Friday, December 20, 2019

vellam 13


'சென்னையில் வெள்ளம் ' 13
 ’
குரோம்பேட்டை வாசம் ஒரு மாதம் நீடிக்கும் என கணக்குப்போட்டிருந்தேன். அது அந்தப்படிக்கு ஆகாமல் பத்து நாளில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கவில்லை. நேதாஜி நகருக்கு மின்சாரம் வந்த பிறகு குரோம்பேட்டையில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம்.
 நாமும் முதல் தளத்தில்தான் குடியிருக்கிறோம். ஒன்றும் பிரச்சனையில்லை. வீட்டில் கரண்ட் வந்து மோட்டாரும் தண்ணீர் இறைக்க ஆரம்பித்து விட்டது.பிறகு என்ன? புதிய ஒரு தெம்பு வந்ததுபோல் உணர்ந்தேன்.
‘பொங்கல் வர இருக்கிறது’ என் மனைவியிடம் பேச்சுக்கொடுத்தேன்.
‘ நம் சொந்த வீட்டில் எல்லாமும் சரியாகிவிட்டால் இங்கு நமக்கு வேலை என்ன’ அவள் பதில் சொன்னாள்.
சில தினங்களாக டிவிஎஸ் எக்செலில்தான் குரோம்பேட்டைக்கும் பழைய பெருங்களத்தூருக்கும் போய் போய் வந்தேன். வீட்டில் இருந்த பெரிய வண்டிக்கு என் பெரிய பையன் பொறுப்பு பெறும் மழையில் ஜலக்ரீடை செய்த .அதனை  பழைய பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் அம்பேத்கார் சிலை எதிர் இருக்கும் டூ வீலர் மெக்கானிக்கிடம் கொண்டு காட்டினான். ஒருவழியாக அதனைச் சரிசெய்து பழையபெருங்களத்தூரிலிருந்து குரோம்பேட்டைக்கும்கொண்டுவந்தான். ஓ எம் ஆர் சாலையிலிருக்கும் தன் மென்பொருள் அலுவலகம் அந்த வண்டியிலேயே போய்வந்தான்.               இந்த இரண்டு வண்டிகளையும் நிறுத்தி வைக்கத்தான் குரோம்பேட்டையில் சரியாக இடம் கிடைக்கவில்லை. கிடைத்த இடத்தில் இரண்டு வண்டிகளையும் சொறுகித்தான் வைத்து விடுவோம். சொறுகி என்று அப்படிச்சொன்னால் அது சரியே.
வெள்ளம்  வந்த பாதிப்பில்என் சிறிய மகனின் பாட புத்தகங்கள் எதுவும் தேறவில்லை.சாஸ்த்ரா தஞ்சாவூரில் மெக்கானிக் எடுத்து படித்தவன்.பிறகு அங்கிருந்தே பெங்களூர் வேலைக்குச்சென்றுவிட்டான்.கோர் சப்ஜெக்ட்டில்தான் வேலைக்குப்போவேன்.என்று வைராக்கியமாக இருந்தான்.அப்படியே வேலைக்கும் போனான்.அவன் போற்றிப்பாதுகாத்த புத்தகங்கள் ரெகார்டுகள் கொழ கொழ என்று உயிர் தொலைத்து நின்றன.
                       நேதாஜி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சென்னையில் பெருமழை கொட்டிய பகுதிகளில்  சேதமுற்ற அந்த சாமான்களை வாங்குவதற்கு என்று மினி லாரி வைத்துக்கொண்டு வியாபாரிகள் சுற்றி சுற்றி வந்தாகள். அவர்கள்  கிடைத்த எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டார்கள். அவர்கள் கொடுத்த ஏதோ காசை  வாய் திறக்காமல் வாங்கிக்கொண்டவர்கள் நாங்கள். நம்மை விட்டு விட்டு  இவைகள்  வேறு இடம் போனால் போதும் என்கிற நிலைக்கு அல்லவா இப்போது வந்து நின்றுவிட்டோம்.
ஒவ்வொருவர் வீட்டு வாயிலிலும் நனைந்து நாறிய துணிமணிகள் மலை மலையாகக்கிடந்தன. 
வெள்ள நீரில் நனைந்த மளிகை சாமான்கள் பெருவெள்ளம் வந்த அன்று சமையல் அறையில்  மிச்சம் மீதி இருந்தவை வீதியில் அருவறுப்பாய்க்கிடந்தன. சமைத்த ஒன்றினையும்  கடையில் வாங்கிய ஒன்றினையும் நாம் தின்று முடிப்போம் என்பது நிச்சயமில்லைதானே..
கீழ் வீட்டில் வைத்திருந்த நான்கு போட்டோ ஆல்பங்கள் நனைந்து  பழைய பழைய நினைவுகளைத்தாங்கிய நிழற்படங்களை அழித்துவிட்டிருந்தன. நனைந்துவிட்ட அவைகளைக்காப்பாற்றவே முடியவில்லை. எத்தனைக்கு  நல்லதுக்கு முயல்கிறோமோ அத்தனைக்கு அவை நாசமாகி நம்மை திகைக்க வைத்தன. என் திருமண ஆல்பமும் அதனில் ஒன்று நாற்பதாண்டுகளுக்கு முன்னர் யாரெல்லாம்  என்னுடன் மகிழ்ச்சியாக உலாவந்து இப்போது இல்லாமல் போனார்களோ அவர்களின் நிழற் படங்கள் இருந்தன. அவை இன்றுஅழிந்துபோனது ரொம்பவும் வருத்தமாக இருந்தது.
எது எப்போது அழியும் என்று யார் கண்டார்கள். ஆல்பத்துக்குள்ளே வெள்ள நீர் ஒளிந்துகொண்டு போட்டோக்களை உருக்குலைத்துக்கொண்டிருந்தது.போட்டோவை வெளியில் எடுக்கவே முடியவில்லை.எடுத்தால்  போட்டோ சிறிது சிறிதாகக்  கிழிந்து கிழிந்து உருட்டிக்கொண்டு வந்தது. அதுகள்  ஒன்றும் இனி தேறாது. என்மனம்தான் கிடந்து அடித்துக்கொண்டது.
ஒவ்வொருவர் வீட்டு வாயிலிலும் மெத்தையொன்று வீங்கிக்கொண்டு கிடந்தது.சில தலையணைகள் உருக்குலைந்து கிடந்தன. பார்ப்பதற்கு அவை கோரமாக க்காட்சியளித்தன.இவைகள் கண்ணில் படாமல் இருந்தால் தேவலை என்று மனம் சொன்னது.விழைவதெல்லாம் நடந்துவிடுமா என்ன?
இப்பகுதிக்குள்ளே நுழையும்போதே ஒரு வீச்சம்.ஒரு கமறல். ஆனால் ஒரு விஷயம் எந்த புது வியாதியும் இந்த வெள்ளக்கொடுமையினால் சென்னைக்கு வந்துவிடவில்லை. அரசாங்கத்தார் தடுப்பூசி போட்டார்கள்.  பெரும் பகுதிகளில் போடாமலும் விட்டார்கள். ஆனால் இயற்கை எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டது. அதற்கும் ஒரு கணக்கு இருக்குமே.
பரணியிடம் தொலைபேசியில் பேசினேன்.
‘’ நேதாஜி நகருக்கே திரும்பி விடலாம் என்று இருக்கிறேன்‘’
‘இனி ஒன்றும் மழையில்லை. நீங்கள் தாராளமாக புறப்படுங்கள். வண்டி அனுப்பி வைக்கட்டுமா’
‘அனுப்பிவையுங்கள்’ தைர்யமாக ப்பதில் சொன்னேன்.
லேசாக சிறிய ஒரு அச்சம் இல்லாமல் இல்லை.அது பாட்டுக்கு அது. நானும் என் மனையாளும் க்ரோம்பேட்டை வீட்டில் இருக்கும் சாமான்களை மூட்டைக்கட்டிக்கொண்டு புறப்பட்டோம். பரணி நல்ல மனிதர். அப்படி ஒரு மனிதரை நண்பராகப்பெற்றது ஒரு கொடுப்பினை. அவர் அனுப்பிய சின்னயானை என்கிற வண்டி  குமரன் குன்றம் வந்தது. வீட்டு சாமான்களை வாரிப்போட்டுக்கொண்டு நாங்களும் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். மனைவிதான் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு ஏறினாள்.இறங்குவதற்கும் அப்படித்தான். எப்படியோ நேதாஜி நகருக்கு வந்தாயிற்று. எல்லோரும் அப்படி எங்கு எங்கு போய் தங்கி உயிர் பிழைத்துக்கொண்டோர்களோ எல்லோரும் ஒவ்வொருவராக தம் இருப்பிடம் வந்துகொண்டிருந்தனர்.
‘வெயில் காலம் வந்தால் வீட்டை விற்றுவிட்டு வேறு எங்காவது ஒரு வீட்டை வாங்கிவிடலாமா’
என் மனைவி ஆரம்பித்தாள்.
‘அப்படி கணக்கு போட்டால் சென்னையையே காலிசெய்வது என்கிற முடிவில்தான் பாதிக்கப்பட்ட நாம் போய்  நிற்போம்’
  ’நாம்தானே அவஸ்தை ப்பட்டவர்கள்’
‘ நான் இல்லையென்று சொல்லவில்லை.சென்னையில் பழையழைய வசிப்பிடங்கள் பாதிப்பில்லாமல் நன்றாகவே இருந்தன. புதியதாக முளைத்தவை  வெள்ளத்தண்ணீரில் மூழ்கின. இப்போதைக்கு என்னவென்று பார்ப்போம்.பிறகு பிறகு பார்க்கலாம் வேறு இருப்பிடம்  அந்த விஷயங்கள் எல்லாம்’
‘போதாக்குறைக்கு பையனுக்கு ஒரு விடு இந்த மடுவிலேயே வாங்கினீர்களே.என்ன சாமர்த்தியம் உங்களுக்கு’
‘வீட்டின் அருகிலே ஒரு வீடு.  அகவிலை கொடுத்துத்தான். அந்த வங்கிக்காரன் கொடுத்தானே ஒரு கடன் என்று வாங்கினோம்’
‘ நமக்குத்தெரிய வேண்டும். இல்லாவிட்டால் தெரிந்தவர்களையாவது யோசனை கேட்கவேண்டும்’’
‘இரண்டுமில்லை. தவறுதான். நாம்தான் சாமர்த்தியம் நமக்கு நிகர் யார் என்று எண்ணம் அரும்பும் போதே எதோ தப்பு நடந்துபோய்விட்டது என்பதுறுதியாகிவிடுகிறது..
