென்னைக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துபோனது. வயது எழுபத்தி மூன்று. இன்று வரை  அவருக்கு எந்த  மாத வருமானமும் நிரந்தரமாயில்லை.  குடியிருக்க சொந்தமாய் ஒரு வீட்டில்லை. தினமும் வயிற்றுப்பிழைப்புக்கு இந்த  சென்னை  மாநகரத்தை  அனேகமாய் நடந்து நடந்துதான்  சுற்றி வருகிறார். அப்படியே  சுற்றி வந்தாலும் இத்தனை  வைராக்கியம் இவர் நெஞ்சுக்குள் எப்படி குடிகொண்டு இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தேன்.

எனக்குப் பெருமையாகக்கூட இருந்தது. எல்லாமிருந்தும்  என்ன? எனக்கு இன்னும்  சின்ன புத்திதான். என் மனம் ஒரு ஓரமாய் சொல்லிக்கொண்டே இருந்தது.

‘அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் இன்னும் என்னதான் பேச பாக்கியிருக்குமோ. டிபன் சாப்பிடலாம் எழுந்திரிங்க.  நேரம் ஆவுதில்ல.   வந்தவுங்க  எப்ப சாப்டாங்களோ என்னவோ’  சொல்லிய அண்ணி அன்போடு எங்களை சாப்பிட  அழைத்தாள். இந்த மாதிரி ஒரு அண்ணி எல்லாம்    அமைவதற்கு  நம் மக்கள்   எங்குதான் போவார்களோ இனி  என்கிறது மனம்.

----------------------------------------------------------------

 

Monday, November 24, 2025

அழகென்பது - கலீல்ஜிப்ரான்

 எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3

அழகென்பது. – கலீல் ஜிப்ரான்

அழகு எது என்று சொல்வாயோ
கவியின் கேள்வி
விடையோ வினாவாய்
எங்கே அழகைத் தேடுவாய் நீ?
அழகே வழி சமைத்து
அவ்வழியே வழி காட்டி
அமையக்கிடைக்கலாம் அழகு
அழகு பற்றி இன்னும்?
அழகே மனமிறங்கி அதனை
அமைத்துக்கொடுக்க
அது சாத்தியமாகலாம்
மனம் துன்புற்றவனும்
உடல் புண்பட்டவனும் சொல்கிறான்
அழகென்பது கருணை
அழகென்பது அனுசரணை இளந்தாய்
ஒருத்தி தன் பெருமையின் பிடியில்
கொஞ்சமாய் வெட்கப்பட்டு நம்மிடையே
நடப்பதொப்பதழகு
உணர்ச்சி வயப்பட்டோன் சொல்வான்
அப்படி இல்லை அழகென்பது
வலிமை அது அஞ்சவும்
வைப்பது கீழிருக்கும்
இப்பூமியை மேலிருக்கும் அவ்விண்ணை
உலுக்கிப் போடும் இளம்புயல் அது
களைப்பும் சலிப்பும் கொண்டவன்
விடை சொன்னான்.
அழகு மென்மையின் அழைப்பு
அழகு நம் உணர்வின்
உயர் தளத்தில் நம்மிடம்
சம்பாஷிப்பது
ஒரு சிறிய
ஒளிக்கீற்று சூழ்நிழலைக்
கிழித்துக்கொண்டுப் பாய்வதொக்கும்
ஆயின்
மனக்கவலையில் தோய்ந்தவன் சொல்கிறான்.
மலைகளின் நடுவே
அழகு எழுப்பும் பேரொலி
நாம் கேட்டிருப்போம்
அதனைத் தொடர்ந்து தானே
புரவிகள் குளம்பொலி
இற்க்கைகளின் படபடப்பு சிம்ம கர்ஜனை
மாநகர இரவுக்காவலாளி பகர்கிறான்
அழகென்பது புலரும் காலையில் கிழக்கின் உதயம்
நண்பகல் உழைப்போனும் நடைப்பயணம்
செல்வோனும் சொல்கிறார்கள் ‌கதிரவன் மறைபோதே
சாரளமாகி அழகுப் பெண் பூமி மீது
ஒய்யாரமாய்ச் சார்ந்திருப்பாள்
மாரிக்காலப் பனி போர்த்தியவை சொல்லும் குன்றின் மீது
தவழ்ந்து வசந்த காலத்தில் உலாவரும் அழகு
கோடை வெயிலில் கதிர்
அறுப்போர் சொல்வர் உதிர்ந்த இலைகளிடை
அழகுக் கூத்திடுவாள்
கண்டோம் யாம்
அவள் கூந்தலிடைப்பனி
தழுவிச்சென்றதங்கே.
அழகு குறித்துப்பலரும் பகன்றவை
அழகு குறித்தாயில்லை இல்லை
உம் நிறைவேறாத்தேவைகளவை
அழகு தேவையொடுத்
தொடர்புடைத்தா என்ன
அது பேரானந்தச்சிரிப்பு
நாவில் நீர் சொட்ட வைக்கும் விடாயோ
வெறுங்கையின் நீட்சியோ இல்லையது
இதயம் தரும் ஒளிப்பிரவாகம் ஆன்மாவின்
ஆனந்த லயிப்பு
பார்க்கும் உருவும் நீ கேட்கும் பாடலுமில்லையது
கண்களை மூடிடக்காட்சியாவது
செவிகளைப்பொத்திடக் கேட்க முடிவது
பிளவுபட்ட மரப்பகுதி சொட்டும் திரவமில்லையது
நகத்தொடு ஒட்டித்தொங்கும் சிறகும் இல்லை
அது போதெல்லாம் மலரவிழும் நந்தவனம்
தேவ கன்னியர்க் கூட்டத்து ஓயாப்பேரணி
ஆர்ஃபலிசு நகரத்து மாசனங்களே வாழ்க்கையின்
புனித முகம் தெரியத்தெரிய மனித வாழ்க்கை அழகு
வாழ்க்கை நீ
அவ்வாழ்க்கையைத் தொலைப்பது நீ
இதோ ஆடி முன்னே
தன் அழகு பார்க்கிறது
அமரத்துவ அழகு
காலத்தை வெல்பவன் நீ
நின் முன்னே நிற்கும்
அவ்வாடியும் நீ.

எஸ்ஸார்சி/கலீல் ஜிப்ரான் – விருட்சம் நாளிதழ்

உள்கட - கலீல் ஜிப்ரான்

 உள்கட……..

கலீல் ஜிப்ரான்

பெண்பூசாரி கேட்டார்
‘இறைவழிபாடு பற்றிச் சொல்லுங்கள்’
அவரின் விடை வந்தது
துயரமும் தேவையும்
நெருக்கத்தானே உமது
வழிபாடு
மகிழ் நிறைவும் வாழ்செழிப்பும் உறுதிப்படுகிறது.
அத்தருணம்இறை வழிபாடு ஏதுமுண்டா?
இறைவழிபாடென்பது
உம்மையே விரித்து வாழும் பெருவெளியொடு ஏகமாகிவிடும் அனுபவம்
உமது இருள் துயரத்தை மாத்திரமா பெருவெளியொடு பகிருதல்
இதயம் மலருதலை மகிழ்வையும் கூட்டித் தான்.
ஆன்மா வழிபாடென்று
அழைப்பு விடும் போதெல்லாம்
அழுகை அழுகை
ஆன்மா கடையப்படுதல்
தொடர்கிறது
தொடரும்
அழுகை அது மகிழ் சிரிப்பாகும்வரை.
வழிபடு போதெல்லாம்
வான்வெளியில் வழிபடு.
பிறரோடு சந்திப்பு
வழிபாடில்லை எனில் அச்சந்திப்புத்தான் நிகழுமா?
ஆலயத்துக்குச் செல்கிறாய் தேடும் அது
கண்ணுக்குத்தெரிந்தாலென்ன
இல்லை என்றால் என்ன
ஆனந்தப் பரவசமும்
இனிய சந்திப்பும் நிச்சயம். வேண்டும் இது
வேண்டும் அது
இப்படித்தானா செல்வாய் ஆலயம்
கேட்பது கிடைத்து விடுமா குறுகி குறுகிக்
கெஞ்சி அஞ்சியுமா நீ
எப்படி கிட்டும் உயர்வு
அடுத்தவன் ஒருவனுக்கு
நன்மையே வேண்டுமென ஆலயம் போனதுண்டா ?
உன் வேட்டல்
அவன் செவி அப்போதும்
ஏறாது
கண்ணுக்குப்புலனாகா
ஆலயம் நின்னுள்
கட உள்
எப்படிக்கடப்பது நான்
சொல்லவும் மாட்டேன்
கடவுள் நீ சொல்வது கேட்கவும் மாட்டார்
அவராக உன்வாய்வழி
வந்து
ஏதும் உரைக்க
அது கேட்கும் அவர்க்கு
கடலும் மலையும் வனமும்
பிரார்த்திக்கிறது
உனக்கு அது கற்பிக்க முடியுமா
கடலொடு மலைவனம்
நின் பிறப்பிற்கு ஆதாரம்
நின் இதயம் அறியும் அது
நடுநிசிப்போதில்
அவைகளின் வேட்டல்
கவனி அது கேட்டிருக்கும்
கடவுள் நம் இருப்புக்கும்
நம் விருப்புக்கும் மூலம்
கடவுளின் விருப்பே
உள்ளேபோய் நம்‌விருப்பாகிறது
நம் முன் பகலும் இரவுமாய்
மாறி மாறி விரிவது
இறைவிருப்புத்தான்
யான் என்ன கேட்க
என் தேவை யாவும்
இறை முன்னம் அறிந்து
எம்பாற் பின்னே பிறப்பது
இறை நீயே எமது விருப்பு
நின்னை எமக்கு நீயே கொடுக்கிறாய்
யாமனைத்தும் பெறுகிறோம்.




மனசுப்போல - சிறுகதை

 


மனசுப்போல                                                          

 

நானும் என் மனைவியும்  பெண்ணாடம் செல்லும் என் பையனோடு கடலூர் பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.. பெண்ணாடத்தில் என் மைத்துனர் குடும்பம் இருந்தது. மைத்துனரின்  பெண் குழந்தகள் இருவர்   உள்ளூர்  ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நவராத்திரி விடுமுறை விட்டிருக்கிறார்கள். எப்படியோ  இந்தத்தகவல் எங்களுக்கு   வந்தது.

‘பெண்ணாடம் போயி அந்த பசங்கள கூட்டிகிட்டு வந்தா ஒரு வாரம் வச்சிருந்து அனுப்பலாம்னு எனக்கு யோசனை’

‘தாராளமா செய்யிலாம்’

‘கடலூர் சில்வர் பீச்சு பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் எல்லாம் காண்பிச்சு அனுப்பிவைக்கலாம்’

‘ஓகே’  நான் சொன்னேன். ஆகத்தான் என் பையன் இன்று பெண்ணாடம் செல்கிறான். மைத்துனர் குழந்தைகளை கடலூர்  அழைத்துவரத்தான்  இந்த ஏற்பாடு.  நானும் என் மனைவியும் பையனோடு பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.

‘நாம எதுக்கு  இப்ப பொறப்படறம்’

‘பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் போயி பையன பஸ் ஏத்திவுட்டுட்டு வந்துடுவம்.  புதுசா ஒரு ஓட்டல் தெறந்துருக்கானாம் பஸ் ஸ்டேண்டுல அங்கனு போயி ஒரு காபி சாப்பிடுவம்.  தம்பி அப்படியே பெண்ணாடம் போவுட்டும். நாம திரும்பிடுவம்’

‘காபி  சூப்பரா இருக்காமா’

‘எனக்கும் தெரியாது. யாரையும் நா கேக்கவும் இல்ல. யாரும் என்னண்ட சொல்லவுமில்ல ஒரு மாத்தமா இருக்கட்டும். போய் வருவோம்னுதான். வேறென்ன’

நாங்கள் இருவரும்  எங்கள் குடியிருப்பு அருகே  இருக்கும்   டவுன் பஸ் நிற்குமிடத்திற்கு நடந்துச் சென்றுகொண்டிருந்தோம்.  என் பையன் தான் வீட்டைப்பூட்டி விட்டு எங்களின் பின்னால் வந்துகொண்டிருந்தான். டவுன் பஸ் எதுவும் வரக்காணோம். நாங்கள் இருவரும்  நெல்லிக்குப்பம் சாலையை நோக்கிக்கொண்டிருந்தோம். பையனும் வந்துவிட்டான்.

‘டவுன் பஸ் எதுவும் வருலியா’ என் பையன் தான் என்னைக்கேட்டான்.

‘’ ஒன்னு பின்னால ஒன்னு போவும். இப்ப எதுவுமே காணும்’

என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். ஆட்டோக்காரன் ஒருவன் தருவித்தருவி  எங்களிடம் வந்து நின்றான்.

‘டவுன் பஸ் இப்பக்கி வராது. டவுன் பஸ்,   ரூட் பஸ் ரெண்டுக்கும் தகறாறு.  அதுவும்  மீன் கூட லக்கேஜ் ஏத்துறதுலதான்.  கூடையில சரக்கு கொண்டாற சனத்துவுள ஆரும் ஏத்தறது இல்லயாம். அது இன்னிக்கி  பாத்துதான்   முட்டிகிச்சி. போலீசு ஜீப் அங்க  காராமணிகுப்பம்  போயிருக்கு. அங்கதான்  அந்த பஞ்சாயத்து.. அது முடிஞ்சிதான் எதா இருந்தாலுமே. நீங்க எங்க போவுணும் அத  மொத சொல்லுங்க’

‘பஸ் ஸ்டேண்ட்’

’பத்து ரூவா குடுங்க.  மூனு பேரும் ஏறுங்க’

‘பத்து ரூவாயா’

‘பின்ன எம்மாம் தருவீங்க. பஸ் வந்தாலும்  முய் ரெண்டு ஆறு ரூவா ஆவுமே’

‘ டவுன் பஸ்ல  போனா மூவர ஒன்னரதானே’ மனைவி தொடர்ந்தாள்.

‘நேரம் ஆவுது பையன் ஊருக்குப்போவ இருட்டிடிடுமே. சட்டுபுட்டுன்னு போவுணுமில்ல’ என் மனைவி என்னிடம்  குரல் தாழ்த்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். இதைத்தெரிந்துகொண்ட ஆட்டோக்காரன் ‘ ஏறி குந்துங்க நாழி ஆவுது. டவுன் வண்டி  இப்பக்கி வராது தெரிமா’ என்றான்.

நாங்கள் மூவரும் ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம். ஆட்டோ ரெக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது.

‘பத்து  ரூவாயிக்கு இம்மாம் ரோசனை. அரசாங்க ஆபிசுல சம்பளம்.’ ஆட்டோக்காரன் முணுமுணுத்தான். எனக்கும் காதில் விழுந்தது. அவனுக்கு எத்தனைக் கஷ்டம் இருக்குமோ.

பேருந்து நிலையம் வந்தது. புதியதாகத் திறந்திருக்கும் ஓட்டல் வாயிலில் வண்டியை நிறுத்தச்சொன்னோம்.

‘ஓட்டலுக்கு சவாரி கொண்டாற ஆட்டோ டிரைவருக்கு ஒரு கப்  டீ  ஃப்ரீ அங்கே விளம்பரம் எழுதித்தொங்கியது. விளம்பரத்ததைப் படித்த என் பையன்’ இப்படி வேறயா’ என்றான்.

