Friday, September 19, 2014

vedhavanam



¦Àâ£÷ ¯õ§Á¡Î

§Å¾í¸û §¸¡òШÅò¾¡ý «ó¾
§Å¾í¸û ÁÉ¢¾÷¾õ ¦Á¡Æ¢Â¢Ä¢ø¨Ä
§Å¾í¸û ±ýÚ ÒÅ¢§Â¡÷ ¦º¡øÖõ
¦ÅÚí¸¨¾ò¾¢ÃÇ¢Äù§Å¾Á¢ø¨Ä
§Å¾í¸¦ÇýÈÅüÚû§Ç- «Åý
§Å¾ò¾¢ü º¢Ä º¢Ä ¸Äó¾ÐñÎ
§Å¾í¸Ç¢ýÈ¢ ¦Â¡ýÈ¢ø¨Ä þó¾
§Á¾¢É¢ Á¡ó¾÷¦º¡Öõ Å¡÷ò¨¾¸¦ÇøÄ¡õ- À¡Ã¾¢

§Å¾í¸Ç¢ø ±ò¾¨É§Â¡  ¦ºö¾¢¸û Á¨ÈóÐ ¯¨Èž¡Ôõ «¾¨É ±Ç¢¾¢ø «È¢óÐ ¦¸¡ûÙ¾ø  þÂġР±ýÚ ¿õÒÅÐõ §ÀÍÅÐõ ¿ÁìÌ ÅÆ¨Á ¬¸¢Â¢Õ츢ÈÐ. «ôÀÊ Á¨Èóи¢¼ì¸§ÅñÊ Ţ¼Âí¸û ²ÐÁ¢ø¨Ä ±ø§Ä¡Õõ «¾ý ¦À¡Õû «È¢¾ø §ÅñÎõ ±ýÚ ¦¸¡ûŧ¾ ¿¢Â¾¢..
Á츨Ç¾¢º¡¾¢Â¡öôÀ¢Ã¢òÐ §Å¾õ ´Ðžü¦¸É ÁðΧÁ þýɺ¡¾¢ ±ýÚ §Å¾í¸û ±ùÅ¢¼òÐõ ¦º¡øÄ§Å¢ø¨Ä.
«È¢× Å¢üÚôÀ¢¨ÆôÀ¡ö ¯ÕÁ¡Úõ§À¡Ð º¢ýÉò¾Éí¸û »¡É§Á¨¼Â¢ø ѨÆóЦ¸¡ñ¼É. Óó¾¢ì¦¸¡ñ¼ º¢ýÉò¾Éí¸û ±ô§À¡Ðõ ¬Ùõ¨¸§Â¡Î  ¸û ¯È× §ÀÏÅÉ.
¯ûǨ¾ ¯ûÇÀÊ ¯¨Ãò¾Öõ ¶÷¾Öõ «È¢Å¢ý Ó¾üÀÊ.  ¬¸ §Å¾í¸û Áì¸Ç¢ý
Å¡ú쨸¨Â Å¢¨Æ¨Å §Åñξ¨Ä «Å÷¸ðÌò¦¾Ã¢ó¾ «ý¨È ¿¢Â¡Âò¨¾î
¦º¡ø¸¢ýÈÉ.
À¢÷ôÀ¸û ¦ºÊ¦¸¡Ê¸û ¬ÎÁ¡Î¸û À¢È Å¢Äí̸û ÀȨŸû ÁÉ¢¾÷¸û þÉ¢§¾ šƧÅñÎõ ±ý¸¢È  §¸¡Ã¢ì¨¸¨Â §Å¾õ þÂü¨¸Â¢¼õ ¨Å츢ÈÐ.
§Å¾ ¸¡Äí¸Ç¢ø þó¾¢Ãý ÝâÂý  ¯¨„  ¸¡üÚ ¾ñ½£÷ âÁ¢ ¾£ þ¨Å Áì¸û Žì¸ò¾¢üÌâÂÉ ¬Â¢É. «ì¸¢É¢¨Â Ó츢ÂÁ¡ö ÅÆ¢ÀÎÅÐõ §º¡ÁÀ¡É Å¢Åè½Ôõ Å¡º¸ÛìÌ  §Å¾í¸Ç¢ø º¢ÈôÀ¡ö «ÛÀÅÁ¡¸¢ýÈÐ.
¬ñÌÆó¨¾¸û Å£ÃÓ¨¼ÂÅ÷¸Ç¡¸ þÕò¾¨Ä Óý ¿¢ÚòÐÅÐõ,  ¾îÔì¸û ±É «¨Æì¸ôÀÎõ þÉò¾¡¨Ã ±ô§À¡Ðõ «Å÷¸Ç¢ý ±¾¢Ã¢¸Ç¡¸ ÅâòÐ즸¡ñÎ «Å÷¸¨Çô§À¡Ã¢ø  ¦ÅýÚ ¦¸¡ýÚ ÓÊôÀ§¾  §Å¾¸¡Äò¾Å÷¾õ ¾¨Ä¡ À½¢Â¡¸ þÕ󾨾Ôõ §Å¾õ þÂõÒ¸¢ÈÐ.
À¢÷ò¦¾¡Æ¢Ä¢ø ¯Æ× ¦ºö¾¨Ä ¸Äô¨À¨Â Ѹò¾Ê¨Â ÁñÅÇò¨¾ §Å¾í¸û §À͸¢ýÈÉ.
´Îõ ¾ñ½£¨Ã ¿¢¨Ä¸Ç¢ø §¾ì¸¢  À¢÷¸ðÌô À¡öîÍŨ¾ §Å¾õ ÌÈ¢ôÀ¢Î¸¢ýÈÐ.
«Ç¢ì¸ò¦¾Ã¢Â¡¾Åý «È¢Å¢Ä¢ ±ýÚõ Àí¸¢ðÎ ¯ñ½¡§¾¡ý À¡Å¢ ±ýÚõ §Å¾í¸û
§À͸¢ýÈÉ.  ¾£Â¨Å¢ɢýÚ ¿ý¨Á, þÕǢĢÕóÐ ´Ç¢, «Æ¢Å¢É¢ýÚ ¬ì¸õ ±Éõ¨Á¨Â «¨Å §Åñθ¢ýÈÉ  §ÅûÅ¢¸Ç¢ø Å¢Äí̸û ÀĢ¢¼ôÀÎÅÐ «È¢ÂÓʸ¢ÈÐ. ÀĢ¡ɾý ¯¼ø §ÅûÅ¢¿¼¡òЧšâý ¯½×ìÌõ  «¾ý ¬ýÁ¡ §ÁÖĸÓõ  À½¢ì¸¢ýÈÉ.
À¢Ã¡õ½÷¸ðÌõ §Å¾õ  ¬ì¸¢§Â¡÷ ÌÆ¡òÐìÌõ ´Õ Å¢ò¾¢Â¡ºì§¸¡Î þÕ󾨾Ôõ §Å¾í¸Ç¢ø þÕóÐ «È¢Â Óʸ¢ýÈÐ ¸½Å§É¡Î Å¡Øõ ͸ò¨¾ ÌÆó¨¾¸§Ç¡Î ¦ÀÚõ þýÀò¨¾, ž¢Ôõ ţΠšØõ °÷ þ¨ÅºÇ¢ý þÄ츽ò¨¾ §Å¾õ §À͸¢ÈÐ.
Ã¢ì §Å¾õ  ÁÉ¢¾îº¢ó¾¨ÉìÌõ ¸üÀ¨ÉìÌõ À¢Ã¾¡É þ¼õ ¦¸¡Î츢ÈÐ. ƒ¤÷ §Å¾§Á¡ §ÅûŢí̸¨Ç ¨ÁÂôÀÎöòи¢ÈÐ. º¡Áõ §Å¾ Å¢¼Âí¸¨Ç ¾¡ÉÈ¢ó¾ þ¨º »¡Éò§¾¡Î Óý ¿¢Úòи¢ÈÐ. «¾÷Žõ Á¢Ì¾¢Ôõ ÁÕòÐÅìÌÈ¢ôÒì¸Ç¡Ôõ ¦Ä¡Ç¸£¸
Å¡ú쨸, «Ãº¢Âø «È¢× ÀüȢ ¸ÕòÐì¸û ¦¸¡ñΠŢÇí̸¢ÈÐ..
 ÓüÚõ Á¡¸Å¢¨¾¸Ç¡É §Å¾í¸û ¿¢îºÂõ Å¡º¢ôÒî͸õ «Ç¢ôÀÉ. ¦¾¡¼÷óÐ Åó¾
¯À¿¢¼¾í¸û ±ô§À¡Ðõ  Ó츢ÂÁ¡ö »¡É Å¢¼Âí¸û §À͸¢ýÈÉ. ¯Ä¸òÐ »¡É ì¸ÕòÐì¸û «¨Éò¾¢ý ¦Á¡ò¾  ì¸ÕçÄÁ¡ö «¨Å Å¢Çí̸¢ýÈÉ.
  º¢ó¾¨É «È¢Å¢ý ¬¸ô¦ÀÕõ  ¯îºò¨¾ ¯À¿¢¼¾í¸Ç¢ø ±ðÊ ´Õ Áì¸Ç¢Éõ ±ôÀÊ ¸¡ÍìÌÓý ¾ý¨É ¾ñ¼É¢¼ ¸üÚ즸¡ñ¼Ð ±ýÀÐ §Å¾¨ÉìÌâ ¬ö×ìÌâ  Å¢Ã¢ó¾ ¸ÇÁ¡¸¢ Å¡º¸ÛìÌ «ÛÀÅÁ¡¸¢ÈÐ.
¿¢¨ÈŢɢýÚ ±ØÅÐ ¿¢¨È×.  ¿¢¨È× Àí¸¢¼ôÀ¼  ±ïÍÅÐ ¿¢¨È×  ¦Áö ¿¢¨È× À¸¢Ãį̀È¡¾Ð ±ý¸¢È «È¢Å¢ý Ţξ¨Ä  ¯À¿¢¼¾ò¾¢ø ÐøÄ¢ÂÁ¡öò ¦¾Ã¢Å¢ì¸ôÀθ¢ÈÐ.
´üÚ¨Á §ÀϾ¨Ä ¦ºÂø¸û ¦ºõ¨Á¡ö ¦ºöÂôÀξ¨Ä ´ýÈ¢ò¾ º¢ó¾¨É¢ý ¦ÅüÈ¢¨Â §Å¾í¸û ±ÎòÐô§À͸¢ýÈÉ.
§Å¾í¸û Áì¸Ç¢ý ¦À¡Ð¡òÐ. ±øÄ¡÷ìÌõ ¯Ã¢¨Á ¯¨¼òÐ. «¨Å ¿ÁìÌô Ò⡾ Å¢¼Âí¸û ÀÄ ÀüȢ¾ý ¦Á¡ò¾ ¯ÕÅýÚ.  Áì¸û §Àº¢Â Å¡÷ò¨¾¸§Ç §Å¾í¸Ç¡¸ ¸Å¢ ¯Õ즸¡ñ¼É.
¸ûÇÁüÈ ÓÉ¢Å÷¸û ÜÚõ ¸Õ¨½ Å¡º¸òÐ ¯ð¦À¡Õð¸û «í§¸ Á¢¸×õ ¯ñÎ.
¯¨Æô¨À Å£Ãò¨¾  §º¡Áúò¨¾ §À¡÷ö¾¨Ä À¢÷ò¦¾¡Æ¢¨ÄôÀüÈ¢¦ÂøÄ¡õ «Ð  Å¢ò¾¡ÃÁ¡öô§À͸¢ÈÐ.
¾îÔì¸û ±ýÀÅ÷¸§Ç¡Î §Á¡¾¢ ¿¢üÀ¨¾  Å¢¼¡ôÀ¢Ê¡ö À¢Ã¾¡ÉÁ¡ö §Å¾õ ÓýÉ¢Úòи¢ÈÐ.
¾îÔì¸û  þÅ÷¸¦ÇÎ ´òÐô§À¡¸¡  þó¿¢ÄòÐôÒá¾É Áì¸Ç¡¸ ¿¡õ¦¸¡ûÇÓÊÔõ
þÂü¨¸ò¦¾öÅò¨¾ ÁðΧÁ ÅÆ¢Àð¼ Áì¸ðÌ þý¨ÈìÌ §Àá¢Ãõ ÀÃÅ¢ ²òÐõ ¦ÀõÁ¡É¡ö «Åý Á¡È¢ô§À¡ÉÐ ¸¡Äò¾¢ý Å¢¨É,
¯¼ý ¿õÓý ±Øõ Ţɡ ±ýÀÐ þЧÅ. Ò⡾ ¦Á¡Æ¢Â¢ø ±ô§À¡Ðõ ¾ûÇ¢§Â ¿¢üÀÅ÷¸Ç¡ø ´¾ôÀÎõ «Ð ±ôÀÊ ±íÌÁ¢Õô§À¡¨É ±¾¢ÖÁ¢Õô§À¡¨É ô§Àº¢¼î º¡ò¾¢ÂÁ¡Ìõ.
 Á§¸¡ýɾÁ¡É ´Õ Á¨Ä¢ý ÀøÅñ½îº¢¸Ãí¸Ç¢ý §ÁÄ¡¸ò¾ý §À¡ì¸¡¸ þɢ ¸£¾õ À¡ÊôÀÈó¾ ´Õ ¸¢Ç¢ ¾¢Ë¦ÃýÚ ²§¾¡ º¡À§ÁüÚ  Á¨ÄÂÊÅ¡Ãò¾¢ø ´Õ ŨÇô¦À¡ó¾¢ø ÍÕñÎ ¦¿Ç¢óÐ Å¡Øõ ´÷ °÷ÅÉ Å¨¸ ¯Â¢ÃÉÁ¡¸ Á¡È¢É¡ø ±ôÀʧ¡ «¨¾ô§À¡ýÈ þó¾ ôÀñÀ¡ðÎ À⽡Áõ þÅñ §¿÷óРŢðÊÕ츢ÈÐ. ¬¾¡Ã ÅÄ¢× §À¡ö «Ø¸ø ±ïº¢ ¿¢ü¸¢ÈÐ.
Á¡ìÍÓøÄâý þ째ûÅ¢ ó¾¨É  Á¨Ä¡Ǡ ÍÌÁ¡÷ «Æ£ì§¸¡Î ¾ý  ‘¾òÐÅÁº¢’’ ¸ðΨà áÄ¢ø À¾¢× ¦ºö¸¢È¡÷. Õòà ÐǺ¢¾¡º¢ý ¾Ì ¾Á¢Æ¡ì¸õ ’¾òÐÅÁº¢’ Å¡º¢ô§À¡÷ìÌ À¢Ãò¾¢Â𺠬Éó¾õ ÅÆí¸¢  ¿¢îºÂõ «ÈüÈõ ¦¸¡½Õõ. ±ý¨É ôÀ¡¾¢ò¾ Õòà ÐǺ¢¾¡º¢ ¾Á¢ú ÅÊÅ ¾òÐÅÁº¢ ¯í¸û ±ø§Ä¡¨ÃÔõ À¡¾¢ì¸ §ÅñÊ §Å¾ ÅÉõ ¯û  ѨÆóРŢÕðºí¸û ¾Ã¢º¢ò§¾ý.  ¯ñ¨ÁÔÁ¡ö þý¨ÁÔÁ¡ö «ò¾¨ÉÔõ ¦¸¡ñ¼Ð  ´Õ ÅÉõ ±ýÀ¨¾ôÀ¾¢× ¦ºö¾ø §¿÷¨Á¡ÉÐ.
 ¾¢ñ¨½ ¾Çò¾¢ø ¦¿ÊÐ «Á÷óÐ  §Å¾ ÅÉ «ÛÀõ À¸¢Ãò¾¢ÂÁ¡ÉÐ ±ÉìÌì ¸¢¨¼ò¾ ´Õ ¦ÀÕõ§ÀÚ..  
§Å¾ì¸Å¢¨¾¸û ¬úóÐ À墀 »¡Éõ źôÀ¼Ä¡õ.
¦Àâ¾¢Ûõ ¦ÀâР«Ð.  ¿øÄ «Ð¦Å¡ý§È ¦À⾡Ìõ.
Å¡úòÐì¸û ¯Ã¢ò¾¡ì̸¢§Èý.
.
-------------------------------------------------------------------









