Wednesday, May 13, 2026

advaitha amritha upanishath

 

அத்வைத அம்ரித உபநிஷத்

சாந்தி மந்திரம்

ஓம் சாந்தி: சாந்தி : சாந்தி:

பிரம்மன் நம் இருவரையும் காக்கட்டும்

பிரம்மன் நம் இருவரால்  நிறைவுறட்டும்

உற்சாகத்தோடு நம் பணி சிறக்கட்டும்

நமது வாசிப்பு ஒளிரட்டும்

நாம் ஒருவரை ஒருவர்  வெறுக்காதிருப்போம்.

 

மந்திரம்  1

பிரம்மன்  ஒருவன் இரண்டல்லாதவன்

அவன் அழிவுறா சக்தி

அவனுக்கு அடுத்து யாருமில்லை.

அறிவின் ஆனந்தத்தின் ஒத்த கலவை

தந்நிறைவானவன்

அவன் பூரணன்

 

மந்திரம்  2

பிரம்மன் உள் நிறைந்தும் நிறையாமலும்

மேலும் கீழுமாய்

முன்னும் பின்னுமாய்

வலப்புறமும் இடப்புறமும்

எங்கும் உறை  எங்கும் நிறை வெளி

அவன் சிதாகாஸன்.

 

மந்திரம் 3

எப்போதுமிருக்கும் முழு நிறைவு

சத் சித் ஆனந்தம்

அதன் ஐங்குணங்கள் அறிவாய்

பிரம்மன் பற்றி இயன்றவரை சிறப்பாய்ச் சொல்

தியானம் செய் நின்  மனதில்

உணர் பிரம்மத்தை.

 

மந்திரம் 4

அழிவிலாதது

இரண்டற்றது

பிரிக்க முடியாதது

உருவமிலா ஆத்மா

மூன்று உடல் ஐந்து உறைகளினின்றும் வேறானது

மூன்று நிலைகளின் சாட்சி

அதை ஒருவன் தானே உணரவேண்டும்

இடைவிடாத நெடிய  ஆழ்ந்த தியானத்தால்

சித்தியாவது அது.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment