Sunday, March 14, 2021

வானவில்லின் எட்டாவது நிறம்

 

 

 

வானவில்லின் எட்டாவது நிறம்     

 

 

சத்தியத்தின் பேரழகை

காட்சியாய்க்கண்டவர்கள்

விண்டுரைக்க வரமாட்டார்

ஆகத்தான் கவியே சேதியுனக்கு

ஏழு வண்ண

வானகத்து வில்

கள்ளமிலா உள்ளத்துப்

பாட்டுக்காரனிடம் பகர்ந்தது

 

முப்பட்டை ஆடி

வெள்ளை ஒளிக்கற்றை

வானவில்லுக்கு நிறம் ஏழு

எத்தனைக்காலம்  இது சொல்வீர்

வானவில்லுக்குண்டு எட்டாவது நிறம்

எவ்வுயிரும் தம் உயிர்போல் உள்ளும்

உள்ளமுடைப்பெரியோர்க்கு

அன்புக்கண்ணுண்டு

அன்பேசிவமாகி அனுபவம் பயிலத்

தன்னால் தெரியும்

வானவில்லின் எட்டாவது நிறம்

வாழையடி வாழையென

வந்து வந்து

விடை ப்பெற்ற மானிடப்பரப்பில்

விரல் விட்டு என்ணிடலாம்

அன்புக்கண் கொண்டு

எட்டாவது நிறம்

ஆனந்திதோரை.

மாயத்திரையோ ஏழு

விலகிடத்தெரியும் அருள்ஜோதி

வடலூரார் காட்டிய மெய்

சொல்லல் விளங்குமா

சொல்லில் அடங்குமா

உள்ளன்பு மெய்யானால்

வசப்படும் உங்கள்

அன்புக்கண்ணுக்கு

வானவில்லின் எட்டாவது நிறம்.

No comments:

Post a Comment