Tuesday, February 9, 2021

எழுத்து

 


 

 

எழுத்து

 

தாயே என்று ஓங்கியழைக்க

நாயே என்று 

எனை  எப்படி 

 அழைப்பாய்  நீ

கேட்பவர்கள் அதிகமிங்கு

மனித உறவுகள்

வழியே  இல்லை மேம்பட

தான் தனது  மட்டுமே

தொண்டைவரை அடைத்து

வழி மறிக்குமே நந்தியாய்

நான் செய்வதே சரி

நான் சொல்வதே சரி

பிறர் சொல்வதும்

பிறர் செய்வதுவும் அன்றன்று

வாழ் நெறியா இது

அன்பொடு வாழலாம்

மனம் வேண்டும் பெரிதாக

அன்புடையார் எல்லாமுடையார்

அன்புடையார் யாரென்று

தெளிய  வேண்டுமறிவு

அதற்குத்தானே ஏகப்பஞ்சம்

இந்தப்பிறவிக்கு

அறிவு அவ்வளவுதான்

எழுதிய எழுத்தை

அழித்தா எழுதுவான்

அன்றைக்கு எழுதியவன்

பழுதாகிவிடாதே

 தருமங்குடி ஆச்சி சொன்னது.

--------------------------------------------

 


No comments:

Post a Comment