Tuesday, November 9, 2021

கிரக ….. சாரம்                   


ஆட்சி  செய்கிறது

சென்னையை வெள்ளம்.

கோடிஸ்வரர்களாயினும்

கோவண்டிகளாயினும்

கண்களில் அச்சம்.

உதிரத்தை விற்று

உழைப்பிலே வாங்கிய

அபார்ட்மென்ட்கள்

அரிதாரம் பூசிக்கொண்டு

என்னை ஏமாற்றிய கதை

ரெண்டு நாள் மழையில்

வெளிச்சமானது அப்பட்டமாய்.

புரசை  கொளத்தூர்

வேளச்சேரி மாம்பலம்

இன்னும் இவை  எத்தனையோ

வெள்ளத்தில் திணறி

மாய்ந்தன ஓய்ந்தன.

சோத்துப்பொட்டலமும்

குளிருக்குப்போர்வையும்

வழங்கிட வரலாம் யாரும்.

குந்திப்படுக்க ஈரமில்லா

குடிசைபோதுமெனக்கு

இடுப்பளவு மழை நீர்

வாழும் தெருவில்

குமட்டுகிறது துர் நாற்றம்.

…………………………………………………..




No comments:

Post a Comment