Thursday, September 18, 2014

su.ki maraivu






 ¾Á¢ØìÌõ Åí¸¡Ç¦Á¡Æ¢ìÌÁ¡É ÀñÀ¡ðÎô À¡Äõ Á¨Èó¾Ð.               -±Š…¡÷º¢



        ¦¸¡ø¸ò¾¡ Í. ¸¢Õ‰½ã÷ò¾¢  07.09.2014 »¡Â¢Ú ¸¡¨Ä ÁýÁ¨¼óÐÅ¢ð¼¡÷. ÒÐ째¡ð¨¼ì¸¡Ã÷. ÅÂÐ 94.«Å¡¢ý Á¸Ç¡÷ ¾¢ÕÁ¾¢ ¯„¡ ÀﺡÀ¢§¸ºý  ¦¾¡¨Ä§Àº¢Â¢ø þР Å¢„Âõ  ¦¾¡¢Å¢ò¾¡÷. ¸¼ó¾ ¦ÅûÇ¢ÂýÚ þÃ× ´ýÀÐ Á½¢ìÌ  ͸¢¨Â ¾¡õÀÃõ ² ƒ¢ ÁÕòÐÅÁ¨É¢ø ºó¾¢ò§¾ý. ¸¡¸¢¾ô¦À¡ð¼Äõ §À¡ø ÀÎ쨸¢ø ¸¢¼ó¾¡÷. ð¡¢ôŠ ¦º¡ðÎ ¦º¡ð¼¡¸ ¦ºýÚ ¦¸¡ñÊÕó¾Ð. ±ý§É¡Î  ¦ÁÐÅ¡¸ô§Àº¢É¡÷.
 ¾ÉÐ §ÀÃÉ¢ý ¾ûÇ¢ô§À¡É ¾¢ÕÁ½õ Á£ñÎõ 29.09.2014 ¿¨¼¦ÀÈ §ÅñÎõ. ¾ý þÈôÒ «ÐŨà ¿¢¸Æ¡Ð ¾ûÇ¢ô§À¡¸§ÅñΧÁ ±Éì¸Å¨Ä§Â¡Î þÕó§¾ý . §ÀÃÉ¢ý ¾¢ÕÁ½õ ¿ýÌ  ¿¼ó§¾È¢ÂÐ. «¾¢ø ±ÉìÌ ¿¢õÁ¾¢.  ¬É¡ø ±ý ¾õÀ¢ þîºÁÂõÀ¡÷òÐ º£É¡ ¦ºýÚÅ¢ð¼¡ý ±ý §¿Ãõ «ôÀÊ  ±ýÚ ÌÈ¢ôÀ¢ð¼¡÷..
 ¾Á¢Æ¸ò¾¢ø þó¾¢ò¾¢½¢ôÒ  «¾ý ¦¾¡¼÷ ¿¢¸ú×ÌÈ¢òÐ ò¾¡ý ±Ø¾¢Â ¸ðΨÃìÌ Åó¾ ±¾¢÷Å¢¨É ÁÉò¨¾ Á¢¸ §Å¾¨É À¼ ¨ÅòÐÅ¢ð¼Ð ±ýÈ¡÷. §º¡§Å¡Îõ ̓¡¾§Å¡Îõ ÌÕã÷ò¾¢§Â¡Îõ  ¾ý¨É÷òÐ À¡÷ôÀÉî º¡¾¢ Óò¾¢¨Ã Ìò¾¢Å¢ð¼¡÷¸û  ±ýÈ¡÷.
  ¾¢ÕìÌ鬂 ¦Àí¸¡Ä¢Â¢ø ¦Á¡Æ¢¦ÀÂ÷ò¾¾ü¸¡¸ åÀ¡ö 15000 º¡¸¢ò «¸¡¦¾Á¢Â¢Ä¢ÕóР Åà þÕôÀ¾¡¸î¦º¡ýÉ¡÷. ÌÚ󦾡¨¸ìÌ þýÛõ ¦ºö¾¢ º¡¸¢ò «ì¸¡¦¼Á¢Â¢Ä¢ÕóÐ ÅçÅñÎõ ±ýÈ¡÷.
¾¢Õ. ¿¡îº¢ÓòÐ «Å÷¸Ç¢¼õ þÐ ÌÈ¢òÐ ¦¼Ä¢§À¡É¢ø ¿¡í¸û §Àº¢Ôõ þÕ󧾡õ. ¾¢Õ .¿¡îº¢ÓòÐ×õ «ÅÃÐ Á¨ÉÅ¢Ôõ ͸¢¨Â ÁÕòÐÅÁ¨É째 ÅóÐ À¡÷òÐô§À¡ÉÅ÷¸û. 
þýÚ ±ý ÌÎõÀ ÝÆø.  «Å¡¢ý º¼Äò¨¾ô §À¡öôÀ¡÷ì¸ÓÊ¡¾ÀÊìÌ ¿¡ý. «Ð ͸¢ìÌõ ¦¾¡¢ó¾§¾  ͸¢Â¢ý Á¸Ç¡÷¾¡ý ¦¾¡¨Ä§Àº¢Â¢ø Í.¸¢  Á¨È× ÌÈ¢òÐ ¦º¡ýÉ¡÷.  ±Øò¾¡Ç÷ ¸¢Õ„¡í¸¢É¢ ±ý§É¡Î ¦¾¡¼÷Ò¦¸¡ñΠ͸¢ Á¨È×  ÌÈ¢òÐô§Àº¢É¡÷.
                                    Óõ¨À¢ĢÕóР «õ¨À ¦º¡øÄ¢ò¾¡ý ¸¢Õ„¡í¸¢É¢ìÌ Í¸¢ ¾¡õÀÃò¾¢ø þÕôÀ§¾ ¦¾¡¢Ôõ. ¸¢Õ„¡í¸¢É¢Â¢ý ¾¡Â¡÷ âý¢ ÌÈ¢òР͸¢ ±ýÉ¢¼õ ¦ÀÕ¨Á¡¸ô§Àº¢ÂÅ÷..
¿¡ý  ¾¢¨º ±ðÎõ ÌȢﺢ§ÅÄÛìÌ  ͸¢  Á¨È×ö¾¢ ¦º¡ý§Éý.þóÐ ¿¼Ã¡ƒÛìÌ ¯¼ý ¦ºö¾¢ ¦º¡øÄ§ÅñÎõ.±ýÈ¡÷. .
Äðºõ ÄðºÁ¡¸  À½ò¨¾ ²¨Æ¸Ç¢ý ÁÕòÐÅ ¦ºÄ×ìÌ  ±É ͸¢  þóÐ Á¢„ý ÁÕòÐÅÁ¨É- ¾¡õÀÃõ ãÄõ ÅÆí¸¢ÂÅ÷.
 '¿¡ý ¸¼óÐ Åó¾ À¡¨¾' ±ýÛõ ¾ÉÐ Í º¡¢¨¾¨Â  «üÒ¾Á¡¸ ±Ø¾¢ÂÅ÷.
¾¢¨º ±ðÎõ ¦Á¡Æ¢ ¦ÀÂ÷ôÒ  Å¢ÕР ¸¼æ¡¢ø Ó¾ý Ӿġ¸ô¦ÀüÈÅ÷.
Á¡÷캣Â÷¸û ±ôÀÊ Åí¸ò¾¢ø  Á¡÷캣Âõ À¢øÅ¨¾ ÁÈóЧÀ¡É¡÷¸û ±ýÀ¨¾ ¦º¡øÄ¢ì¦¸¡ñÎ þÕó¾Å÷.À¡Ã¾¢¨ÂÅ¢¼ ¸Å¢ ¾¡Ü¡¢ý þÄ츢 ¯ÂÃõ  «¾¢¸õ  ±ýÚ  ¯ÃòÐì ¸ÕòÐ ¦º¡øÄ¢ÂÅ÷.  ¯¼ý ºñ¨¼ìÌ Åó¾ ±ý§À¡ýÈÅ÷¸Ç¢¼õ ¦Àí¸¡Ä¢  ¦Á¡Æ¢ ¸üÚ ¾¡Ü¨Ã ôÀ¢ýÚ À¢ý À¡Ã¾¢¨Âô§ÀÍí¸û ±ýÀ¡÷..
Åí¸ ¦Á¡Æ¢ìÌõ ¾Á¢ØìÌõ ´Õ  À¡ÄÁ¡¸ þÕóÐ Å¡úóÐ ÓÊò¾Å÷ ͸¢.   ̺¢À¡  ¦Åñ½¢Ä¡  §À¡ýÈ  þÄ츢 ¬Ù¨Á¸ÙìÌ Åí¸ò¾¢ø þÕóÐ ¯¾Å¢Â ¦À¡¢ÂÅ÷. Åí¸  ºÃò ºó¾¢Ã¨Ã þýÛõ ¾Á¢ØìÌ «¾¢¸õ «È¢Ó¸ôÀÎò¾§ÅñÎõ ±É Å¢ÕõÀ¢ÂÅ÷. Á¡Í§Å¾¡§¾Å¢Â¢ý ¦¿Õí¸¢Â ¿ñÀ÷.
¦ƒÂÁ¢òáŢý '¦¸¡øÄôÀθ¢ÈÐ, ®ŠÅà ºó¾¢Ã Å¢ò¡º¡¸¡¢ý '«¨Á¾¢ôÒÂø',ͺ¢òá Àð¼¡îº÷¡Ţý 'þÕðÎ §Å¨Ç' ºÃòºó¾¢Ã ºð§¼¡À¡ò¡¢ý '§„¡¼º¢'  ±ý¸¢ÈÀÊ «Å¡¢ý ¦Á¡Æ¢¦ÀÂ÷ôÒôÀ½¢¸û ±ò¾¨É§Â¡.  þ.À¡  ±Ø¾¢Â ÌÕ¾¢ôÒɨĠ Åí¸¡Çò¾¢ø ¦¸¡½÷óÐ º¡¸¢ò «¸¡¦¾Á¢ Å¢ÕÐ ¦ÀüÈÅ÷.
«¾£ý Àó¾§Â¡À¡ò¾¢Â¡Â¢ý' ¿£Ä¸ñ¼ ÀȨŨÂò§¾Ê' ¾Á¢Æ¢ø ¾óÐ «ÁÃòÐÅõ ¦ÀüÈÅ÷ ͸¢. ÁÈô§À¡Á¡ ͸¢¨Âò¾¡ý.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.

