Saturday, September 5, 2020

இன்றும் அன்றும்

 

 

இன்றும் அன்றும்

 

முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில்

உறுதிமொழி எடுப்பது

காலை இறைவணக்கத்தோடு கட்டாயமாக

இப்போது உறுதிமொழி ஏற்பு

காணோம் எங்கும்

உறுதிமொழி எடுப்பானேன்

அதை பின் விடுவானேன்

அக்காடா என்று அதை விட்டுவிட்டவர்கள்

விபரம் தெரிந்தவர்கள்

சரக்கு விற்று க்காசு பார்த்தவர்கள்

சர்வகலாசாலைத்துவக்கி

கல்லா கட்டுகிறார்கள்

அரசுப்பள்ளியில் ஆரம்ப நிலை ஆசிரியர்களின்

அரைசம்பளம் கூட

பெறாத சுய நிதிக்கல்லூரி ஆசான்கள்

கோடி கோடியாய்

கல்விக்கொள்ளையர் முன்

தண்டனிட்டபடி

சொச்சமாய் த்தெரிந்த தேசியகீதத்தோடு

மொத்தாய் த்தெரியாத தமிழ்த்தாய் வாழ்த்தும்

பாடிக்கொண்டு கல்விக்கூடங்கள் தொடர்கின்றன

வல்லரசாகவேண்டும் தாய் நாடு

அகண்ட நாம பஜனை

எங்கும் நடக்கிறது

இடைவெளியே இல்லாமல்..

--------------------------

 

 

 

No comments:

Post a Comment