Wednesday, November 4, 2020

மனுவும் ஒன்றும் கொம்பனில்லை

 

 

 

மனு  ஒன்றும் கொம்பனில்லை

                 

அமெரிக்காவில் தேர்தல்

டிரம்புக்கும் ஜோபிடனுக்கும் போட்டி

ரிபப்ளிக் கட்சியோடு டெமாக்ரடிக் கட்சியின்

ஆடுகளக் குடுமிச்சண்டை.

பீகாரில் சட்டசபைத் தேர்தல்

தொடங்கிவிட்டிருக்கிறது.

மூன்றாவது கட்டத் தேர்தல் மேடை முழக்கம்

மும்முனைப்போட்டி.

நாடு சந்திக்கும் நெருக்கடிகள் கிடக்கட்டும்

அந்த நானல்லவா முக்கியம்

அனைத்துக்கும் ஆதாரம்  நான்

மேலுக்குச் சண்டையென்ற தோற்றம்

கண்டு கண்டு ஏமாறும்

கோடான கோடி அப்பாவிகள்

2 ஜீ யை அமுக்கி வாசிப்பதில்

எப்படி வருகிறது ஒற்றுமை

எதிர் புதிர்த் தலமைகள்

சகாயம் விசாரித்த கல்குவாரி ஊழல்

தென்தமிழ் மண்ணில் அறிவோம்

பத்து மனித எலும்புக்கூடுகள் கிடைத்ததே

யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா

அமைதியாய் இக்கிறார்கள் எல்லோரும்

ஈரோடு சமீபம் தேசிய நெடுஞ்சால

கண்டையினரில் கட்டுக்கட்டாய்ப்

யாத்திரைப் போன கரன்சி நோட்டுகள்

சேலம் சென்னை  ஓடும் ரயிலில்

இரும்புப்பெட்டிகள் அறுத்துக்

கொள்ளையோ கொள்ளை

தமிழ் நாட்டு பழஞ்சிலைகள்

கண்டம் விட்டு கண்டம்திருடு போவது

துருவித்துருவி ஆய்ந்த அந்தமீசைக்காரர்

எங்கே காணோம் அறிவோமா நாம்

ஊட்டி பெருமாளிகையில் நடந்த

முப்பெரும்  தொடர்கொலைகள்

ஏன் பேச்சே காணோம்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு

அவைகட்கு தொப்புள்கொடி அறாதபோதும்

லட்சமென கையிருப்பு வைத்திருந்த

ஐ ஏ எஸ் அதிகாரியின் புதிர்ப்பதில்

கேட்டோமே நாம்.

அரவம் தொலைத்தது

சென்னை அப்பல்லோ மருத்துவமனை

அம்மாமுதல்வரின் இறப்பு விசாரணை.

புத்தர் பிறந்ததற்கு முன்னர் பிறந்த

செத்தச்சுவடி மனுவுக்கு

எப்படி முளைக்கும் புது இறக்கை.

குடியரசுத்தலைவர்கள் இருவர் பெற்றோம்.

அம்பேத்கர் யாத்திட்ட அரசியல் சாசனம்

அவர்களுக்கு ச்சூட்டியது மகுடம்.

எப்பொருள் யார் யார் வாய் க்கேட்பினும்

அப்பொருளின் மெய்அறிதல் எம்கடன்

மனு ஒன்றும் கொம்பன் .இல்லை.

--------------------------------------------

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment