Thursday, October 29, 2020

கொரோனா உலகம் . .

 

 

கொரோனா உலகம் 

  

கொரோனா உலகமடா இது

தெருக்களில் போகிறவர்கள்

கட்டாயம் அணியவேண்டும் முகக்கவசம்

கடைபிடியுங்கள்  சமூக இடைவெளி

அது தான் முக்கியம்.

மிக மிக அவசியம் எனில் மட்டுமே

வெளியேச்செல்லுங்கள்

கைகளைக்கழுவிக்கொண்டே. இருங்கள்

கழுவு திரவம் கொண்டு.

உங்கள் பாதுகப்பு உங்கள் கைகளில்

சொல்லிக்கொண்டே இருந்துமென்ன

அமெரிக்க ஜனாதிபதி லண்டன் பிரதமர்

மந்திரி மார்கள் அனேகர்

அய்ஸ்வர்யா தொடங்கி அமிதாபச்சன் வரை

இன்னும் எத்தனையோ பெருந்தலைகளை

தொட்டுப்பார்த்தது. கொரோனா

வணக்கத்திற்குறிய மருத்துவர்கள்

மருத்துவப்பணியாளர்கள் பலர்

இற்றுக்கொண்டனர் விடைபெற்றுக்கொண்டனர்.

லட்சம் லட்சமாய் கொள்ளைகொண்டது

கொள்ளை நோய் மனித உயிர்களை

கோவிட் 19  கொள்ளை நோய் மட்டுமே பிரதானம்

பிறவெல்லாம் பின சீட்டுக்குத்தள்ளப்பட்டன

உலகு நடப்பு இப்போதைக்கு 

அசாதாரணமே சாதாரணம்

இத்தனையும் இங்காகி

மனித நேயம் கொஞ்சமாய்த் துளிர்க்குமா  கேட்கிறாய்

அடி செருப்பால அவ்வளவு பேராசையா

மருந்து விற்று

மருத்துவ சேவை விற்று

மருத்துவ ப்பரிசோதனை விற்று

சவ அடக்கம் விற்று

ஏது ஏதோ இன்னுமும் விற்று

பணம் பணம் பண்ணுதல்தான்

ஓயாமல் நடக்கிறதே

விடியலின் வெளிச்சம் 

எங்கிருந்து வரும்..

-------------------------------------.

.

 

.

 

No comments:

Post a Comment