Sunday, September 7, 2014

alaikaL -story

அலைகள்

எஸ்ஸார்சி

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக்
கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் நிறுத்தி இருந்தார்கள்.தாம் எங்கிருந்து கடலூர் வந்தவை என்கிற ஊர் விலாசம் அந்த அந்த வண்டிகளில் நீண்ட பேனர்களில் கொட்டை எழுத்துக்களில் எழுதித்தெரிந்தன.
அவன் மாநாட்டிற்கு திருமுதுகுன்றத்திலிருந்து வந்தான். திருமுதுகுன்றம் கடலூர் மாவட்டத்து ஒரு தாலுக்காவின் தலை நகரம்.கடலூர் மாவட்டத்துத்தோழர்கள். ஆயிரம் பேருக்கு மேல் இருக்கலாம். மொத்தமாகத் தமிழகத்துத்தோழர்கள் எல்லோருமாக ஐயாயிரம் பேருக்குக் கடலூரில் கூடியிருந்தார்கள்.
ஜக்குவோடு அவன் இரு சக்கர வாகனத்தில் முதுகுன்றத்திலிருந்து புறப்பட்டான். முதுகுன்றம் தொலைபேசி நிலைய வாயிலில் கடலூர் மாநாடு பற்றி பெரிய பேரிய தட்டிகள் வைத்து எழுதிப்போட்டிருந்தார்கள்.மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள். திருமுதுகுன்றத்தில் ஜக்குவும் அவனும் தொலைபேசி பழுது நீக்கும் பிரிவு ஊழியர்கள்.ஜகந்நாதனை ஜக்கு ஜக்கு என்று அவன் செல்லமாய் அழைத்துப்பழகி இருந்தான்.
நெல்சன் மண்டேலா வை ஆப்பிரிக்க இன வெறி அரசு சிறையில் அடைத்துவைத்திருந்த இருண்ட காலம். ‘ மண்டேலாவின் விடுதலையே எங்கள் மூச்சு’ என கோஷம் எழுதிய அட்டை ஒன்றை த்தன் இரு சக்கர வாகனத்தில் முன் பக்கமாக மாட்டி இருந்தான் ஜக்கு.
திருமுதுகுன்றம் தோழர்கள் தம்மோடு பணியாற்றிய ஒரு நல்ல நண்பனை சமீபத்தில்தான் இழந்து இருந்திருந்தார்கள்.சையத் மஜகர் அவன் திருப்பெயர்.சைவம்மட்டும்தான் சாப்பிடுவான். இப்படியும் இஸ்லாமியர்களில் இருப்பார்களா என்ன. இருந்தானே அப்பா அந்த சையத் மஜ்கர்.
மஜ்கர் எல்லோருக்கும் இனிய நண்பன்.எந்த பேதமும் பார்க்காமல் யார்க்கும் உதவும் பெரிய மனதுக்காரன்.அவன் சக நண்பர்களுக்குத்தான் செய்த உதவியைப்பற்றி மட்டும் ஒரு போதும் பேசவே மாட்டான். யார் பேசவும் அனுமதிக்க மாட்டன்.’ சார் விடுங்க வேற எதாவது பேசலாம்’ என்பான். அலுவலகப் பணிக்கு நேரம்தவறாமல் வருவான்.செய்யும் வேலையில் பெண்டிங்க் என்பது அறியாதவன்.
செய்த வேலைக்குக் காசு எடுத்து நீட்டிய ஒரு தொலைபேசி வாடிக்கையாளரிடம். ‘ இது தப்பு சார், எங்களுக்கு சோறு போடறது அரசாங்கம், நீங்க ஒருபோதும் இப்படி க்காசு கொடுப்பதை வழக்கமாக ஆக்கிவிடாதீங்க’ என்று கனிவாகச்சொன்ன முதுகுன்றத்து தொலைபேசி ஊழியன். . சொன்னால் யாரும் நம்பதான் மாட்டார்கள்.
மஜ்கர்தான் திடீரென இறந்து போனான். மனித் இறப்புக்கு நியாயம் தர்மம் என்றெல்லாம் உண்டா என்ன.ஏதோ உடல் நிலை சரியில்லை சென்னையில் ஒரு பெரிய மருத்துவ மனைக்குப் போனான். அவ்வளவுதான். அது என்றார்கள் இது என்றார்கள். மருத்துவமனையில் ஆளுக்கு ஒன்று சொன்னார்கள். கடைசியாய் அவன் உடலை வெள்ளைத்துணியில் பொட்டணமாகக்கட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அவனுக்கும் ஜக்குவுக்கும் மிக நெருங்கிய நண்பன் தான் மஜ்கர். மஜ்கரின் இறப்பைத் தாங்கமுடியாமல் இருவரும் தவித்துப்போனார்கள். கடலூர் மாவட்டத்துத்தோழர்கள் ஆயிரம் பேருக்குக்கூடி மஜ்கருக்கு அவன் மறைந்த தியாக துருகம் மண்ணில். அடக்கத்தன்று அஞ்சலி செலுத்தி க்கண்ணீர் விட்டார்கள்.
நடைபெற இருக்கும் கடலூர் மாநில மாநாட்டிற்குத் துருகம் மண்ணில் இருந்து’ மஜ்கர் ஜோதி’ ஏந்தி திருமுதுகுன்ற த்தோழர்கள் கடலூர் நகருக்கு நடை பயணமாகப்புறப்பட்டார்கள்.வெள்ளை நிறத்தில் மேற்சட்டையும் முழுக்கால்சட்டையும் அணிந்த அந்தத்தோழர்கள் தலையில் சிவப்பு ரிப்பன் கட்டி இருந்தார்கள்.ஆஜானுபாஹுவாய் இருந்த தோழன் சுந்தரம் தான் பேரணிக்குத் தலைமை ஏற்றுப்போனான்.அடிக்கடி மூகுப்பொடி போட்டுக்கொள்ளும் அந்த சுந்தரத்தை ஜக்கு ‘பொடி மட்டை’ என்றும் அழைப்பதுண்டு.
அவனும் ஜக்குவும் நடைப்பயணம் செல்லும் பேரணிக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் மெதுவாகச்சென்றனர்.பேரணியில் செல்வோர்க்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் ஜக்குவோடு சேர்ந்துகொண்டு அவன் சிறப்பாக கவனித்தான்
அவன் ஊருக்கு அண்டையூர்க்காரன்தான் லோகு. கடலூர் மாவட்டத்துத் தோழர்களால் செல்லாமாய் லோகு என அழைக்கப்பட்ட லோகநாதன் பேரணியில் கோஷங்களை எழுப்பினான். தருமத்தை .வெல்லும் ஒரு படை புறப்பட்டுவிட்டதாய் எல்லார்க்கும் சேதி சொன்னான். தொழிலாளர் ஒற்றுமை இங்கே கட்டப்பட்டு நாங்கள் முன்னேறுவதை வந்து பாருங்கள் என்றான்.போராடாமல் இங்கு எதுவும் வரவில்லை. நாம் பெற்றது எதுவும் போராட்டங்களின் கொடையே என்றான். சாலையில் வருவோர் போவோர் அவ்ன் கோஷம் வழியாகப் பொது மக்களுக்குச்சொல்லும் நல்ல செய்தியைக்கவனித்தார்கள். கோஷம் கேட்டு நின்றவர்கள் யோசித்துவிட்டுப்பின் மீண்டும் நடந்து போனார்கள். கோஷத்தை அற்புதமாய்ப் பொருள் பொதிந்து எழுதிப்படிப்பதிலே லோகு கை தேர்ந்தவன்..
அவனுக்கும் ஜக்குவுக்கும் பேரணி செல்வது ரொம்பவும் பெருமையாக இருந்தது.உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலைய வாயிலில் ஆரகளூர் அம்பாயிரம் எல்லோரையும் தன் மனம் இனிக்கும் வரவேற்பு உரையால் நெகிழவைத்தான்.நடந்தே பேரணியாய் கடலூர் செல்லும் தோழர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து அவனும் பேரணியில் சங்கமமானான்.
மீசை ஆறுமுகம் இதே உளுந்தூர்பேட்டைக்காரர்தான். பேரணியில் கலந்துகொண்டதோழர்களுக்கு எல்லாம் ஒரு புத்தகம் கொடுத்துக்கொண்டேபோனார். ஜக்குவுக்கும் அவனுக்கும் இப்போது ஒரு புத்தகம் கைவசமானது. கடலூரில் வாழ்ந்துமறைந்துபோன சிரில் என்னும் தோழர், வேந்தன் என்னும் புனைபெயரில் எழுதிய சிறு கதைத்தொகுப்பு அது.
கடலூரில் தொலை பேசி ஊழியர்களின் மத்தியில் சிரில் என்னும்பெயரை அறியாதோர் உண்டா என்ன? நல்லதொரு தொழிலாளியாய் நேர்மையான தலைவனாய், சிறந்த புத்தகங்களின் வாசகனாய், நல்ல இலக்கியம் படைப்பவனாய் ,அன்பு ஊற்றெடுத்து பிரவாகிக்கும் பெரிய மனதுக்காரனாய், மனிதர்களை மனிதர்களாய் மட்டுமே பார்க்கத்தெரிந்த நடமாடும் அதிசயமாய் வாழ்ந்து மறைந்த உத்தமன் அவன். நினைக்க நினைக்க தித்திக்கும் பொருள் பொதிந்த வாழக்கைக்குச்சொந்தக்காரன் சிரில்….
மீசை ஆறுமுகம் வழங்கிய புத்தகத்தை அவன் பிரித்துப்பார்த்தான்.’பாலம்’ என்னும் ஒரு சிறுகதையில் ஆரம்பித்த அந்த புத்தகத்தில் இருபது கதைகளுக்கு மேல் இருந்தன.
‘மீசைக்கு எப்படி இது எல்லாம் தோன்றுகிறதோ’
என்றான் அவன் ஜக்குவிடம்.
‘ அந்த மீசைக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோணும்’ அவன் பதில் சொன்னான்.இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏறி ப்பேரணியின் முன்பாகச்சென்றார்கள்.
மங்கலம்பேட்டை தொலைபேசி அலுவலக வாயிலில் சென்று பார்த்தார்கள்.அங்கு மோகன்ராஜ் என்னும் போன் மெக்கானிக் தயாராக நின்றுகொண்டு இவர்கள் இருவரையும் வரவேற்றான்.
‘என்ன அண்ணாச்சி பேரணி எங்க வருது, இங்க வர இன்னும் நாழி ஆவுமா அதுக்குள்ள ஒரு டீ குடிக்கலாமா என்ன சொல்லுறீங்க’ இப்படிக்கேட்ட மோகன்ராஜிடம் அவன் பதில் சொன்னான்.
‘மோகன்ராஜு தோழர்கள் எல்லாரும் இங்க வந்துடட்டும். அவுங்க வந்தபெறகு நாம சேந்து டீ குடிக்கலாம்’
‘அதுவும் சரி’ மோகன்ராஜு பதில் சொன்னான்.
‘பேரணியில வருவீர்தானே’ ஜக்கு கேள்வி வைத்தான்.
” வர்ராம நான் இங்க என்னா செய்ய’ மோகன்ராஜ் பதில் சொன்னான்.
திரும்பவும் பேரணி எங்கு வந்துகொண்டிருக்கிறது என்று பார்த்து வரச்சென்ற ஜக்குவும் அவனும் நெமிலி என்னும் கிராமம் அருகே சென்று பேரணியில் கலந்துகொண்டார்கள்.
ஊர் நெருங்கும் சமயம் மட்டுமே கோஷம் எழுப்பிய அவர்கள் மங்கலம் பேட்டை தொலைபேசி நிலையம் அடைந்து பின் புறப்பட்டார்கள்.இப்போது மோகன்ராஜுவும் பேரணியில் சங்கமமானான்.வழக்கம் போல் ஜக்குவும் அவனும் திருமுதுகுன்றம் செல்லும் சாலையில் பேரணிக்கு முன்பாகச்சென்றுகொண்டிருந்தார்கள்.எத்தனையோ கிராமங்கள் குக்கிராமங்கள் எல்லாம் வழியில் வந்தன போயின.சாலையில் பேருந்துகளும் சென்றுகொண்டே இருந்தன. ஆடு மாடுகள் மேய்ப்போர் பேரணியில் செல்பவர்களைப்பார்து ஏதும் விளங்கிக்கொள்ளாமல் திணறினார்கள். சாலை இருபுறமும் புளியமரங்கள் அடர்த்தியாகப் பச்சைப்சேல் என்று இருந்தன.
பெரிய வடவாடி என்னும் ஊர் வந்தது. அங்கு கேரளாக்காரர் ஒருவரின்.’மானுவல் அன் சன்ஸ்’ என்னும் இன்சுலேட்டர் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் கூட்டமாகநின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஆலையை நிர்வாகம் மூடி விட்டதாகவும் இனி வேலைக்கு யாரும் ஆலைக்கு வரவேண்டாம் என்றும் தொழிலாளர்களுக்குச்சேரவேண்டிய பாக்கிதொகை ஏதுமிருப்பின் அது மூன்று மாதத்தில் கொடுக்கப்பட்டுவிடும் ‘என்று எழுதி ஒரு தட்டியை ஆலை வாயிலில் வைத்திருந்தார்கள்.போலிஸ்காவல் போடப்பட்டு ஆலை பாதுகாக்கப்பட்டிருந்தது.
