கொடுமை
வீடு தேடி
வந்த
காமாந்தகனுக்கு
‘அய்யாவுக்கு
எப்படி இருந்தா பிடிக்கும்
சைவமா வைணவமா’
வினாவைத்தானாளாம்
விலைமகள்
பட்டமளிப்புவிழா
பல கண்ட பேராசிரியர்
இந்நிலத்துக்கு
அமைச்சரும்கூட
கொடுத்திட்ட
சைவ வைணவ விளக்கம்
உலகமே கேட்டுத்தானிருக்கிறது
வானாகி மண்ணாகி
பாடிய
மணிவாசகரும்
சிற்றம் சிறுகாலே
பாடிய
திருவில்லிப்புத்தூர்
நங்கையும்
ஏன் பெரியபுராணம்
தந்த சேக்கிழாரும்
திருபெரும்புதூர்
ராமானுஜரும்
வெண்ணீரணிந்த
வள்ளலாரும்
கல்லரையில்
இந்நேரம் புரண்டு புரண்டு படுத்திருப்பார்கள்
தெய்வத்தமிழ்தந்த
தேவர் மண்
பெரிதாய்
அலட்டிக்கொள்ளவுமில்லை
நெஞ்சு கனக்கிறது
காலம்தான்
விடை தரணும்.
-----------------------------
No comments:
Post a Comment