Thursday, October 26, 2023

கவிதை- அறம்செயவிரும்பு

 


கவிதை- அறம் செய விரும்பு     ( இணையக்கால கவியரங்கு  26/10/23)


அனாதை இல்லம்

நிச்சயம் உதவி 

செய்யவேண்டும்

என்று போனால்

அப்படி ஒன்றும் உங்களை

வா வா என்றழைத்து

நாற்காலி போடமாட்டார்கள்

கொடுங்கள் வாங்கிக்கொள்கிறோம்

என்கிறார்கள் வேண்டா வெறுப்பாய்

அதற்குமேல் ஒன்றுமில்லை

கொடுத்த தொகைக்குச்

சரியான ரசீது பெறுவதற்குள்

போதும் போதும் என்றாகிறது

தருமம் செய்வது ஒன்றும் எளிதன்று

நாம் நினைப்பது போல்

இல்லாத பத்து பேருக்கு

சோறு பிசைந்து போட்டாலும்

அரசாங்கத்துக்குப்

பதில் சொல்லியாகணும்

ஏன் எதற்கு எப்படி எங்கே என்று

அடுக்கடுக்காய் வினா வுண்டு

அவ்வைப்பாட்டி  சொன்னது முற்றிலும் சரி

அறம் செய விரும்பு.





No comments:

Post a Comment