‘இது பார்த்தாலே பயமா இருக்கு. ஆலைய மூடுனா வேலய நம்பி இருந்தவன் என்ன ஆவுறது’ என்றான் ஜக்கு.
பெரிய வடவாடி ஆலை வாயிலில் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒரு தொழிலாளி பதில் சொன்னான்.
‘அரக்காசு உத்யோகம்னாலும் அரசாங்க உத்யோகம் அது நீங்க பாக்குறது நாங்க அப்ப்டி இல்லே. தெனம் தெனம் செத்து பொழக்கறம்”
‘யாரும் ஒண்ணும் பேசாம வாங்க’ என்று அதிர்ந்து பேசினான் சுந்தரம்.
‘மூடாதே மூடாதே, நிர்வாகமே மூடாதே, ஆலையை நீ மூடாதே’ ஓங்க்கிக்கத்தினான் ஜக்கு. மானுவல் அன் சன்ஸ் தொழிலாளர்கள் ஜக்குவோடு சேர்ந்து குரல் கொடுத்தார்கள்.
‘நம்ம பொறுப்பு முடிஞ்சது ‘ சுந்தரம் ஜக்குவைப்பார்த்து கேள்வி வைத்தான். பேரணி சென்று கொண்டே இருந்தது. ‘ முதுகுன்றம் இண்ணைக்கு இரவு தங்கல்,நாளைக்கு இரவு குறிஞ்சிப்பாடி, அப்புறமா கடலூர்தான்’ என்றான் அவன்.
‘யாரு பிளான் எல்லாம் போட்டது’ ஜக்கு கேட்டான்.
‘எல்லாம் சுந்தரம் திட்டம்தான்’ அவன் பதில் சொன்னான்.
திட்டத்தின் படி பேரணிக்காரர்கள் அனைவரும் முதுகுன்றத்தில் தங்கி மறு நாள் காலை மீண்டும் ஆயத்தமானார்கள்.திருமுதுகுன்றத்தில் பெண்ணாகடம் பிச்சைப்பிள்ளை, கணபதியும்,திட்டகுடிக்காரர்கள் சிரிதரனும், பன்னீரும் , வேப்பூர் தோழர்கள் சின்னசாமியும் பெரியசாமியும் ஊருக்கு இருவர் எனப் பேரணியில் கலந்துகொண்டார்கள். முதுகுன்றம் நகர வங்கப்பணியாளர்கள் கிருட்டினனும், காளியும், வள்ளியும் பேரணியை வாழ்த்திப்பேசினார்கள்.அஞ்சல் இலாகாவில் எழுத்தராய்ப்பணியாற்றிய ‘கட்டுக்கட’ ஜெயராமன் பேரணியில் பங்குகொண்டு முதுகுன்றம் எல்லை முடியும் வரை வந்து போனார்.
அரசாங்கத்துக்கு ச்சொந்தமான டாசல் என்னும் பீங்கான் ஆலையை நிர்வாகம் மூடிவிட முயற்சிப்பதாகவும் அதனை அனுமதிக்கவே முடியாது என்றும் எழுதிய நோட்டீஸ் ஒன்றை டாசல் ஆலை த்தொழிலாளர் தலைவர் காசிநாதன் என்னும் காசி, எல்லோருக்கும் விநியோகித்து ஒத்துழைப்பு நல்க வேண்டுகோள் விடுத்தார்.
‘பிரைவேட்டு பீங்கான் ஆலைங்க இதே முதுகுன்றத்துல ஓகோன்னு ஓட அரசாங்க ஆலைல மாத்திரம் குரங்குக அட்டகாசம் தயாரான புது பீங்கான் பீசுவ எல்லாத்தையும் உடைச்சிடுது அதுலதான் ஏகப்பட்ட நஷ்டம்னு சொல்லுறாங்க’ அவன் தொலைபேசி ஊழியர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
.
‘ இங்க ஆத்தைப் பாரு பாலாட்டம் ஒரே மணலு, எப்பவும் காஞ்சிதான் கிடக்குது ;என்றான் ஜக்கு முதுகுன்றம் ஊடாக ஓடும் மணிமுத்தாற்றினைப்பார்த்துக்கொண்டே.
‘ கள்ளக்குறிச்சி கிட்ட இருக்கிற கோமுகி டாம் தொறந்தாதான் தண்ணி இங்க வரும்’ என்றான் அவன்.
‘கோமுகி டாம் ரொம்புனாத்தான் அங்க இருக்குறவங்க அந்த அணையைத் தொறப்பாங்க’
‘இதேதான் அந்த கர்நாடகா காரனும் சொல்லுறான் செய்யுறான். காவேரியில இருக்குற அவுங்க அணைங்க எல்லாம் ரொம்புனாத்தான் தொறக்குறான். அப்புறம் மேட்டுர்க்கு தண்ணி வருது’ என்று பதில் சொன்னான் அவன்
பேரணி நெய்வேலியைச்சார்ந்த மந்தாரக்குப்பம் நகரை அடைந்தது.அங்கிருந்த தோழர்கள் பேரணி வந்தோரை வரவேற்று உபசரித்தார்கள். தொலைபேசி அலுவலத்தில் ஒரு புதிய கம்பம் நட்டு தொழிற்சங்கக்கொடி ஏற்றினார்கள். இனிப்புக்கள் வழங்கி வெடி வெடித்து கொடியேற்றத்தைக்கொண்டாடினார்கள்.அவனுக்கும் ஜக்குவுக்கும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
‘சிரில் கடலூருக்கு வருமுன் இங்குதான் பணியாற்றினார்’ என்றான் அவன்.
” இங்க ரெங்கனாதனும் கணேசனும் அந்த சிரிலுக்கு நெருக்கமானவர்கள் எனக்குத்தெரியும்.’ என்று பதிலுக்குச்சொன்னான் ஜக்கு.
‘தப்பு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கும் டெலிபோன் லைன்மென் ரெங்கனையும்,தோழர்களோடு எப்போதும் ஒரு குழந்தையாய்ப்பழகிய அந்த போன் இன்ஸ்பெக்டர் கணேசனையும். மறப்பதா’
என்றான் அவன்.
பேரணி குறிஞ்சிப்பாடி நோக்கிப்பயணிக்கத்தொடங்கியது.வடலூர் வந்தது. வள்ளலார் ராமலிங்கர் நிறுவிய அருள்ஜோதிக்கோவில் பார்த்து அவனும் ஜக்குவும் ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என் ஓங்கிச்சொன்னார்கள்.
‘இது கோஷம் போடுற சமாச்சாரம் இல்ல ‘ என்றான் லோகு.
அவன் லோகுவைப்பார்த்து ஒரு முறை புன்னகை செய்தான். நான்கு சாலைகளின் சந்திப்பு வந்தது.மக்கள் நடமாட்டம் கூடித்தெரிந்தது.முதுகுன்றத்து சுந்தரமும் பெண்ணாடம் போன் மெக்கானிக் பகத்சிங்கும் விலைவாசி உயர்வு பற்றி கோஷம் போட்டார்கள்.
‘ ஏறுது ஏறுது விலைவாசி, விஷம் போல் ஏறுது விலைவாசி, இறங்குமா விலைவாசி,விலையைக்குறை. விலையைகுறை, விலையைக்குறைக்க முடியாவிட்டால் நடையைக்கட்டு நடையைக்கட்டு’ தோழர்கள் தொடர்ந்து கோஷம் கொடுத்தனர்.
வடலூர் பேருந்து நிலையம் அருகே’ சேஷசாயி பீங்கான் இன்சுலேட்டர் ஆலையை மூடிய நிர்வாகத்தை எதிர்த்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.
‘ ஆலை முதலாளிக்கு பட்டுசொக்கா
ஆலை தொழிலாளிக்கு கோவணமா அம்மணமா
மூடுறதும் தொறக்குறதும் மொதலாளிக்கு வெளையாட்டு
தொழிலாளர் எங்களுக்கு அதுதானப்பா உயிர் மூச்சு’
தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.ஜக்கு அதனைக் கூர்ந்து கவனித்தான்.
‘ நாம அரசாங்கத்துல வேல பாக்குறம்’ அவன் ஜக்குவிடம் சொன்னான்.’ அதானாலென்ன அரசாங்கம் முடிவு பண்ணினா எதயும் மூடும் எதயும் தொறக்கும்’ ஜக்கு அவனிடம் சொல்லிக்கொண்டான்.
‘ அப்படி எல்லாம் ஆவுற விஷயமில்ல.அரசாங்கமும் தன் இஷ்டத்துக்கு எதயும் செய்துடமுடியாது.நாம்பளும் அத லேசுல வுட்டுட மாட்டம்’ அவன் அழுத்தமாய் பதில் சொன்னான்.
ஜக்கு அவனைப்பார்த்து நிறைவாய் சிரித்துக்கொண்டான்.
குறிஞ்சிப்பாடி நகரம் சமீபித்தது. ஊருக்கு முதலிலேயே தெரியும் குட்டையில் மீன்களை ப்பிடிக்க வலை நட்டு இருந்தார்கள்.எதிரே ஒரு திரையரங்கம் தெரிந்தது.
‘மீனுவ எல்லாத்தையும் புடிக்காம வுட்டுட்டா என்னா ஆவும்’ என்றான் அவன்.
‘உனக்கு என்ன ஆச்சு’ ஜக்கு கடுப்பாகவே பதில் சொன்னான்.
திரை அரங்கில் ஏதோ ஒரு தெலுங்குப் படம் ஓடிக்கொண்டிருந்தது.
அருகே இருந்த தொலை பேசி நிலையத்தில் அனைவரும் இரவு தங்கினார்கள். குறிஞ்சிப்பாடித்தோழர்கள் பேரணியில் வந்த அனைவருக்கும், சுவையான உணவு தந்தார்கள். தோழர்கள் சிலர் தெலுங்கு படம் பார்க்கப்போனார்கள். அவனும் ஜக்குவும் ஏதோ பேசிக்கொண்டே இரவு கழித்தனர்.
. காலை வழக்கம் போல் பேரணி கோஷம் எழுப்பியபடி குறிஞ்சிப்பாடியை விட்டுக்கிளம்பியது. ரெத்தின முதலி தெரு தாண்டிக்கொண்டிருந்த போது மணியம் பதிப்பகம் வாயிலில் சம்பந்தம் நின்று அனைவரையும் வரவேற்றார்.நல்ல நல்ல இலக்கிய நூல்களை பதிப்பிக்கும் தமிழ்ப்பணியை சம்பந்தம் செய்து வருவதாய் சுந்தரம் அவரை அனைவர்க்கும் அறிமுகம் செய்துவைத்தான்.
‘ நல்லது நடந்துகிட்டுதான் இருக்குது’ என்றான் ஜக்கு.
சம்பந்தம் புன்னகைத்தார். அவரே அனைவர்க்கும் தேநீர் கொடுத்து பேரணியை வாழ்த்திச்சென்றார். லோகு விடாமல் கோஷம் கொடுத்துக்கொண்டே வந்தான்.
பேரணி குள்ளஞ்சாவடியை த்தொட்டது.குள்ளஞ்சாவடி தொலைபேசி நிலைய வாயிலில் நான்கு தோழர்கள் காத்துக்கொண்டு நின்றனர். எல்லோருக்கும் மோர் வழங்கி அவர்களின் அன்பை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.பேரணி வேக வேகமாய் நடக்க ஆரம்பித்தது. கடலூர் சமீபிப்பிததை மீன். விற்கும் பெண்டிர்கள் தம் சுறு சுறுப்பு நடமாட்டத்தால் அறிவித்தனர்.
‘ கடலூர் பழைய டவுன் தாண்டுறம்’ என்றான் சுந்தரம்
தென்பெண்ணை ஆறு சமீபமானது.. ஆற்றுப்பாலத்தில் சுந்தரம் அசுரத்தனமாக கோஷம் போட்டான்.லோகு சுந்தரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
பேரணி சுப்புராயலு ரெட்டியார் மண்டபம் நெருங்கியது. கடலூர் தோழர்கள் கவிஞ்ர் கோவி செயராமன் தலைமையில் பேரணியில் வந்தோரை வாழ்த்தினர். கடலூர் நீலகண்டன் தான் அழகழாய் கோஷம் எழுப்பினார்.
செம்படையே வருகுது, செம்படையே எழுகுது, செம்படையே ஓங்குது, செம்படையே உயருது, செம்படையே வெல்லுது சொல்லிக்கொண்டே போனார் நீலகண்டன்.
‘எல்லோரும் ஓர் நிைற்,எல்லோரும் ஓர்விலை,எல்லோரும் இந்நாட்டு மன்னர், சத்திய வார்த்தை சத்திய வார்த்தை,முண்டாசுக்கவியின் சத்திய வார்த்தை,பொய்யாகிப்போயிடுமா, பொய்த்துப்போக விடுவோமா, புறப்பட்டோம் விடமாட்டோம், இறுதி வெற்றி என்றும் எமதே, உறுதி ஏற்போம் உறுதி எற்போம்’ கவிஞ்ர் கோவி விண்ணதிர முழங்கி முடித்தார். அண்ணாந்து பார்த்தான் அவன். கோவி தொழிற்சங்கக் கொடியை வலது கரத்தில் பிடித்து ஓர் ஆனை மீது இருந்து கோஷம் கொடுக்கிறார்.
‘ஜக்கு ஆனையை பாத்தியா’
‘ ஆனயை ப்பார்த்தேன் ஆனை மீதிருந்த கோவிசெயராமனையும் பார்த்தேன், நீரு ஊர்வலத்துல கோஷம் போட்டா ஒலகத்தயே மறந்துடுறீருல்ல’ அவனுக்கு ஜக்கு பதில் சொன்னான். இருந்தாலும் ஆனையை தான் கவனிக்காமல் விட்டது எப்படி என்பதுதான் அவனுக்குப்பிடிபடவில்லை. கொஞ்சம் அசிங்ககமாகக்கூட இருந்தது.இது போல் அவனுக்கு வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ ஆகியிருக்கிறது அதனில் இதனையும் அவன் கூட்டிக்கொண்டான்.
மூவர்ண் தேசியக்கொடியை கடலூர் பாலன் ஏற்றிவைக்க தொழிற்சங்கக்கொடியை டில்லியிலிருந்து மா நாட்டிற்கு வருகை தந்த ஓம்பிரகாஷ் ஏற்றி வைத்தார்.
அவனும் ஜக்குவும் பெருமிததோடு கொடிகளுக்குக்கீழாக நின்றார்கள்.
‘நாடும் முக்கியம் நம்ம வீடும் முக்கியம்’
என்ற அவனுக்கு’ நாட்டுக்குள்ள வீடு அடங்கும் தானே’ என்று பதிலை சொடுக்கிச் சொன்னான் ஜக்கு.
கடலூர் பாலன். கரிய தாடிக்காரர்.தலை முன்பாதிக்குசொட்டை. கண்கள் வாளினைவிடக்கூரியவை. பெற்றஞானத்தின் அளவு சொல்லும் மூக்கு.நெற்றியின் அகலம் மனத்தின் அகலம்,பேசும் சொற்கள் சித்தபுருடன் பேசுவதுபோலவே ஆகா எத்தனை சௌந்தரியமான ஒரு மனிதப்பிறவி.அவ்ரின் உடல் மறைத்திருக்கும் வெள்ளை வெளேர்க் கதர் சட்டை. நாட்டு விடுதலையில் பங்கு பெற்றவர் என்பது அவர் பேசும் போதே தெரிந்து விடுகிறது.பொருள் நெருக்கிக்கொண்டு நிற்கும் வார்த்தையோ கள். பார்க்க பார்க்க கடலூர் பாலன் தான் பார்ப்போருக்கு எத்தனை உற்சாகம் தருகிறார்.
நெய்வேலி கணேசனோடு எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார் கடலூர் பாலன். அவர்களுக்குத் துணையாக சென்னையிலிருந்து வந்த கவிசிவா எல்லோரையும் பார்த்து மகிழ்ந்து மகிழ்ந்து போனான் ஜக்கு.
கடலூர் தோழர் சிரிலின் கண்டெடுப்பான ஜகன் மாநாட்டு மேடையிலிருந்து நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கு க்குரல் கொடுத்தார். தமிழக தபால் தந்தி ஊழியர்களின் பெறற்கு அரிய மாணிக்கம் ஜகன்.
கடலூர்.மாநாடு இப்போது களை கட்டியிருந்தது. ஆண்களும் பெண்களும் உற்சாகமாய் மண்டபமெங்கும் காணப்பட்டார்கள்.உள்ளூர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் க.போ இ,. வளவதுரையன், முனைவர்.பாசுகரன்,குரல் நடராசன், கவிபால்கி, திசை எட்டும் குறிஞ்சிவேலன் , செந்தமிழ்ச்சொலை அரங்க நாதன்,கதிர்முத்தையன்,கடல் நாக ராசன்,திருக்குறள் ராசாராம்,தாடிக்காரர் முத்துராசா, பாட்டாளிக்குரல் சசி, தோழியர் ஜெயஸ்ரீ எத்தனை ச்சான்றோர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்..விழுப்புரம் பழமலய் முதுகுன்றம் சபா வடலூர் சத்தியமோகன் என அக்கம் பக்கத்து எழுத்தாளர்களும் மாநாட்டு அரங்கில் அணியாக அமர்ந்திருந்தார்கள்.
‘ இவுங்க எல்லாம் கூட இங்க வருவாங்களா’ அவன் கேட்டான்.
‘ ஏன் அந்த வ உ சி, திரு.வி க, ஜீவா, நம்ப சிரில் எல்லாம் தொழிற்சங்க வாதிங்க எல்லாருமே தமிழ் பற்றாளர்கள் இல்லையா அப்படித்தான்’ என்றான் ஜக்கு.
ஜக்குவுக்கு இவ்வளவு தெரிகிறது. கொஞ்சமும்கூட தலைகனம் இல்லாமல் இது எப்படி? அவன் யோசித்தான்.
கடலூர் பாலன் ஒரு மரத்தின் கீழாக நிழலில் அமர்ந்து ஒரு நிஜ நாடகத்திற்கான குறிப்புக்களைத்தயார் செய்துகொண்டு இருந்தார்.
‘ நீங்க எல்லாம் ஒற்றுமையா இருந்து உங்களைச்சுரண்டுபவர்களை எதிர்த்துப்போராடணும்னு எந்த கடவுளாவது சொல்லி இருக்குறாரா?,எந்த வேத புத்தகத்திலாவது அது எந்த மதத்திலாவது போராடணும்னு. சொல்லி இருக்குறாங்க்ளா இல்லே நீ நேர்மையா இரு ஒழுங்கா கடமையைச்செய்.பாக்கிய நான் பாத்துகுவேன்னுதான் கடவுள் சொல்லுறாரு.ஆக இது அத்தனையும் கடவுள் சொல்லுறது இல்லே நம்பளை கட்டிப்போட யாரோ செஞ்ச ஏற்பாடு.
ஒரு நிஜ நாடகம் நாம பண்ணுறம் அதுல இந்து மதத்துல என்னப்பா சேதி சொல்லுதுன்னு கேட்போம் அதுக்கு ‘ கடமையைச்செய் பலனை எதிர்பார்க்கதே’ ன்னு பதிலு வரும், கிறித்துவ மதம் அது நமக்கு என்னா சொல்லுதுன்னு கேட்போம்.. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக்காட்டுன்னு’ பதிலு வரும், அந்த இஸ்லாம் மதம் மக்களுக்கு என்ன சொல்லுதுன்னு கேட்போம் அதுக்கு’ அல்லாவே ஆகப்பெரியவர்’ ன்னு பதிலு வரும்.
ஆகப்போராடணும்னு யாரும் சொல்லுல , தொழிலாளிங்க நாம சொல்லுறம், போராடினாத்தான் இங்க மனுஷன், பொறக்குற குழந்தையும் போராடினாத்தான் அது எழுந்து நிற்கவே முடியும் அப்புறம் அது மனுஷனாக உலா வர முடியும். நாம பெற்றிருக்குற எல்லாமே போராட்டம் நமக்கு கொடுத்ததுதான். இல்லன்னா இங்க அந்த சமூக வளர்ச்சிங்கறது அசிங்கமா நின்னு போயிடும் ஆக போராட்டம் மட்டுமே மனித வாழ்க்கை . போராட்டம் போராட்டம் போராட்டம் அதுக்கு முடிவே இல்லே’ போன் இன்ஸ்பெக்டர் நெய்வேலி கணேசனிடம் சொல்லிக்கொண்டே போனார் கடலூர் பாலன்.
அவன் அதைக்கூர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்.ஜக்குவோ மாநாட்டில் நடப்பது பற்றி யோசித்துக்கொண்டே இருந்தான்.கடலூர் பெரிய ரகு மாநாட்டில் பேசிக்கொண்டே இருந்தார்.’ சீனாவில் தியானன்மென் சதுக்கத்தில் நடந்தது ஜன நாயகப்படுகொலை அங்கு கொல்லப்பட்டவர்கள் தியாகிகள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது நமது கடமை. ஆக அஞ்சலி பகுதியில் தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி என்னும் பத்தி அப்படியே இருக்கும்’ சொல்லி முடிக்க மாநாட்டில் ரகளை தொடங்கியது.
‘ அவர்கள் தியாகிகள் அல்ல பொதுவுடைமைத் துரோகிகள் அவர்கட்கு ஏன் அஞ்சலி? அவர்கள் கொல்லப்பட்டது சரியே என்று வாதிட்ட தோழர்கள்,’ காட்டிக்கொடுப்பவனை காட்டிக்கொடுப்பது காட்டிக்கொடுப்பதாகாது’ என்று எதிர்க்குரல் கொடுத்தார்கள்..
மண்டபத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளத்தொடங்கி மாநாடு ஒரே களபரமாகியது.கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது. எல்லோரும் அரங்கை விட்டு வெளியே மூலைக்கொருவராக ஓட ஆரம்பித்தார்கள்.
கடலூர் பாலன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருந்தார். திருமுதுகுன்றத்துதோழர்கள் சின்ன ரகுநாதனும், மாத்ருபூதமும் மாநாட்டு வாயிலில் நிறுவப்பட்டிருந்த தியாகிகளுக்கு அஞ்சலிக்கான இடத்திலிருந்து மாநாட்டு ஆண்டறிக்கையில் உள்ள அஞ்சலிப்பகுதி பற்றி ஆழ்ந்து விவாதித்துகொண்டிருந்தனர்.
மாலை நேரம். கடலூர் தலைவர்கள் ஸ்ரீதரும் பக்கிரியும் பறக்கும் தேசியக்கொடியைக் கம்பத்திலிருந்து இறக்கிப்பத்திரம் செய்தனர்.
‘இது நாம் ஏன் சாயந்தரம் சாயந்தரம் இறக்கிடறம்’ பக்கிரி கேட்டான்.
‘ இது இரவுல பறக்கவிடக்கூடாதுன்னு சட்டம்’ பதில் சொன்னார் ஸ்ரீதர்.
‘அது ஏன்னு கேட்டன்’
‘ அப்பா, அது தெரியாது என்ன ஆளவுடு’ ஸ்ரீதர் முடித்துக்கொண்டார் .
ஜக்குவும் அவனும் கடலூர் பாலன் என்ன செய்கிறார் என்று கவனித்துக்கொண்டே இருந்தனர்.
‘ ஒண்ணும் தப்பில்லே. கருத்து வேற்றுமைகள் வரும் அது வரவும் வரணும். வந்தாத்தான் நமக்கு எது சரி எது தப்புன்னு தெரிய வரும் சண்டைபோட்டுகிட்டு வெளியில போவுலாம், தனியா எதுவும் செய்துட முடியாது. அப்படியே செய்தாலும் சரியா வருமா,ஆத்திரத்துல போவுறதுதான் ஆனா தொழிலாளிங்க ஒத்துமையா வராம ஒரு கதையும் ஆவாது. எதுக்கும் ஒரு காலம்னு ஒண்ணு ஆவும்,.நேரம்னு ஒண்ணு வரும்’ கடலூர் பாலன் சொல்லிய வண்ணம் தன் நாடகக் குறிப்புக்களைச் சரிபார்த்துக்கொண்டே இருந்தார்.
‘ராமாயணத்துல அவதாரம் எடுத்த அந்த அயோத்தி ராமர், குரங்கு இன வாலிய மறஞ்சி நின்னு கொன்னது சரியா தப்பான்னு பண்ணுற வாதம் எண்ணைக்கு முடியும்’ அவன் ஜக்குவிடம் சொல்லிக்கொண்டு நின்றான். உடன் ஜக்கு ‘எதைத்தான் நீ வுட்டு வச்சிருக்கே’ அவனுக்குப் பதில் சொன்னான்..
‘ வி ஷல் ஓவர் கம், விஷல் ஓவர் கம், வி ஷல் ஓவர் கம், சம் டே
ஓ டீப் இன் மை ஹார்ட்
ஐ டு பிலிவ், வி ஷல் ஓவர் கம், சம் டே. ‘
விழுப்புரம் தோழர், தொலை பேசி இயக்குனர் அந்த பாட்டுக்கார ஜெயராமன் அற்புதமாகப்பாடிக்கொண்டே இருந்தார். தொழிலாளர்கள் அட்வகேட் என் கே சீனுவும், மகளிர் அணித் தலைவி விஜியும் மாநாட்டுமேடையில் தலைமை இருக்கையில் அமர்ந்து கொண்டு இனி என்ன நடக்க இருக்கிறது என்பதைக் கவனித்துகொண்டே இருந்தார்கள்.
கடலூரில் கூடியிருந்த எல்லா தோழர்களும்,ஆங்காங்கே மரத்தடியில். நின்று ஓயாமல் சொந்தக்கதைபேசிக்கொண்டிருந்தவர்களும் கூட இப்போது ஒவ்வொருவராக மண்டபத்துக்குள் அச்சத்துடன் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
ஜக்குவும் அவனும் மாநாட்டு அரங்கினுள் நுழைந்து இருக்கை பார்த்து அமர்ந்தனர். பி.எஸ் அவனுக்கும் ஜக்குவுகும் இடையில் அமர்ந்திருந்தார்.
.’ஒரு பாட்டு என்னா வேலை செய்யுது’ என்றான் பி.எஸ்சிடம் ஜக்கு. அவர் அமைதியாய் இருக்க,
‘கீதை அறிவின் ஊற்று
குழலோசை அன்பின் ஊற்று
பார்த்தன் கேட்டது கீதை
பசுவோடு கன்றும் செடி கொடியும் கேட்டு இன்புற்றது குழல்’
தனக்குத் தெரிந்த ஒரு பதிலைச் சொல்லிய அவன், டில்லியில் இருந்து வந்திருக்கும் ஓம்பிரகாஷ் என்ன சொல்லப்போகிறார் என்பதில் கவனமாய் இருந்தான்.
கடலூர் பாலன் இன்னும் தனது நிஜ நாடக குறிப்போடு மரத்தடியில் யோசித்த்படியே இருந்தார்.
———————————————————

Saturday, August 9, 2014

asadu -story




அசடு 


என் வீட்டில் மொட்டை மாடிதான் முதலில் இருந்தது.கீழே தரை தளத்தில்தான் எங்கள் குடியிருப்பு..பையனுக்குத்திருமணம் என்று வந்தது. ஆக மேலே ஒரு ரூம் போடலாம் என்று ஆரம்பித்து அப்படி இப்படி கட்டிட மேஸ்திரி யிடம் பேசிப்பேசி மேலேயும் ஒரு வீடு என்றபடிக்கு அது முடிந்தது. முதல் தள மேல் வீட்டுக்கே ப்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் குடிபெயர்ந்தோம். வீட்டு ஜாமான்கள் தினமும் முடிந்தது தூக்கிக்கொண்டு மேலே செல்வது வழக்கமாகியது. துணி துவைக்கும் இயந்திரமும் இன்னும் பீரோ வும் மிச்சம் இருந்தன.
சன் டிவி வட்டக்குடையை , ஹிடாசி ஏசியில் நீட்டிக்கொண்டிருக்கும் வெளிப்பாதியை இடம் மாற்றி வைக்க வந்த இரண்டு ஆட்களை வைத்துக்கொண்டே அந்த துணி துவைக்கும் மெஷினை யும் மேலே கொண்டு வரும் அசுர வேலையை முடித்தாயிற்று. இன்னும் கீழ் வீட்டில் பாக்கி இருப்பது நெட்டை ஸ்டீல் பீரோ மட்டும் தான். அதனுள் ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை. வீட்டுக்கு வாடகைக்கு வருவோர் உறுதியானால் பிரோவை மேலே கொண்டு வருவது ஒன்றும் பெரிய மூட்டை இல்லை.
கீழ் வீடு வாடகைக்கு ரெடியாகியது..ஒரு விஷயம் என் மூத்த பையன் திருமணம் சில மாதங்களில் வருகிறது. பையன் திருமணம் வரை வீட்டுக்கு வருவோரும் போவோரும் கொஞ்சம் கூடுதலாக இருப்பார்கள். பையன் திருமணம் முடியட்டும். பின்னர் அந்தத் தரை வீட்டை வாடகைக்கு விடலாம். அதுவே சரி என்றிருந்தேன்.
தாமிரபரணி தீரத்து சேரன் மாதேவிக்காரர்கள் நடத்திய என் பையன் திருமணம் விமரிசையாக முடிந்தது. நாங்கள் வாடகைக்கு விட வைத்திருந்த கீழ் வீடு வந்துபோன சம்பந்தி மார்களுக்கு வசதி யாகவே இருந்தது. திருமண களேபரங்கள் முடிந்தன..
இனி கீழ் வீட்டை தாராளாமாக வாடகைக்கு விட்டு விடலாம். கடலூர் மஞ்சகுப்பத்திலிருந்து சென்னைக்கு ஐந்தாண்டுகள் முன்னர் குடி வந்தோம்.சென்னை வாசம் ஏதோ கைலாச வாசம் என்று நினைத்துக்கொண்டுதான் அற்புதமான கடலூரை விட்டு புறப்பட்டேன்.சென்னையில் அப்போது வீடு தேடுவது சாதாரண விஷய்மில்லை.அவரைப்பிடித்து இவரைப்பிடித்து குடியிருக்க வீடு தேட வேண்டிய ஒரு காலம்.அவரைப்பிடிப்பதும் இவரைபிடிப்பதும் சாமான்ய காரியமாக இல்லை.
வாடகை வீட்டில் குடியிருந்துகொண்டே .கஜப்பிரசவமாய் ஒரு சிறிய மனை வாங்கினேன். அதனில்தான் இங்கும் அங்கும் கடன் வாங்கிய பணம் கொண்டு ஒரு வீடு என்று உருப்பெற்றது. அந்த வீட்டு மாடியில்தான் இப்போது ஜாகை
வீடு காலி ஆக 'டு லெட்' என்று ஒரு அட்டையில் எழுதி வாசல் கேட்டில் தொங்கவிடலாம். எந்த வீடு காலியோ அந்த வீட்டிற்கு திரும்பவும் குடி இருக்க அப்படித்தான் ஆட்கள் வருகிறார்கள்.அசைவம் சாப்பிடுபவர்கள் வாடகைக்கு வந்து விட்டால் என்ன செய்வது. கோழி முட்டையைக்கூட இன்னும் தொட்டுப்பார்த்தது இல்லையே.ஆக 'வெஜ் ஒன்லி' எனவும் சேர்த்து எழுதிப்போட்டுவிடலாம். குடிகாரர்கள் யாரேனும் வந்து வாடகைக்கு வீடு கேட்டால் என்ன செய்வது. குடிப்பதே தவறா அதில் ஏதும் அளவீடுகள் உண்டா என்ன யான் அறியேன். குடிப்பழக்கம் இல்லாதவர்கள் தான் வாடகைக்கு குடியிருக்க வேண்டுமென்றால் சென்னை என்று என்ன எந்த ஊருக்குப் போனால் என்ன எங்கும் தான் அது சாத்தியப்படுமா? அதுவும் குழப்பமாகத்தான் முடிந்து போகிறது.இப்படி நாட்கள் மாதங்கள் என்ன வருடம் கூட முடிந்தது..கீழ் வீடு காலியாகத்தன் கிடந்தது.அசைவம் சாப்பிடுவோர் ஒருவ்ர் இருவ்ர் விசாரித்து விட்டு 'இது சரிப்படாது' என்று போய்விட்டார்கள் அவ்வளவே
ஒரு நாள் எப்போதுமில்லாத திருநாளாய் என் ஒன்றுவிட்டதம்பி பேசினான்.அவன் மகளுக்கு இசை ஆசிரியர் வேலை கிடைத்திருப்பதாகவும் அதுவும் என் வீட்டருகே இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் என்றும் தொலைபேசியில் என்னிடம் கூறினான்
.' ஒரு வாடகை வீடு பார்க்கணும். என் பெண்ணால முப்பது கிலோமீட்டர் போறது வர்ரது முடியல்ல. ரொம்ப அவஸ்த படுறா.கரெக்ட் டயத்துக்கு ஸ்கூலுக்கு வாத்தியருங்க வர இல்லன்னா அண்ணைக்கு அரை நாள் சம்பளம் கட் ஆயிடும்னு சொல்றா. நான் உன் வீட்டுக்கு வர்ரேன். வாடகைக்கு எனக்கு ஒரு வீடு பார்க்கணுமே. நீதான் ஒத்தாசை செய்யணும் எனக்கு அங்க வேற யாரும் இல்ல' என்றான்.
எனக்கு மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது.எப்படியும் கீழ் வீட்டிற்கு ஆள் கிடைத்துவிட்டது. வாடகை மாதம் ஐந்தாயிரம் வந்து விடும்.அப்பாடா 'கடவுள் லேசுப்பட்டவரா எதைக்கொண்டு வந்து எங்க முடிச்சு போடறாரு' மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
' வர்ர ஞாயிற்றுக்கிழமை நானு வரேன். வீடு எதனா பார்த்து வை. கொஞ்சம் சவுகரியமா இருக்கட்டும்'
' என் வீட்டுக்கு கீழ் வீடு காலி இருக்கு. நீ தாராளமா வந்துடலாம்'
கீழ் வீடுன்னா அது யாரு வீடு'
'அட என்னப்பா என் வீடுதான் நீ எதுக்கும் கவலைப்படாதே. நீ இங்க வா பாத்துகலாம்'
' அப்புறம் என்ன பருத்தி புடவையா காச்சிது. நா வந்துடறன். நீயும் மேலு வீட்டுல இருக்க அப்புறம் எனக்கு என்ன'
அவன் தொலை பேசியை வைத்துவிட்டான்.எனக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்து விட்டதாக நினைத்தேன்.கீழ் வீட்டைத்திறந்து கூட்டிக்குப்பை அகற்றி தண்ணீர் விட்டு அலம்பி தரையை பளிச்சென்று மாற்றின்னேன். ஒட்டடை அடித்து வாஷ் பேசின் டாய்லெட் எல்லாம் சரி செய்து கரண்ட் பல்புகள் போனது வந்தது பார்த்து மாற்றி , பூட்டு சாவி தாழ்ப்பாள் எல்லாம் சரியா இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டேன். மாத வாடகை எவ்வளவு என்பது முடிவானது, ஐந்தாயிரம் என ஆரம்பித்து நான்காயிரம் வரை குறைத்துக்கொண்டு வரலாம். அட்வான்ஸ் ஆறு மாத வாடகை அல்லது நான்கு மாத வாடகை வைத்துக்கொள்வது எனபதாக நானும் என் மந்திர ஆலோசனை மனைவியும் முடிவு செய்தோம்.ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் எனக்காத்துக்கொண்டு கிடந்தேன்.
சொல்லி வைத்தாற்போல ஞாயிற்றுக்கிழமை காலை வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்ட தம்பி வந்தான்.அவனோடு அவன் மனைவி வந்திருந்தாள்.அந்த இசை ஆசிரியை ப்பெண் வரவில்லை.யாருக்கு வீடு பார்க்கிறார்களோ அவள் வரவில்லை என்றால் எப்படிக்கதை ஆகும். அவன் மனைவி உடன் வந்திருப்பது எனக்கு கலக்கமாக இருந்தது. எது எனக்கும் என் தம்பிக்கும் சவுகரியமாய் இருக்குமோ அது நிச்சயம் என் தம்பி மனைவிக்கு சரிப்பட்டு வராதுதான்.உலக நீதியும் அது அல்லாமல் பிறகு என்ன என மனம்சொல்லியது.
' இது என்ன உங்க வீடு பஸ் ஸ்டாப்லேந்து ஒரு கிலோ மீட்ருக்கு.மேலே இருக்குமா?'
என் தம்பி மனவி ஆரம்பித்தாள்.ஆரம்பமே சரியில்லையே என நினைத்தேன்.
' அப்படி இல்லை.அரை கிலோமீட்டர் இருக்கும்'
' அது சரி சொந்த வீடு இந்த மாதிரி காட்டுப்புறமா கட்டுனவங்க வேற வழி இல்லாம அங்க குடி இருக்குறவங்க எல்லாரும் சொல்றதுதானே இது'
என் மனவியின் முகத்தை ஒரு முறை பார்த்தேன்.அவள் வந்த விருந்தினர்களுக்கு காபி தயார் செய்து கொண்டு இருந்தாள்.என் தம்பி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்
' நீ எப்படி மழைகாலத்துல ரோடுக்கு வருவ ஒரே தண்ணியாவே இருக்கும் போல இந்த இடம் எல்லாம்' எந்தம்பியும் அவன் பங்குக்கு பிறகு ஆரம்பித்தான்.
'' மழை என்னாப்பா ஒரு பத்து நாளுக்கு தொடர்ந்து பேஞ்சிடுமா' என்றேன்.
' நீ வேற பொரட்டாசி ஐப்பசி கார்த்திகைன்னு ஒரு மூணு மாசத்துக்குக்கொஞ்சம் சிரமம்தான்' சொல்லிய தம்பியைப்பார்த்து அவன் மனைவி' கொஞ்ச சிரமம் இல்லே ரொம்ப சிரமம்னு சொல்லுங்க' என்று பின் பாட்டு ச்சொல்லி நிறுத்தினாள்.
என் மனைவி எதுவுமே பேசவில்லை.
' வீடு எங்க எப்படி காலி இருக்கும்னு பாக்கலாம் வா எழுந்திரு போகலாம் ' என்றான் தம்பி.' நீங்க வாங்க இந்த பக்கத்து ஆளில்லாம நாங்க என்ன செய்ய இருக்கு. அது எப்படி சரியாவும் வருமா' அவன் மனைவி தொடர்ந்தாள்.
என் கீழ்வீடு பூட்டிக்கிடந்தது. அதனை த்திறந்தாவது காட்டுங்கள் என்று சொல்வார்கள் என எதிர்பார்த்தேன்.;' நேரத்தை எதுக்கு வீணாக்கிக்கிட்டு போகலாம் வா' என்றான் தம்பி. மதிய வெயில் மண்டையை பிளந்துவிடும் போலக்காய்ந்தது.சற்று முன்னர்தான் எங்கயோ எல்லாம் சுற்றி வந்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் நான்.' செத்த போவட்டுமே தம்பி இப்பக்கி வெயலு கடுமையா இருக்குது'
என்று சொல்லித் தயங்கினேன்.
' வெயில பாத்தா காரியம் ஆவுமா' என்று பதில் சொன்னான்.' யாருக்கு காரியம் ஆவுணும் இப்ப' கேட்டுவிடலாம் போல் இருந்தது. வேண்டாம் என்று விட்டு விட்டேன். நாங்கள் மூவரும் தம்பியின் பெண் இசை ஆசிரியையாய் வேலை செய்யும் அந்தப் பள்ளி அருகே வந்தாயிற்று. வாடகை ஆட்டோவுக்கு நான் தான் ருபாய் நூறு கொடுத்தேன்.
' டுலெட்' போட்ட வீடு எங்கே எனத்தேடி அலைய ஆரம்பித்தோம். ஒன்றிரெண்டு வீட்டு வாசலில் டுலெட் என்று எழுதி வைத்திருந்தார்கள்.மூவாயிரத்து ஐ நூறு என ஆரம்பித்தது வாடகை .அதிலிருந்து எட்டாயிரம் வரைக்கும் போனது.கரன்ட் நிர்வாகம்,தண்ணீர் நிர்வாகம்;பாலாற்றுத்தண்ணீர் நிர்வாகம். பொது இடம் கூட்டும் நிர்வாகம்,மூன்று நபர் மட்டுமே தங்க அனுமதி யார் ஒருவர் அதிகம் வந்து தங்கினாலும் பத்து நாட்களுக்கு அதிகம் போய் விட்டால் மாதம் ஐ நூறு கூடுதலாக வாடகையில் கூட்டப்படும் நடப்பு என சட்ட திட்டங்கள் சொன்னார்கள்.கவுச்சியும் தண்ணியும் குடிக்கறவங்க யாரும் வந்தா அதுக்கும் சில விதி முறைகள் உண்டென்றார்கள்.' பாப்பார மக்க வாடகைக்கு குடி வந்தா அந்த பிரச்சனை இல்லை'. என்பதும் சொன்னார்கள்.ஆறு மாத வாடகை அட்வான்ஸ் கட்டாயம் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். இசை ஆசிரியையின் பள்ளியை நடுவில் வைத்து நான்கைந்து தெருக்களில் சுற்றி வந்தோம்.
' எம் பொண்ணயும் கூட்டிகிட்டு வந்து வூடுவ காமிச்சி அவளுக்குபுடுச்சி இருந்தாதான் அட்வான்ஸ் தர்ரது எல்லாம்' என் தம்பியின் மனவி கறாராகச்சொன்னாள். எனக்கு கால் வலி எடுத்துக்கொண்டது. வெய்யிலோ வெயில்.. எல்லோரும் இள் நீர் குடிக்கலாம் என்று ஆகி நானே அதற்கும் செலவு செய்து பேருந்து நிலையம் வந்தோம்.
'நாங்க அத்திப்பட்டு ரிடேர்ன் டிகட் எடுத்து இருக்கோம். ரயிலுக்கு போறோம்' என்றான் தம்பி.
அப்பாடா என்று இருந்தது. ஒரு வழியாக அவர்கள் எனக்கு விடுதலை தந்து போனார்கள்.நான் என் வீடு வந்து சேர்ந்தேன்.என் மனைவியிடம் ஊர் நிலவரம் டுலெட் விஷயங்கள் சொல்லி முடித்தேன்.
என் கீழ் வீடு இன்னும் பூட்டித்தான் கிடக்கிறது.
'அடுத்தாப்புல இருக்குற பையனுக்கு க்கல்யாணம்னு ஆரம்பிச்சா நமக்கே இந்த் கீழ் வீடும் வேணுமே. அவனுக்கு வயசு ஆகுது.நமக்கும் காலா காலத்துல அந்த பொறுப்பு முடியணும். அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு போயி புரசவாக்கம் கங்காத்ரர் கோவிலண்ட இருக்குற மலயாள ஜோஸ்யரை ப்பாருங்க' என்றாள் என் மனவி.
விஷயம் இவ்வளவு சுலுவாக முடிந்துவிடும் என்று நான் எங்கே எதிர்பார்த்தேன். இனி கீழ் வீடு சும்மா கிடப்பதாகவும் வாடகைக்கு ஆள் வரவேண்டுமே என்றும் வரும் அந்த அவர்களும் சைவம் சாப்பிடுபவர்களாக, தண்ணியும் கிண்ணியும் அடிக்காதவர்களாக இருக்க வேண்டுமே என்கிற கவலையெல்லாம் ஏது.
அடுத்த நாள் த்ம்பி போன் செய்தான்.' உன் ஆசிர்வாதத்துல எம் பொண்ணுக்கு ஸ்கூல் ஆஸ்டல்லயே இடம் கிடைச்சிடுச்சி அதுலயே தங்கிக்ககுறா. அதுதான் வசதி சிக்கனமும் கூட ஆக வாடகைக்கு இப்ப வீீடு ஒண்ணும் பார்க்கவேண்டான்னு சொல்லிட்டா. ஆக நான் அதுவே சரின்னு முடிவு பண்ணிட்டேன்.' சொல்லிய அவனிடம்
'என் தம்பி பொண்ணு எப்பவும் சமத்து.' சொல்லி போனை வைத்தேன்.
-------------------------------------------------------------------------------------------------------.








.


.

. ..

Wednesday, July 30, 2014

Tagore- story






வீடு திரும்புதல் - ரவிந்திர நாத் தாகூர்
தமிழில்- எஸ்ஸார்சி

இந்த கிராமத்து விடலைகளின் மத்தியில் பதிக் சக்ரவர்த்தி ஒரு தலைவன்.அவனுக்கு ஒரு யோசனை.கிறுக்கு யோசனைதான்.இதோ இந்த ஆற்றங்கரை மண்திட்டு மீது கிடக்கிறதே ஒரு பெரிய மரம் அது ஒரு படகின் நடு த்தூணுக்கு எனத்தான் வைத்திருக்கிறார்கள் இதனை இந்த இடத்திலிருந்து உருட்டி உருட்டி விளையாடினால் என்ன.இந்த மரத்துக்கு உரிமைக்காரன் சண்டைக்கு வருவான். வரட்டுமே எல்லோருக்கும் அது சிரிப்பாயும் இருக்கும். அவனின் சக தோழர்கள் எல்லோரும் சரி என்றார்கள். மரத்தை உருட்டிவிட தயாராகி நின்றார்கள்.பதிக்கின் இளைய சகோதரன் மக்கன் மட்டும் அமுத்தலாக அங்கே நடந்து வந்தான். அந்த மரத்தின் மீது சட்டமாய் அமர்ந்து கொண்டான்.மவுனமாவே இருந்தான்.பையன்கள் எல்லோருக்கும் ஒரே குழப்பம்.கூட்டத்தில் ஒருவன் அவனைப்பிடித்து இழுத்து ' உடன் இடத்தை விட்டு எழுந்திரு' என்றான்.மக்கன் இன்னும் அமைதியாய் அமர்ந்திருந்தான்.இவ்வித விளையாட்டுக்களின் அற்பத்தனத்தை மக்கன் யோசித்தபடியே இருந்தான்.
'மக்கன் நீ மரத்தை விட்டு இந்த நிமிட்மே எழுந்திரு இல்லாவிட்டால் உன்னைத் துவைத்து எடுத்து விடுவேன் என்ன தெரிகிறதா '
என்றான் பதிக்
மக்கன் இன்னும் கொஞ்சம் சவுகரியாமாகவே நகர்ந்து அமர்ந்துகொண்டான்.
எல்லோருக்கும் மத்தியில் தனது தர்பாருக்கு ஊறு ஏற்பட்டுவிட்டதாகவும் இனி சும்மா விடமுடியாது எனவும் பதிக் எண்ணினான்.ஒன்றும் யோசனை வரவில்லை இப்படிச்செய்தாலென்ன இந்த மரத்தை அப்படியே அவன் அமர்ந்திருக்கவே உருட்டினால் இன்னும் கொஞ்சம் ஜாலியாக இருக்கும் என எண்ணினான். மக்கனும் கீழே தள்ளப்படுவான் ஆக அந்த மரமும் உருளும் என்பதாக முடிவாகியது.மக்கன் எழுந்திருக்கவே முடியாது என சட்டமாகத்தான் அமர்ந்திருந்தான். எல்லோரையும் போல இந்த வீண் ஜம்பத்தில் ஆபத்தும் இருப்பதை மக்கன் சட்டை செய்யவில்லை.
பையன்கள் எல்லோரும் மரத்தை தம்மால் முடிந்த மட்டும் நெட்டித்தள்ள, 'ஒன்று இரண்டு மூன்று ஓடு மரமே ஓடு' என்று சப்தமிட்டார்கள்.மரம் உருண்டது. மக்கனின் அமர்வும் திண்ணமான அந்த அசையாத முடிவும் கூடவே உருண்டு போனது.
பையன்கள் எல்லாரும் ஆ ஊ என்று சப்தமிட்டனர். சந்தோஷப்பட்டனர்.ஆனால் பதிக் அதிர்ந்து போயிருந்தான். என்ன வரவிருக்கின்றது என்று அவன் அறிவான்.மக்கன் விதி வசப்பாட்டவனாய் கோபக்கனல் தெறிக்க தரைமீதிருந்து எழுந்தான்.பதிக்கின் முகத்தில் குத்தினான்.அடித்தான் உதைத்தான். பின்னர் மக்கன் அழுது கொண்டே வீடு சென்றான்.முதல் கட்டம் இது முடிந்துபோனது.
பதிக் தன் முகம் துடைத்துக்கொண்டான். ஆற்று நீரில் ஒரு பகுதி மூழ்கியிருந்த படகின் மீது அமர்ந்து கோரைப்புல் ஒன்றை கடித்துக்கொண்டிருந்தான்.ஒரு படகு அப்போது கரைக்கு வந்தது.அதனில் பயணித்த நடுத்தர வயதுக்காரன், தலை நரைத்து மீசை பழுப்பாகியவன் கரைக்கு நடந்து வந்தான்.பதிக் அமர்ந்திருப்பதைப்பார்த்து' பையா இங்கு சக்ரவர்த்தி வீடு எது அறிவாயோ' எனக்கேட்டான்.கோரையைக்கடித்தபடி பதிக்' ஆ இருக்குது பார் அந்த வீடு' பதிலுரைத்தான்.வந்திருக்கும் புதியவனுக்கு விளங்கவில்லை.மீண்டும் வினவினான்.கால்களைத்தொங்கபோட்டு,ஆட்டியபடி'போயி ப்பாரயா' என்றான் பதிக்.கோரைப்புல்லை மீண்டும் கடிக்க ஆரம்பித்தான்.
பதிக் வீட்டிலிருந்து அங்கு வந்த வேலையாள் பதிக்கிடம் அம்மா அவனை அழைப்பதாக சேதி சொன்னான். அவன் அசையவில்லை. வந்த வேலக்காரன் ஒன்றும் நடவாது என முடிவு செய்து பதிக்கை குண்டு கட்டாகத்தூக்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தான்.ஆ ஊ என்று பதிக் கூச்சலிட்டு கால்களை உதைத்துக்கொன்டான். கதை ஒன்றும் ஆகவில்லை.
பதிக் வீட்ட்னுள் நுழையவும் அவன் அம்மா 'மீண்டும் மீண்டும் தம்பியை அடிப்பது என்றே இருக்கிறாய? கோபமாய்க்கேட்டாள்.ஒன்றும் அறியாதவன் போல'நான் அடிக்கவில்லையே. உனக்கு யார் அப்படிச்சொன்னது? என்றான்.
'பொய சொல்லாதே தெரியர்தா' என்று அதட்டினாள்.
'நான் அடிக்கவில்லை' என்கிறேன். 'நீயே மக்கனைக்கேள் நான் அடித்தேனா'
மக்கன் தான் முன்பு சொன்னதை உறுதி செய்து' அம்மா பதிக் என்னை அடித்தான்தான்' என்றான்.
பதிக் பொறுமை இழந்தான்.அநீதி இது என முடிவுக்கு வந்தான். பதிக் இடத்தை விட்டு எழுந்தான். மக்கனைப்பிடித்து பொத் பொதென சாத்தினான்.
'பொய்யா சொல்கிறாய் நீ அதற்குத்தான் வாங்கிக்கொள் இந்த உதை' என்று கர்ஜித்தான்.
மக்கனின் அம்மா மக்கனை ஒருபக்கம் இழுத்து பதிக்கை அடுத்த புறம் தள்ளி அடி அடி என அடித்தாள்.அவன் அலறினான். அம்மாவை த்தள்ளினான்.'ஏண்டா கடங்காரா அம்மாவையே நீ அடிச்சிடுவயா' கத்தினாள்.
இந்த நேரம் பார்த்துஅந்த நரைத்த தலை நடுத்தரவயதுக்காரன் வீட்டின் உள்ளே நுழைந்து' என்ன இங்கு சண்டை' என்றான். பதிக்கிற்கு அவனைப்பார்க கூச்சமாயும் வெட்கமாயும் இருந்தது.ஆனால் அம்மா கொஞ்சம் பின்னே தள்ளி நின்று அங்கு வந்த புதியவனை ப்பார்த்தாள்.கோபம் எங்கோ போக ஆச்சரியத்தில் திளைத்தாள்.அவளுக்கு அவள் சகோதரன் வந்திருப்பது தெரிந்து, 'அண்ணா வா வா எங்கிருந்து வருகிறாய்?' என்றாள்.
அண்ணனின் பாதம் தொட்டு வணங்கினாள்.அவள் கல்யாணத்திற்குப் பின் மும்பை சென்று ஏதோ வியாபாரம் செய்யத்தொடங்கியவன்.அவள் கணவன் இற்ந்துபோனான். அப்போது கூட இந்த அண்ணன் பிஷம்பர் மும்பையில்தான் இருந்தான்.இப்போதுதான் கொல்கத்தா வந்திருக்கிறான் அப்படியே சகோதரி எங்கே இருக்கிறாள் என விசாரித்துக்கேட்டு இங்கு வந்திருக்கிறான்.
சில தினங்கள் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருந்தது.குழந்தைகள் எப்படி ப்ப்டிக்கிறார்கள் என க்கேட்ட பிஷம்பருக்கு அம்மா பதிக்கின் ஓயாதா சேட்டையை ச்சொன்னாள்.பதிக் சோம்பேரி,சொல்வதைக்கேட்கமாட்டான் முரடண் என்றாள். சின்னவன் மக்கன் பத்தரை மாத்து தங்கம் சொன்னது செய்வான் படிப்பிலும் சரி மிகவும் கெட்டிக்காரன் என்றாள்.பதிக்கை தன்னோடு கொல்கத்தாவுக்கு அழைத்துப்போய் தன் குழந்தைகளோடு படிக்கவைப்பதாய் பிஷம்பர் சொன்னான்.விதவைத்தாய் உடனே சரி என்றாள்.பிஷம்பர் பதிக்கைக்கேட்டான். அவனும் 'சரி நான் ரெடி' என்று தான் தயாராய் இருப்பதாய்ச்சொன்னான்.
அம்மாவுக்கு பதிக் ஊருக்குப்போவது விடுதலையாய் இருந்தது.அம்மா தப்புக்கணக்குத்தான் போட்டிருக்கிறாள்.சகோதரர்களிடையே அன்பு ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை. பதிக் மக்கனை ஆற்றில் பிடித்து தள்ளி விட்டுவிடுவானோ,மண்டையை உடைத்து விடுவானோ இல்லை இன்னும் ஏதேனும் ஆபத்தில் மாட்டிவிடுவானோ தினம் தினம் அச்சப்பட்டவள் அம்மா.பதிக் சட்டென ஊருக்குப்போவதற்கு ஒத்துக்கொண்டதுகூட அம்மாவுக்கு இனம் புரியாத ஒரு கலக்கத்தையே உண்டாக்கியது.
பதிக் அவன் மாமாவை 'எப்போது நாம் கிள்ம்புவது' என நொடிக்கு நொடி நச்சரித்தான். ஏகமாய் அமர்க்களத்தில் இருந்தான்.இரவு கூட அதே நினைப்பு. உறக்கம் கூட வரவில்லை. அவனிடமிருந்த மீன் பிடிக்கும் தூண்டில்,பெரிய பட்டம்,கோலிகுண்டுகள் எல்லாவற்றையும் எடுத்து தன் சகோதரனிடம் கொடுத்தான்.கிளம்பும் சமயம் மக்கனிடம் அத்தனை அன்பாயும் பெருந்தன்மையாயும் பதிக் நடந்துகொண்டான்.
கொல்கத்தா வந்த பதிக் அத்தையை அப்போதுதான் முதல் தடவையாய்ப்பார்க்கிறான். இவன் தன் வீட்டிற்கு ஒரு புதிய வரவாய் ஆனது அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. அத்தைக்கு அவள் மூன்று பையன்களே போதும்.இன்னும் எதற்கு அதிகமாய். ஒரு பட்டிக்காட்டுப்பையன் அதுவும் பதினான்கு வயது விடலைப்பையன்.அவள் கடுப்பானாள்.பிஷம்பர் இந்த தவறை செய்வதற்கு முன்பு ஒருதடவைக்கு இருதடவை யோசித்து செய்திருக்கலாம்.
.
இந்த காலத்தில் பதினான்கு வயது விடலைப்பையனை வைத்துச் சமாளிப்பது எத்தனைத்துன்பம்.அவன் எதற்கு உபயோகம்.என்ன பிரயோசனம். அவனை க்குழந்தை எனக்கொஞ்சுவதா இல்லை என்னதான் செய்ய,அவனேதும் சொன்னாலோ அவனை செறுபிள்ளை என்கிறார்கள் இல்லை என்றால் ரெண்டுங்கெட்டான் என்கிறார்கள்.அவன் சொல்வது இங்கு எந்த சபை ஏற்கும்.அந்த பதிநான்கு வயது என்பது பொல்லாத வளர் பருவம். சட்டையும் டிராயரும் அவன் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கமுடிகிறதா என்ன குரல் எப்படி எல்லாம் மாறுகிறது கரகரப்பு வருகிறது தடுமாறுகிறது.முகம் கோணலாகி முதிர்ந்துபோகிறது. சின்னக்குழந்தையாய் இருப்பது என்பது எவ்வளவோ தேவலாம் ஆனால் இந்த பதினான்கு வயதுப்பையனை எப்படி எதிர்கொள்வது.அந்த பையனுக்கேகூட இது விஷயம் தெரிய வரும்.பெரியவர்களோடு பேசும் சமயம் படபட என வேகமாய்ப்போயிக்கொண்டே இருப்பான்,இல்லை வெட்கப்பட்டுக்கொண்டு அசிங்கமாக நெளிவான் தன்னையே பின் நொந்துகொள்வான்.
என்னதான் இருந்தாலும் இில்லை என்றாலும் இந்த விடலைப்பருவத்திலேதான் அன்புக்காக ஒருவன் ஏக்கம்கொள்கிறான்.தன்னை எல்லோரும் அங்கீகாரம் செய்ய வேண்டும் என அவாவுகிறான்.அவனை யார் மதிக்கிறார்களோ அவர்களுக்கு அடிமையாகிப்பணி செய்ய விழைகிறான். ஆனால் யாரும் அவன் மீது நேராக அன்போ பாசமோ காட்டுவதில்லை. அது அவ்வளவு சரியாக இருக்காது ஆக யாரும் அன்புசெய்வதை அவனிடம் விரும்பி விரும்பிச்செய்வதில்லை. அவன் எங்கே கெட்டுப்போய்விடுவோனோ எனத்தான் அஞ்சுகிறார்கள்.. பார்க்கிற அனைவ்ரும் கறாராக அல்லது கண்டிப்புடன் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தன் எஜமானனை தொலைத்துவிட்டதால் தனித்துவிடப்பட்ட ஒரு நாய என அவன் அலைய வேண்டியவனாகிறான். பதினான்கு வயதுப்பையலுக்கு அவன் சொந்த வீடுதான் சொர்க்கம்.புது மனிதர்களோடு ஒரு புது இடத்தில் காலம் ஓட்டுவது ஏதோ இருக்கும் அவ்வளவே.பெண்கள் அவனை அன்பாக மட்டும் பார்ப்பார்கள். வெறுமே பார்ப்பார்கள். ஆனால் மதித்துப்பார்க்கமாட்டார்கள்.அவனுக்கு இதுகள் எல்லாம் எட்டுமோ .என்றால் இல்லை.
பதிக்கிற்கு கொல்கத்தா புது இடம். அத்தைக்கு அவன் அழையா விருந்தாளி.எப்போதும் கரிச்சுக்கொட்டுவாள் அத்தை.சட்டை செய்தால்தானே. அத்தையவள்.அவனுக்கு ஒரு சிறியவேலை கொடுத்துவிட்டாலும் ஆகா ஊகூ என அந்த காரியத்தை ச்செய்து காட்டுவான். அத்தையோ 'முட்டாளாய் இருக்காதே படிப்பு பாடம் வேலை எதாவது இருந்தால் பார்' 'என்பாள்.அவன் மனம் சூம்பிப்போவான்.இப்படி இறுக்கிப்போட்ட ஒரு சூழல் அத்தை வீட்டில் எங்கே மூச்சு விட முடிகிறது.வெளியில் எங்காவது சுற்றி வந்தால் தேவலை. இதமான காற்று வாங்கி மூச்சு விட்டால் சிறிது சந்தோஷப்படலாம்.கொல்கத்தாவில் எங்கும் வீீடுகள் சுவர்கள், வீடுகள் சுவர்கள் இப்படித்தான். தன் ஊரை வீட்டை இரவுக்கனவில் மட்டுமே எண்ணிப்பார்க்க முடிகிறது. பச்சை நிறத்தால் ஒளிரும் புல்வெளி,பட்டம் விடும் அந்த அழகு இடம்,அகன்ற ஆற்றங்கரை அதன் கரையில் ஓயாதுபாடும் அவன் பாட்டு, போடும் கூச்சல்,தொங்கும் மரக்கிளை அதனிலிருந்து ஆற்றுக்குள் எகிறுதல், நீந்துதல், அவன் சகாக்கள் அவர்கள் மத்தியில் அவனின் தலைமை, அவன் அம்மாவின் கொடுரம் , அவளின் அவன் பற்றிய ஒரு தப்பான அபிப்ராயம் இவை அவனை இரவும் பகலுமாக்கிரமித்தன.
ஒரு அன்பிற்கு ஏங்கும் விலங்கானான் பதிக்.அவன் மனதில் வார்த்தையால் சொல்லிவிடவும் முடியாத ஒரு தணியாத ஆசை இருந்தது.அம்மாவின் அன்புக்காக ஏங்கினான்.பசுவின் கன்று மங்கும் மாலைப்போதில் தன் தாயுக்கு ஏங்கும் ஏக்கம் அவனுள் குடிகொண்டு இருந்தது.இந்த விலங்கின அன்புணர்வு ஒரு கூச்சத்தில் ஒரு பதற்றத்தில் ஒரு வினோதத்தில் ஒரு விகாரத்தில்..கொப்பளித்தது.யார் அதனைப்புரிந்துகொண்டார்கள்.அவனை அவன் மனதை அது விழுங்கிக்கொண்டிருப்பதை இங்கு யார் கவனித்தார்கள்.
பதிக் தான் அந்த பள்ளிக்கூடத்திலேயே பின்தங்கிய பகுதியினின்று வந்திருப்பவன்.அவனுக்கும் மற்ற பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகம்..ஆசிரியரின் வினாவுக்கெல்லாம் அமைதியாக மட்டுமே இருப்பான்.விடை தெரியவில்லையே.பின் என்ன செய்வான்.அடியும் உதையும் மழையாய்ப்பொழிந்தன.அவன் அடி சுமக்கும் ஒரு கழுதையாகிப்போனான்.சக மாணவர்கள் விளையாடும் தருணம் பதிக் ஆகாயம் பார்ப்பான். அங்கிருக்கும் சன்னலை அடுத்த வீட்டுக் கூரையை முறைப்பான். அகஸ்மாத்தாக யாரேனும் சிறுவர்கள் மொட்டைமாடியில் விளையாடுவது அவன் கண்ணில் பட்டுவிடும். தானும் அப்படி விளையாடவேண்டும் என மனம் ஏங்குவான்.
ஒரு நாள் தைர்யத்தை எல்லாம் வரவழைத்துக்கொண்டு,'மாமா நான் எப்போது வீட்டிற்கு செல்வேன்?' கேட்டுவிட்டான்.
'பொறு விடுமுறை வரவேண்டாமா' பதில் சொன்னார் மாமா.
நவம்பர் மாதம்தான் விடுமுறை வரும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதுவரை எப்படிப்பொறுப்பது.
ஒரு நாள் தன் பாடபுத்தகத்தை தொலைத்துவிட்டான் பதிக். மற்ற புத்தகங்களை எல்லாம் துணைக்குவைத்துக்கொண்டாலும் அந்த பாடபுத்தகத்தை அவனால் தயார் செய்ய முடியவில்லை. முடியவில்லைதான். ஆசிரியரின் கருணையில்லா பிரம்படி தினமும் விழுந்தது.அவன் எல்லாருக்கும் கேவலமாய்த்தெரிந்தான். அவன் அத்தை பையன்கள் அவன் அங்கு இருப்பதை அவமானமாய்ப்பார்த்தார்கள்.பள்ளியின் மற்ற பிள்ளைகளைவிட அவர்களே கேலியும் கிண்டலும் அதிகம் செய்தார்கள்.. கடைசியாக அவன் அத்தையிடம்சென்று புத்தகம் தொலைந்து போனதைச்சொன்னான்.அவள் உதட்டைப்பிதுக்கிக்கொண்டு'நீ ஒரு குசும்பன்டா சரியான நாட்டுப்புறத்தாந்தானேடா நீ. என் குடும்பத்தையும் நான் பார்த்துக்கொண்டு உனக்கு மாசம் ஐந்து தடவையா புத்தகம் வாங்கி நொட்டமுடுயும்? ' என்றாள்.
அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போதே பதிக்கிற்கு தலை வலித்தது.கைகால்கள் நடுங்கின. அவனுக்கு மலேரியா காய்ச்சல் வரலாம் .. அவன் அத்தையை எண்ணி எண்ணி அச்சம் அதிகமாகியது.அத்தைக்கு நம்மால் இன்னும் இப்படியுமா தொல்லை என எண்ணினான்
மறு நாள் காலைவிடிந்தது. பதிக்கைக்காணவில்லை.எங்கு தேடியும் ஒன்றும் ஆகவில்லை. பேய் மழை கொட்டியது. தேடிப்போனவர்கள் கைவிரித்துகொண்டு மழையில் தொப்பற நனைந்து மட்டுமே வீடு வந்தார்கள்.
பிஷம்பர் போலிசில் புகார் ஒன்றை க்கொடுத்தார்.
அன்று மாலை பிஷம்பர் வீட்டு முன்பாக போலிஸ் வேன் ஒன்று வந்து நின்றது. இரண்டு கான்ஸ்டபல்கள் பதிக்கை அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்தார்கள்.மழை கொட்டு கொட்டென்று இன்னும் கொட்டிக்கொண்டிருந்தது. பதிக் சுத்தமாய் நனைந்து இருந்தான். உடல் சேறு பூசிக்கொண்டிருந்தது. கைகால்கள் படபட என நடுங்கிக்கொண்டிருந்தன.. கண்கள் காய்ச்சலில் சிவந்து போயிருந்தன.பிஷம்பர் பதிக்கைத் தன் தோளில் சுமந்து வீட்டின் உள்ளே சென்றார்.
பிஷம்பரின் மனவி ஆரம்பித்தாள்' இந்தப்பயைலால எத்தனை இம்சை. இவனை முன்னமேயே அவன் வீட்டுக்கு தொறத்தி இருக்கலாம் நீங்கள்'.
பதிக்கின் காதில் இது விழவே, தேம்பி அழுது கொண்டே சொன்னான்' மாமா நான் என் வீட்டுக்குத்தான் திரும்ப போயிக்கொண்டு இருந்தேன். இந்த காவலர்கள்தான் என்னை ப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்து விட்டனர்'.

