அத்வைத அம்ரித உபநிஷத்
சாந்தி மந்திரம்
ஓம் சாந்தி: சாந்தி : சாந்தி:
பிரம்மன் நம் இருவரையும் காக்கட்டும்
பிரம்மன் நம் இருவரால் நிறைவுறட்டும்
உற்சாகத்தோடு நம் பணி சிறக்கட்டும்
நமது வாசிப்பு ஒளிரட்டும்
நாம் ஒருவரை ஒருவர்
வெறுக்காதிருப்போம்.
மந்திரம் 1
பிரம்மன் ஒருவன்
இரண்டல்லாதவன்
அவன் அழிவுறா சக்தி
அவனுக்கு அடுத்து யாருமில்லை.
அறிவின் ஆனந்தத்தின் ஒத்த கலவை
தந்நிறைவானவன்
அவன் பூரணன்
மந்திரம் 2
பிரம்மன் உள் நிறைந்தும் நிறையாமலும்
மேலும் கீழுமாய்
முன்னும் பின்னுமாய்
வலப்புறமும் இடப்புறமும்
எங்கும் உறை எங்கும்
நிறை வெளி
அவன் சிதாகாஸன்.
மந்திரம் 3
எப்போதுமிருக்கும் முழு நிறைவு
சத் சித் ஆனந்தம்
அதன் ஐங்குணங்கள் அறிவாய்
பிரம்மன் பற்றி இயன்றவரை சிறப்பாய்ச் சொல்
தியானம் செய் நின்
மனதில்
உணர் பிரம்மத்தை.
மந்திரம் 4
அழிவிலாதது
இரண்டற்றது
பிரிக்க முடியாதது
உருவமிலா ஆத்மா
மூன்று உடல் ஐந்து உறைகளினின்றும் வேறானது
மூன்று நிலைகளின் சாட்சி
அதை ஒருவன் தானே உணரவேண்டும்
இடைவிடாத நெடிய
ஆழ்ந்த தியானத்தால்
சித்தியாவது அது.
No comments:
Post a Comment