Sunday, September 25, 2022

கவிதை -சொல்லுங்களேன்

 

 

 

 

 

 

சொல்லுங்களேன்              

 

புரியாத புதிர்களா இவை

விவேகானந்தருக்கோர் ராமகிருஷ்ணர்

பீமராவுக்கோர் அம்பேத்கர்

சுப்புரத்தினத்திற்கு பாரதி

காமராஜருக்கு சத்தியமூர்த்தி

அமைந்ததெப்படி

காந்தியும்  நேருவும்

பட்டேலும்  போசும்

சாதியொட்டுப்பெயர்கள்

அப்படியொரு நினைப்பு

உண்டா  நமக்கு?

தாழ்த்தப்பட்டோர் வேதமாணிக்கம்

முதுகுன்ற பொதுத்தொகுதியில்

நெல்லைச்சீமையிலோ

பார்ப்பனர் சோமயாஜுலு

சட்டசபைக்கு நின்றார்கள் வென்றார்கள்

சாத்தியமானது அன்று.

பொதுடமைக்காரனே ஆனாலும்

சாதி பார்த்து நிறுத்தக்

கற்றுக்கொண்டோமே

எப்போதிருந்து தோழா?

------------------------------------------

 


No comments:

Post a Comment