Thursday, June 25, 2015

theravusu -story



தெரவுசு -எஸ்ஸார்சி



அவன் வீட்டுத்தோட்டம் சின்னது அதனில் வேலி ஓரமாக நான்கு தேக்கு மரங்கள் இருந்தன.தருமங்குடிக்கு பக்கமாகத்தான் முதுகுன்றம்.. அந்த முதுகுன்றத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை. அந்த சந்தையில் வாங்கிய தேக்கங்கன்றுகள்தான் அவை.
மஞ்சள் வண்ண தலைப்பாகை கட்டிய சைக்கிள் காரனிடம்.அய்ந்து கன்றுகள் வாங்கினான்.ஈர சாக்கில் சுற்றப்பட்டு சைக்கிள் காரியரில் அவை மொத்தமாக சயனித்து இருந்தன அவன் . வீட்டு த்தோட்டத்தில் வேலி ஓரம் நட்ட அத்தனையும் பிழைத்தன. வளர்ந்தன. வானம் தொட்டன.ஒன்று மட்டும் ஓங்காமல் ந்ரேல் என்று இருந்தது. அப்புறம் கரேல் எனக் காய்ந்து போனது. அதனை ப்பிடுங்கி எறிந்தான்.பிழைத்தவையோ ஓங்கி ஒய்யாரமாக வளர்ந்தன. தேக்க இலைகள் ஒருவர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அகலித்து வெடித்தன. இலைகள் அவனிடம் என்னைப்பார் என் அழகைப்பார் என்றன.
'சார் வூட்ட்ல இருக்குறா'
வீட்டு வாயில் புறம் மோட்டார் சைக்கிளில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்தான் கூப்பிட்டு இருக்க வேண்டும்.
'நீங்க யாரு உங்களுக்கு என்ன வேணும்'
'நான் உங்க வீட்டு மனைக்கு பின் புற மனைக்காரன்.என்னை பாத்து இருக்க மாட்டிங்க.நான் வேல பாக்குறது வடலூர். அங்க பீங்கான் ஆலையில இருக்கேன். இப்ப இங்க என் மனையில ஒரு ஊடு கட்டுலாம்னு ஒரு யோசனையில இருக்கன்'
'உள்ள வாங்களன் வண்டியில இருந்துகிட்டு பேசுணுமா'
' உள்ள வந்து என்ன செய்யப்போறன்.வேலி ஓரமா இருக்குற நாலு தேக்கு மரங்களையும் நீங்க வெட்டி எடுத்துடணும்'
பச்சை மரங்களை வெட்டி எடுப்பது. எப்படி அவன் அதிர்ந்துபோனான்.
'என்னா யோசனை மரங்களை வெட்டி எடுத்துடுங்க. அவ்வளவுதான்.ஒரு பத்து நாளு பாப்பேன். ஒண்ணும் கதை ஆவுலன்னா அப்புறம் நானே வெட்ட வேண்டி வரும். எதுக்கும் வெஷயத்தை சொல்லிபுடணும்.அதான்'
அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தான். என்ன சொல்வது என்றுமே அவனுக்குத்த்தெரியவில்லை.
'அப்புறம் நான் கெளம்புறேன்' அவன் மோட்டார் சைக்கிளைத்திருப்பிக்கொண்டு வேறு பக்கம் போனான்.கூடவந்தனும் அவனோடு தொத்திக்கொண்டான்.
ஒரே குழப்பமாக இருந்தது.அவனுக்கு ஒரு அண்ணன். அவன் சென்னையில் வக்கீல் வேலை பார்த்தான்.அவனிடம் போன் போட்டு விவரம் கேட்கலாம் என்ற யோசனை வந்தது.தோட்டத்து பக்கமாய்ப்போய் ப்பார்த்தான்.நான்கு தேக்க.மரங்கள் நான்கும் கோபித்துக்கொண்ட மாதிரியே தெரிந்தது.'நாங்கள் என்ன பாவம் செய்தோம்.அதற்குள்ளாக எங்களை வெட்ட முடிவு எடுத்துவிட்டீர்கள் நீங்கள்' என்று அம்மரங்கள் அவனிடம் காற்றில் ஆடி ஆடித்தம் குறை சொல்லின..
நான்கு தேக்கு மரங்களையும் தொட்டுப்பார்த்தான்.ஒவ்வொரு மரமும் பதினைந்து அடி உயரத்துக்கு பருத்து உய்ர்ந்திருந்தது.அதற்கு மேலும் அவை உயரம்தான். கட்டாயம் பதினைந்து அடிக்கு உயரம் குறையவே செய்யாது.மரத்தை கைகளால் அணைத்துப்பார்த்தான்.அவற்றின் கனம் அறிந்தான்,எப்படியும் மொத்தமாக அறுபது சதுரத்துக்கு தேறும்.
வக்கீல் அண்ணனுக்கு போன் போட்டான். வக்கீல் அண்ணன் சென்னை தியாகராய நகரில் குடி இருந்தான்.அவனைக்கேட்காமல் அவன் எதுவும் செய்தது இல்லை.கேட்காமல் செய்து விட்டால் பின்னால் அண்ணனிடம் யார் பாட்டு வாங்குவது. கைபேசியை எடுத்து அண்ணனைக்கூப்பிட்டான்.
'அண்ண நானு பேசுறேன். ஒரு சேதி'
'சட்டுனு சொல்லு. உனக்குன்னு எதாவது சேதி இருந்துகிட்டே இருக்கும்'
' என் தோட்டத்துல இருக்குற தேக்க மரங்களை வெட்டுணுமாம் அந்த பின்புற மனகாரரு வூடு கட்டப்போறாராம்'
'அவருக்கு மரங்க இடைஞ்சலா இருக்குதா நீ பாத்தியா'
'பாத்தேன் அப்படி ஒண்ணுமில்லே இருந்தாலும்'
' இப்படியா பேசறது. அந்த மரங்க அவுரு மனைக்கு இடஞ்சலா இல்லையா அது மட்டும் சொல்லு'
'இடஞ்சல் தான்'
'அப்புறம் இதுல என்னா பேசுறது.நாட்டுதேக்கு சதுரம் ஆயிரத்து முந்நூறுன்னு கணக்கு போட்டா நாலும் எத்தனி சதுரம் வருது எம்மாம் காசு வருதுன்னு பாரு. உனக்கு மரம் தேவை கீவை யிருக்கா இல்லன்னா வெட்டு நல்ல வெலைக்கு குடுத்துடு; அப்புறம் வேற'
'வேற ஒண்ணும் இல்லே நான் வச்சிடறேன்' பேசி முடித்தான்.
நேறாகத் தென்கோட்டை வீதி நாடார் மர வாடிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான்.மரவாடி கல்லாவில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.
'என்னா வேணும்'
'தேக்கு மரம் சதுரம் என்ன விலைன்னு தெரிஞ்சிகிணும்'
'ஏன் மரம் வேணுமா இல்லையா அத மொதல்ல சொல்லு சாரு'
'இல்ல வெல தெரியணும்'
'வெலயா அதுவ ப்ர்மா சரக்குன்னா ரூவா ஆயிரத்து ஐநூறு கேரளான்னா இன்னும் நூறு கூட வரும்'
'நமப ஊர் தேக்கு வெல தெரியணும்'
'நாங்க அத எப்பவுமே விக்குறது இல்ல அப்புறம் வேற என்னா வேணும்'
' என் வூட்டுல நாலு தேக்கு மரம் இருக்கு. வெலைக்கு கொடுக்குலாம்னு'
'இது ஆசாரிவகிட்ட பேசுற சமாச்சாரம் மரவாடின்னா இங்க அய்ர்ன் சரக்குதாம் விக்குறம் நாட்டு மரம் எல்லாம் இல்ல'
'அயர்ன் சரக்குன்ன என்னங்க அய்யா'
'நீரு எடத்தைக்காலி செய்யி.மொத நீ கெளம்பு கெளம்பு'
அவன் வீட்டுக்கு உடன் புறப்பட்டு வந்தான். சைக்கிளை உருட்டிக்கொண்டேதான் வந்தான்.ஏறி பெடல் செய்து பார்த்தான். பின் வீல் அடிபட்டது. பின் சக்கர டயரில் காற்று குறைந்து இருந்தது.. சைக்கிள் கடைக்காரன் யாருமே கடை திறந்த பாடில்லை.
அவன் வீட்டு வாசலில் இருவர் நின்று பேசிக்கொண்டே இருந்தனர்.அதை நோட்டமிட்டான்.
'தேக்கு மரம் வெலைக்கு த்ர்ரீங்கன்னாங்க அதான் வந்தம்'
'யாரு சொன்னது'
'ஏன் மரவாடியிலபோயி கேட்டுகிட்டு வந்திங்க அது எங்களுக்கு தெரியும்ல'
' அந்தக்கதை ஏன் பேசிகிட்டு மரத்தை வந்து பாருங்க வாங்க தோட்டத்துக்கு போவுலாம்'
வீட்டுக்கு வந்த இருவரும் தேக்கமரத்தை தட்டி தட்டி பார்த்தனர். 'ரெண்டு மரம் சுகுரா இருக்கு.ரெண்டு மரத்துல சரியா நாதம் வருல.பொற கிற இருக்குலாம்'
என்றான் வந்தவர்களில் மூத்தவன்.
'நல்லா இருக்குறதுக்கு காசு அப்புறம் என்னா'
என்றான் வந்தவர்களில் இளையவன்.
இது கேட்டு அவன் திரு திரு என்று விழித்தான். அவனுக்கு குழப்பமாகவும் இருந்தது.
'இது அதோட பஞ்சாங்கம் எல்லாம் எதுக்கு எம்மாம் காசு கொடுப்பிங்க் அது மட்டும் சொல்லுங்க
'ம் மரத்தை அறுத்து போட்டாதான் சொல்லுலாம்'
' மரத்தை அறுத்துடுவம்' என்றான் இளையவன்.
'மரத்தை அப்புறம் அறுக்கலாம் மொதல்ல காசு எம்மான்னு பேசுவோம்' அவன் சுதாரித்துக்கொண்ட மாதிரி பேசினான்.
'ஏம் வெட்டியா பேசிகிட்டு, நாலு தேக்க மரம் நால்ரெண்டு எட்டு தர்ரம்'
'என்ன எட்டாயிரம்த்ானா பிச்ச காசா இருக்கு. எனக்கு எண்பதாயிரம் வருணும்'
கட கட என சிரித்தான். மூத்தவன்.