‘தொழிலுதான்’ ஆட்டோக்காரன் சொல்லிக்கொண்டான். டீ எதுவும் குடிக்காமலே விடைப்பெற்றுப்போனான்.’ எதுவும் வெளியில சாப்பிடறது இல்லே’ எனக்குச்சொன்னான். நான் என் மனைவியைப்பார்த்தேன்.

‘அப்பிடியே தெனம் வர்ர மாதிரிதான்’  அவள்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் மூவரும் காபி சாப்பிட்டு முடித்தோம். காபி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டபரா செட்  மட்டும்  பித்தளையில் பள பள என்று   இருந்தது. பையனை திருச்சி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன். பெண்ணாடத்தில் நின்று செல்லும் பேருந்துதான் அது.

‘நாம  இன்னும்     அந்த  பஞ்சவடி  ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போகல. போயி வந்துடுவமே’ என்ன சொல்றீங்க.

இப்போதுதான் புதுச்சேரி அருகே இருக்கும்  அந்த ஆஞ்சனேயர் கோவிலில் குட முழுக்கு நடந்தது. குட முழுக்குக்கு போகலாம் என்று யோசனையில் இருந்தேன்.  முடியவில்லை.ஆபிசில் எவ்வளவோ பிரச்சனை. எந்தப்பிரச்சனை  எப்போது ரெக்கைக் கட்டிக்கொள்ளும். சொல்ல முடிகிறதா என்ன.

‘சரி போய் வந்துடுவம்’

இருவரும்  திண்டிவனம் செல்லும் பேருந்து ஒன்றைப்பிடித்தோம். சென்னைப் போகும் எல்லாப்  பேருந்தும் அந்த வழியாகத்தான் செல்லும் ஆனால் பஞ்சவடி சீட்டு என்றால்  பேருந்துக்காரர்கள்   ஏற்ற மாட்டார்கள். காசா லேசா அதுதானே இங்கு  எல்லாமும்.

நானும்  அவளும் பாண்டிச்சேரி வழியாய் திண்டிவனம் செல்லும் அந்தப் பேருந்தில் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் கூட்டமில்லை. பக்கத்து பக்கத்து சீட்டுதான்  வசதியாக இருந்தது. பெண்ணையாற்றுப்பாலம் தாண்டியது.  பின்னர் பேருந்தில் நல்ல கூட்டம். மக்கள் நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.

‘பாண்டி வரைக்கும் இப்படிக் கூட்டம் இருக்கும்’

‘அப்பறம் பத்து நிமிஷத்துல நாம எறங்கிடப்போறம்’

‘பையன அங்க அனுப்பிச்சிட்டு நாம  மட்டும் இங்க வந்தது சரியா’

‘ ஒரு எடத்துக்கு அவனயும்  அனுப்பிச்சிட்டுத்தான நாம இங்க  வர்ரம்.  அதுல  ஒன்னும் தப்புல்லவுடு’

பாண்டிச்சேரி பேருந்து நிலையம் வந்தது. பேருந்து அனேகமாகக் காலியாகிவிட்டிருந்தது. வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் வண்டியைவிட்டு இறங்கி நின்ரு கொண்டார்கள்.

‘நேரா திண்டிவனம். நேரா திண்டிவனம் ஏறு ஏறு’

நடத்துனர் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஓட்டுனர் வாயே திறக்காமல் அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

‘டிரைவருங்க ஊரு பேரு  ஒரக்க சொல்லி ஜனங்கள  வண்டிக்கு கூப்பிடறது இல்லையே அது ஏன்’

‘எந்த டிரைவருக்கும்  அவுங்க  குரலு சரியா வராதுன்னு நெனக்கிறேன்’

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையே கவனித்த  ஓட்டுனர் கொஞ்சமாய் சிரித்துக்கொண்டார்.

 வண்டி பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தை விட்டுப்புறப்பட்டது. கோரிமேடு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள் சிலர் ஏறிக்கொண்டார்கள்.

‘அடுத்தது  பஞ்சவடிலதான் நிக்கும்’ எங்களைப்பார்த்து நடத்துனர் சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் இறங்குவதற்குத் தயாராக இருந்தோம். பஞ்சவடி பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து நின்றது. நான் முதலில் இறங்கினேன். பேருந்து தார்ச்சாலையில் சுகிராக  நின்றது. படிக்கட்டைவிட்டுக் காலை எடுத்து வைத்தால் தரையோ மிகவும் பள்ளத்தில்  இருந்தது.

‘பாத்து வா பள்ளமா இருக்குது  தரை’

அதற்குள்ளாக அவள் கால் வைத்து அது இழுத்துக்கொண்டு போய்  மண்தரையில் உட்கார்ந்தே விட்டாள். நடத்துனர் நாங்கள் எப்படி இறங்கினோம் என்பதெல்லாம் எங்கே கவனித்தார். ‘ ரைட் ரைட் ரைட்’ என்றார். வண்டி வேகமாய் நகர்ந்து போனது. சாலையில் மின்சார விளக்கும் எரியவில்லை. கும்மி இருட்டாக இருந்தது.

‘என் மனைவி காலை நீட்டிய படியே  உட்கார்ந்திருந்தாள். ‘ கால மடக்கவோ எழுந்திரிக்கவோ முடியல்ல. வலி உயிர் போகுது’ என்றாள். மனைவிக்குக் காலில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது.  ஒரே இருட்டாக இருந்தது. இரண்டு தோள் பட்டையிலும் கைகளைக்கொடுத்து மெது மெதுவாக அவளைத் தூக்கி நிறுத்தினேன். ‘அய்யோ அம்மா’ என்று குரல் கொடுத்தாள். தோளில் கைபோட்டு பைய நடந்து நடந்து கோவில் கோபுர வாசலுக்கு வர ஆரம்பித்தேன். என்னாலும் முடியவில்லை. கோவில் வாசலுக்கு வந்து விட்டு ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ் அவளை நிறுத்தினேன்.

‘’ஆ படிக்கட்டு இருக்கு. அதுல உக்கார வையுங்க’ என்றார் சேவார்த்தி ஒருவர்.

என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன். கண்கள் நிறைத்துக்கொண்டு நீர். இடது கால் பாதம் வீங்கி இருந்தது. ‘அய்யோ அம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவள் என்னைப்பிடித்துக்கொண்டு நடந்தாள். கோவில் படிக்கட்டுக்குச்சரியாக  வந்து விட்டோம் ‘அம்மா ‘ என்று அலறி சத்தம் போட்டாள். கோவிலுக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் என் மனைவி அருகே வந்து அவள்  கா;லைத்தொட்டுப்பார்த்தார். தன் கை வசமிருந்த பசை மருந்து டியூப் ஒன்றைக்கொடுத்தார்.

‘சார் டாக்டர்ங்களா’

‘ஆமாம். நாளைக்கி ஒரு எக்ஸ்ரே எடுங்க.  ஒரு ஆர்த்தோவ கட்டாயம் பாருங்க’

‘சரிங்க டாக்டர்’

‘எங்க போகணும்’

‘கடலூர்’

‘ சட்டுன்னு ஒரு டாக்சிய புடிங்க அம்மாவ ஒக்கார வையுங்க. நேரா வீட்டுக்குப்போங்க. கால் வீக்கம் வலிக்கு ஒரு டோஸ் மாத்திர தர்ரேன்’

மாத்திரயை வாங்கிக்கொண்டேன்.

‘ரொம்ப நன்றி டாக்டர்’ ஃபீஸ் ஏதும்’

அவர் சிரித்துக்கொண்டார்.  ‘ ஆக வேண்டிய வேலைய பாருங்க’ என்றார்.

என் மனைவி இரண்டு கைகளையும் கூப்பி டாக்டரை வணங்கிக்கொண்டாள். நான் என் மனைவியை அந்தக் கோவில் படிக்கட்டிலேயே உட்காரவைத்துவிட்டுக் கோவில் உள்ளே சென்றேன்.  நெடிய துளசி மாலை அணிந்த  ஆஞ்சனேயரை வணங்கி நின்றேன். ‘ ‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று  அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம்  வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து  தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை.  இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்

‘இது சரியில்லை’

‘கீழே என் மனைவி  உக்காந்து இருக்கா. நடக்க முடியல்ல. அவளுக்கும் சேத்துதான் வாங்குறேன்’

பிரசாதம் வழங்கியின்  கேள்விக்கு என்தரப்பு  நியாயம் சொன்னேன். நானும் அவளும் புளியோதரைப்பிரசாதம் சாப்பிட்டு முடித்தோம் . டாக்டர் கொடுத்துவிட்டுப்போனஅந்த வலி  மாத்திரையைப் போட்டுக்கொண்டாள். ‘ஆ ஊ என்று அரற்றினாள்.

‘’வலிக்குதா’

‘ஒரு டாக்சிய மட்டும்  பாருங்க’  அவள் முகம்  எட்டுக் கோணலாகியது.

‘பத்து ரூவா ஆட்டோக்காரனுக்குத் தர யோசனை பண்ணினம்’

 ‘ இதுதான் அது பேசுற  நேரமா’

‘எல்லாம்தான்’

‘வேணாம் ஆகவேண்டிய வேலயப்பாருங்க’

நாங்கள் இருவரும் பட்ட கஷ்டத்தைப்பார்த்து யாரோ ஒருவர் கோவில் அதிகாரியிடம் விஷயத்தைச்சொல்லக் கோவில் அலுவலகத்திலிருந்து ஒரு டாக்சிக்காரனுக்குப் போன் போட்டிருக்கிறார்கள். அவனும் உடன்  அங்கே வந்து சேர்ந்தான்.

‘ஏழு நூறு ஆகும்’

‘’ஐநூறு தர்ரேன்’

‘வேற ஆள பாருங்க’ நா  பொறப்படறன்’

‘அறுநூறு போட்டுகுங்க. வாங்க’ என் மனைவிகுறுக்குச் சால் ஓட்டினாள்.

டாக்சிக்காரன் அவளை ஏற இறங்க பார்த்தான். எங்களை ஏற்றிக்கொண்டான். நானும் அந்த டிரைவரும்தான் அவளை மெது மெதுவாக வண்டியில் ஏற்றிப்  நீட்டாகப்படுக்க வைத்தோம்’.

‘இட்லி மாதிரி வீங்கி கெடக்கு காலு’

‘பஸ்லேந்து ஏறங்ககுள்ள தடுமாறிட்டாங்க. பள்ளமா இருந்துது. ஸ்டாப்பிங்குல  லைட்டு இல்ல  இருட்டு வேற’

‘நேரம்னு  ஒண்ணு வேல செய்யுதே.  டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

வண்டி கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சாலை நன்றாக இருந்தது. டிரைவரும் பதனமாக வண்டியை ஓட்டினார்.

‘வீட்டுச்சாவி ஒங்கிட்டதான இருக்கு’

‘என்கிட்ட இல்லயே’

‘பெறவு’

‘வீட பூட்டுனது பையன், சாவிய என்கிட்ட தரல. உங்க கிட்ட குடுத்து இருப்பான்ல நா இருக்குறன்’

‘’என் கிட்ட குடுக்கல.  மறதியா சாவிய  அவனே  எடுத்து கிட்டு போயிட்டான்.’

‘இப்ப என்ன செய்ய’

என் மனைவி  ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

‘வலில அழுவறயா, , வூட்டு  சாவியக்காணும்னு அழுவுறயா’  நான் கேட்டேன்.

டிரைவர் நாங்கள் பேசிக்கொண்டதைக் கவனித்துக்கொண்டே வந்தான்.

‘டிரைவரு கிட்ட ஒரு யோசனை கேளுங்க இதுக்கு என்னா செய்யுலாம்னு’

‘இதெல்லாம் அவரு கிட்டா  யோசனை கேப்பாங்களா’

‘நானும்  கேட்டுகிட்டுதான் வர்ரேன். நீங்க பேசிக்கிட்டு வர்ரத. வூட்டுக்கு  என்ன பூட்டு பூட்டிருக்கீஙக திண்டுக்கல்லா இல்ல தொட்டி பூட்டு ஏதும் இருக்கா’

.திண்டுக்கல்லு பூட்டுதான்’

‘என்கிட்ட நாலு  பழஞ்சாவிவ கெடக்கு. போட்டு கீட்டு  பாப்பம். கத ஒன்னும்  ஆவுலன்னா. புது  ஆக்சா பிளேடு  ஒன்னு  இருக்கு. சுத்தி இருக்கு வச்சிருக்கேன்  பாத்துகுவம். கவல படாதீங்க’

‘ஆஞ்சனேயா’ என்றாள் என் மனைவி.

‘காலு ரொம்ப  வலிக்குதா’ என்றேன்.

என்னை ஒரு முறை முறைத்தாள்.  வண்டி தென்பெண்னையாற்றுக் குறுகல் பாலத்தைத்தாண்டியது. மஞ்சகுப்பம் வந்தது. மணி பதினொன்று இருக்கலாம்.

ராக்காலமா இருக்கு ‘பூட்ட ஒடக்கையிலே சத்தம் வருமே. அங்காண்ட இங்காண்ட எதாவது சொல்வாங்களா’

டிரைவர் என்னிடம்  மெதுவாகச்சொன்னான். நான் பதில்  ஏதும்  சொல்லவில்லை.

‘அது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்’ என்றாள் மனைவி அலட்சியமாக.

‘கதவ ஒடச்சி எடுத்தாலும் அடுத்த வூட்டுக்காரன் என்னான்னு எழுந்திரிச்சி வெளிய வரமாட்டான். நா பாத்து இருக்கேன்ல பலது’  டிரைவர் சொல்லிக்கொண்டு சிரித்தான். கோர்டர்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்தது வண்டி.  என் வீடு கீழ் தளத்திலேயே இருந்தது.

‘வூடு கீழ் தளமா’

‘ஆமாம்’

‘அதுவும் சவுகரியம்தான்.   அபார்ட்மெண்டில லிஃப்ட் இருக்கா’

‘படிக்கட்டுதான். லிஃப்ட் இல்லே’

என் வீடு பின் பக்கம் இருக்கிறது. வீட்டு வாயில் வரை கார் போகாது. நான்தான் அவளைக் கையைப்பிடித்து  மெதுவாக அழைத்துக்கொண்டு வந்தேன்.

‘சார் வீட்டு சாவி இல்லேன்னிங்க’

‘ஆமாம். இவளை வீட்டு வாயில் படிக்கட்டில் ஒக்காரவைச்சிட்டு பிறகு பூட்டு சாவி கதையைப்பாக்கலாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

‘அய்யோ அம்மா’  விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள் மனைவி. கால் வீக்கம் அப்படியேதான் விண்ணென்று  இருந்தது.

’வீட்டு வாயிலில் மின் விளக்கு எரிகிறது இது எப்படி ?  பூட்டிய  பூட்டையும் காணோம். வீடு உள்ளாகச்சாத்தி இருந்தது.  வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவைத்திறந்தது யார்  என்கிறீர்கள் என் பையன்தான்.

‘பெண்ணாடம் போகலியா நீ’

‘நா எங்க போறது பெண்ணாடம். கடலூர் ஓடி வரைக்கும் போனேன். பெண்ணாடம் டிக்கட் வாங்கினேன். என் டிக்கட்டைப் பின் பாக்கிட்டில் நுழைத்தேன். வீட்டு சாவி தென்பட்டது. அவ்வளவுதான் வண்டியை விட்டு கீழிறங்கினேன். உங்களை எங்கே பார்ப்பது என்கிற கவலை. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியபடியே கிடந்தது. நீங்கள் இரண்டு பேரும் எங்கே போனீங்க?’

