Sunday, October 25, 2020

டெல்டா விவசாயி

 

 


டெல்டா விவசாயி 

                   

 உலகம் எங்கே உறங்கிற்று

அமைதி தொலைந்து

எத்தனையோ நாட்களாயிற்று

கொரோனாவுக்குத்தடுப்பூசி

வரும் வரும் என்கிறார்கள்

இன்னும்தான் வரவில்லை அது.

அதற்குள்ளாக அமெரிக்காவில் தேர்தல்

பீகாரில் சட்டசபைத்தேர்தல்

நீட் தேர்வு முடிவு வந்து அலசல்

அடுத்த முதல்வர் தமிழகத்தில் யார்

தொடர்கிறது முஸ்தீபு

தேர்தல் வர இன்னும் மாதங்கள்

சில மிச்சமாய் இருக்கிறது

கொள்ளை நோய் விரட்டியது

காவிரித்தாய் மட்டுமே துணை செய்தாள்

தஞ்சை டெல்டா விவசாயி

மாடாய் உழைத்தான்

நெல்மணியை மலையெனக் கொண்டுதந்தான்/

அதை விலை கொடுத்து வாங்கி

அவன் மனம் நிறைய வேண்டாமா?

அரசாங்கம்  பாடாய்ப்படுத்துகிறது.

விளைந்த நெல் தார்ச்சாலையில்

வானமே கூரையாய்க்

 கொட்டிக்கிடக்க

முளைகாணும் நெல்மணி கண்டு

கண்ணீர் சிந்துகிறான்

போதெல்லாம் வயலில் உழைத்தவன்

இளக்காரமாய் அவனையா பார்ப்பாய்

கடவுளுக்கே  அடுக்காது போ..

 

 

No comments:

Post a Comment