Tuesday, October 31, 2023

கவிதை -தேவர்மகான்

 


 கவிதை- தேவர் மகான்


சாதிமதம் கடந்த மகான்

தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்

தெய்வீகத்தையும் தேசத்தையும்

தன்னிருகண்களாகக் கொண்டாடிய

ஆழம் கூடிய  அற்புதம்

உணவால் சைவத்துக்கு மாறிய

அகவினத்தார்

வள்ளல் இராமலிங்கரை

ஆராதித்த  பெருமகன்

நேதாஜிக்குத் தமிழ் மண்ணில்

வீரர்களைத்திரட்டிய

தேசபக்தர்

மதுரை மீனாட்சி ஆலயத்தில்

அரிசனங்கள் பிரவேசிக்க 

முன்  கை எடுத்த

வைத்யநாதாய்யருக்கு  அரண்

தேசப்பிரிவினையின் போது

தமிழக இசுலாமியர்

நம்மோடு இருப்பர்

உரக்கக்குரல் கொடுத்த  நேர்மையாளர்

மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட

இந்தியப்பாராளுமன்ற உறுப்பினர்

நம்ப முடிகிறதா  உங்களால்.

தேவருக்குச்சரியானதொரு

அரசியல் வாரிசுக்கு

எத்தனைக் காலமாய்த்

தவம் கிடக்கிறது தமிழகம்.

-----------------------------------------------------------------------------------------------



No comments:

Post a Comment