‘தம்பி என் காலப்பாருடா. அய்யோ அம்மா முடியல்லையே நான் என்ன பண்ணுவேன்’

‘என்னம்மா  ஆச்சு உன்  காலு வீங்கி கெடக்கு’

‘’பஞ்சவடி ஆஞ்சனேயரைப்பாத்து ஒரு கும்புடு போட்டுட்டு வருவோம்னு ரெண்டுபேரும் கெளம்பினம். கோவில் வாசல்லே பஸ் நின்னுது.  இறங்குனம் அப்படியே .எனக்குக் காலு கோணிகிட்டுப் போயிட்டுது.  கீழ காலு வைக்கும் போது   அந்த  எடம் ஒரே  இருட்டு பள்ளம் நா தடுமாறிப் போயிட்டன்’

நான் டாக்சி டிரைவரை கணக்கு முடித்து அனுப்பி வைத்தேன். பையன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றான்.

‘என் தம்பி பொண்ணுக வரும்னு  ஆசை ஆசையா இருந்தேன். அது நடக்கல பாரு’

‘காலு வீங்கிக்கெடக்கு அத மொதல்ல பாக்குணும். அவுங்கள சீராட்டுறது கெடக்கட்டும்’

‘ஒங்க மனசுப் போலவே  இப்ப  ஆயிடிச்சில்ல. அப்பறம் என்ன’ என்றாள் அவள். பையன் அருகிருக்க  அவள் அப்படித்தான் பேசுவாள்

------------------------------------------------------------

 

 

.

 

 

 

 

 

 

 

 

 மனசுப்போல                                                             -எஸ்ஸார்சி

 

நானும் என் மனைவியும்  பெண்ணாடம் செல்லும் என் பையனோடு கடலூர் பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.. பெண்ணாடத்தில் என் மைத்துனர் குடும்பம் இருந்தது. மைத்துனரின்  பெண் குழந்தகள் இருவர்   உள்ளூர்  ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நவராத்திரி விடுமுறை விட்டிருக்கிறார்கள். எப்படியோ  இந்தத்தகவல் எங்களுக்கு   வந்தது.

‘பெண்ணாடம் போயி அந்த பசங்கள கூட்டிகிட்டு வந்தா ஒரு வாரம் வச்சிருந்து அனுப்பலாம்னு எனக்கு யோசனை’

‘தாராளமா செய்யிலாம்’

‘கடலூர் சில்வர் பீச்சு பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் எல்லாம் காண்பிச்சு அனுப்பிவைக்கலாம்’

‘ஓகே’  நான் சொன்னேன். ஆகத்தான் என் பையன் இன்று பெண்ணாடம் செல்கிறான். மைத்துனர் குழந்தைகளை கடலூர்  அழைத்துவரத்தான்  இந்த ஏற்பாடு.  நானும் என் மனைவியும் பையனோடு பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.

‘நாம எதுக்கு  இப்ப பொறப்படறம்’

‘பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் போயி பையன பஸ் ஏத்திவுட்டுட்டு வந்துடுவம்.  புதுசா ஒரு ஓட்டல் தெறந்துருக்கானாம் பஸ் ஸ்டேண்டுல அங்கனு போயி ஒரு காபி சாப்பிடுவம்.  தம்பி அப்படியே பெண்ணாடம் போவுட்டும். நாம திரும்பிடுவம்’

‘காபி  சூப்பரா இருக்காமா’

‘எனக்கும் தெரியாது. யாரையும் நா கேக்கவும் இல்ல. யாரும் என்னண்ட சொல்லவுமில்ல ஒரு மாத்தமா இருக்கட்டும். போய் வருவோம்னுதான். வேறென்ன’

நாங்கள் இருவரும்  எங்கள் குடியிருப்பு அருகே  இருக்கும்   டவுன் பஸ் நிற்குமிடத்திற்கு நடந்துச் சென்றுகொண்டிருந்தோம்.  என் பையன் தான் வீட்டைப்பூட்டி விட்டு எங்களின் பின்னால் வந்துகொண்டிருந்தான். டவுன் பஸ் எதுவும் வரக்காணோம். நாங்கள் இருவரும்  நெல்லிக்குப்பம் சாலையை நோக்கிக்கொண்டிருந்தோம். பையனும் வந்துவிட்டான்.

‘டவுன் பஸ் எதுவும் வருலியா’ என் பையன் தான் என்னைக்கேட்டான்.

‘’ ஒன்னு பின்னால ஒன்னு போவும். இப்ப எதுவுமே காணும்’

என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். ஆட்டோக்காரன் ஒருவன் தருவித்தருவி  எங்களிடம் வந்து நின்றான்.

‘டவுன் பஸ் இப்பக்கி வராது. டவுன் பஸ்,   ரூட் பஸ் ரெண்டுக்கும் தகறாறு.  அதுவும்  மீன் கூட லக்கேஜ் ஏத்துறதுலதான்.  கூடையில சரக்கு கொண்டாற சனத்துவுள ஆரும் ஏத்தறது இல்லயாம். அது இன்னிக்கி  பாத்துதான்   முட்டிகிச்சி. போலீசு ஜீப் அங்க  காராமணிகுப்பம்  போயிருக்கு. அங்கதான்  அந்த பஞ்சாயத்து.. அது முடிஞ்சிதான் எதா இருந்தாலுமே. நீங்க எங்க போவுணும் அத  மொத சொல்லுங்க’

‘பஸ் ஸ்டேண்ட்’

’பத்து ரூவா குடுங்க.  மூனு பேரும் ஏறுங்க’

‘பத்து ரூவாயா’

‘பின்ன எம்மாம் தருவீங்க. பஸ் வந்தாலும்  முய் ரெண்டு ஆறு ரூவா ஆவுமே’

‘ டவுன் பஸ்ல  போனா மூவர ஒன்னரதானே’ மனைவி தொடர்ந்தாள்.

‘நேரம் ஆவுது பையன் ஊருக்குப்போவ இருட்டிடிடுமே. சட்டுபுட்டுன்னு போவுணுமில்ல’ என் மனைவி என்னிடம்  குரல் தாழ்த்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். இதைத்தெரிந்துகொண்ட ஆட்டோக்காரன் ‘ ஏறி குந்துங்க நாழி ஆவுது. டவுன் வண்டி  இப்பக்கி வராது தெரிமா’ என்றான்.

நாங்கள் மூவரும் ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம். ஆட்டோ ரெக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது.

‘பத்து  ரூவாயிக்கு இம்மாம் ரோசனை. அரசாங்க ஆபிசுல சம்பளம்.’ ஆட்டோக்காரன் முணுமுணுத்தான். எனக்கும் காதில் விழுந்தது. அவனுக்கு எத்தனைக் கஷ்டம் இருக்குமோ.

பேருந்து நிலையம் வந்தது. புதியதாகத் திறந்திருக்கும் ஓட்டல் வாயிலில் வண்டியை நிறுத்தச்சொன்னோம்.

‘ஓட்டலுக்கு சவாரி கொண்டாற ஆட்டோ டிரைவருக்கு ஒரு கப்  டீ  ஃப்ரீ அங்கே விளம்பரம் எழுதித்தொங்கியது. விளம்பரத்ததைப் படித்த என் பையன்’ இப்படி வேறயா’ என்றான்.

‘தொழிலுதான்’ ஆட்டோக்காரன் சொல்லிக்கொண்டான். டீ எதுவும் குடிக்காமலே விடைப்பெற்றுப்போனான்.’ எதுவும் வெளியில சாப்பிடறது இல்லே’ எனக்குச்சொன்னான். நான் என் மனைவியைப்பார்த்தேன்.

‘அப்பிடியே தெனம் வர்ர மாதிரிதான்’  அவள்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் மூவரும் காபி சாப்பிட்டு முடித்தோம். காபி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டபரா செட்  மட்டும்  பித்தளையில் பள பள என்று   இருந்தது. பையனை திருச்சி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன். பெண்ணாடத்தில் நின்று செல்லும் பேருந்துதான் அது.

‘நாம  இன்னும்     அந்த  பஞ்சவடி  ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போகல. போயி வந்துடுவமே’ என்ன சொல்றீங்க.

இப்போதுதான் புதுச்சேரி அருகே இருக்கும்  அந்த ஆஞ்சனேயர் கோவிலில் குட முழுக்கு நடந்தது. குட முழுக்குக்கு போகலாம் என்று யோசனையில் இருந்தேன்.  முடியவில்லை.ஆபிசில் எவ்வளவோ பிரச்சனை. எந்தப்பிரச்சனை  எப்போது ரெக்கைக் கட்டிக்கொள்ளும். சொல்ல முடிகிறதா என்ன.

‘சரி போய் வந்துடுவம்’

இருவரும்  திண்டிவனம் செல்லும் பேருந்து ஒன்றைப்பிடித்தோம். சென்னைப் போகும் எல்லாப்  பேருந்தும் அந்த வழியாகத்தான் செல்லும் ஆனால் பஞ்சவடி சீட்டு என்றால்  பேருந்துக்காரர்கள்   ஏற்ற மாட்டார்கள். காசா லேசா அதுதானே இங்கு  எல்லாமும்.

நானும்  அவளும் பாண்டிச்சேரி வழியாய் திண்டிவனம் செல்லும் அந்தப் பேருந்தில் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் கூட்டமில்லை. பக்கத்து பக்கத்து சீட்டுதான்  வசதியாக இருந்தது. பெண்ணையாற்றுப்பாலம் தாண்டியது.  பின்னர் பேருந்தில் நல்ல கூட்டம். மக்கள் நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.

‘பாண்டி வரைக்கும் இப்படிக் கூட்டம் இருக்கும்’

‘அப்பறம் பத்து நிமிஷத்துல நாம எறங்கிடப்போறம்’

‘பையன அங்க அனுப்பிச்சிட்டு நாம  மட்டும் இங்க வந்தது சரியா’

‘ ஒரு எடத்துக்கு அவனயும்  அனுப்பிச்சிட்டுத்தான நாம இங்க  வர்ரம்.  அதுல  ஒன்னும் தப்புல்லவுடு’

பாண்டிச்சேரி பேருந்து நிலையம் வந்தது. பேருந்து அனேகமாகக் காலியாகிவிட்டிருந்தது. வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் வண்டியைவிட்டு இறங்கி நின்ரு கொண்டார்கள்.

‘நேரா திண்டிவனம். நேரா திண்டிவனம் ஏறு ஏறு’

நடத்துனர் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஓட்டுனர் வாயே திறக்காமல் அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

‘டிரைவருங்க ஊரு பேரு  ஒரக்க சொல்லி ஜனங்கள  வண்டிக்கு கூப்பிடறது இல்லையே அது ஏன்’

‘எந்த டிரைவருக்கும்  அவுங்க  குரலு சரியா வராதுன்னு நெனக்கிறேன்’

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையே கவனித்த  ஓட்டுனர் கொஞ்சமாய் சிரித்துக்கொண்டார்.

 வண்டி பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தை விட்டுப்புறப்பட்டது. கோரிமேடு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள் சிலர் ஏறிக்கொண்டார்கள்.

‘அடுத்தது  பஞ்சவடிலதான் நிக்கும்’ எங்களைப்பார்த்து நடத்துனர் சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் இறங்குவதற்குத் தயாராக இருந்தோம். பஞ்சவடி பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து நின்றது. நான் முதலில் இறங்கினேன். பேருந்து தார்ச்சாலையில் சுகிராக  நின்றது. படிக்கட்டைவிட்டுக் காலை எடுத்து வைத்தால் தரையோ மிகவும் பள்ளத்தில்  இருந்தது.

‘பாத்து வா பள்ளமா இருக்குது  தரை’

அதற்குள்ளாக அவள் கால் வைத்து அது இழுத்துக்கொண்டு போய்  மண்தரையில் உட்கார்ந்தே விட்டாள். நடத்துனர் நாங்கள் எப்படி இறங்கினோம் என்பதெல்லாம் எங்கே கவனித்தார். ‘ ரைட் ரைட் ரைட்’ என்றார். வண்டி வேகமாய் நகர்ந்து போனது. சாலையில் மின்சார விளக்கும் எரியவில்லை. கும்மி இருட்டாக இருந்தது.

‘என் மனைவி காலை நீட்டிய படியே  உட்கார்ந்திருந்தாள். ‘ கால மடக்கவோ எழுந்திரிக்கவோ முடியல்ல. வலி உயிர் போகுது’ என்றாள். மனைவிக்குக் காலில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது.  ஒரே இருட்டாக இருந்தது. இரண்டு தோள் பட்டையிலும் கைகளைக்கொடுத்து மெது மெதுவாக அவளைத் தூக்கி நிறுத்தினேன். ‘அய்யோ அம்மா’ என்று குரல் கொடுத்தாள். தோளில் கைபோட்டு பைய நடந்து நடந்து கோவில் கோபுர வாசலுக்கு வர ஆரம்பித்தேன். என்னாலும் முடியவில்லை. கோவில் வாசலுக்கு வந்து விட்டு ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ் அவளை நிறுத்தினேன்.

‘’ஆ படிக்கட்டு இருக்கு. அதுல உக்கார வையுங்க’ என்றார் சேவார்த்தி ஒருவர்.

என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன். கண்கள் நிறைத்துக்கொண்டு நீர். இடது கால் பாதம் வீங்கி இருந்தது. ‘அய்யோ அம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவள் என்னைப்பிடித்துக்கொண்டு நடந்தாள். கோவில் படிக்கட்டுக்குச்சரியாக  வந்து விட்டோம் ‘அம்மா ‘ என்று அலறி சத்தம் போட்டாள். கோவிலுக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் என் மனைவி அருகே வந்து அவள்  கா;லைத்தொட்டுப்பார்த்தார். தன் கை வசமிருந்த பசை மருந்து டியூப் ஒன்றைக்கொடுத்தார்.

‘சார் டாக்டர்ங்களா’

‘ஆமாம். நாளைக்கி ஒரு எக்ஸ்ரே எடுங்க.  ஒரு ஆர்த்தோவ கட்டாயம் பாருங்க’

‘சரிங்க டாக்டர்’

‘எங்க போகணும்’

‘கடலூர்’

‘ சட்டுன்னு ஒரு டாக்சிய புடிங்க அம்மாவ ஒக்கார வையுங்க. நேரா வீட்டுக்குப்போங்க. கால் வீக்கம் வலிக்கு ஒரு டோஸ் மாத்திர தர்ரேன்’

மாத்திரயை வாங்கிக்கொண்டேன்.

‘ரொம்ப நன்றி டாக்டர்’ ஃபீஸ் ஏதும்’

அவர் சிரித்துக்கொண்டார்.  ‘ ஆக வேண்டிய வேலைய பாருங்க’ என்றார்.

என் மனைவி இரண்டு கைகளையும் கூப்பி டாக்டரை வணங்கிக்கொண்டாள். நான் என் மனைவியை அந்தக் கோவில் படிக்கட்டிலேயே உட்காரவைத்துவிட்டுக் கோவில் உள்ளே சென்றேன்.  நெடிய துளசி மாலை அணிந்த  ஆஞ்சனேயரை வணங்கி நின்றேன். ‘ ‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று  அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம்  வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து  தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை.  இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்

‘இது சரியில்லை’

‘கீழே என் மனைவி  உக்காந்து இருக்கா. நடக்க முடியல்ல. அவளுக்கும் சேத்துதான் வாங்குறேன்’

பிரசாதம் வழங்கியின்  கேள்விக்கு என்தரப்பு  நியாயம் சொன்னேன். நானும் அவளும் புளியோதரைப்பிரசாதம் சாப்பிட்டு முடித்தோம் . டாக்டர் கொடுத்துவிட்டுப்போனஅந்த வலி  மாத்திரையைப் போட்டுக்கொண்டாள். ‘ஆ ஊ என்று அரற்றினாள்.

