Wednesday, January 20, 2021

விவசாயி

 


 

 

விவசாயி

 

மூன்று மாதங்கள் முன்பு

விதையாயிருந்தவைதாம்

விவசாயி வஞ்சனையின்றி

மாடாய் உழைத்தால்

பயிர்கள் பூத்தன

நெல்மணிச்சுமை தாங்கிய அவை

மழை நீரில் மொத்தமாய் மூழ்கி

முளைவிடுகின்றனவே இப்போது

நாம் கற்ற வானியலுக்கு

மூன்றுமாத காலம்

மழை  வெள்ளமெப்படி

கணிக்கத்தான்  வாராது

நாட்கள் சில முன்பாக

மழை  கொஞ்சம்

வரும் விஷயம் அறிவித்தால்

அதுதானே பெரிய காரியம்

பெய்யாமல் கெடுப்பதுண்டு

பெய்தும் கெடுப்பதுண்டு

அளவோடு கொடுத்திட

வானுமேதும் கற்பதில்லை

வெள்ளம் வெள்ளம்

வெள்ளம் வெள்ளம்

தாமிரபரணித் தமிழகம்

திணறி விழித்தது

மொத்தமாய் தொலைத்தது

விளைவை மகசூலை.

விவசாயி மனமுடைந்து

நிற்கதியாய் நிற்கிறான்.

அரசியல் வாதிகள்

மூன்று மாதத்தில் வரவிருக்கும்

வோட்டு அறுவடைக்குத்தான்

வியூகம் அமைக்கிறார்கள்

 

 

 

 

 

 


No comments:

Post a Comment