Monday, February 1, 2016

கலில் ஜிப்ரான் கவிதைகள்




கலில் ஜிப்ரான் 

அழகென்பது


'அழகு எது என்று சொல்வாயோ'
 கவியின் கேள்வி
 விடையோ வினாவாய் .
எங்கே அழகைத்தேடுவாய் நீ?
அழகே வழி சமைத்து
அவ்வழகே வழிகாட்டி
அமைய க்கிடைக்கலாம் அழகு

அழகு பற்றி இன்னும்  ?
அழகே மனமிறங்கி அதனை 
அமைத்துக் கொடுக்க 
அது சாத்திய மாகலாம்.

மனம் துன்புற்றவனும் 
உடல் புண்பட்டவனும் சொல்கிறான்.
அழகென்பது கருணை
அழகென்பது அனுசரணை.
இளந்தாய் ஒருத்தி
 தன் பெருமையின் பிடியில்
கொஞ்சமாய் வெட்கப்பட்டு
 நம்மிடையே  நடப்பதொப்பது அழகு.

உணர்ச்சி வயப்பட்டோன் சொல்வான்.
'அப்படி இல்லை
அழகென்பது வலிமை
 அது அஞ்சவும் வைப்பது.
கீழிருக்கும் இப்பூமியை
 மேலிருக்கும் அந்த விண்ணை
உலுக்கிப்போடும் இளம் புயல் அது.

களைப்பும் சலிப்பும் கொண்டவன்
 விடை சொன்னான்.
அழகு மென்மையின் அழைப்பு.
அழகு நம் உணர்வின் உயர் தளத்தில்
 நம்மிடம் சம்பாஷிப்பது..
ஒரு சிறிய ஒளிக்கீற்று
 சூழ்நிழலைக் கிழித்துக்கொண்டு ப்
பாய்வதொக்கும்.

ஆயின் மனக் கவலையில் 
தோய்ந்தவன் சொல்கிறான்.
மலைகளின் நடுவே
 அழகு எழுப்பும் பேரொலி
நாம் கேட்டிருப்போம்.
அதனைத்தொடர்ந்துதானே
புரவிகள் குளம்பொலி
இறக்கைகளின் படபடப்பு
சிங்க கர்ஜனை.

மா நகர இரவுக்
காவலாளி பகர்கிறான்.
அழகென்பது புலரும் காலையில் கிழக்கின் உதயம்.

நண்பகல் உழைப்போனும்
 நடைப்பயணம் செல்வோனும் சொல்கிறார்கள்.
கதிரவன் மறை போதே சாரளமாகி
அழகுப்பெண் பூமி மீது
 ஒய்யாரமாய்ச்சாய்ந்திருப்பாள்.

மாரிக்கால ப்பனி
 போர்த்தியவை சொல்லும்
குன்றின் மீது தவழ்ந்து
வசந்தகாலத்தில் உலா வரும் அழகு.

கோடை வெயிலில்
 கதிர் அறுப்போர் சொல்வர்,
உதிர்ந்த இலைகளிடை 
 அழகுக் கூத்திடுவாள்
 கண்டோம் யாம்
அவள் கூந்தலிடை
 பனி தழுவிச்சென்றதங்கே.

 அழகு குறித்து ப்
 பலரும் பகன்றவை.
அழகு குறித்தா இல்லை இல்லை

உம்  நிறைவேறாத் தேவைகள் அவை
அழகு, தேவையொடு 
தொடர்புடைத்தா என்ன
அது பேரானந்தச்சிலிர்ப்பு.
நாவில் நீர் சொட்டவைக்கும் விடாயோ 
வெறுங்கையின் நீட்சியோ இல்லை அது
இதயம் தரும் ஒளிப்பிரவாகம் 
ஆன்மாவின் ஆனந்த லயிப்பு

பார்க்கும் உருவும்
 நீ கேட்கும் பாடலும் இல்லை அது.

கண்களை மூடிட க்காட்சி யாவது
 செவிகளை ப்பொத்திடக்கேட்க முடிவது
பிளவுண்ட மரக்கிளையின் மையப் பகுதி
 சொட்டும் அத்திரவமில்லை அது
நகத்தொடு ஒட்டித்தொங்கும் 
சிறகும் இல்லை அது
பொதெல்லாம் மலர் அவிழும் நந்தவனம் 
தேவ கன்னியர் கூட்டத்து ஓயாப்பேரணி.
.
 ஆர்ஃபலிசு ( Orphalese)  நகரத்து  மாசனங்களே
வாழ்க்கையின் புனித முகம் 
தெரியத்தெரிய
 மனித வாழ்க்கை அழகு.

வாழ்க்கை நீ
அவ்வாழ்க்கையைத் தொலைப்பது நீ.
இதோ ஆடி முன்னே 
தன் அழகு பார்க்கிறது
அமரத்துவ அழகு.

காலத்தை வெல்பவன் நீ
நின்முன்னே நிற்கும் அவ்வாடியும் நீ..
-----------------------------------------------------




No comments:

Post a Comment