‘’வலிக்குதா’

‘ஒரு டாக்சிய மட்டும்  பாருங்க’  அவள் முகம்  எட்டுக் கோணலாகியது.

‘பத்து ரூவா ஆட்டோக்காரனுக்குத் தர யோசனை பண்ணினம்’

 ‘ இதுதான் அது பேசுற  நேரமா’

‘எல்லாம்தான்’

‘வேணாம் ஆகவேண்டிய வேலயப்பாருங்க’

நாங்கள் இருவரும் பட்ட கஷ்டத்தைப்பார்த்து யாரோ ஒருவர் கோவில் அதிகாரியிடம் விஷயத்தைச்சொல்லக் கோவில் அலுவலகத்திலிருந்து ஒரு டாக்சிக்காரனுக்குப் போன் போட்டிருக்கிறார்கள். அவனும் உடன்  அங்கே வந்து சேர்ந்தான்.

‘ஏழு நூறு ஆகும்’

‘’ஐநூறு தர்ரேன்’

‘வேற ஆள பாருங்க’ நா  பொறப்படறன்’

‘அறுநூறு போட்டுகுங்க. வாங்க’ என் மனைவிகுறுக்குச் சால் ஓட்டினாள்.

டாக்சிக்காரன் அவளை ஏற இறங்க பார்த்தான். எங்களை ஏற்றிக்கொண்டான். நானும் அந்த டிரைவரும்தான் அவளை மெது மெதுவாக வண்டியில் ஏற்றிப்  நீட்டாகப்படுக்க வைத்தோம்’.

‘இட்லி மாதிரி வீங்கி கெடக்கு காலு’

‘பஸ்லேந்து ஏறங்ககுள்ள தடுமாறிட்டாங்க. பள்ளமா இருந்துது. ஸ்டாப்பிங்குல  லைட்டு இல்ல  இருட்டு வேற’

‘நேரம்னு  ஒண்ணு வேல செய்யுதே.  டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

வண்டி கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சாலை நன்றாக இருந்தது. டிரைவரும் பதனமாக வண்டியை ஓட்டினார்.

‘வீட்டுச்சாவி ஒங்கிட்டதான இருக்கு’

‘என்கிட்ட இல்லயே’

‘பெறவு’

‘வீட பூட்டுனது பையன், சாவிய என்கிட்ட தரல. உங்க கிட்ட குடுத்து இருப்பான்ல நா இருக்குறன்’

‘’என் கிட்ட குடுக்கல.  மறதியா சாவிய  அவனே  எடுத்து கிட்டு போயிட்டான்.’

‘இப்ப என்ன செய்ய’

என் மனைவி  ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

‘வலில அழுவறயா, , வூட்டு  சாவியக்காணும்னு அழுவுறயா’  நான் கேட்டேன்.

டிரைவர் நாங்கள் பேசிக்கொண்டதைக் கவனித்துக்கொண்டே வந்தான்.

‘டிரைவரு கிட்ட ஒரு யோசனை கேளுங்க இதுக்கு என்னா செய்யுலாம்னு’

‘இதெல்லாம் அவரு கிட்டா  யோசனை கேப்பாங்களா’

‘நானும்  கேட்டுகிட்டுதான் வர்ரேன். நீங்க பேசிக்கிட்டு வர்ரத. வூட்டுக்கு  என்ன பூட்டு பூட்டிருக்கீஙக திண்டுக்கல்லா இல்ல தொட்டி பூட்டு ஏதும் இருக்கா’

.திண்டுக்கல்லு பூட்டுதான்’

‘என்கிட்ட நாலு  பழஞ்சாவிவ கெடக்கு. போட்டு கீட்டு  பாப்பம். கத ஒன்னும்  ஆவுலன்னா. புது  ஆக்சா பிளேடு  ஒன்னு  இருக்கு. சுத்தி இருக்கு வச்சிருக்கேன்  பாத்துகுவம். கவல படாதீங்க’

‘ஆஞ்சனேயா’ என்றாள் என் மனைவி.

‘காலு ரொம்ப  வலிக்குதா’ என்றேன்.

என்னை ஒரு முறை முறைத்தாள்.  வண்டி தென்பெண்னையாற்றுக் குறுகல் பாலத்தைத்தாண்டியது. மஞ்சகுப்பம் வந்தது. மணி பதினொன்று இருக்கலாம்.

ராக்காலமா இருக்கு ‘பூட்ட ஒடக்கையிலே சத்தம் வருமே. அங்காண்ட இங்காண்ட எதாவது சொல்வாங்களா’

டிரைவர் என்னிடம்  மெதுவாகச்சொன்னான். நான் பதில்  ஏதும்  சொல்லவில்லை.

‘அது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்’ என்றாள் மனைவி அலட்சியமாக.

‘கதவ ஒடச்சி எடுத்தாலும் அடுத்த வூட்டுக்காரன் என்னான்னு எழுந்திரிச்சி வெளிய வரமாட்டான். நா பாத்து இருக்கேன்ல பலது’  டிரைவர் சொல்லிக்கொண்டு சிரித்தான். கோர்டர்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்தது வண்டி.  என் வீடு கீழ் தளத்திலேயே இருந்தது.

‘வூடு கீழ் தளமா’

‘ஆமாம்’

‘அதுவும் சவுகரியம்தான்.   அபார்ட்மெண்டில லிஃப்ட் இருக்கா’

‘படிக்கட்டுதான். லிஃப்ட் இல்லே’

என் வீடு பின் பக்கம் இருக்கிறது. வீட்டு வாயில் வரை கார் போகாது. நான்தான் அவளைக் கையைப்பிடித்து  மெதுவாக அழைத்துக்கொண்டு வந்தேன்.

‘சார் வீட்டு சாவி இல்லேன்னிங்க’

‘ஆமாம். இவளை வீட்டு வாயில் படிக்கட்டில் ஒக்காரவைச்சிட்டு பிறகு பூட்டு சாவி கதையைப்பாக்கலாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

‘அய்யோ அம்மா’  விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள் மனைவி. கால் வீக்கம் அப்படியேதான் விண்ணென்று  இருந்தது.

’வீட்டு வாயிலில் மின் விளக்கு எரிகிறது இது எப்படி ?  பூட்டிய  பூட்டையும் காணோம். வீடு உள்ளாகச்சாத்தி இருந்தது.  வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவைத்திறந்தது யார்  என்கிறீர்கள் என் பையன்தான்.

‘பெண்ணாடம் போகலியா நீ’

‘நா எங்க போறது பெண்ணாடம். கடலூர் ஓடி வரைக்கும் போனேன். பெண்ணாடம் டிக்கட் வாங்கினேன். என் டிக்கட்டைப் பின் பாக்கிட்டில் நுழைத்தேன். வீட்டு சாவி தென்பட்டது. அவ்வளவுதான் வண்டியை விட்டு கீழிறங்கினேன். உங்களை எங்கே பார்ப்பது என்கிற கவலை. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியபடியே கிடந்தது. நீங்கள் இரண்டு பேரும் எங்கே போனீங்க?’

‘தம்பி என் காலப்பாருடா. அய்யோ அம்மா முடியல்லையே நான் என்ன பண்ணுவேன்’

‘என்னம்மா  ஆச்சு உன்  காலு வீங்கி கெடக்கு’

‘’பஞ்சவடி ஆஞ்சனேயரைப்பாத்து ஒரு கும்புடு போட்டுட்டு வருவோம்னு ரெண்டுபேரும் கெளம்பினம். கோவில் வாசல்லே பஸ் நின்னுது.  இறங்குனம் அப்படியே .எனக்குக் காலு கோணிகிட்டுப் போயிட்டுது.  கீழ காலு வைக்கும் போது   அந்த  எடம் ஒரே  இருட்டு பள்ளம் நா தடுமாறிப் போயிட்டன்’

நான் டாக்சி டிரைவரை கணக்கு முடித்து அனுப்பி வைத்தேன். பையன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றான்.

‘என் தம்பி பொண்ணுக வரும்னு  ஆசை ஆசையா இருந்தேன். அது நடக்கல பாரு’

‘காலு வீங்கிக்கெடக்கு அத மொதல்ல பாக்குணும். அவுங்கள சீராட்டுறது கெடக்கட்டும்’

‘ஒங்க மனசுப் போலவே  இப்ப  ஆயிடிச்சில்ல. அப்பறம் என்ன’ என்றாள் அவள். பையன் அருகிருக்க  அவள் அப்படித்தான் பேசுவாள்

------------------------------------------------------------

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 மனசுப்போல                                                             -எஸ்ஸார்சி

 

நானும் என் மனைவியும்  பெண்ணாடம் செல்லும் என் பையனோடு கடலூர் பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.. பெண்ணாடத்தில் என் மைத்துனர் குடும்பம் இருந்தது. மைத்துனரின்  பெண் குழந்தகள் இருவர்   உள்ளூர்  ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நவராத்திரி விடுமுறை விட்டிருக்கிறார்கள். எப்படியோ  இந்தத்தகவல் எங்களுக்கு   வந்தது.

‘பெண்ணாடம் போயி அந்த பசங்கள கூட்டிகிட்டு வந்தா ஒரு வாரம் வச்சிருந்து அனுப்பலாம்னு எனக்கு யோசனை’

‘தாராளமா செய்யிலாம்’

‘கடலூர் சில்வர் பீச்சு பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் எல்லாம் காண்பிச்சு அனுப்பிவைக்கலாம்’

‘ஓகே’  நான் சொன்னேன். ஆகத்தான் என் பையன் இன்று பெண்ணாடம் செல்கிறான். மைத்துனர் குழந்தைகளை கடலூர்  அழைத்துவரத்தான்  இந்த ஏற்பாடு.  நானும் என் மனைவியும் பையனோடு பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.

‘நாம எதுக்கு  இப்ப பொறப்படறம்’

‘பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் போயி பையன பஸ் ஏத்திவுட்டுட்டு வந்துடுவம்.  புதுசா ஒரு ஓட்டல் தெறந்துருக்கானாம் பஸ் ஸ்டேண்டுல அங்கனு போயி ஒரு காபி சாப்பிடுவம்.  தம்பி அப்படியே பெண்ணாடம் போவுட்டும். நாம திரும்பிடுவம்’

‘காபி  சூப்பரா இருக்காமா’

‘எனக்கும் தெரியாது. யாரையும் நா கேக்கவும் இல்ல. யாரும் என்னண்ட சொல்லவுமில்ல ஒரு மாத்தமா இருக்கட்டும். போய் வருவோம்னுதான். வேறென்ன’

நாங்கள் இருவரும்  எங்கள் குடியிருப்பு அருகே  இருக்கும்   டவுன் பஸ் நிற்குமிடத்திற்கு நடந்துச் சென்றுகொண்டிருந்தோம்.  என் பையன் தான் வீட்டைப்பூட்டி விட்டு எங்களின் பின்னால் வந்துகொண்டிருந்தான். டவுன் பஸ் எதுவும் வரக்காணோம். நாங்கள் இருவரும்  நெல்லிக்குப்பம் சாலையை நோக்கிக்கொண்டிருந்தோம். பையனும் வந்துவிட்டான்.

‘டவுன் பஸ் எதுவும் வருலியா’ என் பையன் தான் என்னைக்கேட்டான்.

‘’ ஒன்னு பின்னால ஒன்னு போவும். இப்ப எதுவுமே காணும்’

என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். ஆட்டோக்காரன் ஒருவன் தருவித்தருவி  எங்களிடம் வந்து நின்றான்.

‘டவுன் பஸ் இப்பக்கி வராது. டவுன் பஸ்,   ரூட் பஸ் ரெண்டுக்கும் தகறாறு.  அதுவும்  மீன் கூட லக்கேஜ் ஏத்துறதுலதான்.  கூடையில சரக்கு கொண்டாற சனத்துவுள ஆரும் ஏத்தறது இல்லயாம். அது இன்னிக்கி  பாத்துதான்   முட்டிகிச்சி. போலீசு ஜீப் அங்க  காராமணிகுப்பம்  போயிருக்கு. அங்கதான்  அந்த பஞ்சாயத்து.. அது முடிஞ்சிதான் எதா இருந்தாலுமே. நீங்க எங்க போவுணும் அத  மொத சொல்லுங்க’

‘பஸ் ஸ்டேண்ட்’

’பத்து ரூவா குடுங்க.  மூனு பேரும் ஏறுங்க’

‘பத்து ரூவாயா’

‘பின்ன எம்மாம் தருவீங்க. பஸ் வந்தாலும்  முய் ரெண்டு ஆறு ரூவா ஆவுமே’

‘ டவுன் பஸ்ல  போனா மூவர ஒன்னரதானே’ மனைவி தொடர்ந்தாள்.

‘நேரம் ஆவுது பையன் ஊருக்குப்போவ இருட்டிடிடுமே. சட்டுபுட்டுன்னு போவுணுமில்ல’ என் மனைவி என்னிடம்  குரல் தாழ்த்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். இதைத்தெரிந்துகொண்ட ஆட்டோக்காரன் ‘ ஏறி குந்துங்க நாழி ஆவுது. டவுன் வண்டி  இப்பக்கி வராது தெரிமா’ என்றான்.

நாங்கள் மூவரும் ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம். ஆட்டோ ரெக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது.

‘பத்து  ரூவாயிக்கு இம்மாம் ரோசனை. அரசாங்க ஆபிசுல சம்பளம்.’ ஆட்டோக்காரன் முணுமுணுத்தான். எனக்கும் காதில் விழுந்தது. அவனுக்கு எத்தனைக் கஷ்டம் இருக்குமோ.

பேருந்து நிலையம் வந்தது. புதியதாகத் திறந்திருக்கும் ஓட்டல் வாயிலில் வண்டியை நிறுத்தச்சொன்னோம்.

‘ஓட்டலுக்கு சவாரி கொண்டாற ஆட்டோ டிரைவருக்கு ஒரு கப்  டீ  ஃப்ரீ அங்கே விளம்பரம் எழுதித்தொங்கியது. விளம்பரத்ததைப் படித்த என் பையன்’ இப்படி வேறயா’ என்றான்.

‘தொழிலுதான்’ ஆட்டோக்காரன் சொல்லிக்கொண்டான். டீ எதுவும் குடிக்காமலே விடைப்பெற்றுப்போனான்.’ எதுவும் வெளியில சாப்பிடறது இல்லே’ எனக்குச்சொன்னான். நான் என் மனைவியைப்பார்த்தேன்.

‘அப்பிடியே தெனம் வர்ர மாதிரிதான்’  அவள்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் மூவரும் காபி சாப்பிட்டு முடித்தோம். காபி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டபரா செட்  மட்டும்  பித்தளையில் பள பள என்று   இருந்தது. பையனை திருச்சி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன். பெண்ணாடத்தில் நின்று செல்லும் பேருந்துதான் அது.

‘நாம  இன்னும்     அந்த  பஞ்சவடி  ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போகல. போயி வந்துடுவமே’ என்ன சொல்றீங்க.