.இனி என்ன செய்வாய். இந்த பெருவெள்ளம் சென்ற ஆண்டே வந்திருந்தால் விஷயங்கள் அத்துப்படி ஆகியிருக்கலாம்’
‘வெள்ளம்வந்தால்தான் உங்ககளுக்கு சில விஷயங்கள் விளங்கும் என்றால் எங்கே போய்முட்டிக்கொள்வது’
ஆத்திரமாகப்பேசினாள். எவ்வளவோ பேசுவாள்  என் தங்கைக்கு ஒரு வேலயே இல்லாத வெட்டி மாப்பிள்ளையைப்பார்த்துக் கட்டிவைத்து அவள் பாவத்தைக்கொட்டிக்கொண்டதும் அவள் தன் வாழ்க்கையை பாதியிலேயேய முடித்துக்கொண்டு செத்துப்போனதும் என் நினைவுக்கு வந்து வந்து எப்போதும் வருத்தின.என்னை மன்னிக்கத்தான் மார்க்கமுண்டா என்ன.
என் மனைவி பேசும் இந்தப்பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது. என் பையனுக்கும் இங்கே ஒரு வீடு வாங்கி   எனக்கு ஏதோ சாமர்த்தியம் இருப்பதாய்  கற்பனையில் இருந்தேன் அந்த சாயம்தான் இப்போது வெளுத்துவிட்டது.
 வெள்ளம் வந்து எவ்வளவோ பட்டுவிட்டோமே. இனி மழை என்று ஒன்று வந்தால் அடி மனத்தில் ஒரு அச்சம் வந்து குடிகொண்டுவிடுமே. யோசித்துக்கொண்டு’ அமர்ந்துவிட்டேன்.
’‘டம் டம் டம் டம்’ தெருவில் பறை தட்டி செய்தி ஒன்று சொல்லிக்கொண்டு ஒருவன் தலைப்பாகையோடு சென்று கொண்டிருந்தான்.
‘’இந்த நேதாஜி நகரு விரிவுப்பகுதி மனைங்க மொத்தமா எல்லாம்  ஆத்துப் பொரம்போக்கு மனைங்க .அது பொதுப்பணித்துறைக்கு மட்டுமே சொந்தம் இந்த அடையாத்துல வெள்ளம் வந்து இந்த ஏரியாவை பாழாக்குவதனாலே அங்க குடியிருப்பவங்க உடனடியா  குடியிருப்பை காலி செய்யணும்.அரசாங்கம் மாத்து குடியிருப்பு எலவசமா கொடுப்பாங்க.அதுக்குன்னு  ஒரு அதிகாரி ஆபீசு  தாம்பரம் தாலுக்கா ஆபிசு வளாகத்துல  வேல செய்யுது.. சம்பந்தப்பட்ட சனம் ரேஷன் கார்டோட உடன் அவர போய் பார்க்கணும்  இந்த இடத்தை காலி பண்றதுக்கு  இண்ணையிலேந்து பதினைந்து நாளுதான். டைம் டம் டம் டம்’ அவன் நடந்துகொண்டே போனான்.
‘ நாம எங்க இருக்கம்’
‘’ நாம விரிவுப்பகுதியில் இல்லே. விரிவுப்பகுதிதான் மொத்தமா புறம்போக்குன்னு. இந்த ஆர்டர் வந்து இருக்கு. இந்தவெள்ளம் வந்த பின்னாடி இதெல்லாம் அரசாங்கத்தோட நடவடிக்கை’
‘வீடெல்லாம் கட்டி குடியிருக்காங்க. இப்ப எங்க போவறது’
‘அரசாங்கம் வீடு குடுக்குது. அங்க போகவேண்டியதுதான். அதுவும் இலவசமா கொடுக்குது. வேற என்ன செய்வே’
‘கோர்ட்டுக்கு போனா என்ன செய்வாங்க’
‘இது ஹை கோர்ட்டார் உத்திரவுப்படிதான் நடக்குது.அதனால எந்த கோர்ட்டுக்குப்போனாலும் ஒண்ணும் ஆகாது’
நாங்கள் குடியிருக்கும் நேதாஜி நகர் அருகே இருந்த விரிவுப்பகுதியில் ஒரு நூறு மனைகள் இருக்கலாம். அதனில் ஒரு ஐம்பது  அறுபது வீடுகள் இருந்தன. ஒரு மெத்தை. இரண்டு மெத்தை கொண்ட வீடுகள் கூட கட்டப்பட்டு இருந்தன. அங்கே  குடியிருந்தவர்கள் எல்லோரும் கூடி கூடி ப்பேசினார்கள். விவாதித்தார்கள். சிலர் புலம்பினார்கள்.சிலர் அழவும் ஆரம்பித்தார்கள்.
அரசாங்க அதிகாரிகள் அடிக்கடி வந்து நேதாஜி நகர் விரிவு மக்களோடு பேசிச்சென்றார்கள்.போலிசு அதிகாரிகள் வந்து வந்து குழம்பிப்போனவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள். போலீசுக்காரர்கள் விளக்கம்  நமக்குத்தெரியாததா என்ன. 
ரேஷன் அட்டைகள் புது விலாசத்துக்கு மாற்றித்தருவதாக ச்சொன்னார்கள். குழந்தைகளுக்கு வேறு  பள்ளியில் இடம் பெற்றுத்  தருவதாகச்சொன்னார்கள். சாமான்களை கொண்டுபோய் சேர்க்கும் செலவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருவதாகச்சொன்னார்கள்
. எது சொன்னால் என்ன புறம்போக்கு நிலம் அதனையும் ஒரு விலை கொடுத்து வாங்கி வீடு எனக்கட்டி மின்சாரம் தண்ணீர் வசதி எல்லாம் பெற்று வீட்டுவரி கட்டி வோடர் கார்டும் ரேஷன் கார்டும் ஆதார் கார்டும்  இதே விலாசத்தில் வாங்கி தார்ச்சாலை போட்டு சாக்கடை க்கால்வாய் அமைத்து தெரு விளக்கு பளிச்சென்று எரிந்துகொண்டிருக்க ‘உனக்கு இந்த வீடு இல்லை நான்  வீடென எங்கோ ஒரு மூலையில் ஒன்று தருவேன் நீ அங்கு போயே ஆகவேண்டும்’ என்று கட்டளை தந்தால் அதனை எப்படி ஏற்பது என்கிற விஷயமாகப் பிரச்சனை விசுவ ரூபமெடுத்தது
                              தினம் தினம் தெருவில் இதே பேச்சாக இருந்தது. ஏதோ இங்கு வசிப்பவர் ஒருவர் பெரிய மனதுக்காரர் புகார் எழுதிப்போட்டு மட்டுமே இந்த நிலமை வந்துவிட்டதாகப்புரளி பேசினார்கள். ஆளுங்கட்சிக்காரர்கள் எதிர்க்கட்சியையும் எதிர்க்கட்சிக்காரர்கள் ஆளுங்கட்சியையிம் பிரச்சனைக்கு காரணம் என்றார்கள்.
எல்லோருக்கும்  அரசு நோட்டீசு வந்தது. சிலர் வாங்கினார்கள் சிலர் வாங்க மறுத்தார்கள்.  அரசு சிப்பந்திகள் சிலர் வீட்டு வாயிலின் கதவுகளில் நோட்டிசினை ஒட்டிவிட்டுச்சென்றார்கள். அதனை ச்சிலர் கிழித்தும் எறிந்து கத்திக்கொண்டே இருந்தார்கள்.
நேதாஜி நகர் விரிவுப்பகுதிக்கு இனி மின்சாரம் கிடையாது எனப்பேசிக்கொண்டார்கள். அப்படியே அந்த அதிகாரிகள் ஒரு வாரத்தில் எல்லா   மின் இணைப்பையும் இல்லை என்று ஆக்கினார்கள். பேரூராட்சி குடி நீர் சப்ளையை நிறுத்திக்கொண்டது.
ஒரு நாள் இரண்டு ஜீப்பில் வந்து அதிகாரிகள். ரேஷன் அட்டையை பார்த்துப்பார்த்து   புது வீடு ஒன்றின் சாவியைக்கொடுத்துப்போனார்கள். சிலர் அதனை விருப்பத்தோடு வாங்கினார்கள்.சிலர் கூச்சலிட்டு அதிகாரிகளை வாயுக்கு வந்தபடிதிட்டித்தீர்த்தார்கள்.
பெண்கள் வீதிக்கு வந்து இரண்டு கைகளாலும் மண்ணை வாரிவிட்டார்கள்
'கொழா சட்ட போட்டுகுனு வந்தவனுங்க எங்க கூடிய கெடுத்தவனுங்க  மொத்தமா  நாசமாப்போவ'  
’ எங்கள இங்கிருந்து கெளப்பி விட்டவன்  மண்ணாய்ப்போவான்’;
 என்று சாபம்தந்தார்கள்.
வீடுகளைக்காலிசெய்துகொண்டு செல்பவர்கள்’ 'உங்களுக்கும் இந்த கதி வரும்' என்று எங்களைப்பார்த்துச் சொல்லிச்சென்றார்கள். அதைக்கேட்க அச்சமாகக்கூட இருந்தது.
நேதாஜி நகரின் விரிவுப்பகுதியில் எப்படியோ  இந்த போர்க்கோலம் அரங்கேறியது 
                    ஒரு நாள் அதிகாலை நேரம். ஆயிரம் போலிசாருக்கு வந்து இந்தப்பகுதியைச்சுற்றி நின்றார்கள். ஆம்புலன்சு வண்டிகள் நான்கு தயாராக நின்றன. ஜீப்புகளும் அதிகாரிகளின் கார்களும் வந்து  நின்றன. ஜே சி பிக்கள் நான்கும் கிரேன்கள் நான்கும் நேதாஜி நகர் விரிவுப்பகுக்குள் நுழைந்தன. மக்கள் குய்யோ முறையோ என அலறி அடித்துக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்தார்கள்.
               ‘ உங்களுக்கு இன்னும் ஒரு மணி  நேரம் டயம் தர்ரம் . வீட்டுச் சாமானுங்க  எதாவது எடுத்துகிட்டு. ஒதுங்கி ப்போயிடுங்க’ என்று இறுதி எச்சரிக்கை தந்தார்கள்.
எமன் போன்று உருமிக்கொண்டு வரும் புல்டோசருக்கு எதிரே  வரிசையாக படுத்து மறித்தவர்கள் குண்டு கட்டாகத் தூக்கி போலிசு வானில் ஏற்றப்பட்டார்கள். பெண்[பொலிசுகாரர்கள் ஆண்போலிசுகாரர்கள் என இணைந்து போராட்டட்தை த்வம்சம் செய்தார்கள். எங்கும் புகை மண்டலமாக இருந்தது. வீடுகள் இடிப்பில் எழுந்த புழுதி அப்படிப் புகையென ப்பரவியது. நாரசமான இடிப்பொலி கேட்டுக்கொண்டேஇருந்தது.
பத்திரிகைகாரர்கள் டி வி காரர்கள் சுற்றி சுற்றி வந்து செய்தி சேகரித்தார்கள்/ அரசியல் வாதிகள் ஒருவரும் கண்ணில் படவே இல்லை.
