Saturday, January 9, 2021

அடக்கி வாசிக்கலாம்

 


 

அடக்கி வாசிக்கலாம்

 

 எல்லாம் தெரிந்த ஏகாம்பரமா

 இல்லைவே இல்லை 

 ஆயினும் யான் கற்றுத்தெரிந்த

அறங்கள்  சிலவுண்டு

முற்றும் தோற்றுத்தான்

போயின  அவை இக்கணம்

கொரோனா காலம் என்னை

திருப்பி போட்டு

உலர்த்திப்பார்க்கிறது

தீதும் நன்றும் பிறர் தர வாரா

பொய்யாகிப்போனதே

பிறர்தர வருவன நிறையவே

ஆகத் திணறிப்போகிறதே மக்களினம்

விருந்தோம்பல் அதனை

உச்சிமேல் வைத்துப்

பேசியது  திருக்குறள்

எதுவுமே  சாத்தியமில்லை

கொரோனா சுருக்கிப்போட்டிருக்கிறது

மனித உறவுகளை

சுற்றமும் நட்பும் வேளிறிபோயின.

அன்பே சிவமென்றார்

பேரிடர் வருங்காலை

அறத்தை நிலை  நாட்ட

நானே வருவேன் நிச்சயமாய்

சொன்ன கீதையின் ஆசானை

எங்கே போய்த்தேடுவாய் நீ

கொரோனா காலம் பொல்லாதது

மனையாளை த்தனியறையில்

தள்ளி க்கதவு அடைத்த வைத்த  சோகம்

இன்பத்திலும் துன்பத்திலும்

சரிபாதி தெய்வங்கள் முன்பாய்ச்

செய்த சத்தியம்

ஏளனமாய்ப்பார்க்கிறது. என்னை

திருநீறும் குங்குமம்  கொடுக்க ஆளில்லை

வாங்குபவரும் இல்லை

தில்லைக் கூத்தன் சந்நிதியில்

கோவிலுக்குள் அச்சம் மென்னிபிடித்தது

போய்தான் வந்தேன்

சுவரிடமாவது சொல்லி அழவேண்டுமே

தெய்வமிருப்பதை இல்லாததை

தெளிந்துகொண்டு விடுவோமா நாம்

அத்தனை எளிதா அது

யார்க்கும் பிடிபடா பெருவிஷயம் பலவுண்டு.

எல்லாவற்றிர்க்கும் நம் கையிருப்பு

அறிவாலே விடைகாண பேரவாதான்

ஆட்டுக்குமே வால் உண்டு அளவுமுண்டு.

-----------------------------------------------------

 

 

 

 

 

 

 


 

 

 


No comments:

Post a Comment