Wednesday, February 1, 2023

என்னுரை - ஆயிரம் இடர்வரினும்

 

 

 

என்னுரை

                                           

 

………ஆயிரம் இடர்வரினும் ……………………………….. என்னுடைய ஏழாவது புதினம்.இந்திய தேசத்தைச் சாதி என்னும்  சமூகநோய்ப் பிடித்து உலுக்கி எடுத்துக்கொண்டே இருக்கிறது. அறிவியலின் ஆளுமை  அந்த சாதிய  நஞ்சின் வீர்யத்தைக் குறைத்து வைத்திருப்பது நிதர்சனம். இருப்பினும் சாதியை வைத்துச் சுயநலத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் சாமர்த்தியமாகச் செயல்படும் ஒரு சமூக அமைப்பாக நாம் மாறியிருப்பது  காலம் வழங்கிய ஒரு சாபம்.   

             இச்சாதிச்சகதியைக் காப்பதில்   அன்றாடம் நாம் தொழும்  இறையைக்கொணர்ந்து நிறுத்தியிருக்கிறார்கள்.  உலகெங்கும் மக்களாட்சி மலர்ந்தபிறகு பொதுவுடமைக்கட்சிக்காரர்கள் கூட இம்மண்ணில் சாதியை ஒரு கணக்கு வைத்துக்கொள்ளாமல் தேர்தலைச் சந்திப்பது சாத்தியமில்லாமல் போயிற்று. கிராமங்கள் இன்னும் சாதியின் பிடியில்.   சாதி  கெட்டிப்பட்டு நிற்பதுவே சாதாரணமாய் நமக்கு அனுபவமாகிறது.

தேசபிதா மகாத்மா காந்தி இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பார்.  இந்திய கிராமங்களோ சாதியத்தின்  தந்திர ஆளுகையில் இக்கணம் வரைத் தம் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கின்றன.

இப்புதினத்தின் வரும் மக்கள் சாதியத்தின் கிடுக்குப்பிடியினை எதிர்கொண்டு உயர்ந்த லட்சியத்தோடு ஆரோக்கியமானதொரு சமூகத்திற்கு பாடுபடுவதைப் பேசுகிறது இப்புதினம்.

எனது இப்புதினம் வெளிவரத் தோழமையுடன் என்றும் போல் உதவிக்கரம் நீட்டும் எனது தோழமைச் செல்வங்கள்  எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் பதிப்பாளர் உதயகண்ணன் ஆகியோர்க்கு எனதுபணிவும் நன்றியும்.

                                                                                                            அன்புடன்

                                                                                                            எஸ்ஸார்சி

 

 

 

 என் அன்பு நண்பர்  மூத்த  தமிழ் எழுத்தாளர்  கி.விட்டல் ராவ் அவர்களை வணங்கி

No comments:

Post a Comment