                ஒரு பக்கம் ஜீப்பில் சில அதிகாரிகள் அமர்ந்து ரேஷன் கார்டை சரிபார்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐயாயிரம் ரூபாய் என சாமான்களை எடுத்துச்செல்வதற்கு என வழங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் புதிய அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டுச் சாவியை ஒவ்வொருவருக்கும் கொடுத்து சான்றொப்பம் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
அன்றுமாலையே நேதாஜி நகர் விரிவுப்பகுதி இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போனது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று எழுதப்பட்ட கீதையின் வாசகம் தாங்கிய தகர த்துண்டு சுவர் இடிப்பு இடிபாடுகளின் மய்யமாக க்கிடந்தது.
                      ‘அந்த புறம்போக்குப்பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டாமல் தப்பிவிட்டதற்கு அந்த இறைவனுக்கு நன்றி சொன்னேன். இறைவன் இருக்கிறானா இல்லையா அந்தக்கேள்விக்கெல்லாம் விடை எனக்குத்தெரியாது. ஒன்று மட்டும் சொல்வேன்.இறைவன் உண்டென்று நம்பிவிட்டால் கொஞ்சம் இலகுவான வாழ்க்கை உறுதிப்படுகிறது. நாம் செய்யும் காரியங்கள்  ஒவ்வொன்றையும் யாரோ ஒருவன் எங்கிருந்தோ  பார்த்துக்கொண்டிருப்பதாக நினைக்க  நினைக்க நம்மில்  மனிதத்தன்மை  கூடிப்போவதாக நான் உணர்வதுண்டு.
மற்றபடி இறைவன் என்கிற சமாச்சாரம் அவரவர் பாடு.அது பற்றி ஏதும்தெரியாத அடுத்தவர்கள் வியாக்கினம் செய்வது வேண்டாதவேலை. லெளகீக வாழ்க்கையோடு ஆன்மீக சமாச்சாரத்தைக் குழப்பிக்கொள்வதால் இரண்டுமே மதிப்பிழந்துதான் போகும். இப்படிச் சில நேரங்களில் நான் யோசிப்பதுண்டு.
               சென்னையில் அடையாற்றங்கரை கூவம் நதிக்கரை, பக்கிங்ஹாம் கால்வாயென அனைத்தின்கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படச்  செய்தி ஊடகங்கள் சூடு பறக்கும் விவாதத்தில் இறங்கின.ஏரிகளின்  அதீத ஆக்கிரமிப்புக்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  மாநகரில் காணாமல்போன ஏரிகள் பற்றி எத்தனையோ செய்திகள் அறியக்கிடைத்தன. மாநகரம் நோக்கியே மக்கள்  பெரும்கூட்டம் ஏன் வருகிறது என்பது பேசுபொருள் ஆனது. ஒவ்வொரு நீர் ஆதாரத்தின் நீள அகல ஆழங்கள் பட்டியலிடப்பட்டன. ஆற்றங்கரைகள் உயரம் குறைந்து அகலம் குறைந்து இற்றுப்போனது பற்றிய விபரங்கள் மக்களுக்கு தெரிய வந்தன. நீர் நிலைகளில்  மய்யமாய் முளைத்துவிட்டிருக்கும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு பற்றி எல்லோரும் வித்தாரமாய்ப்பேசினார்கள்.  சில அரசு அலுவலகங்களும் பெரிய பெரிய தனியார்க்கல்லூரிகளும் பெரிய ஏரிகளைத்தூர்த்து வானாளாவ கான்க்ரீட் கட்டிடங்களாக நிற்பது தெரியவந்தது.
 வரும் நாட்களில் இந்த மீறல்கள் மக்களால் மறக்கப்பட்டுவிடும். எத்தனையோ மறந்து போனவர்கள்தாமே நாம். வேறு வேறு செய்திகள் ஜனிக்கும் பிரதானமாக பேசப்படும். அவை  வருநாளில்  மறக்கப்படும்..
‘’தெருவில் நாய்களின் கூட்டம் தாங்கமுடியல’
என் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘ கூடவே வாழ்ந்து வந்த ஆடு மாடுகள்  வீடு இழந்து வேறிடம் செல்லும் எஜமானர்களோடு ச்சென்றுவிட்டன.ஆனால் வீட்டில் இருந்த நாயும் பூனையும் என்ன செய்யும். விலையுயர்ந்த ஜாதி நாய்கள் மட்டும் எஜமானர்களோடு அமைதியாக ப்பயணம் சென்றுவிட்டன.’ நான் பதில் சொன்னேன்.
குப்பை பொறுக்கும் கூட்டம் ஒன்று இடிக்கப்பட்ட பகுதிகளை ச்சுற்றி சுற்றி மூட்டை மூட்டையாக இரும்புத்துண்டுகளை பிளாஸ்டிக் உடைசல்களை பொறுக்கிப்  பொறுக்கி எடுத்தன. வானில் பறவைகள் தொடர்ந்து வட்டமிட்டபடியே இருந்தன.
மரங்களின் எச்சங்களை விறகுகளை ப்பொறுக்கி  வண்டி வண்டியாக அவைகளை ஏற்றிக்கொண்டு எளிய வியாபாரிகள் இங்கும் அங்கும் அலைந்தபடியே இருந்தனர்.
‘பார்வதி நகர் சக்திவிநாயகர் கோவிலில் ஒரு யாகமும் அபிஷேகமும் அறிவிக்கப்பட்டது.
‘ஏன் சாமிக்கு என்ன ஆச்சு’ கேட்டாள் மனைவி.
‘ஏது ஏதோ அசிங்கம் ஆபாசம் கலந்து  அடித்துக்கொண்டு வந்த வெள்ள நீரில் மூழ்கிக்கிடந்த சாமியை புனிதப்படுத்த வேண்டாமா’
நான் சொல்லி நிறுத்தினேன்.
‘ஆமாம் மாலிக்காபூர் படையெடுப்பின் போது சிதம்பரம் திருக்கோவில் நடராசரைக்கூட உடையார்பாளையம் ஜமீன் அரண்மனையில் பத்திரமாய்ப் பதுங்க வைத்தார்களாம்.’
‘ காஞ்சி அத்திவரதர்  கோவில் திருக்குளத்துக்குள் ஒளித்துவைக்கப்பட்டதும் இப்படித்தானே’
ஏதோ பேசிக்கொண்டே இருந்தோம்.
 நேதாஜி நகர் விரிவு வாசிகள் கண்ணீர் மல்க எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றார்கள்.
‘இந்த வெள்ளமும் மழையும் எங்கள் வாழ்விடத்தை ப்புரட்டிப்போட்டுவிட்டன சொல்லிக் கொண்டே அவர்கள் சோகமாக நகர்ந்து போனார்கள். செம்பரம்பாக்கம் ஏரி என்னும் ஒரு அசுரன் திறந்துவிடப்பட்டதுதான் சென்னையின் பேரழிவுக்குக்காரணம் என்பதை யாரும் லேசில் மறந்துவிடமுடியாது. 
அப்படி திறந்தும் விடாதிருந்தால் முழுவதுமாய் இந்த மாநகரம் அழிந்தேபோய் இருக்கும் என விளக்கம் தருபவர்கள் கூடவே இருக்கிறார்கள். இரண்டிலும்  உண்மை சரிபாதிக்கு இருக்கலாம். 
ஒரு  ஐநூறு மனிதஉயிர்கள் வெள்ளத்தில் மடிந்து போயிருக்கலாம். ஒரு பத்தாயிரம் கோடிக்கு மேல் சேதாரம் இருந்திருக்கும்.ஆடுகள் மாடுகள் மரங்கள் செடி கொடிகள் என அழிவு கணக்கில் சொல்ல முடியாது.
எங்கள் தெருவில் வசித்தவர்கள் அரசாங்கம் அவரவர் வங்கிக்கணக்கில் ஒரு அய்யாயிரம் சேர்த்துவிட்டதை ப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
‘இப்படியாக ஒரு அய்யாயிரம் ரூபாய் சென்னையில் அனேகம் பேருக்கு வந்திருக்கலாம். ஆனைப்பசிக்கு சோளப்பொரி மட்டுமே இது. எல்லோரின் விமரிசனமும் இப்படியே.
              புவியின் வெப்பம் கூடிப்போனதுவே  பெய்யும் பேய் மழை மற்றும் கோடையில்  வெயில் தாறுமாறாக எகிறிப்போவதற்கு க்காரணம் என்கிறார்கள்
.புவியின் வெப்பம் கூடிப்போவதற்கு யார் காரணம்? .
     கரியமில வாயு மட்டுமே  எங்கும் கூடிப்போனது.  சாலை வாகனங்கள் எண்ணிக்கை புழுத்துப்பெறுகின. நமக்குக்கிட்டும்  அனல் மின்சாரம் அணு மின்சாரம் வெப்பம் கொட்டுவன
.ஃபிரிஜ்ஜும் ஏசியும் இல்லாவிட்டால் மக்கள் மரித்துப்போய்விடுவார்கள் என்கிற பரிதாப நிலைக்கு  வந்து எத்தனையோ காலம் ஆகிறது.
காலால் நடந்து சிறிது தூரம் செல்வது மறந்துபோனோம்.  மிதி வண்டி உபயோகமா அப்படி  ஒன்று உண்டா என்ன ?
         சென்னைக்குப்பெரு வெள்ளம் வந்த நாள் தொடங்கி ஒவ்வொருஆண்டும் மழைக்கால மூன்று மாதங்கள் சென்னை வாசிகளுக்கு முகம் ஜிவ்வென்றுதான் காட்சி தருகிறது .
                     மாரிக்காலம்  எனும்  அந்த சோதனைக் காலம் முடிந்து பின்னே தொடருகிறதுஒவ்வொருஆண்டும் 'சென்னைமார்கழி-இசைப்பெருவிழா' எனும் பெரு நிகழ்வு. உலகில் வேறெங்கும்  காணக்கிடைக்கா மானுடப்   பேறு அது. .
அடுத்தும் கூட ஒரு வெள்ளமுண்டு
ஒவ்வொரு ஆண்டு சென்னைப் புத்தகக்காட்சி ஞான வெள்ளமே அது.

நம்பிக்கையோடு வாழ்வதே மனித இருப்புக்கு நாம் செய்யும் மரியாதை. ஆகப்  பெரு வெள்ளமும் நமக்குக்கற்றுக்கொடுக்கட்டுமே சிலவற்றை.. ஞானத்தாயல்லவா பெய்திட்ட மாமழை.
‘ நாம  நம்ப வேலய பார்ப்போம். இன்னும் இந்த மாதம் ரேஷன் கடைக்கு போகல’ என் மனைவி எனக்கு வழக்கம்போல்  நடப்பை இருப்பை நினைவு படுத்தினாள். நான்  துணிப்பைகள் சிலவோடு ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு  ரேஷன்கடை நோக்கிப் புறப்பட்டேன்.
-------------------------------------------------------------------------
.







.





.
                                                        











Monday, November 11, 2019

vellam 12




சென்னையில் வெள்ளம் 12

சென்னையைப்பற்றி நிறைய சமாச்சாரங்கள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருந்தன. 2050 வாக்கில் சென்னையை அந்த வங்காளவிரிகுடா விழுங்கிவிடும் என்றார்கள். மரினா கடற்கரைக்குச்சென்று பாருங்கள் கடல்தான் உயரத்தில் இருக்கிறது. சென்னை பள்ளத்தில் கிடக்கிறது என்று  அச்சத்தோடு பேசிக்கொண்டார்கள்.
சென்னையை ச்சுற்றிலும் இருந்தன  நூற்றுக்கக்காண ஏரிகள்  அவையுள்ளே  எப்படி  இத்தனைக் கட்டிடங்கள்.  மாநகரத்தில் மூன்று ஆறுகள் இருந்தனவே அடையாறு கூவம் பக்கிங்காம் கால்வாய் என அவை எப்படி தம் மாண்பு தொலைத்து நாறிப்போயின.
ஆற்றங்கரை புறம்போக்கு ஆக்கிரமிப்புத்தான் வெள்ளம் இப்படி சென்னையைப் பாதிக்க முழுமுதற்காரணம் என்று எழுதினார்கள்.புறம்போக்கு நிலங்களை வீடு கட்டி ஆக்கிரமித்ததுதான் ஆறு சிறுத்துப்போனதற்கும் அடிப்படை என்றார்கள். நீதி மன்றங்கள் திடீரென விழித்துக்கொண்டன. வாஸ்து புருடன் அப்படித்தான் விழிப்பானாம். 
ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கள் உடனே அகற்றப்படுதல்  வேண்டும் என  நீதி  அம்மன்றங்கள் உத்தரவு பிறப்பித்தன. தொடர்ந்து இது பற்றியே மக்கள் பேசிக்கொண்டார்கள்.
ரேஷன் கார்டு அட்டையை நகலெடுத்து அதனோடு வங்கிக்கணக்கின் புத்தக முதல் பக்கத்தையும் நகலெடுத்து அவைகள் இரண்டையும் கொண்டு போய் அந்தந்த பகுதிக்கு வெள்ள ப்பாழ்க்கணக்கு பார்க்கவரும் அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும்.அப்படி ஒப்படைத்தால் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஐயாயிரம் ரூபாய் அவர் வங்கிக்கணக்கில் தமிழக அரசால் வரவுவைக்கப்படும் என்று மாநில அரசாங்கம் பத்திரிகையில் அறிவிப்பு செய்தது. அது பற்றி மக்கள் கூடிக்  கூடி முடிந்த மட்டும்  பேசிக்கொண்டார்கள்.’இது எல்லாம் ஒரு அரசாங்கத்தின் உதவியா’ என அய்யாயிரத்தை க்கேலி பெசியவர்கள் இருந்தார்கள்.ஆனால் எல்லோரும் அந்தப்பணம் தம் வங்கிக்கணக்கில் எப்போது வந்து சேரும் எனத்தவங்கிடந்தார்கள்.அங்கே வந்துவிட்டது இங்கே வந்துவிட்டது என்றார்கள்.சில இடங்களில் அப்படி வந்தும் இருந்தன. வாராமலும் இருந்தன. அது பற்றி கூடிக்கூடி அத்தனை  அக்கறையோடுவிவாதித்தார்கள். சென்னை வெள்ளசெய்தியோடு இந்த அரசு இலவசமாய் ப்பணம் வழங்குதல் சம்பந்தப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வந்துகொண்டே இருந்தன.
 இலவசமாய் வழங்கபடும் ஒன்று தனக்கு க்கிடைக்காமல்போய்  விட்டால் என்ன ஆவது இந்த மனிதப்பிறவியே வீண் என்கிற இந்த விசாரம்  மக்களை த்தொற்றிக்கொண்டு வினைபுரியத்தொடங்கியது.                          உலகத்தை த்தன் கெடுமதியால் ஆட்டிப்படைத்த இட்லர் தனது ‘காம்பியர்’ என்னும் நூலில் இப்படி எழுதுவான்.  இட்லருக்கு அவன் என்பதே சரி. 
சமுதாயத்தில் மேல்தட்டு மக்களைப்பற்றி  அரசு கவலைப்படவேண்டாம். அவர்களை அவர்களே நன்கு பார்த்துக்கொள்வார்கள்.அவர்களுக்கு அரசாங்கம் இரண்டாம் பட்சம்தான். கடைசிதட்டிலே இருப்பவர்கள் கஞ்சிக்குச்சண்டை போட்டுக்கொண்டு வீதியில் சாராயம் குடித்து கும்மாளமடிப்பார்கள்.அரசாங்கம் ஒன்று இருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை. இந்த மத்தியதர வர்க்கம் இருக்கிறதே அதுதான் அரசாங்கத்திற்கு ஏதேனும் பிரச்சனை உண்டாக்கிக்கொண்டு திரியும். அவர்களுக்கு  வீடு கட்ட இல்லை ஒரு தொழில் தொடங்க என்று  சொல்லிக் கடன் தொகை ஒன்று  ரொக்கமாய்க் கொடுத்து விட வேண்டும்.அவரவர்கள் அது அதனை ச்செய்துகொண்டு அப்படிஅப்படி  போய்க்கொண்டு இருப்பார்கள். வீடு கட்டியவர்கள் வீட்டை சுத்தமாக ஒட்டடை நீக்கி வெள்ளை அடித்துப்பராமரித்தல் என்பதிலும் வாங்கிய கடனுக்கு  அந்த வங்கி வட்டியை  சரியாக க் கணக்கு  ப்போடப்பட்டிருக்கிறதா என்பதிலும்கவனமாய் இருப்பார்கள்.கடனைத் தவணை தவணையாய்த் திருப்பிக்கட்டியதற்கு கொடுக்கப்பட்ட வங்கி ரசீதுகளை அடுக்கிவைத்து அழகுக்கணக்கு பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.அவர்களால் நமக்கு வேறு பிரச்சனை எதுவுமே  வந்துவிடாது. திரும்பி வராதக்கடன்களும் இருக்கவேசெய்யும் அதில் ஒன்றும் அதிசயம் இல்லை.  இப்படி நடைமுறைக்குகந்த யோசனை சொல்லும் இட்லர் என் நினைவில் வந்து போனான். . அந்த காம்பியர் புத்தகம் எப்போதோ நான் படித்தது..
’                  நான் நேதாஜி நகருக்குப்போய் பார்த்துவருகிறேன்’ என் மனைவியிடம் சொல்லிக்கொண்டேன். என் பெரிய பையனும் அவன் மனைவியும் கணிப்பொறி மென்பொருள் பணிக்கு அந்த பழைய மகாபலிபுரம் சாலைக்கு சென்று பின் குரோம்பேட்டை புதிய ஜாகைக்கு வந்து வந்து போயிக்கொண்டு இருந்தார்கள். பேத்திதான் என் மனைவியோடு ஒட்டிக்கொண்டு இருப்பவள்.
                என் மனைவி  தனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் கீழே இருக்கும் பரணி வீட்டுக்குப் போய்வந்தாள். அந்த வீட்டில் இருவரும் வேலைக்குச்  சென்றுவிடுவதால் அந்தவீடும் அனேகமாக பூட்டிக்கிடந்தது. நேரம் கிடைத்தபோது குமரன் குன்றம் சென்று முருகனைப்பார்த்துவருவாள்.  எங்கள் குலதெய்வமும் சாமிமலை  முருகன். 
குமரன் குன்றம் கோவிலில் படிகள் ஏறி இறங்குவது மனைவியால் முடிவதில்லை .காலை சற்றுத்தூக்கி அடுத்த படியில் வைக்க அவளால் முடிவதில்லை.பெண்களில் அனேகம் சதைபோட்டுக்கொண்டு அவஸ்தை படுகிறார்கள்.  வயது தாண்டினால் அவர்களுக்கு ப்பிரச்சனை தொடங்கிவிடுகிறது.
 ஒரு நாள்  மனைவியை சானடோரியம் பார்வதி மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றேன். அவள் டாக்டரிடம் தன் முட்டிவலி பற்றிக்கூறினாள். மூட்டு மாற்று சிகிச்சைதான் ஒரே வழி என்றார்கள். இரண்டு லட்சம் வரை செலவு வரலாம். இரண்டு மாதம்  வரை  இப்படி சிகிச்சை செய்துகொண்டவர் படுக்கையில்தான். இருக்கவேண்டும்.அவருக்குச்செய்யவேண்டியது எல்லாவற்றையும் அடுத்தவர்தான் பார்த்து பார்த்துச் செய்யவேண்டும். என் மனைவி மேலும் கீழும் பார்த்தாள்.
‘அறுவை சிகிச்சையின் பலன் எப்படி இருக்கும்?’
டாக்டரை க்கேட்டாள் அவள். ’அனேகமாக நல்ல பலன்தான் கிடைக்கும். எத்தனையோ பேர் இந்த சிகிச்சை செய்து கொண்டு நன்றாக. நடக்கிறார்கள்’
என்றார் டாக்டர்.
முட்டி மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட யாரிடமாவது கேட்டுவிட்டு  பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம் என்று என்னிடம் மனைவி சொன்னாள்.
‘அப்படியே செய்வோம்’ அவளுக்குப்பதில் சொல்லி வைத்தேன்.

’கரண்ட் எப்போது வரும் அதுதான் நேதாஜி நகரில் மிக முக்கியம்’ என் மனைவி என்னிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். 
               நான் குரோம்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டேன் ஷேர் ஆட்டோக்காரர்கள் ஒருவர் பின் வருவார்கள் ஆனால் இன்று ஏனோ ஒரு ஷேர் ஆட்யோக்காரனையும் காணோம். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அது  எப்படியாவது போகட்டும்.  நகரப்பேருந்துகள் வரிசையாக வந்து கொண்டிருந்தன.தாம்பரம் வந்து சேர்ந்தேன்.இங்கும் ஷேர் ஆட்டோக்காரர்கள் யாரும் காத்துக்கொண்டிருக்கவில்லை. ‘முடிச்சூர் முடிச்சூர்’ என்று கத்திக்கொண்டே இருப்பார்கள். நல்ல வெயில் அடிக்கத்தொடங்கியிருந்தது. இனி மழைக்கு வாய்ப்பில்லை. சாலையில் சகதிகள் காய்ந்து தரை பளிச்சென்றிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வண்டிகள் முடிச்சூர் வழிதான் செல்லும். அப்படி ஒரு வண்டி வந்தது.
‘வண்டலூர் போயி போவுது முடிச்சூர் யாரும் ஏறாதே’ கண்டக்டர் எச்சரிக்கை கொடுத்தார்.
இனி அந்த 55 எண்  மாநகர வண்டிதான் வரவேண்டும். அது நிச்சயமாக வரும். முடிச்சூர் செல்பவர்கள் அதனைத்தான் பிடித்தாகவேண்டும். நின்றுகொண்டே இருந்தேன். கால் வலித்தது.என்னைப்போல் நூற்றுக்கணக்கில் நின்றுகொண்டிருந்தார்கள்.ஷேர் ஆட்டோகாரர்கள் வரவில்லை என்றால் பயணிகளுக்கு பெரிய அவஸ்தை. அந்த வண்டியில் பயணிப்பது அதைவிட பெரிய அவஸ்தை. மூன்று பேர் அமரும் சீட்டில் நான்கு பேர் திணித்துக்கொள்ளவேண்டுமே. இந்த வண்டிக்கெல்லாம் அரசு பர்மிட் தரப்படவில்லை.இந்த டாடா மேஜிக் தயாரிப்புக்களை ஓட்டுபவர்களுக்கும்  எந்த அனுமதியும் அரசாங்கம் தரவில்லை என்கிறார்கள். அது என்ன ஒரு சமாச்சாரம். இது போல் இன்னும் எத்தனையோ.
எதிரே இருக்கும் தேவாலயத்தில் ஒலி பெருக்கி இயங்கிக்கொண்டிருந்தது.அது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும். மணி பத்தாகியது என்பதை ஒவ்வொன்றாக அடித்து ச்சொன்னது. மணி ஒலி கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது. அதற்குப்பிறகு வேத வசனம். அதன் எண்களை விடாமல் சொல்லிக்கொண்டே போனது.  வசனத்திற்கான எண்கள் சேர்த்துச்சொல்லப்படத்தான் வேண்டும் என்பது மரபாக வந்திருக்கலாம்..
 நல்ல.விஷயங்கள் சமுதாய மேம்பாட்டிற்கான  தேவச்செய்திகள் காலம்காலமாக சொல்லப்பட்டுத்தான் வருகின்றன. அதனை ஒரு சடங்காகப்  பொது ஜனம் பார்த்து ப்பழக்கப்பட்டுவிட்டார்கள்.அவை தமக்குச்சொல்லப்பாட்டிருப்பதாகவும் தமது வாழ்க்கை செம்மையுறத்தான் சொல்லப்பட்டிருப்பதாகவும் ஏற்றுக் கொள்ள மருவுகிறார்கள்.
 ஒரு ஏசுபெருமானையோ ஒரு புத்தரையோ ஒரு மகாத்மா காந்தியையோ உலகம் காண ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.அப்படித்தான் அது அனுபவமாகிறது. சிதம்பரத்தில் தங்கிக்கல்லூரிப்படிப்பைத்தொடர்கையில் வடக்கு வீதியி இருந்த காந்தி அமைதி நிலையத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் பிரார்த்தனைக்கூட்டத்தில் கீதையும் பைபிளும் குரானும் படித்துவிட்டு அமைதியாகத்தியானம் செய்துவிட்டு
 ’ரகுபதிராகவ ராஜாராம்
,பதீத பாவன சீதாராம்
.ஈஸ்வர அல்லா தேரே நாம்
,சபுகோ ஷண்மதி தே பகவான்’
என்று மன நிறைவோடு எல்லோருமாகப்  பாடிமுடிப்பதை இன்று எண்ணிப்பார்க்கையில் மனம் கர்வப்பட்டு நிற்கிறது.தேசபிதா  காந்தியைக்கொன்றுவிட்ட நமக்கு மன்னிப்பு என்றும் கிடையாதுதான்.. விமரிசனங்கள் அவர் மீதும் இருக்கத்தான் செய்யும் நாம் ஏற்றுக்கொண்ட அந்தக்.கடவுள்கள் கூட விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்களில்லைதான்.
                   ஷேர் ஆட்டோகாரர்கள் இயங்குவது சட்டப்படி சரியில்லை தவறு ஆனால் அவர்கள் ஒரு நாள் சவாரிக்கு வரவில்லை என்றால் மக்கள் தவிர்த்துப்போகிறார்கள்.
ஒரு 55 எண் பேருந்து மெது மெது வாக வந்தது வண்டியில் கால் வைக்க இடமில்லை. அதனில் ஏற ஒரு வண்டி ஜனம் காத்துக்கிடக்கிறது. வயதில் மூத்த பெருமக்கள்.உடல் நிலை பாதிக்கப்பட்டோர் குழந்தைகள் சாமான் செட்டுக்களை வைத்துக்கொண்டு ஏறத்துடிப்போர் என மக்கள் வகை வகையாய் இருந்தனர். வண்டி வந்து நின்றது. என்னால் ஏறிவிடமுடியும் என்கிற நம்பிக்கை இல்லாமல்தான்  நின்றுகொண்டிருந்தேன்.
‘பாத்தா கதெ ஆவுமா. ஏறிடவேண்டியதுதான்’ என் பக்கத்தில் நிற்பவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கும் எதுவோ அவசரமாக இருக்கலாம்.
‘என் பின்னாலயே நில்லுங்க ஏறுங்க யாரையும் பாக்காதிங்க யோசனை பண்ணாதிங்க’ அவர் எனக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. அவர் சொல்லியபடியே அவர் பின்னால் நிற்பது என முடிவுசெய்தேன். 55 பேருந்து வந்து அப்பாடி என்று எங்கள் முன்னால்  நின்றது.இறங்குவதற்கு யாருமில்லை. இரண்டு வாயிற்படிகளிலும் மக்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். மனத்தைத்திடப்படுத்திக்கொண்டு வண்டியில் ஏறிவிட்டேன்.இன்னும் மக்கள் கீழே நின்றுகொண்டு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி ஏறினேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு யோசனை சொன்னவரைத்தேடினேன். அவரைக்காணசவில்லை.அவர் இன்னும்கீழே நிறுகொண்டிருந்தார்.வண்டியில் ஏறவில்லை.
சிலர் நன்றாக பாடம் நடத்துவார்கள். அவரிடம் படித்தவர்கள் எல்லாம் தேர்வில் பாஸாகிவிடுவார்கள். ஆனால் பாடம் நடத்திய அந்த ஆசிரியர் ஏனோ தோல்வியுற்று நிற்பார். அந்தக்கதை நினைவுக்கு வந்தது..ஐ ஏ எஸ் தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்று  ஒரு பயிற்சிக்கல்லூரி தொடங்கினாராம். அதனில் பயின்றவர்கள் எல்லாரும் கலக்டர்கள் ஆகிவிட்டார்களாம். இப்படியும் சென்னையில் ஒரு செய்தி சொல்வார்கள்.
              வண்டி இந்து மிஷன் மருத்துவ மனை  அருகே நின்றது.’வண்டியில் நிற்பவர்கள்  சிலர் கீழே  இறங்கி நின்றுகொண்டார்கள். கண்டக்டர் சீட்டு போட்டுக்கொண்டே இருந்தார். உனக்கு எனக்கு என்று சீட்டு வாங்கி முடித்தனர். கண்டக்டர் விசில் கொடுத்தார். வண்டி கிளம்பியது. ஒவ்வொரு நிறுத்தமாக நின்றது. இறங்குவதற்குத்தான் ஆட்கள் முண்டி அடித்துக்கொண்டார்கள். ஏறுவதற்கு அப்படியில்லை. தொழிற்சாலைகள் அனேகம் ஊரின் அந்தப்பக்கம்தான். தொழிற்சாலை ப்பணிக்குச்செல்பவர்களுக்கு என்று மஞ்சள் மஞ்சளாக பேருந்துகள் இருக்கின்றன. அவர்கள் அதனில் சென்றுவிடுவார்கள். பள்ளிக்குழந்தைகள்,கல்லூரி மாணவர்கள் எல்லோருக்கும் தனித் தனி பேருந்துகள் உண்டுதான் அவர்களும் இந்த வண்டியில் ஏற மாட்டார்கள்.அப்படியும் சில பள்ளி கல்லூரி மாணவர்கள் பாஸ் வைத்துக்கொண்டு வண்டியில் ஏறித்தான் இருந்தார்கள். அவர்கள் இப்படி  ரகம் எதனிலும் மாட்டாதவர்களாக இருக்கலாம்.
        பிள்ளையார் கோவில்  குளம் நிறுத்தம் வந்தது. வண்டியில்பாதி காலியாகிவிட்டது. குளத்தை எட்டிப்பார்த்தேன். குளம் தண்ணீரால் நிரம்பி அழகாகவும் அச்சம் தருவதாகவும் காட்சி அளித்தது. குளத்தைச்சுற்றிலும் நடை பாதைக்கு என்று தடம் போட்டிருக்கிறார்கள். அதனை மழை  நீர் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தது.
குளத்திற்கு மேற்குப்பகுதிக்கரையில் பீமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது பஞ்ச பாண்டவர்களில் பீமன் வழிபட்ட சிவபெருமான் கோவில் என்று அந்தக்கோவிலில் வரலாறு எழுதியிருக்கிறார்கள். 
கிருஷ்ணா நகர் சாலையில் இன்னும் வெள்ள நீர் வடிந்தபாடில்லை. தெருக்களிலும் தண்ணீர் நின்றுகொண்டிருந்தது. அதுவரைக்கும் உள்ள  இந்தப்பகுதி மேற்கு த்தாம்பரம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு . பாரதி நகர் பத்மாவதி கல்யாணமண்டபம் தாண்டி பழைய பெருங்களத்தூர் அம்பேத்கார் நிறுத்தம் வந்தது. 
நான் பேருந்திலிருந்து இறங்கி செல்லி அம்மன் கோவில் வழியாக நடக்க ஆரம்பித்தேன்.வெள்ளம் பாதிக்காத அனேக வீதிகளைப்பார்க்கும்போது நாம் இப்படி பள்ளப்பகுதியில் வீடு கட்டி குடிவந்தோமே என்று எப்போதும்போல் வருத்தம் இருந்தது.
வெள்ளைசட்டை போட்டுக்கொண்ட இருவர் காக்கி கால்சட்டையோடு நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப்பார்க்க மின்சார இலாகா ஊழியர்கள் என ஊகிக்கமுடிந்தது. பிள்ளையார் கோவில் தெரு டிரான்ஸ்ஃபார்மரின் கீழ் பத்துபேருக்கு நின்று ஏதோ விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இந்தப்பகுதிக்கு மின்சாரம் வந்திருக்கலாம் என நினைத்தேன். அது சரிதான். ஆக நேதாஜி நகருக்கும் மின்சாரம் கொடுத்திருப்பார்கள்.
சிலர் வீட்டில் மின்சார மோடார்கள் இயங்கிக்கொண்டிருப்பதைக்கேட்க முடிந்தது. இப்படிக்கு அந்த இயங்கு ஓசை கேட்டு எத்தனையோ நாட்கள் ஆயிற்று நம்பிக்கையின் இருப்பு தான் மனித வாழ்க்கையாக மலர்கிறது..மனித முயற்சியும்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.எத்தனை இடர் வந்தால் என்ன ஓய்ந்துபோய் அமர்ந்துவிடத்தான் சாத்தியப்படுமா என்ன.
இரவு பகலாக மின்சாரத்தொழிலாளர்கள் வேலைசெய்து இதனை சாதித்து இருப்பதாக பார்வதி நகரில் பேசிக்கொண்டார்கள். எத்தனையோ ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் தமிழ் நாட்டின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம்  சென்னைக்கு வந்து நிர்மாணிப்புப்பணி செய்தார்கள். அவர்களின் மனித நேயம் வந்தனை க்குரியதே. சம்பளம் வாங்கிக்கொண்டுதானே இத்தனையும்  செய்தார்கள் என்று சொன்னால் அது தவறு.
பிள்ளையார் கோவில் தெரு தாண்டினேன். வ.உ.சி தெரு என்று பெயரிடப்பட்ட தெருவில் நடந்துகொண்டிருந்தேன். வ உ சி தவறில்லாமல் எழுதி இருக்கிறார்கள். தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தது. அதனை பெருங்களத்தூர் பேரூராட்சி நடத்திக்கொண்டிருந்தது. ஆறு ரூபாய் கொடுத்தால் ஒரு  பெரியகேன் நிறைத்துக்கொண்டு தண்ணீர் கிடைக்கும்.வீட்டில் அக்வா கார்டு வாங்கி நிர்வகிக்க முடியாதவர்கள் இங்கேதான் தண்ணீருக்கு வந்து காலி கேனோடு நிற்பபார்கள். இப்போது பார்த்தால் அந்த இடம் வெறிச்சோடிக்கிடந்தது. யாரும் இல்லை. 'க்யூவில் நிற்கவும்'  என்று கொட்டை எழுத்தில் எழுதியதுமட்டும் கண்ணில் பட்டது. நானும் வருடத்தில் ஓரிரு முறை கேனை எடுத்துக்கொண்டு தண்ணீர் வாங்க வருவதுண்டு, ராட்சசக்கிணறு ஒன்று பக்கத்தில் இருக்கிறது.  நம் பூட்டன்கள் தோண்டியதுதான்.அந்தத்தண்ணீர் தான் இங்கு குடி நீர் வழங்கப்படுவதற்கு ஆதாரம். கிணற்றை ச்சுற்றிலும் வாழை மரங்களும் கொய்யா மரங்களும் பின்னிக்கொண்டு அடர்ந்து கிடந்தன.
வாஞ்சி நாதன் தெரு தாண்டினேன்.அந்த சுதந்திர போராட்ட வீரரை யாரோ சிலர் இன்னும் நினைவு வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.மறந்துவிடவில்லை மொத்தத்தில் .ஒரு லட்சத்து எண்பதாயிரம்  மனிதஉயிர்கள் பலி கொடுத்துத்தான்  நமது நாட்டு விடுதலை பெறப்பட்டதாக ஒரு கணக்குச்  சொல்வார்கள். சத்தியமும் அகிம்சையும் போராட்டத்தில்  முன் நின்ற விஷயமும் பிரதானமானது.  தேச பிதா காந்தி கையிலெடுத்த ஆயுதங்கள் அவை. கூர்மையான  ஆயுதங்கள் தானே அவையும். 
மு.வரதராசனார் தெருவில் திரும்பி நேதாஜி நகருக்கு திரும்பிக்கொண்டேன்.
ராஜசேகர் சார் இரண்டாம் தெருவில் நின்றுகொண்டு கீழே எதனையோ தேடிக்கொண்டிருந்தார்.
‘என்ன தேடுறீங்க’
‘சைக்கிள் சாவி வண்டியிலேந்து கீழே உழுந்துது’
‘அப்பிடி எல்லாம்  சாவி உழாது’
‘உழுந்து போச்சே’ எனக்குச்சொன்னார். 
. நானும் அவரோடு சேர்ந்து தேட ஆரம்பித்தேன்.
‘வெறும் சாவியா’’
‘வெல்லம் போட்டசாவிதான்’
ராஜசேகர் சிரித்துக்கொண்டார்.
‘சணல் போட்டு கட்டி வச்சதுதான்’
நானும் சேகர் சாரும் சைக்கிள் சாவியை தெரு முழுவதும் தேடினோம். அது கிடைக்கவே இல்லை.
‘ நீங்க என்ன காரியமா வந்திங்களோ’
‘’இங்க என்ன ஆச்சோன்னு பாக்க வந்தேன்’
‘ஒரு செய்தி. கரண்ட் வந்துடுச்சி’
‘வழியிலயே பாத்தேன். கரண்டு வந்துச்சின்னு தெரிஞ்சிகிட்டன்.இப்ப என்ன செய்யணும்னு சொல்லுங்க’
சேகர் சார் சைக்கிள் சாவி தேடுவதை நிறுத்திக்கொண்டார்.
‘ஒரு எலக்ட்ரீசியன வரச்சொன்னம் அவன் சுச்சு போர்டு பாத்தான். கரண்டு மோட்டார் எல்லாம் கூட பாத்தான். மீட்டர் பாக்ஸ்  வீணாயிடுச்சின்னு சொன்னான்..ஃபேன எல்லாம் கூட கழட்டி தொடச்சி சரி பண்ணினான். ஆனா என் வீடு கீழ் வீடு. வெள்ளத்தண்ணீல மூழ்கி கெடந்துது. உங்க கீழ் வீடும் அப்பிடித்தான்.  கண்டிஷன் பாத்துட்டு தண்ணீ மோட்டார் போடுங்க. மேல் வீட்டுல ஒண்ணும் பிரச்சனை இருக்காது. கரண்டு மீட்டருவ போனது  போனதுதான்’
‘அப்ப கரண்டு எப்பிடி கணக்கு பண்ணுவாங்க’
‘அது ஈ பி காரங்க வேல. அத அவங்க பாத்துகுவங்க. அதுல நமக்கு வேல இல்ல.’
சேகர் சார் தன் வீடு நோக்கிப்புறப்பட்டார். நான் என் மேல் தள வீட்டைத்திறந்து அச்சத்தோடு ஒரு சுவிட்ச்சை ப்போட்டுப்பாத்தேன் லைட் ஒன்றும் எரியல்லை/
ஆக கரண்ட் என்பது வீட்டுக்குள் இன்னும் வந்தபாடில்லை. கீழாக உள்ள மெயின் பாக்ஸ் சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. அது மறந்து போனேன். வெள்ளம் வந்த பின்னே எல்லா வீட்டு மெயின்களும் ஆஃப் செய்யப்பட்டுத்தான் வைக்கப்பட்டன. இனி ஒரு எலக்ட்ரீசியன் வந்தால்தான் நிலமை புரியும்.
இந்தப்பகுதியில் சுரேஷ் என்னும் எலக்டிரிசியன் எனக்குத்தெரிந்தவர். அவரை அழைத்துப்பேசலாம் என்று யோசனையில் இருந்தேன். இந்த மொபைல் போன் எல்லாம் இந்தப்பகுதியில் இன்னும் வேலைசெய்யத்தொடங்கிவிட்டதா என்பது தெரியவில்லை. சட்டைப்பையில் இருந்த மொபைல் போன் எடுத்து சுரேஷ் பிளம்பர் என்கிற எண்ணுக்கு போன் போன் போட்டேன்.  அழைப்பபுமணி அடிக்கிற மாதிரியும் இருக்கிறது அடிக்காத மாதிரியும் தோன்றியது. ஒன்றும் சொல்வதற்கில்லை.
வீட்டு வாயிலில் இருவர் நின்றுகொண்டு எலக்டிரிகல் வேலை ஏதும் இருந்தா சொல்லுங்க சார் என்று கூவியபடி இருந்தனர். இப்படி எல்லாம்கூட  நமக்கு  நடக்குமா என்றால் நடந்ததே. . அவர்களை நோக்கி ஓடிவந்தேன்.
‘வாங்க உள்ளார’
அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
‘ நீங்க யாரு எலக்ட்ரிகல் வேல தெரியுமா உங்களுக்கு’
‘ நாங்க ரெண்டு பேருமே இந்த ஊர் ஆளு இல்ல. தெக்குத்தி காரங்கதான். எலக்ட்ரிகல் வேல தெரியும். இங்க இப்ப வேல கனமா கெடக்குது ஆளுவதான் இல்லன்னு பேப்பர்ல பாத்தம் வந்தம். வந்து ஆச்சி ஒரு வாரம் ஆவுது’
அவர்கள் சொல்வது சரி என்றுதான் பட்டது.
‘ நாங்க இந்த பழைய பெருங்களத்தூர்ல அனேக வூடுகள்ள வேல பாத்துருக்கம். சந்தேகம்னா கேட்டுகிங்க.அதுல ஒண்ணும் தப்பு இல்ல’
‘ நீங்க வேல பாக்குறீங்க நானு கூலி கொடுக்குறன். அவ்வளவுதான’
‘சாரு உங்க மோட்டார தொடச்சி போட்டுபாக்குறம்.பிட் தண்ணி இல்லாம தொடக்கிறம். அத மொதல்ல பாக்குறம். வூட்டுக்கு கரண்டு வருதான்னு தெரியுமா பாத்திங்களா’
‘அது பாக்குல’
‘மீட்டரு கெட்டு கெடக்கு  அபுறம்  எப்படி பாக்குறது’
அந்த இருவரில் கருப்பாக இருந்த உயரமானவன் கேள்வி கேட்ட குள்ள மனிதனுக்கு பதில் சொன்னான்.
உயரமானவன் தன் கையில் டெஸ்டரை எடுத்துக்கொண்டு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ள சுவர் அருகே சென்று நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
வீட்டின் ஃபீஸ் இன்னும் ஆன் செய்யப்படவில்லை.
’கரண்டு வருது’
‘ வூட்டுல எந்த சொச்சியும் போட்டுவைக்கலயான்னு பாத்துகுங்க அது முக்கியம்’
நான் அதனை உறுதி செய்துகொண்டேன். வீட்டில் எந்த சுவிச்சும் போடப்படவில்லை.
‘ஃபீஸ் போடுறேன். மேல் வீட்டுல சொச்சி போட்டு பாருங்க’
என்றவன்
‘ நீ ஏன் நிக்குற அந்த மோட்டார பாரு. அது கத என்னான்னு தெரியுணும்’
அடுத்தவனுக்கு க்கட்டளை பிறப்பித்தான்..
 நான் முதல்தளத்திலுள்ள என் ஜாகைக்குப்போய் போர்டிகோவில் இருந்த ஃபேன் சுவிட்சை ப்போட்டுப்பார்த்தேன். ஃபேன் நன்றாக ஓடியது.  மேல் தளத்தில் உள்ளே இருந்த மின்சார சுவிச் அமைப்பில் கோளாறு எதுவும் இல்லை. மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
கீழே வேலை செய்துகொண்டிருந்த இரண்டு எலக்ட்ரீசியன்களும் மோட்டாரை சுத்தம் செய்து அதனை ஓட விட்டார்கள். அது ஓடியது.ஓடும் சப்தம் நாராசமாக இருந்தது.
‘இத பெறவு பாத்துகலாம். இப்பக்கி  மோட்டார் ஓடணும்தண்ணீ வரணும். அது முக்கியம்].இருவருமே சொன்னார்கள்.
மோட்டார் போட்டு தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது.தண்ணீர்தான் மனிதனுக்கு இன்றியமையாத தேவை. ஆதிகாலத்து நம் முன்னோர ஆற்றங்கரையோரம் மட்டுமே குடியேறி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நடத்தினார்கள்.தண்ணீர் அத்தனை முக்கியம் என்பதை அவர்கள் தெளிவாய் அறிந்து வைத்திருந்தார்கள்.
கரிகால் சோழன் வீராணம் ஏரியை எத்தனை முன் யோசனையோடு அமைத்து விட்டிருக்கிறான்.அந்தக்கரை மீது எத்தனையோ முறை நான் நடந்துமிருக்கிறேன். மக்கள் தொகை அதிகமில்லாத அந்தக் காலம். மாதம் மும்மாரி பெய்திட்ட காலம். கர்நாடக அணைகள் ஜனிக்காத பொற் க்காலம். கன்னடர்கள் தமிழர்கள் என்று வேற்றுமை கருத்தரிக்காத வஸந்தகாலம். வானத்துக் கருமேகங்கள்  நம்மை புறந்தள்ளாத நற்காலம்.         
கரிகால் சோழனின் பெரிய மனம் வீரநாராயணன் ஏரியை காணும்போதெல்லாம் என்னை வந்து வந்து ஆக்கிரமித்துவிடும் இன்று மா நகராம் பெரும் சென்னைக்கு க்குடி நீர் வழங்கிக்கூட வீராணம் ஏரி கரிகால்  வளத்தானை  அச்சோழனை  நமக்கு நினைவு படுத்துகிறது.
        ‘சாரு மோட்டர் ரெடி ஊட்ட கழுவி வுடுங்க. கீழ் வூடு நல்லா காயட்டும்.பெறவு கரண்டுல சுச்சில  ஃபேனுல என்னான்னு பாக்குலாம். ஃபிரிஜ் நல்லா தொடச்சி காயவையுங்க. டீவி போனது போனதுதான். மிக்சி கிரண்டரு போயிடுச்சி. லாப்டாப்பை காப்பாத்தாம வுட்டுபுட்டிங்க அது எல்லாம்  ஒரு செமயா. அதோட டி வியையும் கெழட்டி மேல் வூட்டுல பத்ரமா வச்சிருக்கலாம் போனது போச்சி. அதுக்கு இப்ப என்ன செய்ய முடியும்’
எலக்டிரிசியன் விஸ்தாரமாக சொல்லிக்கொண்டே போனான்.
 நாம் குடியிருக்கும் தெருவில்  வெள்ளத்தண்ணீர் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தால் அச்சம் வந்து கவ்விக்கொள்கிறதே.எதை எங்கே சரியாக யோசித்து செயலாற்ற வைக்கிறது . பாழும் மனம் இப்படிக்கு  அசை போட்டபடியே இருந்தது.
       வீட்டுக்குள் மின்சாரம் வருகிறது.அதுவரைக்கும் நிம்மதியாக உணர்ந்தேன். வீட்டுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை கணக்கிடும் மீட்டர்கள் கோவிந்தா ஆகிவிட்டன. அவை சற்றும் அசையவில்லை. என்வீட்டில்தான் என்று இல்லை. தரை தளத்தில் இருந்த எலக்ட்ரிகல் அயிட்டம் யார் வீட்டில் இருந்தால் என்ன? எதுவும்தான்  இயங்கவில்லை.
        வீட்டில் செலவாகும் மின்சாரத்துக்கு ஈபி காரர்கள்  ஏதோ ஒரு குல்மத் கணக்கு போடுவார்கள். நாம் கட்டிவிடவேண்டியதுதான்.குலமத் கணக்கு என்றால் என்ன என்று சொல்ல வேண்டுமே. 
          விருத்தாசலம்   தொலைபேசி நிலயத்தில்  நான் அன்று வேலை செய்தேன். அந்த ஊரில்முந்நூறு தொலைபேசிகள் இயங்கின. தொலை பேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டு சந்தாதாரர்கள் தேவுடு காக்கவேண்டிவரும். எந்த எண் உங்களுக்கு  வேண்டும் என்பார்கள்  நாம்அவர்களிடம்  வேண்டிய எண்ணைச்  சொல்ல வேண்டும்.அந்த எண்ணுக்கு இணைப்பு கொடுப்பார்கள். அவர்களே அந்த எண்ணுக்கு ரிங் கொடுப்பார்கள். பேசி முடித்துவிட்டால் அவர்களுக்கு இண்டிகேஷன் கிடைக்கும். நம்மை இணைப்பிலிருந்து அவிழ்த்தும் விட்டு விடுவார்கள்.இது உள்ளூர் தொலைபேசி சேவை.
 வெளியூர் போன் பேசவேண்டும் என்றால் டிரங்கால் புக் செய்து காத்திருக்க வேண்டும்.போன்சொந்தமாக இல்லாத ஏழை மனிதர்கள் போஸ்டாபீசுக்கு சென்று காத்துக்கிடக்கவேண்டும்  அணாவாசைக்கு  ஒரு முறை கால் கிடைக்கும் அது  கிடைக்காமலும் போய்விடும்.
    வெளி நாடு கால் பேசுவது என்பது ஒரு தனிக்கதை, அந்த ஓவர்சீஸ் காலை சென்னை வழியாக கனெக்ட் செய்து பேசக்கொடுப்பார்கள். அது ஏதோ மேஜர் சர்ஜரிக்கு இணையாகத்தான்  கவனம் பெற்றுக்கொள்ளும்.  பேசுபவர்களுக்கு ஏதோ அரை குறையாகக்  காதில் விழும் மனத்தைத்  திருப்தி செய்துகொள்ளவேண்டியதுதான்.
குல்மத்துக்கு விளக்கம் கொடுக்கலாம் என்று ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன். தொலைபேசி நிலயத்தில் வேலைசெய்த நாங்கள் ஒரு மலையாள மாமி மெஸ் ஒன்றில் வாடிக்கையாக சாப்பிடுவோம். அங்கு ஒரு கணக்கு நோட்டு இருக்கும்.  மெஸ்ஸில் சாப்பிட்டவர்கள் தம் பில் தொகையை அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட பக்கத்தில் தேதி எழுதி சாப்பிட்ட  தொகையைக் குறிப்பிட வேண்டும். 
மாதாமாதம் சம்பளம் வாங்கும் சமயம்  மொத்த பணத்தையும் கொடுத்து  கணக்கை நேர் செய்யவேண்டும்.  மெஸ்சில் ஒரு முறை அந்தக்கணக்கு நோட்டுதொலைந்துபோவிட்டது இல்லை யாரோ  அதைச்சுருட்டிக்கொண்டு போய்விட்டார்கள். ஆக யார் எவ்வளவு சாப்பிட்டார்கள் என்ன தொகை ஆனது என்பதை அப்படி இப்படி  யோசித்து மேற்படி  மலையாள மாமி  ஒவ்வொருவருக்கும்  இன்னது தொகை என்றார்கள்.
‘இது என்ன கணக்கு’ நான்தான் மலயாளமாமியை க்கேட்டேன்.
‘இது ஒரு குல்மத் கணக்கு’ மாமி எனக்கு பதில் சொன்னார்கள். அந்தப்படிக்குத்தான் வீட்டுக்கு வீடு  மீட்டர் சரி செய்யப்படும் வரைக்கும் மின்சார இலாகாவினர் நமக்கும் கட்டணம் விதிக்க முடியும். அந்த குல்மத் சமாச்சாரம் இனி எப்படியாவது ஆகட்டும். என்  வீட்டைப்பூட்டிவிட்டு குரோம்பேட்டைக்கு ப்புறப்பட்டேன்  
இனி இந்த நேதாஜி நகருக்கு மீண்டும் குடி வருவது எப்படி என்கிற  சிந்தனை எனக்குள்  சுழலத் தொடங்கியது.
----------------------------   

  .
..


Thursday, September 26, 2019

translated poems-Dharm panch





 Dharm-panch tamil poems.

Translation -essarci

Human body.

If one died  and burnt
Ashes we get.
Buried in the ground
Body turns soil again.
Human race
Negates the path of love
Where passion and hegemony rule.

Joy

On hard work
If every moment is spent
Every day will pass you joyously.

LIGHT
Wick of a lamp
Gives light turning to ashes.
Practise like that
Success waits at the border
Of every failure
Do you prepare
 to  accept filure.


Loss
Oh man
Having faith in fate
You forget to believe human effort.
Seed gets in to soil buried
Grows that to a big tree.
Have you not witnessed it.
Get  away from hard wok
You will lose life yours.
Losing confidence is losing success.

Oh youth
If a leaf is dropped
The branch is intact.
If a flower is dropped
The plant is intact.
Can a failure
Makes you to lose interest in life.
Losing confidence you struggle,
BUT not  to fall down.

Only once
Sweet time
Youth but once.
Get the target fixed
For every moment
 no grief will
Crush you in old age.

Haikoo

Rehearsal for death
Sleep is.
Enters through the eye
Hurts the heart
Love.

Stone becomes statue
Earth becomes pot
Seed becomes tree
Tree becomes door
Cotton turns to dress
Effort  if stopped not
Alone fetch you success.













Wednesday, September 11, 2019

kopiyin ' manakkannaadi'







கலியுகன் கோபியின் ’மனக்கண்ணாடி’ ஒரு பார்வை  -எஸ்ஸார்சி
’மனக்கண்ணாடி’ கவிஞர் கலியுகன் கோபியின் எட்டாவது கவிதைத்தொகுப்பு.கவிதைகள் வரிசையாய் எண்களிடப்படவில்லை.அவைகள் தலைப்புப்பெயர் இல்லாமலும் வந்திருக்கின்றன.எப்படியும் அவை எண்பதுக்கு மிகும்.எல்லாமே குறுங்கவிதைகள்.பளிச்சென்று செய்தி சொல்லும் புதுக்கவிதைகள். நேராக விஷயத்தை வாசகனுக்கு வெடித்துச்சொல்லும் கவிதைகள்தாம் அத்தனையும்.
முதல் கவிதையே இரு வேறு முரண்கள் பற்றிப்பேசுகிறது. அம்மா வறுமையில் அகப்பட்டு வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டாள். இன்மைதான் அனைத்திலும் கொடியது என்பார் திருவள்ளுவர். மனைவி பெருமையோடு வாழ்க்கையை அனுபவிக்கிறாள். நுகர்வில் நல்லதும் தீயதும் ஒரு கூரையின் கீழ். தாயின் உழைப்புத்தான் மருமகளை வளம்பட வாழவைத்துவிட்டுப்பின் இற்றுக்கொண்டது. கவிஞர் நல்ல தொடக்கத்தை கன சிந்தனையோடு தொடங்குகிறார்.
குழந்தையும் கவிதையும் ஒன்று என்று சொல்கிறது அடுத்தகவிதை .குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதறிவோம்.கவிதையை அதனோடு மூன்றாவதாகச்சேர்த்துக்கொள்ளச்சொல்கிறார் கவிஞர்.
குருடர் பள்ளி முன் ஒரு மேடை.அதனில்கோரிக்கை முழக்கங்கள் எழுப்புகிறார்கள்.’ஒளி படைத்த கண்ணினாய் வா வா’ என்று.கவிஞர் ஒரு சோகமான அனுபவத்தைக்கவிதையாக்கியிருக்கிறார்.
காலம் தந்த தோல்விகள் என்கிற அற்புதமான சொல்லாடலை முயற்சியின் முதல் படி என்று தொடங்கும் கவிதையில் சந்திக்கிறோம்.தோல்விகள் வெற்றிக்கான காத்திருப்பு அன்றி வேறென்ன என்கிற வரி மந்திரம்போல்  வேண்டுமடா சொல் இன்பம் என்பார்களே அப்படி வாசகனுக்கு அனுபவமாகிகிறங்க வைக்கிறது.மனிதன் தானே தன் சமுதாய அமைப்பைக்கெடுத்துக்கொள்ளச் சாதியை வளர்த்து விட்டிருக்கிறான். பாரதி வேதம் நிறைந்த நாடென்பார் கோபியோ சாதிகள் நிறைந்த நாடென மனம் கொப்பளிக்கிறார்.
ஜன நாயக நாட்டில் தேர்தல் வருகின்றது.வேட்பாளர்கள் எறும்பாக உழைக்கின்றனர். நெல் மணியென வாக்கு சேகரிக்கப்படுகிறது.தேர்தல் முடிந்து அவர் வெற்றியாளர் ஆகிறார்.  இப்போது பாருங்கள் அவர் செயல்பாடுகளை. கொள்கைகள் நீர்த்துப்போன அவரின் நடவடிக்கைகளை .சுய நலமே இன்று அவரின் பிரக்ஞை அழகாகச்சொல்கிறார் கவிஞர்.
உப்பு நீராம்
வியர்வையில் குளித்தோம்
உழைப்பைச்சிலுவையாய் சுமந்தோம்’ என்று தொழிலாளியின் துயர் பற்றி யதார்த்தமாக ச்சொல்லிச்செல்கிறார். பெறுகின்ற ஊதியம் காற்றினிலே கரைந்த கற்பூரம் என்கிறார், இருக்கும் அது இல்லாமலே போய்விடும் ஒரு நாள் என்பதனை அற்புதமாகக்கூறுகிறார்.
பறவைகளே தரை இறங்காதீர். இந்த மண் மனிதனின் காலடி பட்டு தூய்மைகெட்டுக்கிடக்கிறது என உள்ளம் உழல்கிறார் கவிஞர். ‘மனக்கண்ணாடியில்’ கலியுகன் கோபி  மெய்யாக சாதனையாளராகிறார்..
’கொத்திச்சென்றுவிடும் கழுகுகள்
கோழிகளுக்குத்தெரிவதில்லை’ என்று பேசும் கவிஞர் அமெரிக்கக்கெடுமதியின் சூழ்ச்சியை சூசகமாக சொல்லித் தான் யார் பக்கம் என்பதை வாசகனுக்கு இயம்பிவிடுகிறார்.
அத்தனைக்கவிதைகளையும் நூலகர் சியாமளா  மொழிபெயர்த்துக்கொடுக்க அவை இதே புத்தகத்தில் கம்பீரமாகக்காட்சி தருகின்றன.  மொழிச்சிக்கல் இல்லாத எளிய நடை மொழிபெயர்ப்புக்கு மெருகு கூட்டுகிறது.மொழிபெயர்ப்பாளர் பாராட்டுக்கு உரியவர்.
‘poverty is the only
Case of hut’  என்பது நச்சென்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Blossoming and withering natures’ rule ?’ என்பது வாசகனைச்சிந்திக்க வைக்கிறது.
------------------------






Tuesday, September 10, 2019

sangu- interview




எஸ்ஸார்சி – நேர்காணல் கேள்விகள் சங்கு- வளவதுரையன்
கல்வி மற்றும் இளமைப்பருவம்
நான் கல்வி பயின்றது பற்றிச்சொல்லவேண்டுமென்றால் அது இப்படித்தான்.பள்ளிக்கல்வியை என் பிறந்த ஊர் தருமநல்லூர் அண்டையூர் வளயமாதேவி மற்றும் கம்மாபுரத்தில் என முடித்துக்கொண்டு கல்லூரிப்படிப்புக்கு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்கு வந்தேன்.
தருமநல்லூரில் அப்போது ஆரம்பப்பள்ளி தொடங்கியிருந்தார்கள்.என் தமக்கையர் மூவர் அண்ணன்மார்கள் இருவர்  இவர்கள் யாவரும் படித்தபோது உள்ளூரில் பள்ளிக்கூடம் இல்லை.இரண்டு மைல்கள் வயல் வரப்பு ஏரிக்கரை வாய்க்கால் காட்டு அய்யனார்கோவில் என நடந்து சென்று விளக்கப்பாடி என்னும் சிறிய ஊரில்தான் படித்தார்கள்.
தருமங்குடி என்று என் எழுத்துப்படைப்புக்களில் குறிப்பிடுவது என் பிறந்த ஊரான தருமநல்லூரைத்தான்.என் கிராமத்துப்பள்ளி மாரியம்மன் கோவில் வாகன மண்டபத்தில் நடந்தது. நாட்டு ஓட்டு போடப்பட்ட வால் போன்ற கட்டிடம் அது. சித்திரை முழு நிலா நாளன்று யாதுமாகிய அந்த மாரித்தாயைச்சுமந்து வரும் வர்ணம் பூசிக்கொண்ட கட்டைச்சிம்மம்  ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருக்கும்.மழை பெய்தால் மண்டபத்தில் அங்கங்கு ஒழுகும்.கட்டாந்தரையை ஒவ்வொரு சனிக்கிழமை  மாலை தோறும் மாணவர்கள்  வீதியில் பொறுக்கி வந்த சாணங்கொண்டு மெழுகுவோம். ஐந்து வகுப்புக்கள் இரண்டு ஆசிரியர்கள். கள்ளங்கபடமற்ற நல்லாசிரியர்கள்.
வளையமாதேவி எனது அண்டையூர். அங்கிருந்த எனது பள்ளி ராசாங்கம் என்பவரைத்தமிழாசிரியராய்க்கொண்டிருந்தது.அழகு தமிழையும் நல்லொழுக்கத்தையும் மனதில் விதைத்தவர் அவர். கருப்பு  நிறத்தில் தலைமுடியைத்தூக்கி வாரிக்கொண்டு வாட்ட சாட்டமாய் இருந்த அவர் வெள்ளை வெளேர் என வேட்டியுடன் முழுக்கைசட்டை போட்டிருப்பார். வள்ளலாரின் பெயர் கொண்ட அப்பள்ளி இன்றளவும் என் மனத்தில் அந்த வாடிய பயிரைக்கண்டுவாடிய வள்ளலைத்தொழக்கற்றுத்தந்தது.
நான்கு மைல் நடந்து சென்றால் கம்மாபுரம். வகுப்பு பதினொன்று வரை அங்கு பயின்றேன்.இலக்கிய மன்றச்செயலாளன் நான். பள்ளியின் இலக்கிய மன்ற விழாவுக்கு வந்து போன பெரியவர் குன்றக்குடி தெய்வசிகாமணியார் அவர்களையும் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களையும் என்றும் நினைவில் கொள்கிறேன்.
எனது முதல் தமிழ்க்கட்டுரை ‘பாரதிதாசனின் பனுவலில் சில’ அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆண்டு மலரில் வெளிவந்தது. பல்கலைக்கழக பெரிய நூலகம் என்னை ஆட்கொண்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
சிதம்பரம் வடக்கு வீதியிலிருந்த காந்தி அமைதி நிலையம் எனக்கு நல்லதொரு புகலிடமாக அமைந்தது. பின்னர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆதரவு தந்த  சாந்தி சேனா என்னும் அமைப்பில் நான் உறுப்பினராகச்சேர்ந்தேன். அகில இந்திய மாணவர்கள் சாந்தி சேனா அமைப்பு நடத்திய ஒரு முகாமில் கலந்துகொண்டேன். அது கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே கடோலி என்னும் கிராமத்தில் நடந்தது.
  நான் கல்லூரியில் படித்தபோது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள்  ஒருமுறை சிதம்பரம் வந்திருந்தார். என்னை அருகிலுள்ள பறங்கிப்பேட்டை முகாமுக்கு வரச்சொன்னார். காஞ்சி மடத்து சுவாமிகள் என்னை சிதம்பரத்தில் இந்து சமய மன்றம் தொடங்கச்சொன்னார்கள். காந்திய சிந்தனைகளில் தோய்ந்து இருந்த நான்  எல்லா மதமும் ஒன்று எனப்பேசத்தொடங்கிய காலம் அது. அப்படிச்செய்ய முடியாது என  நான் விலகிப்போனேன்.
என் தந்தை குடுமி வைத்துக்கொண்ட புரோகிதர். ஆனால் தன் பிள்ளைகள் தருப்பைப்புல்லைத்தொடாது  தங்கள் பிழைப்பை வேறு எங்காவது மட்டுமே தேடிக்கொள்ளவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அப்பா சுந்தரேசனுக்குத்தெரியாத உலகவிஷயங்கள் இருக்கமுடியாது.
தாய் மீனாட்சி பெரியதாகப்படித்தவரில்லை. என் தாய்க்கு மனிதாபிமானம் என்று ஒரு மறுபெயர் சூட்டலாம். அன்பின் திரு உரு அம்மா. என் அம்மா கையால் சாப்பிடாதவர்கள் தருமங்குடியில் யாரேனும் இருப்பார்களா என்ன?.
வேதியியல் பட்டம் பெற்று முதன் முதலில் வடலூர் சேஷசாயி  நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன்.பின்னர் தொலை பேசித்துறை.விருத்தாசலம் நகருக்கு வந்தேன். ஆங்கிலத்தில் எம் ஏ எம் ஃபில் இதழியல் பட்டயமும் பெற்றேன்.
நவீன இலக்கிய அறிமுகம் எப்படி?
பாரதியில் இருந்துதான் என் இலக்கிய நுகர்வு தொடங்கியது.ஆரம்பப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாரதி பற்றி ஒரு பேச்சுப்போட்டியில் பங்குகொண்டு பாராட்டப்பெற்றேன்.கம்மாபுரம் உயர் நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றச்செயலர்.பணி. கல்விமாவட்ட கலைக்கழப்போட்டியில் முதன்மை பெற்றமை.அண்ணாமலைப்பல்கலைக்கழக நூலகத்தொடர்பு.பாரதிதாசன் எழுத்துக்களில் ஆர்வம் கொள்ளுதல். தி.ஜானகிராமனின் மோகமுள்,ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு,மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்,சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை,தா.பாண்டியனின் பாரதியும் சாதிகளும்,பொன்னீலனின் ஜீவா என்றொரு மானிடன்.இவை ஒத்த படைப்புக்களே என்னை ஈர்த்தவை.
திருக்குறளும்,திருவாசகமும்,திருமூலரின் திருமந்திரமும் வினோபாஜியின் கீதைப்பேருரைகளும் எப்போதும் நான் நேசிக்கும் நூல்கள். தொலைபேசித்துறையில் செர்ந்தபிறகு அங்கிருந்த என் எஃப் பி டி இ தொழிற்சங்கத்தொடர்பால் பொது உடமை ச்சிந்தனைகள் என் சிந்தனையை வெகுவாக பாதித்தன.
 தொடக்கத்தில் ஆசிரியப்பாவும் வெண்பாவும் எழுதியதுண்டு. இவை என்னை வெகுவாக பாதிக்கவில்லை. நவீன இலக்கிய யுக்திகளே எனக்கு நிறைவு தந்தன.
விருத்தாசலம் இலக்கியச்சூழல்
விருத்தாசலம் பகுதியில் நான் பணியில் சேர்ந்தபோதுஅருணா ஜவுளிக்கடையில் நண்பர் சதாசிவம் இருப்பார்.அவர் திருப்பூர்க்காரர்.அங்கு கூடி இலக்கியம் பேசுவோம்.அருகில் பணிபூண்டார் வீதியில் கவிஞர் பல்லடம் மாணிக்கம் இருப்பார்.விருத்தாசலம் ரயில் நிலயத்திலிருந்து உதயசங்கர் வருவார்.இன்றளவும் நான் பெருமையோடு தொடர்பு கொண்டுள்ள வே.சபாநாயகம் நட்பும் எனக்குக்கிடைத்தது. கவிஞர் கரிகாலன் அவர் தம்பி புகழேந்தி. கண்மணி குணசேகரன்,இமையம் கவிஞர் வின்செண்ட், ,தெய்வசிகாமணி.பட்டி செங்குட்டுவன்,தபசி,வடலூர் ஊ.செ.துளசி ஆகியோர் எல்லா நிகழ்வுகளுக்கும் கூடுவோம்.ஆயிஷா நடராசன்,அன்று குரல் நடராசன் விருத்தாசலம் நிகழ்வுகளுக்கு வந்துபோவார்.
இந்தப்பகுதியின் மகாகவிஞர் பழமலயின் நட்பு பற்றிப்பெருமிதத்தோடு குறிப்பிடவேண்டும். நானும் சபா சாரும் நெய்வேலி இலக்கிய நிகழ்வுகள் அனைத்திற்கும் சென்று வருவோம். நெய்வேலியில் சத்யமோகன், வேர்கள்: ராமலிங்கம்,ஜீவகாருண்யன்,பாரதிகுமார்,ஆகியோரிடம் இலக்கியம் பற்றி விவாதிப்போம்.பின்னர் வடலூர் ஜி .டி. போஸ்கோ இலக்கிய நண்பரானார்.அவர் தொடர்ந்து இலக்கியக்கூட்டங்கள் நடத்தினார். நானும் சபா சாரும் போகாத கூட்டமில்லை.தங்கர் பச்சான் முன்னிலையில் அவரின் ஒன்பது ரூபாய் நோட்டு பற்றி விமரிசித்தோம்.அப்படியே குறிஞ்சிப்பாடி குறிஞ்சிவேலனின் நட்பு கிடைத்தது.யான் வாழ்க்கையில் பெற்றஒரு பேறு என்று அதனைக்குறிப்பிடவேண்டும்.
கரிகாலன் ஒரு தொடர் இலக்கிய அரங்கு விருத்தாசலத்தில் நடத்தினார். நட்சத்திர எழுத்தாளர்கள் கலந்துகொண்ட பெரு நிகழ்வு அது. ஜெயமோகனும் மனுஷ்யபுத்திரனும் ரவிசுப்ரமணியனும் சுப்ரபாரதிமணியனும் கலந்துகொண்டார்கள்.பிரபஞ்சனும் அ.மார்க்சும் அனேக இலக்கிய நிகழ்வுகளில் இங்கு வந்து கலந்துகொண்டனர்.இமயம் நடத்திய ஒரு இலக்கிய நிகழ்வுக்கு சுந்தரராமசுவாமி மனைவியோடு வந்திருந்தார். எழுத்தாளர் அம்பை, இமயம்  ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கரிகாலனின் துணைவியார் தமிழ்ச்செல்வி மகளிர் எழுத்தாளர்களைக்கொண்டு பல்லடம் மாணிக்கம் நூலகத்தில் ஒரு இலக்கிய அரங்கு நடத்தினார்.
சபா சார் எழுதிய ‘ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது’ வெளியீட்டு நிகழ்ச்சி பல்லடம் மாணிக்கம் அவர்களால் அத்தனைச்சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.அப்படி ஒரு நூல் வெளியீட்டு விழாவை வேறு எங்கும் நான் இதுவரைகண்டதில்லை. நல்ல படைப்பாளிகள் இன்னும் பலரை தமிழ் இலக்கிய உலகிற்கு விருத்தாசலம் அளித்துப் பெருமைகொண்டது. ஒன்று மட்டும் சொல்லாமல் விட்டால் அது தவறு. அவ்வப்போது சாதியமும் தலைகாட்டி இப்பகுதியில் தன்னை நிறுவிக்கொள்ள முயற்சிக்கும்தான்.
தொழிற்சங்கம் அன்றும் இன்றும்.
பணியில் சேர்ந்தபோது நான் பார்த்த தொழிற்சங்கம் சமூகப்பள்ளியாக இருந்தது.இனம் மதம் மொழி தாண்டி எங்கள் சிந்தனையை வளமாக்கியது. மனித நேயற்றின் நாற்றங்கலாக அனுபவமானது.ஜீவாவின் சிந்தனைகள் எங்களைக்கட்டிப்போட்டன.சாதிய வெற்று விடயத்தை தொழிற்சங்கம் வெளிச்சமாக்கியது.பெண்களை மதிக்கக்கற்றுத்தந்தது.ஆரோக்கியமான விலாசப்பார்வை உறுப்பினர்களுக்குக்கிட்டியது. நல்ல எழுத்துக்கள் வாசிப்பு அனுபவமானது.புஷ்கினும் கார்க்கியும்,தாஸ்தாவாஸ்கியும்,டால்ஸ்டாயும் எங்களுக்கு நெருக்கமானார்கள்.
தலைவர்கள் ஜகனும்,ரகுவும்,ரெங்க நாதனும் இயக்கத்தில் எங்களுக்கு வழிகாட்டினார்கள்.இந்தப்பகுதியின் எழுத்தாளர் சிரில் அவரின் படைப்புக்களால் எங்களுக்கு அறிமுகமானார். நெய்வேலி கனேசன் மிக நெருங்கிய நண்பரானார்.அன்பே உருவான அந்தத்தோழர்தான் என்னை முதன் முதலில் கணையாழி இலக்கிய இதழைப்படிக்கச்சொன்னவர். விஎருத்தாசலத்தில் தோழர் மஜ்கர் எனக்கு நண்பரானார். இளமையிலே அவர் நோயுற்று இறந்துபோனது ஒரு சோகம்,
கவிஞர்கள் நீலகண்டனும்,கோவி ஜெயராமனும் இலக்கிய நண்பர்கள் ஆயினர். கடலூர் புகழ் சங்கு வளவதுரையனும், சிம்மக்குரல்




 சசியும் பேராசிரியர் பாசுகரனும், பட்டுக்கோட்டை இலக்கியச்சிறகு  மு.ராமலிங்கமும் நெருக்கம் ஆயினர்.
தொழிற்சங்க அரங்கில் எண்ணற்ற போராட்டங்கள் எத்தனையோ தண்டனைகள். ஆனால் நியாயத்திற்கு ப்போராடிய பெருமை மட்டும் கூடிக்கொண்டே போனது. எதிரிகளால் அடியும் உதையும் கிடைத்தது.பதவி உயர்வு தள்ளிப்போனது.தண்டனைகள் தொடர்ந்தன.மனம் மட்டும் எப்போதும் நிறைவாகவே உணர்ந்தது.
தன்னை மட்டுமே முன் நிறுத்துதலும்,சாதி அரசியலும் தம் கடையை திறந்துகொண்டு வியாபாரம் செய்யத்தொடங்கிவிட்டதன் பாதிப்பு எல்லா சமூக இயக்கங்களையும் இன்று பீடித்து நிற்கிறது.ஆகத்தான் பொதுவுடகமை இயக்கங்களும் இலக்கிய அரங்குகளும் கூட த்தம் கம்பீரம் இழக்கின்றன. தொழிற்சங்கங்களை மட்டும் அவை விட்டு வைக்குமா என்ன?
கவிதை சிறுகதை நாவல் பற்றி
கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆங்கில இலக்கியம் பயின்றதால் மில்டனும் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் கீட்சும் என்னைப்பாதித்த கவிஞர்கள்.கோவை ஞானி என் கவிதைகளைப்பாராட்டி நிகழில் பிரசுரித்ததை நான் பெருமையாக எண்ணியவன்.
கவிதையை ப்போன்று ஆன்மாவைத்தொட்டுப்பெசும் வேறு ஒரு படைப்பு உண்டா என்ன? நான் மூன்று கவிதைத்தொகுப்புக்கள் வெளியிட்டேன். வல்லிக்கண்ணன் முன்னுரையோடு தேவகாந்தன் முயற்சியால் ‘ரணம் சுமந்து’ வெளிவந்தது. ஆங்கிலக்கவிதை நூல் ‘ரெயின் போ’ வெளியிட்டேன். பட்டுக்கோட்டை ராமலிங்கம் என்னுடைய ஆங்கிலக்கவிதைகளை த்தொடர்ந்து தன் ஷைன் இதழில் வெளியிட்டார்.
நான் இரு நூறு சிறுகதைகளுக்கு ப்பக்கமாக எழுதியவன் இன்னும் தொடர்கிறேன். ஐந்து நாவல்கள் எழுதியுள்ளேன்.’ மண்ணுக்கள் உயிர்ப்பு புதினத்தை ராஜம் கிருஷ்னன் விமரிசனம் செய்து எழுதினார்.’கனவு மெய்ப்படும் நாவல் நான்கு பரிசுகளைப் பெற்றது. ‘ நெருப்புக்கு ஏது உறக்கம் நாவல் தமிழக அரசின் விருதினைப்பெற்றது. சேலம் தாரையார் விருதும் அதற்குக்கிடைத்தது.
நாவலில் மட்டுமே படைப்பாளிக்கு நிறைவு கிட்டும் என எண்ணுகிறேன். ஆக நாவலை  நான் அதிகம் விரும்புகிறேன்..
----------------------------ஏப் 2016 சங்கு