இப்போதுதான் புதுச்சேரி அருகே இருக்கும்  அந்த ஆஞ்சனேயர் கோவிலில் குட முழுக்கு நடந்தது. குட முழுக்குக்கு போகலாம் என்று யோசனையில் இருந்தேன்.  முடியவில்லை.ஆபிசில் எவ்வளவோ பிரச்சனை. எந்தப்பிரச்சனை  எப்போது ரெக்கைக் கட்டிக்கொள்ளும். சொல்ல முடிகிறதா என்ன.

‘சரி போய் வந்துடுவம்’

இருவரும்  திண்டிவனம் செல்லும் பேருந்து ஒன்றைப்பிடித்தோம். சென்னைப் போகும் எல்லாப்  பேருந்தும் அந்த வழியாகத்தான் செல்லும் ஆனால் பஞ்சவடி சீட்டு என்றால்  பேருந்துக்காரர்கள்   ஏற்ற மாட்டார்கள். காசா லேசா அதுதானே இங்கு  எல்லாமும்.

நானும்  அவளும் பாண்டிச்சேரி வழியாய் திண்டிவனம் செல்லும் அந்தப் பேருந்தில் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் கூட்டமில்லை. பக்கத்து பக்கத்து சீட்டுதான்  வசதியாக இருந்தது. பெண்ணையாற்றுப்பாலம் தாண்டியது.  பின்னர் பேருந்தில் நல்ல கூட்டம். மக்கள் நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.

‘பாண்டி வரைக்கும் இப்படிக் கூட்டம் இருக்கும்’

‘அப்பறம் பத்து நிமிஷத்துல நாம எறங்கிடப்போறம்’

‘பையன அங்க அனுப்பிச்சிட்டு நாம  மட்டும் இங்க வந்தது சரியா’

‘ ஒரு எடத்துக்கு அவனயும்  அனுப்பிச்சிட்டுத்தான நாம இங்க  வர்ரம்.  அதுல  ஒன்னும் தப்புல்லவுடு’

பாண்டிச்சேரி பேருந்து நிலையம் வந்தது. பேருந்து அனேகமாகக் காலியாகிவிட்டிருந்தது. வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் வண்டியைவிட்டு இறங்கி நின்ரு கொண்டார்கள்.

‘நேரா திண்டிவனம். நேரா திண்டிவனம் ஏறு ஏறு’

நடத்துனர் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஓட்டுனர் வாயே திறக்காமல் அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

‘டிரைவருங்க ஊரு பேரு  ஒரக்க சொல்லி ஜனங்கள  வண்டிக்கு கூப்பிடறது இல்லையே அது ஏன்’

‘எந்த டிரைவருக்கும்  அவுங்க  குரலு சரியா வராதுன்னு நெனக்கிறேன்’

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையே கவனித்த  ஓட்டுனர் கொஞ்சமாய் சிரித்துக்கொண்டார்.

 வண்டி பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தை விட்டுப்புறப்பட்டது. கோரிமேடு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள் சிலர் ஏறிக்கொண்டார்கள்.

‘அடுத்தது  பஞ்சவடிலதான் நிக்கும்’ எங்களைப்பார்த்து நடத்துனர் சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் இறங்குவதற்குத் தயாராக இருந்தோம். பஞ்சவடி பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து நின்றது. நான் முதலில் இறங்கினேன். பேருந்து தார்ச்சாலையில் சுகிராக  நின்றது. படிக்கட்டைவிட்டுக் காலை எடுத்து வைத்தால் தரையோ மிகவும் பள்ளத்தில்  இருந்தது.

‘பாத்து வா பள்ளமா இருக்குது  தரை’

அதற்குள்ளாக அவள் கால் வைத்து அது இழுத்துக்கொண்டு போய்  மண்தரையில் உட்கார்ந்தே விட்டாள். நடத்துனர் நாங்கள் எப்படி இறங்கினோம் என்பதெல்லாம் எங்கே கவனித்தார். ‘ ரைட் ரைட் ரைட்’ என்றார். வண்டி வேகமாய் நகர்ந்து போனது. சாலையில் மின்சார விளக்கும் எரியவில்லை. கும்மி இருட்டாக இருந்தது.

‘என் மனைவி காலை நீட்டிய படியே  உட்கார்ந்திருந்தாள். ‘ கால மடக்கவோ எழுந்திரிக்கவோ முடியல்ல. வலி உயிர் போகுது’ என்றாள். மனைவிக்குக் காலில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது.  ஒரே இருட்டாக இருந்தது. இரண்டு தோள் பட்டையிலும் கைகளைக்கொடுத்து மெது மெதுவாக அவளைத் தூக்கி நிறுத்தினேன். ‘அய்யோ அம்மா’ என்று குரல் கொடுத்தாள். தோளில் கைபோட்டு பைய நடந்து நடந்து கோவில் கோபுர வாசலுக்கு வர ஆரம்பித்தேன். என்னாலும் முடியவில்லை. கோவில் வாசலுக்கு வந்து விட்டு ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ் அவளை நிறுத்தினேன்.

‘’ஆ படிக்கட்டு இருக்கு. அதுல உக்கார வையுங்க’ என்றார் சேவார்த்தி ஒருவர்.

என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன். கண்கள் நிறைத்துக்கொண்டு நீர். இடது கால் பாதம் வீங்கி இருந்தது. ‘அய்யோ அம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவள் என்னைப்பிடித்துக்கொண்டு நடந்தாள். கோவில் படிக்கட்டுக்குச்சரியாக  வந்து விட்டோம் ‘அம்மா ‘ என்று அலறி சத்தம் போட்டாள். கோவிலுக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் என் மனைவி அருகே வந்து அவள்  கா;லைத்தொட்டுப்பார்த்தார். தன் கை வசமிருந்த பசை மருந்து டியூப் ஒன்றைக்கொடுத்தார்.

‘சார் டாக்டர்ங்களா’

‘ஆமாம். நாளைக்கி ஒரு எக்ஸ்ரே எடுங்க.  ஒரு ஆர்த்தோவ கட்டாயம் பாருங்க’

‘சரிங்க டாக்டர்’

‘எங்க போகணும்’

‘கடலூர்’

‘ சட்டுன்னு ஒரு டாக்சிய புடிங்க அம்மாவ ஒக்கார வையுங்க. நேரா வீட்டுக்குப்போங்க. கால் வீக்கம் வலிக்கு ஒரு டோஸ் மாத்திர தர்ரேன்’

மாத்திரயை வாங்கிக்கொண்டேன்.

‘ரொம்ப நன்றி டாக்டர்’ ஃபீஸ் ஏதும்’

அவர் சிரித்துக்கொண்டார்.  ‘ ஆக வேண்டிய வேலைய பாருங்க’ என்றார்.

என் மனைவி இரண்டு கைகளையும் கூப்பி டாக்டரை வணங்கிக்கொண்டாள். நான் என் மனைவியை அந்தக் கோவில் படிக்கட்டிலேயே உட்காரவைத்துவிட்டுக் கோவில் உள்ளே சென்றேன்.  நெடிய துளசி மாலை அணிந்த  ஆஞ்சனேயரை வணங்கி நின்றேன். ‘ ‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று  அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம்  வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து  தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை.  இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்

‘இது சரியில்லை’

‘கீழே என் மனைவி  உக்காந்து இருக்கா. நடக்க முடியல்ல. அவளுக்கும் சேத்துதான் வாங்குறேன்’

பிரசாதம் வழங்கியின்  கேள்விக்கு என்தரப்பு  நியாயம் சொன்னேன். நானும் அவளும் புளியோதரைப்பிரசாதம் சாப்பிட்டு முடித்தோம் . டாக்டர் கொடுத்துவிட்டுப்போனஅந்த வலி  மாத்திரையைப் போட்டுக்கொண்டாள். ‘ஆ ஊ என்று அரற்றினாள்.

‘’வலிக்குதா’

‘ஒரு டாக்சிய மட்டும்  பாருங்க’  அவள் முகம்  எட்டுக் கோணலாகியது.

‘பத்து ரூவா ஆட்டோக்காரனுக்குத் தர யோசனை பண்ணினம்’

 ‘ இதுதான் அது பேசுற  நேரமா’

‘எல்லாம்தான்’

‘வேணாம் ஆகவேண்டிய வேலயப்பாருங்க’

நாங்கள் இருவரும் பட்ட கஷ்டத்தைப்பார்த்து யாரோ ஒருவர் கோவில் அதிகாரியிடம் விஷயத்தைச்சொல்லக் கோவில் அலுவலகத்திலிருந்து ஒரு டாக்சிக்காரனுக்குப் போன் போட்டிருக்கிறார்கள். அவனும் உடன்  அங்கே வந்து சேர்ந்தான்.

‘ஏழு நூறு ஆகும்’

‘’ஐநூறு தர்ரேன்’

‘வேற ஆள பாருங்க’ நா  பொறப்படறன்’

‘அறுநூறு போட்டுகுங்க. வாங்க’ என் மனைவிகுறுக்குச் சால் ஓட்டினாள்.

டாக்சிக்காரன் அவளை ஏற இறங்க பார்த்தான். எங்களை ஏற்றிக்கொண்டான். நானும் அந்த டிரைவரும்தான் அவளை மெது மெதுவாக வண்டியில் ஏற்றிப்  நீட்டாகப்படுக்க வைத்தோம்’.

‘இட்லி மாதிரி வீங்கி கெடக்கு காலு’

‘பஸ்லேந்து ஏறங்ககுள்ள தடுமாறிட்டாங்க. பள்ளமா இருந்துது. ஸ்டாப்பிங்குல  லைட்டு இல்ல  இருட்டு வேற’

‘நேரம்னு  ஒண்ணு வேல செய்யுதே.  டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

வண்டி கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சாலை நன்றாக இருந்தது. டிரைவரும் பதனமாக வண்டியை ஓட்டினார்.

‘வீட்டுச்சாவி ஒங்கிட்டதான இருக்கு’

‘என்கிட்ட இல்லயே’

‘பெறவு’

‘வீட பூட்டுனது பையன், சாவிய என்கிட்ட தரல. உங்க கிட்ட குடுத்து இருப்பான்ல நா இருக்குறன்’

‘’என் கிட்ட குடுக்கல.  மறதியா சாவிய  அவனே  எடுத்து கிட்டு போயிட்டான்.’

‘இப்ப என்ன செய்ய’

என் மனைவி  ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

‘வலில அழுவறயா, , வூட்டு  சாவியக்காணும்னு அழுவுறயா’  நான் கேட்டேன்.

டிரைவர் நாங்கள் பேசிக்கொண்டதைக் கவனித்துக்கொண்டே வந்தான்.

‘டிரைவரு கிட்ட ஒரு யோசனை கேளுங்க இதுக்கு என்னா செய்யுலாம்னு’

‘இதெல்லாம் அவரு கிட்டா  யோசனை கேப்பாங்களா’

‘நானும்  கேட்டுகிட்டுதான் வர்ரேன். நீங்க பேசிக்கிட்டு வர்ரத. வூட்டுக்கு  என்ன பூட்டு பூட்டிருக்கீஙக திண்டுக்கல்லா இல்ல தொட்டி பூட்டு ஏதும் இருக்கா’

.திண்டுக்கல்லு பூட்டுதான்’

‘என்கிட்ட நாலு  பழஞ்சாவிவ கெடக்கு. போட்டு கீட்டு  பாப்பம். கத ஒன்னும்  ஆவுலன்னா. புது  ஆக்சா பிளேடு  ஒன்னு  இருக்கு. சுத்தி இருக்கு வச்சிருக்கேன்  பாத்துகுவம். கவல படாதீங்க’

‘ஆஞ்சனேயா’ என்றாள் என் மனைவி.

‘காலு ரொம்ப  வலிக்குதா’ என்றேன்.

என்னை ஒரு முறை முறைத்தாள்.  வண்டி தென்பெண்னையாற்றுக் குறுகல் பாலத்தைத்தாண்டியது. மஞ்சகுப்பம் வந்தது. மணி பதினொன்று இருக்கலாம்.

ராக்காலமா இருக்கு ‘பூட்ட ஒடக்கையிலே சத்தம் வருமே. அங்காண்ட இங்காண்ட எதாவது சொல்வாங்களா’

டிரைவர் என்னிடம்  மெதுவாகச்சொன்னான். நான் பதில்  ஏதும்  சொல்லவில்லை.

‘அது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்’ என்றாள் மனைவி அலட்சியமாக.

‘கதவ ஒடச்சி எடுத்தாலும் அடுத்த வூட்டுக்காரன் என்னான்னு எழுந்திரிச்சி வெளிய வரமாட்டான். நா பாத்து இருக்கேன்ல பலது’  டிரைவர் சொல்லிக்கொண்டு சிரித்தான். கோர்டர்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்தது வண்டி.  என் வீடு கீழ் தளத்திலேயே இருந்தது.

‘வூடு கீழ் தளமா’

‘ஆமாம்’

‘அதுவும் சவுகரியம்தான்.   அபார்ட்மெண்டில லிஃப்ட் இருக்கா’

‘படிக்கட்டுதான். லிஃப்ட் இல்லே’

என் வீடு பின் பக்கம் இருக்கிறது. வீட்டு வாயில் வரை கார் போகாது. நான்தான் அவளைக் கையைப்பிடித்து  மெதுவாக அழைத்துக்கொண்டு வந்தேன்.

‘சார் வீட்டு சாவி இல்லேன்னிங்க’

‘ஆமாம். இவளை வீட்டு வாயில் படிக்கட்டில் ஒக்காரவைச்சிட்டு பிறகு பூட்டு சாவி கதையைப்பாக்கலாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

‘அய்யோ அம்மா’  விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள் மனைவி. கால் வீக்கம் அப்படியேதான் விண்ணென்று  இருந்தது.

’வீட்டு வாயிலில் மின் விளக்கு எரிகிறது இது எப்படி ?  பூட்டிய  பூட்டையும் காணோம். வீடு உள்ளாகச்சாத்தி இருந்தது.  வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவைத்திறந்தது யார்  என்கிறீர்கள் என் பையன்தான்.

‘பெண்ணாடம் போகலியா நீ’

‘நா எங்க போறது பெண்ணாடம். கடலூர் ஓடி வரைக்கும் போனேன். பெண்ணாடம் டிக்கட் வாங்கினேன். என் டிக்கட்டைப் பின் பாக்கிட்டில் நுழைத்தேன். வீட்டு சாவி தென்பட்டது. அவ்வளவுதான் வண்டியை விட்டு கீழிறங்கினேன். உங்களை எங்கே பார்ப்பது என்கிற கவலை. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியபடியே கிடந்தது. நீங்கள் இரண்டு பேரும் எங்கே போனீங்க?’

‘தம்பி என் காலப்பாருடா. அய்யோ அம்மா முடியல்லையே நான் என்ன பண்ணுவேன்’

‘என்னம்மா  ஆச்சு உன்  காலு வீங்கி கெடக்கு’

‘’பஞ்சவடி ஆஞ்சனேயரைப்பாத்து ஒரு கும்புடு போட்டுட்டு வருவோம்னு ரெண்டுபேரும் கெளம்பினம். கோவில் வாசல்லே பஸ் நின்னுது.  இறங்குனம் அப்படியே .எனக்குக் காலு கோணிகிட்டுப் போயிட்டுது.  கீழ காலு வைக்கும் போது   அந்த  எடம் ஒரே  இருட்டு பள்ளம் நா தடுமாறிப் போயிட்டன்’

நான் டாக்சி டிரைவரை கணக்கு முடித்து அனுப்பி வைத்தேன். பையன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றான்.

