Wednesday, January 22, 2020

recent issue- actor rajini regarding


சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்

This entry is part of 40 in the series 20080103_Issue
எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும்
தமிழர் தலைவர் -ஆசிரியர் சாமி சிதம்பரனார்
வெளியீடு. பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் 50, ஈ வெ கி சம்பத் சாலை
பெரியார் திடல் ,வெப்பெரி சென்னை 600007. முதற்பதிப்பு 1939. நன்கொடை ரூ.65. பக்கங்கள் 272.
—————-
சீரார் ஈ.வெ.ரா அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு. யார் என்ன சொன்னபோதிலும் என்றும் குறையாது.
-சி.. இராஜகோபாலாச்சாரியர். கவர்னர் ஜெனரல். தில்லி -22-11-48 – பக்கம்-199
——————————————————————–
தமக்கென வாழாது பிறர்க்கே வாழ வேண்டுமென்பது,பண்டைத்தமிழரின் உயரிய கருத்தாகும். இச்ச்£ரிய கருத்தை தம் வாழ்நாட்களில்
கொண்டு, அதன்படி எல்லியும், காலையும் தூய தொண்டாற்றி மக்கள் அனைவரும் மாயவலையில் சிக்காவண்ணம் அறிவு கொளுத்தி
பிறப்பொக்கும் என்னும் தூய மொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள் நம் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முதல்வர் என்றால் ,வேறு கூறவேண்டுமோ?
-காஞ்சி.. பரவசுத்து இராஜகோபாலாச்சாரியார் பி.. ஏ. – பக்கம்-235
தேர்இல்லை,திருவிழாஇல்லை தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்.சுவாமியை குப்புறப்போட்டு வேட்டி துவைக்கலாம் என்றார். இவரைக்காட்டிலும் பழுத்த நாச்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. ,,,,,,,, மனசாட்சிக்கும்,தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை நாச்திகன் என்று அழைக்கும் அன்பர்கள் நாச்திகம் யாது என்றே தெரிந்துகொள்ளவில்லை என்றே சொல்வேன். அநீதியை எதிர்க்கத்திறமையும்,தைரியமும் அற்ற ஏழைகளாய்ச்சொரணையற்றுக்கிடந்த தமிழர்களினுள்ளத்தைக்கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாயக்கரைப்பெரிதும் சேர்ந்ததாகும் அவர் இயற்கையின் புதல்வர்.! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம்,,,, தமிழ்நாட்டின் வருங்கால பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன்; வருங்கால வாழ்வின் அமைப்பு.
–வ.ரா-( காந்தி-இதழில்-1933) பக்கம்-238
தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்கமுடியுமென்று தயங்காமல் கூறுவேன்.,,,,, அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை.
– கல்கி- ( ஆனந்தவிகடன்-1931) பக்கம்-240
இன்னமும் சொல்லுகிறேன். நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக்குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும், இந்தப்பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும் அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும் பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
– பக்கம்- 14
———————————————————————————————————————-
ஆனால் எப்போது உங்கள் மனசாட்சியும் பகுத்தறிவும் இடங்கொடுத்து நீங்கள் கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து
உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் ஒரு புறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு கழக்கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றவேன்டியதுதான் முறை..
-பக்கம்-16
——————————————————————————————————————
செத்துப்போன ஜெனரல் டயர் துரையை விடக்கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்துகொண்டு பிள்ளைக்குட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள்.,,,,,,,தெருக்களிலே போகக்கூடாது கிட்டத்திலே வரக்கூடாது என்கிறார்களே? இதைப்பற்றி
யாருக்கும் உறைக்கிறதா? இதனால் நமக்கு அவமானமாய் இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப்பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகளைப்படுபாவி ‘டயர்த்தன்மை’ என்று எழுதுகிறதா?
-பக்கம்-171
பெண்கள் விடுதலைக்குப்பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் ஏமாற்றுவதற்குச்செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.
,,,எங்காவது பார்ப்பனரால் பார்ப்பனரல்லாதார்க்குச்சமத்துவம் கிடைக்குமா?,,,,,,,,பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லது பெண்களுக்கு விடுதளை இல்லை.
-பக்கம்-172
தமிழர்களைத்தட்டி எழுப்பித்தமிழர்களுக்காகப்போராடும் ஈ, வெ.ரா. ஔர் தமிழர் அல்லர். அவர் ஒரு கன்னடியர்.
-பக்கம்-188
பார்ப்பன நஞ்சு எவ்வளவு கொடிது, எத்தகைய கொல்லும் சக்தியை த்தன்னகத்தேகொண்டது என்பதை விளக்குவதுதான் அவரது.,,,,,,,,
——————————————————————————————————————— பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால் ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்,,,,,,,,,பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத்தின்னாது. அதுபோலவாக்கும் நம் பார்ப்பனத்தன்மை.
-பக்கம்-197.
———————————————————————————————————————-
10/04/065 ல் கம்ப ராமாயணத்திற்குத் தீ 1 நாடெங்கும் பெரியார் அவர்களின் அறிக்கைப்படி திராவிடர் கழககத்தினரால் கம்பராமாயனத்திற்கு தீ இடப்பட்டு ’விடுதலை.’ அலுவலகத்துக்குச் சாம்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
-பக்கம்-264
23,24-1-71 ல் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு 24/01/71 ல் ஞாலம் புகழ் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்.
அய்யா ஊர்வலம் வந்தார். ஊர்வலத்தில் இந்துமதக்கடவுளின் யோக்கியதைகளை அம்பலப்படுத்தும் சித்திரங்கள் டிரக்குகளில் இடம் பெற்றன. இராமனுக்கு ச் செருப்படி வீழ்ந்த்தும் இறுதியில் இராமனுக்குத்தீ மூட்டப்பட்டதும் இந்த மாநாட்டில்தான். ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது’ என்ற சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இந்தமாநாட்டில்தான். இவைகளை வைத்துக்கொண்டு பார்ப்பனர்களும் அவர்களது பாதம் தாங்கிகளும் தி மு க வுக்கு எதிராகத்தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்கள்.
-பக்கம்-268
————————————————————————————————————

No comments:

Post a Comment