அவனுக்குக்காய்ச்சல் அதிகமானது.இரவு முழுக்க பினாத்திக்கொண்டே இருந்தான். பிஷம்பர் மாமா ,ஒரு டாக்டரை அழைத்துக்கொண்டு வந்தார். .பதிக் கண்களைத்திறந்து' இன்னும் லீவு வரவில்லையா மாமா. நான் இப்போது வீட்டுக்குப்போகலாமா' என்றான். அவன் கண்கள் மின்னி சுர வேகத்தைக்கூடிக்காட்டின
பிஷம்பர் தன் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைத்துடைத்துக்கொண்டான்.பதிக்கின் மெலிந்த கைகளைத்தொட்டு வருடினான். இரவு முழுவதும் பிஷம்பர் உறங்கவேயில்லை.' அம்மா என்னை நீ அப்படி அடிக்காதே நான் உன்னிடம் உன்மையைத்தான் சொன்னேன்' என உளறிக்கொண்டே படுக்கையில் கிடந்தான்.
ஒரு கணம் கண் விழித்து நல்ல உணர்வு வந்தவனாக அறையை நோட்டம் விட்டான்.யாரையோ அவன் கண்கள் தேடிச்சோர்ந்தன அவன் தலகணையில் மீண்டும் தலை புதைத்தான். எதிரே இருந்த சுவரை வெறித்தபடி ப்பார்த்துக்கொண்டான். விம்மும் ஒலி மட்டும் கேட்க முடிந்தது. இப்போது பிஷம்பருக்கு அந்த பதிக்கின் விருப்பம் என்ன என்பது அறிய முடிந்தது.அவன் காதருகே சென்று,'உன் அம்மாவை இவ்விடம் அழைத்து இருக்கிறேன் பதிக்' என்றார்..
அன்றைய நாள் முடிந்தது. டாக்டர் பதிக்கின் நிலமை மிக மிக மோசம் என்று தாழ்ந்த குரலில் சொல்லிச்சென்றார்.
பதிக் கூவினான்,'ஆற்று தண்ணீ ஆழம் பாரு அது அளக்கும் குறியப்.பாரு இப்போ பதினெட்டு அடி. ஆகா இப்போ பாரு அதுவே இருபத்து நாலு, ஆழக்குறியப் பாரு' ஆற்றில் நீராவி படகு ஓட்டிகள் ஆழத்தையும் படகின் நேர் நிலை குறித்தும் கட்டளை தருவது நித்தம் நித்தம் கேட்டிருப்பவன் பதிக். இப்போது அளக்கமுடியாத ஒரு கடலின் ஆழத்தை அல்லவா அளக்க முயன்றுகொண்டிருந்தான்.
ஊரிலிருந்து வந்த பதிக்கின் அம்மா ஒரு சுழற்காற்று போலே அவன் கிடக்கும் அறையுள்ளே நுழைந்தாள். பதிக்கை இப்படியும் அப்படியும் புரட்டி பரட்டி ப்பார்த்தாள். விசும்பினாள். கேவினாள்.கோவென்று கூச்சலிட்டு அழுதாள். பிஷம்பர் அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றான்.அவள் பதிக்கின் படுக்கையில் முட்டிக்கொண்டாள்.'பதிக் என் செல்லமே என் செல்லமே' என்று கத்தினாள். செல்லத்தின் கைகால்கள் அசைவது நின்று போயிற்று.'ஆ' என அவன் சொல்லிக் கடைசியாய் நிறுத்தினான்.
'என் செல்லமே என் அய்யாவே என் ராசாவே' அம்மா விசும்பி விசும்பி அங்கு அழுது கொண்டேயிருந்தாள்..
பதிக் யாரையும், குறிப்பாக அங்கிருந்த யாரையும், பார்க்காமலே தன் தலையை மட்டும் திருப்பிக்கொண்டு சொன்னான்.' இப்போதுதானே அம்மா எனக்கு விடுமுறை'.
--------------------------------------------------------------------------.

.

.

Friday, May 30, 2014

veedu -story



வீடு
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

தம்பி எங்கே? என்றேன் அம்மாவிடம். என் அம்மாவின் முகம் வாடி இருந்தது. தேம்பி அழுது இருப்பாளோ என்னவோ. இருக்கலாம் .ஏதோ வீட்டில் நடந்துவிட்டிருக்க வேண்டும்.  உள்ளூர் நகராட்சித்தொடக்கப் பள்ளியில்தான் நான்காவது படிக்கிறான் என் தம்பி.அவன்  இப்போது எங்கே சென்றிருப்பான். அவனைத்தான் வீட்டில் காணவில்லை.   கேள்விக்குப்பதில் ஏதும்  எனக்குச்சொல்லாத அம்மா எதிரே இருக்கும் மேசையை மட்டுமே காட்டினாள். அந்த மேசையின் மீது அப்படி என்ன இருக்கிறது. நான் எட்டிப்பார்தேன்.
 தம்பியின் திருத்தப்பட்ட தமிழ்த் தேர்வுத்தாள் ஒன்று கிடந்தது. தம்பியின் கையெழுத்துத்தான். தமிழ் முத்து முத்தாக எழுதியிருந்தான்  நான்  அதனை எடுத்துப்பார்த்தேன்.  நடந்துமுடிந்த காலாண்டுத் தமிழ்த்தேர்வில் அவனுக்கு எண்பது மதிப்பெண். தேர்வுத்தாள் எனக்குத் தெரிவித்தது  நல்லதொரு செய்திதான்.எப்போதும் எழுபது தொடங்கி எண்பது மதிப்பெண்தானே அவன் வழக்கமாய்ப் பெறுவது.  இப்போது  ஒன்றும் குறைந்து விடவில்லை. எனக்கு மகிழ்ச்சியே. பின் என்னதான் ஆயிற்று  இந்த அம்மாவுக்கு..
                            என்ன நடந்தது சொல்லேன்? மீண்டும் அம்மாவிடம் கேட்டேன். அவள் சிவப்பு மை கொண்ட பேனாவால் திருத்தப்பட்டு  மேசைமீது கிடந்த  அந்தத்தமிழ்த் தேர்வுத்தாளையே மீண்டும் எனக்குக் காட்டினாள். அது மேசை மீது சிவமே என்று கிடந்தது. தம்பியின்  அந்தத்தமிழ்த்தேர்வுத்தாளையே எடுத்து மீண்டும் பார்த்தேன். எனக்கு ஏதும் புரியவில்லை. விழித்தேன்.
மனப்பாடப்பகுதியிலிருந்து திருக்குறள் எழுதச்சொன்ன  கேள்விக்கு  உன் தம்பி என்ன பதில் எழுதி இருக்கிறான் பார்? அம்மா எனக்குச்சொன்னாள்.
தேர்வுத்தாளை ஊன்றிப்பார்த்தேன்.
 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
 நன்னயம் செய்து படும்.
 உனது மனப்பாடப்பகுதியிலிருந்து 'படும்' என முடியும் திருக்குறளை எழுதுக ?  என்னும் இந்த வினாவுக்குத்  தம்பி எழுதிய விடை.  இரண்டாம்  வரியில் செய்து விடல் என்பதற்குத்தான் செய்து படும் என எழுதிக் குறளை முடித்து இருக்கிறான். மதிப்பெண் முழுதாக இரண்டும் கொடுக்கப்பட்டுத்தான் இருந்தது. தேர்வுத்தாள்  திருத்திய ஆசிரியர் இது தெரியாமல்தான் முழு மதிப்பெண்ணையும் வழங்கி இருக்க வேண்டும்.
'இதற்கு நீ ஏன் அழுகிறாய்?'
அம்மா பதில் சொன்னாள்.
' அப்பா தம்பியிடம்  சொன்னார்   தேர்வுத்தாளைக்கொண்டு போய்த் தமிழ் ஆசிரியரிடம் காட்டி இரண்டு மதிப்பெண் குறைத்துக்கொள்' என்றார்.அவர் குணம் உனக்குத்தான் தெரியுமே'
' ஆமாம் அவர் அப்படித்தான் சொல்வார். அதுவும் சரித்தான், அம்மாவுக்குப்பதில் சொன்னேன்.
பிறகு நடந்தது அம்மா சொன்னாள். தம்பி  அவனுடைய தமிழ் ஆசிரியரிடம் சென்று தேர்வுத்தாளைக் காட்டி மதிப்பெண் குறைக்கமுடியவே முடியாது என்றான். எனக்கு ப்போடப்பட ரேங்க் குறைந்துவிடும்.  ஆக என்னால் முடியாது என்று காரணம் சொன்னான்..
'அதுவும் சரிதானே' என்றேன்.
' உன் அப்பா ஒத்துக்கொண்டால்தானே.'
'அப்புறம் என்ன நடந்தது?
'வாக்குவாதம் மட்டுமே  நடந்தது. பள்ளி  மதிப்பெண் அட்டையில் நீ யே கூட என் கையெழுத்தைபோட்டுப் பள்ளியில் கொடுத்துவிடுவாய் என்றார் அப்பா'
தம்பி பேசாமல் நின்றுகொண்டிருந்தான்.
'படும் என முடியும் குறள்  சொல்?' அப்பா கேட்டார்.
'புறந்தூய்மை நீரால் மையும் அகந்தூய்மை
வாய்மையாற்காணப்படும்'   உடன் தம்பி  குறளைச்சரியாய்ச்சொன்னான்.
' எழுத வேண்டியது தானே' அப்பா கேட்டார்.
' தேர்வின் போது இக்குறள் நினைவுக்கு வரவே இல்லை.  எவ்வளவோ மூளையைக்கசக்கி முயன்றேன் முடியவில்லை.ஆகத்தான்  நினைவுக்கு வந்த ஒரு குறள் ஒன்று எழுதி  ஈற்றுச்சொல் மட்டுமே' படும் 'என மாற்றி ப்போட்டேன்.  இது தெரிந்தே செய்தேன்  நான் செய்தது தவறுதான்'
தம்பி அப்பாவிடம் சொல்லி முடித்தான்..
' உனக்கு மதிப்பெண் குறைப்பது  என்பது ஒருவிஷயமே இல்லை. இன்று இப்படி தவறு செய்பவன் நாளை எது வேண்டுமானால் செய்வாய்'
என்றார் அப்பா.
'நீங்கள்தானே என் ரேங்க்  எப்போதும் குறையக்கூடாது என்று சொன்னீர்கள்'
' அதற்காக இப்படியா'
'ஆமாம்' என்றான் அப்பாவிடம்.
' நீ  எல்லாம் என் பிள்ளையா' அப்பா கேட்டார்.
'அது நீ தான் சொல்லவேண்டும்' என்றான் தம்பி.
அப்பாவுக்கு இதற்குமேல் என்ன வேண்டும்.
அவ்வளவுதான் நடந்தது. சற்று நேரத்திரற்கெல்லாம் தம்பியைக்காணவில்லை.  இவ்வளவே அம்மா எனக்குச் சொன்னாள். எனக்குத்தலை  சுற்றியது. வீட்டில் தம்பியும் இல்லை அப்பாவும் இல்லை. அம்மா தொடர்ந்தாள்.
'எங்கே தம்பி என்றேன் அப்பாவிடம். எனக்கு மட்டும் என்ன தெரியும் என்றார் அவர்.காலை ஏழு மணிக்குப்போனவன். மதியம் ஆயிற்று. இன்னும் வரவில்லை. எங்கு சென்றானோ. என்ன ஆனானோ. அப்பா கோட் ஸ்டேண்டில் மாட்டியிருந்த தன் சட்டைப்பையில்   தான்  வைத்திருந்த  பணம்  ஏதும் குறையவில்லை.ஆக ப்பையன்  இப்போதும் சரியாகத்தான் இருக்கிறான்.  ஒன்றும் கெட்டுப்பொய்விடவில்லை.என்றார்.'
'நீங்களும் உங்க பீத்த காசும் ' என்று கடிந்து சொன்னேன்.
'காசு காசு தான். அதில் என்ன சற்றுப் பீத்த காசு'
' தம்பி  கொஞ்சம் காசு கையில் எடுத்துப்போய் இருந்தாலாவது அவன் வயிறு பசித்தால் எதுவும் வாங்கிச் சாப்பிட்டு இருப்பான்'
 தம்பி பசி தாங்காதவன்  ஆக அது நினைத்துச் சொன்னேன்.
'இப்படித்தான் பையன்கள்  அம்மாக்களால்கெட்டுப்போவது'  அப்பா எனக்குப்பதில் சொன்னார்.
' உங்களுக்கு உங்கள் காசு. எனக்கு என் பிள்ளை' வெடுக்கென்று சொன்னனேன்.
' நீ  மட்டும் தனியளாய்த்தானே அவனைப்பெற்றாய்'  என்றார்.
'ஆமாம் ' என்றேன்.
' அப்புறம் நான் எதற்கு'
' அது நீங்கள்  தான் சொல்லவேண்டும்''  ஆத்திரத்தில் சொல்லிவிட்டேன்.
' நானும் போய்த்தொலைந்தால் காசு அருமை பற்றி  உனக்குத் தெரியும் ' என்று அவர் சொல்ல
' போய்த் தொலைங்க்களேன்'  எனக்கும் கோபம். ஆகச் சொல்லிவிட்டேன். அவரும்  எங்கோ கிளம்பிப்போய்விட்டார். அவரும் எங்கே சென்றார் என்று தெரிந்தால்தானே'.
' அவர் சட்டைப் பையில் பணம் இருந்ததா? நான் அம்மாவைக்கேட்டேன்.
' எதை விட்டாலும் அதையா விடுவார் ' அம்மா சொன்னாள்.
' காசு நமக்காகத்தானே அப்பா சேர்த்துவக்கிறார்'
' நீயும் அவர் பக்கம் தான் பேசுவாய். நீ என்ன நியாயம் சொல்லிவிடப்போகிராய்'
என்னிடம் சொன்ன அம்மா உடன் வீட்டை விட்டு வேளியே போனாள்.
' நீ எங்கே போகிறாய்'
' நீ கேட்கவேண்டாம்' அம்மா சொல்லிப்புறப்பட்டாள்.
எனக்குப்பசி. வேலை முடிந்துவந்த களைப்பு.  நானே எடுத்துப்போட்டுச்சாப்பிட்டேன்.பாயெடுத்துப்போட்டு மின் விசிறிக்குக்கீழாகப்படுத்துக்கொண்டேன்.நாளைக்கு எனக்கு  அலுவலகத்தில்  இன்னும் கூடுதல் வேலை இருக்கிறது.
தம்பி கிரிக்கெட் மைதானம் மூடியதும்  வீடு வருவான்
அப்பா நூலக நேரம் முடிந்ததும்   வருவார்
அம்மா வினாயகர் கோவில் நடைச் சாத்தியதும் வந்து விடுவாள்.
அழகாகச் சமாதானம் சொல்லிக்கொண்டேன். என் மனம் ஒத்துக்கொண்டால்தானே. வீட்டு வாயிற்கதவு
கதவுத்  தாழ்ப்பாள் போடாது சும்மா சாத்தி மட்டுமே வைத்துப்படுத்துள்ளேன்.உறங்கு நீ என்று கெஞ்சுகிறது உடல். மனக்குரங்கு  என்னை உறங்க விட்டால்தானே.
---------------------------------------------------------------











'