‘என் தம்பி பொண்ணுக வரும்னு  ஆசை ஆசையா இருந்தேன். அது நடக்கல பாரு’

‘காலு வீங்கிக்கெடக்கு அத மொதல்ல பாக்குணும். அவுங்கள சீராட்டுறது கெடக்கட்டும்’

‘ஒங்க மனசுப் போலவே  இப்ப  ஆயிடிச்சில்ல. அப்பறம் என்ன’ என்றாள் அவள். பையன் அருகிருக்க  அவள் அப்படித்தான் பேசுவாள்

------------------------------------------------------------

 

 

.

 

 

 

 

 

 

 

 

 மனசுப்போல                                                             -எஸ்ஸார்சி

 

நானும் என் மனைவியும்  பெண்ணாடம் செல்லும் என் பையனோடு கடலூர் பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.. பெண்ணாடத்தில் என் மைத்துனர் குடும்பம் இருந்தது. மைத்துனரின்  பெண் குழந்தகள் இருவர்   உள்ளூர்  ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நவராத்திரி விடுமுறை விட்டிருக்கிறார்கள். எப்படியோ  இந்தத்தகவல் எங்களுக்கு   வந்தது.

‘பெண்ணாடம் போயி அந்த பசங்கள கூட்டிகிட்டு வந்தா ஒரு வாரம் வச்சிருந்து அனுப்பலாம்னு எனக்கு யோசனை’

‘தாராளமா செய்யிலாம்’

‘கடலூர் சில்வர் பீச்சு பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் எல்லாம் காண்பிச்சு அனுப்பிவைக்கலாம்’

‘ஓகே’  நான் சொன்னேன். ஆகத்தான் என் பையன் இன்று பெண்ணாடம் செல்கிறான். மைத்துனர் குழந்தைகளை கடலூர்  அழைத்துவரத்தான்  இந்த ஏற்பாடு.  நானும் என் மனைவியும் பையனோடு பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.

‘நாம எதுக்கு  இப்ப பொறப்படறம்’

‘பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் போயி பையன பஸ் ஏத்திவுட்டுட்டு வந்துடுவம்.  புதுசா ஒரு ஓட்டல் தெறந்துருக்கானாம் பஸ் ஸ்டேண்டுல அங்கனு போயி ஒரு காபி சாப்பிடுவம்.  தம்பி அப்படியே பெண்ணாடம் போவுட்டும். நாம திரும்பிடுவம்’

‘காபி  சூப்பரா இருக்காமா’

‘எனக்கும் தெரியாது. யாரையும் நா கேக்கவும் இல்ல. யாரும் என்னண்ட சொல்லவுமில்ல ஒரு மாத்தமா இருக்கட்டும். போய் வருவோம்னுதான். வேறென்ன’

நாங்கள் இருவரும்  எங்கள் குடியிருப்பு அருகே  இருக்கும்   டவுன் பஸ் நிற்குமிடத்திற்கு நடந்துச் சென்றுகொண்டிருந்தோம்.  என் பையன் தான் வீட்டைப்பூட்டி விட்டு எங்களின் பின்னால் வந்துகொண்டிருந்தான். டவுன் பஸ் எதுவும் வரக்காணோம். நாங்கள் இருவரும்  நெல்லிக்குப்பம் சாலையை நோக்கிக்கொண்டிருந்தோம். பையனும் வந்துவிட்டான்.

‘டவுன் பஸ் எதுவும் வருலியா’ என் பையன் தான் என்னைக்கேட்டான்.

‘’ ஒன்னு பின்னால ஒன்னு போவும். இப்ப எதுவுமே காணும்’

என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். ஆட்டோக்காரன் ஒருவன் தருவித்தருவி  எங்களிடம் வந்து நின்றான்.

‘டவுன் பஸ் இப்பக்கி வராது. டவுன் பஸ்,   ரூட் பஸ் ரெண்டுக்கும் தகறாறு.  அதுவும்  மீன் கூட லக்கேஜ் ஏத்துறதுலதான்.  கூடையில சரக்கு கொண்டாற சனத்துவுள ஆரும் ஏத்தறது இல்லயாம். அது இன்னிக்கி  பாத்துதான்   முட்டிகிச்சி. போலீசு ஜீப் அங்க  காராமணிகுப்பம்  போயிருக்கு. அங்கதான்  அந்த பஞ்சாயத்து.. அது முடிஞ்சிதான் எதா இருந்தாலுமே. நீங்க எங்க போவுணும் அத  மொத சொல்லுங்க’

‘பஸ் ஸ்டேண்ட்’

’பத்து ரூவா குடுங்க.  மூனு பேரும் ஏறுங்க’

‘பத்து ரூவாயா’

‘பின்ன எம்மாம் தருவீங்க. பஸ் வந்தாலும்  முய் ரெண்டு ஆறு ரூவா ஆவுமே’

‘ டவுன் பஸ்ல  போனா மூவர ஒன்னரதானே’ மனைவி தொடர்ந்தாள்.

‘நேரம் ஆவுது பையன் ஊருக்குப்போவ இருட்டிடிடுமே. சட்டுபுட்டுன்னு போவுணுமில்ல’ என் மனைவி என்னிடம்  குரல் தாழ்த்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். இதைத்தெரிந்துகொண்ட ஆட்டோக்காரன் ‘ ஏறி குந்துங்க நாழி ஆவுது. டவுன் வண்டி  இப்பக்கி வராது தெரிமா’ என்றான்.

நாங்கள் மூவரும் ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம். ஆட்டோ ரெக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது.

‘பத்து  ரூவாயிக்கு இம்மாம் ரோசனை. அரசாங்க ஆபிசுல சம்பளம்.’ ஆட்டோக்காரன் முணுமுணுத்தான். எனக்கும் காதில் விழுந்தது. அவனுக்கு எத்தனைக் கஷ்டம் இருக்குமோ.

பேருந்து நிலையம் வந்தது. புதியதாகத் திறந்திருக்கும் ஓட்டல் வாயிலில் வண்டியை நிறுத்தச்சொன்னோம்.

‘ஓட்டலுக்கு சவாரி கொண்டாற ஆட்டோ டிரைவருக்கு ஒரு கப்  டீ  ஃப்ரீ அங்கே விளம்பரம் எழுதித்தொங்கியது. விளம்பரத்ததைப் படித்த என் பையன்’ இப்படி வேறயா’ என்றான்.

‘தொழிலுதான்’ ஆட்டோக்காரன் சொல்லிக்கொண்டான். டீ எதுவும் குடிக்காமலே விடைப்பெற்றுப்போனான்.’ எதுவும் வெளியில சாப்பிடறது இல்லே’ எனக்குச்சொன்னான். நான் என் மனைவியைப்பார்த்தேன்.

‘அப்பிடியே தெனம் வர்ர மாதிரிதான்’  அவள்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் மூவரும் காபி சாப்பிட்டு முடித்தோம். காபி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டபரா செட்  மட்டும்  பித்தளையில் பள பள என்று   இருந்தது. பையனை திருச்சி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன். பெண்ணாடத்தில் நின்று செல்லும் பேருந்துதான் அது.

‘நாம  இன்னும்     அந்த  பஞ்சவடி  ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போகல. போயி வந்துடுவமே’ என்ன சொல்றீங்க.

இப்போதுதான் புதுச்சேரி அருகே இருக்கும்  அந்த ஆஞ்சனேயர் கோவிலில் குட முழுக்கு நடந்தது. குட முழுக்குக்கு போகலாம் என்று யோசனையில் இருந்தேன்.  முடியவில்லை.ஆபிசில் எவ்வளவோ பிரச்சனை. எந்தப்பிரச்சனை  எப்போது ரெக்கைக் கட்டிக்கொள்ளும். சொல்ல முடிகிறதா என்ன.

‘சரி போய் வந்துடுவம்’

இருவரும்  திண்டிவனம் செல்லும் பேருந்து ஒன்றைப்பிடித்தோம். சென்னைப் போகும் எல்லாப்  பேருந்தும் அந்த வழியாகத்தான் செல்லும் ஆனால் பஞ்சவடி சீட்டு என்றால்  பேருந்துக்காரர்கள்   ஏற்ற மாட்டார்கள். காசா லேசா அதுதானே இங்கு  எல்லாமும்.

நானும்  அவளும் பாண்டிச்சேரி வழியாய் திண்டிவனம் செல்லும் அந்தப் பேருந்தில் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் கூட்டமில்லை. பக்கத்து பக்கத்து சீட்டுதான்  வசதியாக இருந்தது. பெண்ணையாற்றுப்பாலம் தாண்டியது.  பின்னர் பேருந்தில் நல்ல கூட்டம். மக்கள் நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.

‘பாண்டி வரைக்கும் இப்படிக் கூட்டம் இருக்கும்’

‘அப்பறம் பத்து நிமிஷத்துல நாம எறங்கிடப்போறம்’

‘பையன அங்க அனுப்பிச்சிட்டு நாம  மட்டும் இங்க வந்தது சரியா’

‘ ஒரு எடத்துக்கு அவனயும்  அனுப்பிச்சிட்டுத்தான நாம இங்க  வர்ரம்.  அதுல  ஒன்னும் தப்புல்லவுடு’

பாண்டிச்சேரி பேருந்து நிலையம் வந்தது. பேருந்து அனேகமாகக் காலியாகிவிட்டிருந்தது. வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் வண்டியைவிட்டு இறங்கி நின்ரு கொண்டார்கள்.

‘நேரா திண்டிவனம். நேரா திண்டிவனம் ஏறு ஏறு’

நடத்துனர் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஓட்டுனர் வாயே திறக்காமல் அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

‘டிரைவருங்க ஊரு பேரு  ஒரக்க சொல்லி ஜனங்கள  வண்டிக்கு கூப்பிடறது இல்லையே அது ஏன்’

‘எந்த டிரைவருக்கும்  அவுங்க  குரலு சரியா வராதுன்னு நெனக்கிறேன்’

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையே கவனித்த  ஓட்டுனர் கொஞ்சமாய் சிரித்துக்கொண்டார்.

 வண்டி பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தை விட்டுப்புறப்பட்டது. கோரிமேடு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள் சிலர் ஏறிக்கொண்டார்கள்.

‘அடுத்தது  பஞ்சவடிலதான் நிக்கும்’ எங்களைப்பார்த்து நடத்துனர் சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் இறங்குவதற்குத் தயாராக இருந்தோம். பஞ்சவடி பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து நின்றது. நான் முதலில் இறங்கினேன். பேருந்து தார்ச்சாலையில் சுகிராக  நின்றது. படிக்கட்டைவிட்டுக் காலை எடுத்து வைத்தால் தரையோ மிகவும் பள்ளத்தில்  இருந்தது.

‘பாத்து வா பள்ளமா இருக்குது  தரை’

அதற்குள்ளாக அவள் கால் வைத்து அது இழுத்துக்கொண்டு போய்  மண்தரையில் உட்கார்ந்தே விட்டாள். நடத்துனர் நாங்கள் எப்படி இறங்கினோம் என்பதெல்லாம் எங்கே கவனித்தார். ‘ ரைட் ரைட் ரைட்’ என்றார். வண்டி வேகமாய் நகர்ந்து போனது. சாலையில் மின்சார விளக்கும் எரியவில்லை. கும்மி இருட்டாக இருந்தது.

‘என் மனைவி காலை நீட்டிய படியே  உட்கார்ந்திருந்தாள். ‘ கால மடக்கவோ எழுந்திரிக்கவோ முடியல்ல. வலி உயிர் போகுது’ என்றாள். மனைவிக்குக் காலில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது.  ஒரே இருட்டாக இருந்தது. இரண்டு தோள் பட்டையிலும் கைகளைக்கொடுத்து மெது மெதுவாக அவளைத் தூக்கி நிறுத்தினேன். ‘அய்யோ அம்மா’ என்று குரல் கொடுத்தாள். தோளில் கைபோட்டு பைய நடந்து நடந்து கோவில் கோபுர வாசலுக்கு வர ஆரம்பித்தேன். என்னாலும் முடியவில்லை. கோவில் வாசலுக்கு வந்து விட்டு ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ் அவளை நிறுத்தினேன்.

‘’ஆ படிக்கட்டு இருக்கு. அதுல உக்கார வையுங்க’ என்றார் சேவார்த்தி ஒருவர்.

என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன். கண்கள் நிறைத்துக்கொண்டு நீர். இடது கால் பாதம் வீங்கி இருந்தது. ‘அய்யோ அம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவள் என்னைப்பிடித்துக்கொண்டு நடந்தாள். கோவில் படிக்கட்டுக்குச்சரியாக  வந்து விட்டோம் ‘அம்மா ‘ என்று அலறி சத்தம் போட்டாள். கோவிலுக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் என் மனைவி அருகே வந்து அவள்  கா;லைத்தொட்டுப்பார்த்தார். தன் கை வசமிருந்த பசை மருந்து டியூப் ஒன்றைக்கொடுத்தார்.

‘சார் டாக்டர்ங்களா’

‘ஆமாம். நாளைக்கி ஒரு எக்ஸ்ரே எடுங்க.  ஒரு ஆர்த்தோவ கட்டாயம் பாருங்க’

‘சரிங்க டாக்டர்’

‘எங்க போகணும்’

‘கடலூர்’

‘ சட்டுன்னு ஒரு டாக்சிய புடிங்க அம்மாவ ஒக்கார வையுங்க. நேரா வீட்டுக்குப்போங்க. கால் வீக்கம் வலிக்கு ஒரு டோஸ் மாத்திர தர்ரேன்’

மாத்திரயை வாங்கிக்கொண்டேன்.

‘ரொம்ப நன்றி டாக்டர்’ ஃபீஸ் ஏதும்’

அவர் சிரித்துக்கொண்டார்.  ‘ ஆக வேண்டிய வேலைய பாருங்க’ என்றார்.

என் மனைவி இரண்டு கைகளையும் கூப்பி டாக்டரை வணங்கிக்கொண்டாள். நான் என் மனைவியை அந்தக் கோவில் படிக்கட்டிலேயே உட்காரவைத்துவிட்டுக் கோவில் உள்ளே சென்றேன்.  நெடிய துளசி மாலை அணிந்த  ஆஞ்சனேயரை வணங்கி நின்றேன். ‘ ‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று  அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம்  வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து  தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை.  இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்

‘இது சரியில்லை’

‘கீழே என் மனைவி  உக்காந்து இருக்கா. நடக்க முடியல்ல. அவளுக்கும் சேத்துதான் வாங்குறேன்’

பிரசாதம் வழங்கியின்  கேள்விக்கு என்தரப்பு  நியாயம் சொன்னேன். நானும் அவளும் புளியோதரைப்பிரசாதம் சாப்பிட்டு முடித்தோம் . டாக்டர் கொடுத்துவிட்டுப்போனஅந்த வலி  மாத்திரையைப் போட்டுக்கொண்டாள். ‘ஆ ஊ என்று அரற்றினாள்.

‘’வலிக்குதா’

‘ஒரு டாக்சிய மட்டும்  பாருங்க’  அவள் முகம்  எட்டுக் கோணலாகியது.

