Thursday, January 7, 2021

கரையோர வாழ்க்கை -

 

 

கரையோர வாழ்க்கை

 

ஏரி நிரம்பியதும்

மதகுகள் திறக்கப்படும்

ஆற்றின் கரையோரம்

வசிப்போர்க்கு அரசு  எச்சரிக்கை

நீங்கள் மொத்தாய்ச்

சென்றிடுவீர் பாதுகாப்பான இடம் நோக்கி

எத்தனை அழகு

அறிவிப்படா இது

எப்படிப்போவது எங்கே போவது

எதுவெல்லாம் சாத்தியம்

யாருக்குத்தெரியும் யாரைக்கேட்பாய்

போனவன் போனான்

இருந்தவன் இருந்தான்

மூன்று வேளைக்கு

உட்கார்ந்து உண்பவன்

எவனேனும்  ஆற்றின் கரையோரம் வாழ்கிறானா

அன்றாடம் உழைத்து

அயர்ந்து போவோன் மட்டுமே

எப்போதும் மாட்டிக்கொள்கிறான் வசமாய்

வதை மட்டுமே படுகிறான்

இன்று நேற்றல்ல

காலம் காலமாய் இப்படி

விதிப்படி எல்லாம்

நடக்கிறது நம்பு

சொல்லிச்செல்லலாம்

மனசாட்சி மரணித்துப்போனவர்கள்

ஆற்றின் கரையோரம் வாழ்ந்து

வெள்ள அறிவிப்பு வரும்கால்

அல்லோல கல்லோலப்ப்டுவோரைக்

கவனியுங்கள் என்றேனும்

அவர்களின் கண்ணீர் ஆயிரம்

சேதி சொல்லும்

----------------------------------------------------

 

 

 

 

 

No comments:

Post a Comment