Wednesday, February 1, 2023

 

  ஆயிரம் இடர்வரினும்  நாவலில் சில வரிகள்

 

மனிதனுக்குச் சில நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை  வாழ்க்கையில் குறுக்கிடும் துன்பங்களைச் செரித்துக்கொள்ள அவனுக்குத் துணைசெய்கின்றன. மூட நம்பிக்கைகள் இவை என்று தெளிந்து, சவால்களை சமாளிக்கும் ஞானம், அவனுக்கு வசப்படமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.  ( பக்கம் 72)

ஆனா ஒண்ண உறுதியா சொல்லணும்.அன்ணல் அம்பேத்கார்  இல்லன்னா எனக்கு கெடச்சியிருக்கே இந்த ரவ வாழ்க்கை அதுவும் இல்ல. இப்பத்தான் எங்க சனம் கண்ண தொறந்து இந்த மண்ணுல இதுவரைக்கும் என்ன நடந்துது, இப்ப என்ன நடக்குதுன்னு பாக்குது.  (  பக்கம் 74 )

நாம தெய்வம்னு தெனம் தெனம் கும்புடற அயோத்தி ராமனும் மதுரா கிருஷ்ணனும் மாமிசம் சாப்டவாதானே.  ( பக்கம் 79 )

 படிப்பு பெரிசு. படிப்புதான் பெரிசுன்னு நா தெரிஞ்சிகிட்டவன். மனம் அப்ப அப்ப குரங்காயிடுது. அத ஒழுங்கு படுத்துறது சின்ன வேல இல்ல.( பாகம் 179 )

 மனுஷன் கிட்ட சாரம் போய்ச்சேரல  திருக்குறள் ஒரு நீதிநூல் வந்து எத்தனைக்காலம் ஆயிடிச்சி. இன்னும் அதன் தேவை கூடிகிட்டேதான் போவுது. ஒரு கன்னத்தில் மறு கன்னத்தைக்காட்டுன்னு பைபிள் சொல்லுது. ஆனா எத்தினி யுத்தம் இங்க நடந்திருக்கு.எத்தினி கோடி பேர் செத்துப்போயிருக்காங்க.  ( பக்கம் 188 )

மனிதர்கள் அடுத்தவன் என்ன இனம் என்பதை அறிந்து கொண்டுவிட ஏனோ இப்படி துடியாய்த் துடிக்கிறார்கள் அதனை அறிந்துகொள்வதால் நன்மை ஒன்றும் விளைந்துவிடப்போவதில்லை.. (  பக்கம் 206 )

கடவுள் பரமசிவன் நெத்தில பொற நெலா இருக்கு. அதுக்கும்தான் ராக்கெட்ல போறான்.நாறிப்போன பழசெல்லாம் வச்சிண்டு ஊர்கோலம் போகணுமா என்ன.        ( பக்கம் 213 )

இப்படித்தான்  இருக்கும். எதுவும் தானா நடந்துடாது . சும்மா வந்துடாது. எதிர்ப்புக்கள் இருக்கவே செய்யும். நாம மனசாட்சிக்கு நேர்மையா செயல்பட்டா போதும். ஆனா செயல் படணும். அது மிக முக்கியம். மற்றதை காலம் பாத்துகும்.

‘காலம்னா’

‘ மக்கள்தான்’         ( பக்கம் 319 )

 

‘ கிராமங்கள் ஒருநாள் சாதிச்சகதியிலிருந்து மீண்டெழும். சமூகப்பெரியவர்கள் சொன்ன வார்த்தை பொய்யாகிவிடாது. ஆயிரம் இடர்வரினும் நமது பணி தொடர்ந்து செயல்படுவதுதான்.    ( பக்கம்  320 )

 

  

No comments:

Post a Comment