என்னுரை
அன்பு வாசகர்களே
வணக்கம். திரு. விட்டல்ராவ் நாடறிந்த எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை எனப்
பல தளங்களில் முத்திரை பதித்தவர். அவரின் படைப்புக்களை நான் நிறைவாக வாசித்தவன். அவரோடு நெருங்கிய நட்பு
போற்றுபவன்.அவருடைய எளிமையும் நேர்மையும் அரவணைப்பும் அனுபவித்தவர்கள் பாக்கியவான்கள். அவரின் எழுத்துப்படைப்புகள் வாசகனோடு
இணக்கம் கொண்டவை. அவை பேசும் படைப்புகள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இந்நூல் வெளிவர உதவிய குவிகம் பதிப்பகத்திற்கு நன்றியுடையேன்.
இக்கட்டுரைகளை வெளியிட்ட இதழ்கள் சொல்வனம் சிற்றுளி,, பேசும்புதியசக்தி,
விருட்சம், ஆகியற்றிர்க்கு எனது நிறையன்பு.
எழுத்தாளர் விட்டல்ராவுக்கு என்னை
அறிமுகம் செய்திட்ட மாசிலா அன்பர் எழுத்தாளர் பாவண்ணன்
அவர்கட்கு இந்நூல் சமர்ப்பணம்.
பணிவுடன் உங்கள்
23 ஏ நேதாஜி
நகர், பழைய பெருங்களத்தூர் சென்னை 600063 எஸ்ஸார்சி
9443200455
No comments:
Post a Comment