'மரத்தை அறுத்துபோட்டு வச்சிகிறேன் வெலய தெரிஞ்சிகிட்டு.அப்புறம் விக்குறது பாக்குலாம்'
'சாரு தேக்கு மரத்தை என்னுமா வெட்டுவ லேசுபட்ட சமாச்சரம் இல்லே.மரத்தை எப்பிடி ஏத்துகினு போவ எந்த மரவாடிகாரன் எப்பிடி அறுப்பான் பாரெஸ்ட் ரெவுன்யு ஆபிசரு டவுனு வியேவோ எல்லாம் எதுக்கு கொழா சட்டை போட்டுகினு குந்தி இருக்குறாங்க உன்னை வுட்டுடுவாங்களா' என்றான் வந்தவர்களில் இளையவன்.
அவனுக்குத்தலை சுற்றியது. இது எல்லாம் உண்மையா சும்மா இவர்கள் விடும் ரீலாக இருக்குமா என யோசித்தான்.
'இந்தா நாலு மரத்துக்கும் நாலு ஆயிரம் அச்சாரம் மேங்கொண்டு இன்னும் பத்து ரூவா தர்ரன் அது மரம் வெட்டகுள்ள குடுப்போம். என்னா எம் பேரு சங்கர ஆசாரி தே இருக்குற கார்குடல்தான் என் ஊரு இந்த பக்கத்துல யாருக்கும் தெரிஞ்ச பெரிய ஆசாரியும் தான் நான் ' என்றான் வந்திருந்த முதியவன்.
பணத்தை வாங்குவதா வேண்டாமா என்று யோசித்தான்.மனம் சலனமானது. உடன் சற்றுபயமாகவும் இருந்தது.அச்சத்தோடு நான்காயிரத்தை வாங்கி சட்டைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டான்.
' எண்ணைக்கு வருவிங்க மரம் வெட்ட'
'இண்ணைக்கு என்னா வெசாழனா அடுத்த வெசாழனுக்குள்ள சொச்ச காசு குடுத்துட்டு மரத்தை எடுத்துகுறம்.மரம் உள்ளார பொறன்னா எங்களுக்கு நஸ்டம்தான் என்னா செய்வ வெயாபாரம்னா வரும் போவும் அத பாக்குலாமா சாரு. மரம் பத்திரம் நாங்க வர்ரம்'
முதியவன் வாசலுக்கு வந்தான். இருவரும் அங்கிருந்து கிளம்பிப்போயினர.
அவன் பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்துவிட்டமாதிரி நினைத்தான்.அடுத்த வியாழன் வந்தது. இன்னும் அடுதத வியாழன் வந்தது. நாட்கள் ஓடின.தோட்டத்து மனைக்காரன் வந்தால் என்ன பதில் சொல்லுவது.அவனே மரங்களை வெட்டிக்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்பானோ என்று யோசித்தான்.
'சாரு சாரு'
'யாரது சாரு பூருன்னுகிட்டு' மெதுவாகத்தான் சொல்லிக்கொண்டான்.
'ரெண்டு நாளா என்னா ஒரே ரோசனையில இருக்க்றீீங்க என்னா சேதி' எதிர்வீட்டு பால்கடைக்காரன் ஆரம்பித்தான்.
'இல்ல தோட்டத்து மனையில வூடு கட்டப்போறாங்களாம். தேக்க மரம் வெட்டுணும்னு சொன்னாங்க. அச்சாரம் நாலாயிரம் வாங்கிப்புட்டேன். அந்த பாழாபோன ஆளுவ இன்னும் வருல நாளு இருவது ஆச்சி வந்து மரத்தை இன்னும் வெட்டுல'
