Sunday, November 1, 2020

செல்பேசி வாழ்க்கை

 


 

 

செல்பேசி வாழ்க்கை

 

செல்பேசிதான் வாழ்க்கை

இன்றைக்குச் செல்பேசி இல்லையென்றால்

மனித குலம் மொத்தமாய்

சுடுகாட்டுக்குப்போயிருக்கும்

மின்சாரம் உற்றதுணை

மண்ணும் மணி நீரும்

நேர்மையாய் துணையிருக்க

வஞ்சமில்லா விவசாயி

சோழ நாட்டுவயலில்

காலநேரம் பாராதுழைத்தான்

மக்கள் வயிறு நிறைகிறது

மருத்துவப்பணியாளர்கள்

மருந்து இன்னது அறியாமலே

தடுப்பூசி வரும் வரும் என்கிறார்கள்

தடம் புரியாமல் விழிக்கும் மக்களுக்குத்

தெய்மெனக் காட்சி தருகிறார்கள்

ஏழு மாதங்கள் முடிந்துபோயின

சமுதாயம் இன்னும் இருண்டுதான் கிடக்கிறது

காலம் பொன் போன்றது என்றார்கள்

எது போனாலும் கிடைக்கும்

காலம்  போனால் கிடைக்காது

சொல்லி சொல்லி வளர்த்தார்கள் மக்களை

எத்தனைக்கோடிகோடி மனித நாட்களை

கொரோனா கொள்ளை நோய் பலி கொண்டது

ஈராயிரத்து இருபதில்

இந்தியா வல்லரசாகுமென்றார்

எங்கே வல்லரசாவது

மனித உயிர்களைக் காப்பாற்றத்தான்

இரவு பகலென போராடுகிறது இச்சமூகம்

தீவிரவாதிகள் ஏனோ

எண்ணிப்பார்க்கமாட்டேன் என்கிறார்களே

பிரான்சில் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் எல்லையில்

ஓயாத வெடிச்சத்தம்

நமது மண்ணின்

நாற்பதாயிரம் சதுர அடியை

நேருகாலத்து சீனயுத்தத்தில் ஆக்கிரமித்து

பின்னும் அருணாசலம் வேண்டுமென்கிறது

லடாக் எல்கையில் ஓயாது சீண்டல் தொடர்கிறது

-------------------

 

 

 


No comments:

Post a Comment