Friday, September 4, 2020

நடப்பு

 

 

 நடப்பு

 

திருப்பூர் சமீபம்

கண்டெயினரில் பயணித்த

கரன்சி நோட்டுக்கு

ஆயி அப்பனை

இன்னும்தான் தேடுகிறார்கள்

சாராயக்கடை முன்னே

வெற்று ச்சாகசம் பேசலாம்

வோட்டுக்கு வீங்கிப் பிழைப்பு

அன்றாடம் என்றானபின்

கையில் கம்பு

கை நிறைய காசு

கசமால சாதியை

அடகும் வைக்கவேண்டும்

லட்டு நகர் திருப்பதிக்கு

தேர்தலில் சீட்டுப்பெற

காவடி கட்டாயம் எடுத்தாகவேண்டும்

ஆகாயம் தொட்ட

நீதிமன்றம் தீர்ப்பு

என்னத்தைச்சொன்னால்தான் என்ன

வோட்டுக்கு அம்மணமாய் வாழும் வாழ்க்கை

அண்டை அசலூரார்

சொட்டுத்தண்ணீர் திறக்க

இறங்குவதே இல்லை மனம்

கையில் பகவத்கீதை பிடித்து

ஊர் வலம் தவறாமல் வருகிறார்கள்.

சாதிக்காரன் வோட்டும்

கோடி கோடியாய்க்காசும்

மடையர் முன்

மண்டியிட்டு நிற்கவும் தெரிந்திருந்தால்

மக்கள் மன்றங்களில்

மரக்கட்டையாய்

வாயையும் இன்னொன்றையும் பொத்தி அமரலாம்

நல்ல ஜோசியரைப்பாருங்கள் முதலில்

தங்கள் ஜாதகம்தான் எப்படியோ

வெள்ளைச்சட்டை  சில இஸ்திரி செய்து

பத்திரமாய் இருக்கட்டும்

நினைவில் வையுங்கள்.

.

-----------------------

 

No comments:

Post a Comment