‘பத்து ரூவா ஆட்டோக்காரனுக்குத் தர யோசனை பண்ணினம்’

 ‘ இதுதான் அது பேசுற  நேரமா’

‘எல்லாம்தான்’

‘வேணாம் ஆகவேண்டிய வேலயப்பாருங்க’

நாங்கள் இருவரும் பட்ட கஷ்டத்தைப்பார்த்து யாரோ ஒருவர் கோவில் அதிகாரியிடம் விஷயத்தைச்சொல்லக் கோவில் அலுவலகத்திலிருந்து ஒரு டாக்சிக்காரனுக்குப் போன் போட்டிருக்கிறார்கள். அவனும் உடன்  அங்கே வந்து சேர்ந்தான்.

‘ஏழு நூறு ஆகும்’

‘’ஐநூறு தர்ரேன்’

‘வேற ஆள பாருங்க’ நா  பொறப்படறன்’

‘அறுநூறு போட்டுகுங்க. வாங்க’ என் மனைவிகுறுக்குச் சால் ஓட்டினாள்.

டாக்சிக்காரன் அவளை ஏற இறங்க பார்த்தான். எங்களை ஏற்றிக்கொண்டான். நானும் அந்த டிரைவரும்தான் அவளை மெது மெதுவாக வண்டியில் ஏற்றிப்  நீட்டாகப்படுக்க வைத்தோம்’.

‘இட்லி மாதிரி வீங்கி கெடக்கு காலு’

‘பஸ்லேந்து ஏறங்ககுள்ள தடுமாறிட்டாங்க. பள்ளமா இருந்துது. ஸ்டாப்பிங்குல  லைட்டு இல்ல  இருட்டு வேற’

‘நேரம்னு  ஒண்ணு வேல செய்யுதே.  டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

வண்டி கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சாலை நன்றாக இருந்தது. டிரைவரும் பதனமாக வண்டியை ஓட்டினார்.

‘வீட்டுச்சாவி ஒங்கிட்டதான இருக்கு’

‘என்கிட்ட இல்லயே’

‘பெறவு’

‘வீட பூட்டுனது பையன், சாவிய என்கிட்ட தரல. உங்க கிட்ட குடுத்து இருப்பான்ல நா இருக்குறன்’

‘’என் கிட்ட குடுக்கல.  மறதியா சாவிய  அவனே  எடுத்து கிட்டு போயிட்டான்.’

‘இப்ப என்ன செய்ய’

என் மனைவி  ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

‘வலில அழுவறயா, , வூட்டு  சாவியக்காணும்னு அழுவுறயா’  நான் கேட்டேன்.

டிரைவர் நாங்கள் பேசிக்கொண்டதைக் கவனித்துக்கொண்டே வந்தான்.

‘டிரைவரு கிட்ட ஒரு யோசனை கேளுங்க இதுக்கு என்னா செய்யுலாம்னு’

‘இதெல்லாம் அவரு கிட்டா  யோசனை கேப்பாங்களா’

‘நானும்  கேட்டுகிட்டுதான் வர்ரேன். நீங்க பேசிக்கிட்டு வர்ரத. வூட்டுக்கு  என்ன பூட்டு பூட்டிருக்கீஙக திண்டுக்கல்லா இல்ல தொட்டி பூட்டு ஏதும் இருக்கா’

.திண்டுக்கல்லு பூட்டுதான்’

‘என்கிட்ட நாலு  பழஞ்சாவிவ கெடக்கு. போட்டு கீட்டு  பாப்பம். கத ஒன்னும்  ஆவுலன்னா. புது  ஆக்சா பிளேடு  ஒன்னு  இருக்கு. சுத்தி இருக்கு வச்சிருக்கேன்  பாத்துகுவம். கவல படாதீங்க’

‘ஆஞ்சனேயா’ என்றாள் என் மனைவி.

‘காலு ரொம்ப  வலிக்குதா’ என்றேன்.

என்னை ஒரு முறை முறைத்தாள்.  வண்டி தென்பெண்னையாற்றுக் குறுகல் பாலத்தைத்தாண்டியது. மஞ்சகுப்பம் வந்தது. மணி பதினொன்று இருக்கலாம்.

ராக்காலமா இருக்கு ‘பூட்ட ஒடக்கையிலே சத்தம் வருமே. அங்காண்ட இங்காண்ட எதாவது சொல்வாங்களா’

டிரைவர் என்னிடம்  மெதுவாகச்சொன்னான். நான் பதில்  ஏதும்  சொல்லவில்லை.

‘அது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்’ என்றாள் மனைவி அலட்சியமாக.

‘கதவ ஒடச்சி எடுத்தாலும் அடுத்த வூட்டுக்காரன் என்னான்னு எழுந்திரிச்சி வெளிய வரமாட்டான். நா பாத்து இருக்கேன்ல பலது’  டிரைவர் சொல்லிக்கொண்டு சிரித்தான். கோர்டர்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்தது வண்டி.  என் வீடு கீழ் தளத்திலேயே இருந்தது.

‘வூடு கீழ் தளமா’

‘ஆமாம்’

‘அதுவும் சவுகரியம்தான்.   அபார்ட்மெண்டில லிஃப்ட் இருக்கா’

‘படிக்கட்டுதான். லிஃப்ட் இல்லே’

என் வீடு பின் பக்கம் இருக்கிறது. வீட்டு வாயில் வரை கார் போகாது. நான்தான் அவளைக் கையைப்பிடித்து  மெதுவாக அழைத்துக்கொண்டு வந்தேன்.

‘சார் வீட்டு சாவி இல்லேன்னிங்க’

‘ஆமாம். இவளை வீட்டு வாயில் படிக்கட்டில் ஒக்காரவைச்சிட்டு பிறகு பூட்டு சாவி கதையைப்பாக்கலாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

‘அய்யோ அம்மா’  விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள் மனைவி. கால் வீக்கம் அப்படியேதான் விண்ணென்று  இருந்தது.

’வீட்டு வாயிலில் மின் விளக்கு எரிகிறது இது எப்படி ?  பூட்டிய  பூட்டையும் காணோம். வீடு உள்ளாகச்சாத்தி இருந்தது.  வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவைத்திறந்தது யார்  என்கிறீர்கள் என் பையன்தான்.

‘பெண்ணாடம் போகலியா நீ’

‘நா எங்க போறது பெண்ணாடம். கடலூர் ஓடி வரைக்கும் போனேன். பெண்ணாடம் டிக்கட் வாங்கினேன். என் டிக்கட்டைப் பின் பாக்கிட்டில் நுழைத்தேன். வீட்டு சாவி தென்பட்டது. அவ்வளவுதான் வண்டியை விட்டு கீழிறங்கினேன். உங்களை எங்கே பார்ப்பது என்கிற கவலை. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியபடியே கிடந்தது. நீங்கள் இரண்டு பேரும் எங்கே போனீங்க?’

‘தம்பி என் காலப்பாருடா. அய்யோ அம்மா முடியல்லையே நான் என்ன பண்ணுவேன்’

‘என்னம்மா  ஆச்சு உன்  காலு வீங்கி கெடக்கு’

‘’பஞ்சவடி ஆஞ்சனேயரைப்பாத்து ஒரு கும்புடு போட்டுட்டு வருவோம்னு ரெண்டுபேரும் கெளம்பினம். கோவில் வாசல்லே பஸ் நின்னுது.  இறங்குனம் அப்படியே .எனக்குக் காலு கோணிகிட்டுப் போயிட்டுது.  கீழ காலு வைக்கும் போது   அந்த  எடம் ஒரே  இருட்டு பள்ளம் நா தடுமாறிப் போயிட்டன்’

நான் டாக்சி டிரைவரை கணக்கு முடித்து அனுப்பி வைத்தேன். பையன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றான்.

‘என் தம்பி பொண்ணுக வரும்னு  ஆசை ஆசையா இருந்தேன். அது நடக்கல பாரு’

‘காலு வீங்கிக்கெடக்கு அத மொதல்ல பாக்குணும். அவுங்கள சீராட்டுறது கெடக்கட்டும்’

‘ஒங்க மனசுப் போலவே  இப்ப  ஆயிடிச்சில்ல. அப்பறம் என்ன’ என்றாள் அவள். பையன் அருகிருக்க  அவள் அப்படித்தான் பேசுவாள்

------------------------------------------------------------

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 மனசுப்போல                                                             -எஸ்ஸார்சி

 

நானும் என் மனைவியும்  பெண்ணாடம் செல்லும் என் பையனோடு கடலூர் பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.. பெண்ணாடத்தில் என் மைத்துனர் குடும்பம் இருந்தது. மைத்துனரின்  பெண் குழந்தகள் இருவர்   உள்ளூர்  ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நவராத்திரி விடுமுறை விட்டிருக்கிறார்கள். எப்படியோ  இந்தத்தகவல் எங்களுக்கு   வந்தது.

‘பெண்ணாடம் போயி அந்த பசங்கள கூட்டிகிட்டு வந்தா ஒரு வாரம் வச்சிருந்து அனுப்பலாம்னு எனக்கு யோசனை’

‘தாராளமா செய்யிலாம்’

‘கடலூர் சில்வர் பீச்சு பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் எல்லாம் காண்பிச்சு அனுப்பிவைக்கலாம்’

‘ஓகே’  நான் சொன்னேன். ஆகத்தான் என் பையன் இன்று பெண்ணாடம் செல்கிறான். மைத்துனர் குழந்தைகளை கடலூர்  அழைத்துவரத்தான்  இந்த ஏற்பாடு.  நானும் என் மனைவியும் பையனோடு பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.

‘நாம எதுக்கு  இப்ப பொறப்படறம்’

‘பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் போயி பையன பஸ் ஏத்திவுட்டுட்டு வந்துடுவம்.  புதுசா ஒரு ஓட்டல் தெறந்துருக்கானாம் பஸ் ஸ்டேண்டுல அங்கனு போயி ஒரு காபி சாப்பிடுவம்.  தம்பி அப்படியே பெண்ணாடம் போவுட்டும். நாம திரும்பிடுவம்’

‘காபி  சூப்பரா இருக்காமா’

‘எனக்கும் தெரியாது. யாரையும் நா கேக்கவும் இல்ல. யாரும் என்னண்ட சொல்லவுமில்ல ஒரு மாத்தமா இருக்கட்டும். போய் வருவோம்னுதான். வேறென்ன’

நாங்கள் இருவரும்  எங்கள் குடியிருப்பு அருகே  இருக்கும்   டவுன் பஸ் நிற்குமிடத்திற்கு நடந்துச் சென்றுகொண்டிருந்தோம்.  என் பையன் தான் வீட்டைப்பூட்டி விட்டு எங்களின் பின்னால் வந்துகொண்டிருந்தான். டவுன் பஸ் எதுவும் வரக்காணோம். நாங்கள் இருவரும்  நெல்லிக்குப்பம் சாலையை நோக்கிக்கொண்டிருந்தோம். பையனும் வந்துவிட்டான்.

‘டவுன் பஸ் எதுவும் வருலியா’ என் பையன் தான் என்னைக்கேட்டான்.

‘’ ஒன்னு பின்னால ஒன்னு போவும். இப்ப எதுவுமே காணும்’

என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். ஆட்டோக்காரன் ஒருவன் தருவித்தருவி  எங்களிடம் வந்து நின்றான்.

‘டவுன் பஸ் இப்பக்கி வராது. டவுன் பஸ்,   ரூட் பஸ் ரெண்டுக்கும் தகறாறு.  அதுவும்  மீன் கூட லக்கேஜ் ஏத்துறதுலதான்.  கூடையில சரக்கு கொண்டாற சனத்துவுள ஆரும் ஏத்தறது இல்லயாம். அது இன்னிக்கி  பாத்துதான்   முட்டிகிச்சி. போலீசு ஜீப் அங்க  காராமணிகுப்பம்  போயிருக்கு. அங்கதான்  அந்த பஞ்சாயத்து.. அது முடிஞ்சிதான் எதா இருந்தாலுமே. நீங்க எங்க போவுணும் அத  மொத சொல்லுங்க’

‘பஸ் ஸ்டேண்ட்’

’பத்து ரூவா குடுங்க.  மூனு பேரும் ஏறுங்க’

‘பத்து ரூவாயா’

‘பின்ன எம்மாம் தருவீங்க. பஸ் வந்தாலும்  முய் ரெண்டு ஆறு ரூவா ஆவுமே’

‘ டவுன் பஸ்ல  போனா மூவர ஒன்னரதானே’ மனைவி தொடர்ந்தாள்.

‘நேரம் ஆவுது பையன் ஊருக்குப்போவ இருட்டிடிடுமே. சட்டுபுட்டுன்னு போவுணுமில்ல’ என் மனைவி என்னிடம்  குரல் தாழ்த்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். இதைத்தெரிந்துகொண்ட ஆட்டோக்காரன் ‘ ஏறி குந்துங்க நாழி ஆவுது. டவுன் வண்டி  இப்பக்கி வராது தெரிமா’ என்றான்.

நாங்கள் மூவரும் ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம். ஆட்டோ ரெக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது.

‘பத்து  ரூவாயிக்கு இம்மாம் ரோசனை. அரசாங்க ஆபிசுல சம்பளம்.’ ஆட்டோக்காரன் முணுமுணுத்தான். எனக்கும் காதில் விழுந்தது. அவனுக்கு எத்தனைக் கஷ்டம் இருக்குமோ.

பேருந்து நிலையம் வந்தது. புதியதாகத் திறந்திருக்கும் ஓட்டல் வாயிலில் வண்டியை நிறுத்தச்சொன்னோம்.

‘ஓட்டலுக்கு சவாரி கொண்டாற ஆட்டோ டிரைவருக்கு ஒரு கப்  டீ  ஃப்ரீ அங்கே விளம்பரம் எழுதித்தொங்கியது. விளம்பரத்ததைப் படித்த என் பையன்’ இப்படி வேறயா’ என்றான்.

‘தொழிலுதான்’ ஆட்டோக்காரன் சொல்லிக்கொண்டான். டீ எதுவும் குடிக்காமலே விடைப்பெற்றுப்போனான்.’ எதுவும் வெளியில சாப்பிடறது இல்லே’ எனக்குச்சொன்னான். நான் என் மனைவியைப்பார்த்தேன்.

‘அப்பிடியே தெனம் வர்ர மாதிரிதான்’  அவள்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் மூவரும் காபி சாப்பிட்டு முடித்தோம். காபி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டபரா செட்  மட்டும்  பித்தளையில் பள பள என்று   இருந்தது. பையனை திருச்சி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன். பெண்ணாடத்தில் நின்று செல்லும் பேருந்துதான் அது.

‘நாம  இன்னும்     அந்த  பஞ்சவடி  ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போகல. போயி வந்துடுவமே’ என்ன சொல்றீங்க.

இப்போதுதான் புதுச்சேரி அருகே இருக்கும்  அந்த ஆஞ்சனேயர் கோவிலில் குட முழுக்கு நடந்தது. குட முழுக்குக்கு போகலாம் என்று யோசனையில் இருந்தேன்.  முடியவில்லை.ஆபிசில் எவ்வளவோ பிரச்சனை. எந்தப்பிரச்சனை  எப்போது ரெக்கைக் கட்டிக்கொள்ளும். சொல்ல முடிகிறதா என்ன.

‘சரி போய் வந்துடுவம்’

இருவரும்  திண்டிவனம் செல்லும் பேருந்து ஒன்றைப்பிடித்தோம். சென்னைப் போகும் எல்லாப்  பேருந்தும் அந்த வழியாகத்தான் செல்லும் ஆனால் பஞ்சவடி சீட்டு என்றால்  பேருந்துக்காரர்கள்   ஏற்ற மாட்டார்கள். காசா லேசா அதுதானே இங்கு  எல்லாமும்.

நானும்  அவளும் பாண்டிச்சேரி வழியாய் திண்டிவனம் செல்லும் அந்தப் பேருந்தில் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் கூட்டமில்லை. பக்கத்து பக்கத்து சீட்டுதான்  வசதியாக இருந்தது. பெண்ணையாற்றுப்பாலம் தாண்டியது.  பின்னர் பேருந்தில் நல்ல கூட்டம். மக்கள் நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.

‘பாண்டி வரைக்கும் இப்படிக் கூட்டம் இருக்கும்’

‘அப்பறம் பத்து நிமிஷத்துல நாம எறங்கிடப்போறம்’

‘பையன அங்க அனுப்பிச்சிட்டு நாம  மட்டும் இங்க வந்தது சரியா’

‘ ஒரு எடத்துக்கு அவனயும்  அனுப்பிச்சிட்டுத்தான நாம இங்க  வர்ரம்.  அதுல  ஒன்னும் தப்புல்லவுடு’

பாண்டிச்சேரி பேருந்து நிலையம் வந்தது. பேருந்து அனேகமாகக் காலியாகிவிட்டிருந்தது. வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் வண்டியைவிட்டு இறங்கி நின்ரு கொண்டார்கள்.

‘நேரா திண்டிவனம். நேரா திண்டிவனம் ஏறு ஏறு’

நடத்துனர் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஓட்டுனர் வாயே திறக்காமல் அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

‘டிரைவருங்க ஊரு பேரு  ஒரக்க சொல்லி ஜனங்கள  வண்டிக்கு கூப்பிடறது இல்லையே அது ஏன்’

‘எந்த டிரைவருக்கும்  அவுங்க  குரலு சரியா வராதுன்னு நெனக்கிறேன்’

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையே கவனித்த  ஓட்டுனர் கொஞ்சமாய் சிரித்துக்கொண்டார்.

 வண்டி பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தை விட்டுப்புறப்பட்டது. கோரிமேடு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள் சிலர் ஏறிக்கொண்டார்கள்.

‘அடுத்தது  பஞ்சவடிலதான் நிக்கும்’ எங்களைப்பார்த்து நடத்துனர் சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் இறங்குவதற்குத் தயாராக இருந்தோம். பஞ்சவடி பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து நின்றது. நான் முதலில் இறங்கினேன். பேருந்து தார்ச்சாலையில் சுகிராக  நின்றது. படிக்கட்டைவிட்டுக் காலை எடுத்து வைத்தால் தரையோ மிகவும் பள்ளத்தில்  இருந்தது.

‘பாத்து வா பள்ளமா இருக்குது  தரை’

அதற்குள்ளாக அவள் கால் வைத்து அது இழுத்துக்கொண்டு போய்  மண்தரையில் உட்கார்ந்தே விட்டாள். நடத்துனர் நாங்கள் எப்படி இறங்கினோம் என்பதெல்லாம் எங்கே கவனித்தார். ‘ ரைட் ரைட் ரைட்’ என்றார். வண்டி வேகமாய் நகர்ந்து போனது. சாலையில் மின்சார விளக்கும் எரியவில்லை. கும்மி இருட்டாக இருந்தது.

‘என் மனைவி காலை நீட்டிய படியே  உட்கார்ந்திருந்தாள். ‘ கால மடக்கவோ எழுந்திரிக்கவோ முடியல்ல. வலி உயிர் போகுது’ என்றாள். மனைவிக்குக் காலில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது.  ஒரே இருட்டாக இருந்தது. இரண்டு தோள் பட்டையிலும் கைகளைக்கொடுத்து மெது மெதுவாக அவளைத் தூக்கி நிறுத்தினேன். ‘அய்யோ அம்மா’ என்று குரல் கொடுத்தாள். தோளில் கைபோட்டு பைய நடந்து நடந்து கோவில் கோபுர வாசலுக்கு வர ஆரம்பித்தேன். என்னாலும் முடியவில்லை. கோவில் வாசலுக்கு வந்து விட்டு ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ் அவளை நிறுத்தினேன்.

‘’ஆ படிக்கட்டு இருக்கு. அதுல உக்கார வையுங்க’ என்றார் சேவார்த்தி ஒருவர்.

என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன். கண்கள் நிறைத்துக்கொண்டு நீர். இடது கால் பாதம் வீங்கி இருந்தது. ‘அய்யோ அம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவள் என்னைப்பிடித்துக்கொண்டு நடந்தாள். கோவில் படிக்கட்டுக்குச்சரியாக  வந்து விட்டோம் ‘அம்மா ‘ என்று அலறி சத்தம் போட்டாள். கோவிலுக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் என் மனைவி அருகே வந்து அவள்  கா;லைத்தொட்டுப்பார்த்தார். தன் கை வசமிருந்த பசை மருந்து டியூப் ஒன்றைக்கொடுத்தார்.

‘சார் டாக்டர்ங்களா’

‘ஆமாம். நாளைக்கி ஒரு எக்ஸ்ரே எடுங்க.  ஒரு ஆர்த்தோவ கட்டாயம் பாருங்க’

‘சரிங்க டாக்டர்’

‘எங்க போகணும்’

‘கடலூர்’

‘ சட்டுன்னு ஒரு டாக்சிய புடிங்க அம்மாவ ஒக்கார வையுங்க. நேரா வீட்டுக்குப்போங்க. கால் வீக்கம் வலிக்கு ஒரு டோஸ் மாத்திர தர்ரேன்’

மாத்திரயை வாங்கிக்கொண்டேன்.

‘ரொம்ப நன்றி டாக்டர்’ ஃபீஸ் ஏதும்’

அவர் சிரித்துக்கொண்டார்.  ‘ ஆக வேண்டிய வேலைய பாருங்க’ என்றார்.

என் மனைவி இரண்டு கைகளையும் கூப்பி டாக்டரை வணங்கிக்கொண்டாள். நான் என் மனைவியை அந்தக் கோவில் படிக்கட்டிலேயே உட்காரவைத்துவிட்டுக் கோவில் உள்ளே சென்றேன்.  நெடிய துளசி மாலை அணிந்த  ஆஞ்சனேயரை வணங்கி நின்றேன். ‘ ‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று  அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம்  வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து  தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை.  இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்

‘இது சரியில்லை’

‘கீழே என் மனைவி  உக்காந்து இருக்கா. நடக்க முடியல்ல. அவளுக்கும் சேத்துதான் வாங்குறேன்’

பிரசாதம் வழங்கியின்  கேள்விக்கு என்தரப்பு  நியாயம் சொன்னேன். நானும் அவளும் புளியோதரைப்பிரசாதம் சாப்பிட்டு முடித்தோம் . டாக்டர் கொடுத்துவிட்டுப்போனஅந்த வலி  மாத்திரையைப் போட்டுக்கொண்டாள். ‘ஆ ஊ என்று அரற்றினாள்.

‘’வலிக்குதா’

‘ஒரு டாக்சிய மட்டும்  பாருங்க’  அவள் முகம்  எட்டுக் கோணலாகியது.

‘பத்து ரூவா ஆட்டோக்காரனுக்குத் தர யோசனை பண்ணினம்’

 ‘ இதுதான் அது பேசுற  நேரமா’

‘எல்லாம்தான்’

‘வேணாம் ஆகவேண்டிய வேலயப்பாருங்க’

நாங்கள் இருவரும் பட்ட கஷ்டத்தைப்பார்த்து யாரோ ஒருவர் கோவில் அதிகாரியிடம் விஷயத்தைச்சொல்லக் கோவில் அலுவலகத்திலிருந்து ஒரு டாக்சிக்காரனுக்குப் போன் போட்டிருக்கிறார்கள். அவனும் உடன்  அங்கே வந்து சேர்ந்தான்.

‘ஏழு நூறு ஆகும்’

‘’ஐநூறு தர்ரேன்’

‘வேற ஆள பாருங்க’ நா  பொறப்படறன்’

‘அறுநூறு போட்டுகுங்க. வாங்க’ என் மனைவிகுறுக்குச் சால் ஓட்டினாள்.

டாக்சிக்காரன் அவளை ஏற இறங்க பார்த்தான். எங்களை ஏற்றிக்கொண்டான். நானும் அந்த டிரைவரும்தான் அவளை மெது மெதுவாக வண்டியில் ஏற்றிப்  நீட்டாகப்படுக்க வைத்தோம்’.

‘இட்லி மாதிரி வீங்கி கெடக்கு காலு’

‘பஸ்லேந்து ஏறங்ககுள்ள தடுமாறிட்டாங்க. பள்ளமா இருந்துது. ஸ்டாப்பிங்குல  லைட்டு இல்ல  இருட்டு வேற’

‘நேரம்னு  ஒண்ணு வேல செய்யுதே.  டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

வண்டி கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சாலை நன்றாக இருந்தது. டிரைவரும் பதனமாக வண்டியை ஓட்டினார்.

‘வீட்டுச்சாவி ஒங்கிட்டதான இருக்கு’

‘என்கிட்ட இல்லயே’

‘பெறவு’

‘வீட பூட்டுனது பையன், சாவிய என்கிட்ட தரல. உங்க கிட்ட குடுத்து இருப்பான்ல நா இருக்குறன்’

‘’என் கிட்ட குடுக்கல.  மறதியா சாவிய  அவனே  எடுத்து கிட்டு போயிட்டான்.’

‘இப்ப என்ன செய்ய’

என் மனைவி  ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

‘வலில அழுவறயா, , வூட்டு  சாவியக்காணும்னு அழுவுறயா’  நான் கேட்டேன்.

டிரைவர் நாங்கள் பேசிக்கொண்டதைக் கவனித்துக்கொண்டே வந்தான்.

‘டிரைவரு கிட்ட ஒரு யோசனை கேளுங்க இதுக்கு என்னா செய்யுலாம்னு’

‘இதெல்லாம் அவரு கிட்டா  யோசனை கேப்பாங்களா’

‘நானும்  கேட்டுகிட்டுதான் வர்ரேன். நீங்க பேசிக்கிட்டு வர்ரத. வூட்டுக்கு  என்ன பூட்டு பூட்டிருக்கீஙக திண்டுக்கல்லா இல்ல தொட்டி பூட்டு ஏதும் இருக்கா’

.திண்டுக்கல்லு பூட்டுதான்’

‘என்கிட்ட நாலு  பழஞ்சாவிவ கெடக்கு. போட்டு கீட்டு  பாப்பம். கத ஒன்னும்  ஆவுலன்னா. புது  ஆக்சா பிளேடு  ஒன்னு  இருக்கு. சுத்தி இருக்கு வச்சிருக்கேன்  பாத்துகுவம். கவல படாதீங்க’

‘ஆஞ்சனேயா’ என்றாள் என் மனைவி.

‘காலு ரொம்ப  வலிக்குதா’ என்றேன்.

என்னை ஒரு முறை முறைத்தாள்.  வண்டி தென்பெண்னையாற்றுக் குறுகல் பாலத்தைத்தாண்டியது. மஞ்சகுப்பம் வந்தது. மணி பதினொன்று இருக்கலாம்.

ராக்காலமா இருக்கு ‘பூட்ட ஒடக்கையிலே சத்தம் வருமே. அங்காண்ட இங்காண்ட எதாவது சொல்வாங்களா’

டிரைவர் என்னிடம்  மெதுவாகச்சொன்னான். நான் பதில்  ஏதும்  சொல்லவில்லை.

‘அது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்’ என்றாள் மனைவி அலட்சியமாக.

‘கதவ ஒடச்சி எடுத்தாலும் அடுத்த வூட்டுக்காரன் என்னான்னு எழுந்திரிச்சி வெளிய வரமாட்டான். நா பாத்து இருக்கேன்ல பலது’  டிரைவர் சொல்லிக்கொண்டு சிரித்தான். கோர்டர்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்தது வண்டி.  என் வீடு கீழ் தளத்திலேயே இருந்தது.

‘வூடு கீழ் தளமா’

‘ஆமாம்’

‘அதுவும் சவுகரியம்தான்.   அபார்ட்மெண்டில லிஃப்ட் இருக்கா’

‘படிக்கட்டுதான். லிஃப்ட் இல்லே’

என் வீடு பின் பக்கம் இருக்கிறது. வீட்டு வாயில் வரை கார் போகாது. நான்தான் அவளைக் கையைப்பிடித்து  மெதுவாக அழைத்துக்கொண்டு வந்தேன்.

‘சார் வீட்டு சாவி இல்லேன்னிங்க’

‘ஆமாம். இவளை வீட்டு வாயில் படிக்கட்டில் ஒக்காரவைச்சிட்டு பிறகு பூட்டு சாவி கதையைப்பாக்கலாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

‘அய்யோ அம்மா’  விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள் மனைவி. கால் வீக்கம் அப்படியேதான் விண்ணென்று  இருந்தது.

’வீட்டு வாயிலில் மின் விளக்கு எரிகிறது இது எப்படி ?  பூட்டிய  பூட்டையும் காணோம். வீடு உள்ளாகச்சாத்தி இருந்தது.  வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவைத்திறந்தது யார்  என்கிறீர்கள் என் பையன்தான்.

‘பெண்ணாடம் போகலியா நீ’

‘நா எங்க போறது பெண்ணாடம். கடலூர் ஓடி வரைக்கும் போனேன். பெண்ணாடம் டிக்கட் வாங்கினேன். என் டிக்கட்டைப் பின் பாக்கிட்டில் நுழைத்தேன். வீட்டு சாவி தென்பட்டது. அவ்வளவுதான் வண்டியை விட்டு கீழிறங்கினேன். உங்களை எங்கே பார்ப்பது என்கிற கவலை. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியபடியே கிடந்தது. நீங்கள் இரண்டு பேரும் எங்கே போனீங்க?’

‘தம்பி என் காலப்பாருடா. அய்யோ அம்மா முடியல்லையே நான் என்ன பண்ணுவேன்’

‘என்னம்மா  ஆச்சு உன்  காலு வீங்கி கெடக்கு’

‘’பஞ்சவடி ஆஞ்சனேயரைப்பாத்து ஒரு கும்புடு போட்டுட்டு வருவோம்னு ரெண்டுபேரும் கெளம்பினம். கோவில் வாசல்லே பஸ் நின்னுது.  இறங்குனம் அப்படியே .எனக்குக் காலு கோணிகிட்டுப் போயிட்டுது.  கீழ காலு வைக்கும் போது   அந்த  எடம் ஒரே  இருட்டு பள்ளம் நா தடுமாறிப் போயிட்டன்’

நான் டாக்சி டிரைவரை கணக்கு முடித்து அனுப்பி வைத்தேன். பையன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றான்.

‘என் தம்பி பொண்ணுக வரும்னு  ஆசை ஆசையா இருந்தேன். அது நடக்கல பாரு’

‘காலு வீங்கிக்கெடக்கு அத மொதல்ல பாக்குணும். அவுங்கள சீராட்டுறது கெடக்கட்டும்’

‘ஒங்க மனசுப் போலவே  இப்ப  ஆயிடிச்சில்ல. அப்பறம் என்ன’ என்றாள் அவள். பையன் அருகிருக்க  அவள் அப்படித்தான் பேசுவாள்

------------------------------------------------------------

 

 

.