Tuesday, April 1, 2025

அன்புசால் தோழரே கடிதம்

 

 

 

அன்புசால் தோழரே  வணக்கம

தொலைத்தகவல் துறையிலே  அன்றாடம்  அபரிமித வளர்ச்சியும்  மாற்றமும் தொடர்கின்றன.  தொழில்நுணுக்கம் உலகத்தையே உள்ளங்கையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.  மானுடம் வென்றிருக்கிறது. பெருமைப்படுகிறோம். இவற்றையெல்லாம் சாதித்து நிற்கும் அறிவியலாளர்கள், பொறியாளர்கள்,தொழில்நுட்ப வல்லுநர்கள், உடன் உழைத்திட்ட தொழிலாளர்கள் அத்தனைபேரும் நமது வணக்கத்திற்குரியவர்கள்.

இந்திய விடுதலையைப் பெற்றுத்தருவதில் முன்னின்று போராடிய இயக்கம் இந்தியத் தபால் தந்தி ஊழியர்கள் இயக்கம்.   என்றும் பாரத தேசத்தைப் போற்றுபவர்கள் அணிவரிசையிலே  முன் நிற்பவர்கள்  நாம்.

அகில இந்திய சங்கத்திற்குப் பிரதான அச்சாகி  நமது  பேரியயக்கத்தை முன்னெடுத்துச்செல்வது தமிழ் மாநில சங்கம். தமிழ் மாநிலத்தின் ஆற்றல் மிகு அன்புத்தலைவன் தோழர் ஜகன். அவர் காட்டிய  தோழமை வெளிச்சத்தில் முகிழ்த்து எழுந்தது  நமது மாநில சங்கம். 

தோழமைப்பேரொளி ஜகனுக்கு ஆசானாய் விளங்கிய தோழர் பி. டி  சிரில் இயக்கம் கண்டது கடலூர் பூமி. தோழர்கள் ரகுநாதன், ரெங்கநாதன் ஆகிய இரட்டையர்கள் தமது  தோழமையால் பாசத்தால் அன்பால் கடலூர் தொலைபேசிப்பகுதியைப் போராட்டக் களமாய் மாற்றிக்காட்டிய சாகசக்காரர்கள். நேர்மை பளிச்சிடும் அவர்தம் நடப்பால்  அதிகாரவர்க்கத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கினர். அவர்களோடு நாம் இயக்கம் கண்டோம் என்பதே நமக்கு வரலாற்றுப் பெருமை.

சிதம்பரம் பகுதியிலே   வருகிற மார்ச், 6 -7,  2025,   தமிழ் மாநில மாடு. ஆனந்த தாண்டவம் ஆடும்  இறைவனின் அற்புதத் திருத்தலம். அன்னம் பாலிக்கும் தில்லை என்பார் பெரியோர்.  இந்நகரம் விருந்தோம்பலுக்குப் பெயர்போன பெரிய மனமுடை சான்றோர் உறைநிலம். சிதம்பரம் நகரில்  நடைபெற இருக்கின்ற தமிழ் மாநில மாநாட்டிற்கு சீர்மிகு வரவேற்புக்குழு  நியமிக்கப்பட்டுள்ளது.

வரவேற்புக்குழுவின் தலைவர் பொறுப்பின மண்ணின் மைந்தர்  ஆற்றல் மிகு ஜி எம் ஸ்ரீதரன் வாண்டையார் அவர்கள்  அன்பு கூர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இம்மாநாடு வெற்றி மாநாடாக அமைந்து சிறக்கும் என்பதில் நாம் பெருமைகொள்கிறோம்.

 நமது அண்ணாச்சி தோழர் ரெங்கநாதன்.  அவர் தொழிலாளியின் இலக்கணம் இப்படி என்று நமக்கு வாழ்ந்து  வழிகாட்டிய தோழமை மண். அவருடைய பெயரால் தமிழ் மாநில மாநாட்டு அரங்கம். இப்பகுதித்தோழர்களின் மூச்சுக்காற்றய் உலாவந்த தோழர் ரகுநாதன்.  அவரின் பேராலே  பொறுத்தமான ஆளுமைகளின் விவாத மேடை. சிதம்பரத்து உடன்பிறவாச் சகோதரன், சுதாகரன்.  நம்மைப் பாசத்தால் நெகிழவைவைத்த அருமைத்தோழர். அவர் பெயரிலே  தமிழ் மாநில மாநாட்டு உணவுக்கூடம். நமது  இயக்க வேர்களை நெகிழ்வோடு போற்றுவோம்.

இயற்கை பேரிடர் சுனாமியும், கடுங்காற்றும், கொட்டும் மழைவெள்ளமும் எதிர்கொண்டு  நமது  சேவையைச் செவ்வனே ஆற்றுபவர்கள் நாம். இத்தேசமும்  இம்மக்கள் சமுதாயமும் நமது  இருகண்கள். நமது சேவையைத் திறம்படச்செய்வதே நமது ஆற்றல். இவை அனைத்தும் கற்பிக்கும் பள்ளியாய் நமது தொழிற்சங்கம்.

சிதம்பரம் மாநில மாநாட்டிற்கு   ஆற்றல் மிகு உயர் அதிகாரிகள்  அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க இருக்கிறார்கள். அவர்கள்  அனைவரின்  வருகை  நமது சிதம்பரம் மாநில மாநாட்டிற்கு விழுமியம் சேர்ப்பது.

சிதம்பரம் மாநிலமாநாடு வெற்றிகரமாக அமைய  நம்மால்  இயன்ற பொருளுதவி அளித்து உதவிடவேண்டியது  நமது  வர்க்கக் கடமை. உங்கள் மனமோ என்றும் பெரிது.  சிதம்பரம்  தமிழ் மாநில மாநாடு  சிறக்க   தங்களால்   இயன்ற  பொருளுதவி நல்கி  உதவுவீர்கள் என்கிற பெரு நம்பிக்கையோடு.

                                                                                                                                                  இவண்

                                                                                                                                  

 

 

 

No comments:

Post a Comment