'இப்ப என்ன அதுக்கு . நாளும் ஆயிபோச்சி இருவதுக்கு மேல நீவருல தோட்டத்து மனைக்காரன் என்னமுடுக்குறான். என்னா செய்வேன்னு சொல்லுறது. இப்ப இப்ப .எனக்கு ஒரு யோசனை அந்த பாக்கி பத்தாயிரம் நா தர்ரேன்.மரத்தை வெட்டிகுறன். எனக்கும் மரம் தேவை இருக்குது. கெடக்கட்டுமேன்னு இருந்தேன். நேரம் காலம் கூடி வருதே என்னா நான் சொல்றது'
'ரொம்ப நல்லது சாரு அந்த அச்சார பனம் நாலாயிரம் எங்கிட்ட இருக்குது. நானு என்ன செய்ய'
'அந்த நாயிவ வரும் வருட்டும். நா பாத்துகுறன். ஏங்கிக்க்ட்ட அந்த நாயை இட்ட்ாங்க உங்களுக்கு இதுல என்னா சோலி இருக்கு நா பாத்துக மாட்டனா பின்ன'
அவனுக்கு மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பழமலை நாதக்கடவுள் மட்டும் சும்மாயில்லை. அவரும் ஏதோ முடிந்தவரை உதவி செய்கிறார். மனத்திற்குள் பழமலை என்று சொல்லிக்கொண்டான்.
அவனுக்கு எப்படியோ ஒரு பதிநான்காயிரம் கைக்கு வந்து சேர்ந்துவிட்டதில் மகிழ்ச்சி.தேக்க மரங்களை வெட்டி எதிர் வீட்டு பால் கடைக்காரனே எடுத்துப்போனான்.
தோட்டத்து மனைக்காரன் கடைக்கால் பறிக்க வருவான் வருவான் என்று அவன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான்.தேக்க மரம் வெட்டி அவனுக்கு ஒத்தாசை செய்துவிட்டதைச்சொல்லி விடலாம் என்று தினம் தினம் யோசனையில் இருந்தான்.
ஒரு நாள் தோட்டத்துபக்கம் குல்லாவைத்த ஒரு பாய் ஏதோ சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்.
'அய்யா யாரு' அவன் கேட்டான்.
'என்னா சாரு என்ன மறந்துட்டிங்க.நானும் நீங்களும் ஒண்ணாதான் மனைவாங்குனம்.அந்த வள்ளல் முதலிகிட்ட.நானு துபாயி போயி ஆச்சி பத்து வருஷம் இருக்கும். நேத்துதான் ஊருக்குத் திரும்பி வந்தன்.நீங்க தோட்டத்துல தேக்கங்கண்ணு வச்சது கூடம் எனக்கு தெரியும்.அதுவுளயும் காணும் வெட்டிட்டிங்களா'
''இப்பதான் வெலைக்கு குடுத்தேன்.தோட்டத்துல தேக்க மரம் இருந்தா குடும்பத்துக்கு ஆவாதுன்னு எங்க ஊரு அய்யிரு வேற ஓயாம சொன்னாரு'
தேக்க மரத்தை எல்லாம் வெட்டச்சொன்னதும் ஆசாரியாக வந்து மரம் வெட்டிக்கொள்ள அச்சாரம் தந்ததும் அவன் எதிர்வீட்டு பால்கடைக்காரன் போட்ட நாடகம் என்று அவனுக்கு மண்டையில் உரைத்தது.
அவன் தோட்டத்தைவிட்டு த்தெரு பக்கம் வந்தான். பூணல் போட்டுக்கொண்ட புது ப்புது ஆசாரிகள் எதிர்வீட்டின் முன் கிடந்த தேக்க மரங்களை அளந்து அளந்து சாக் பீசாலும் கரிக்கட்டியாலும் வருவி கோடு போட்டுக்கொண்டிருந்தனர். 'நம்ம தெரவுசு யாருக்கு வரும்' என்று சொல்லி வாயிற்கதவை மட்டும் தாழிட்டு ப்படுத்து உறங்கிப்போனான்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
.












..
'

No comments:

Post a Comment